என்னை கவனிப்பவர்கள்

சனி, 19 நவம்பர், 2011

பெரிய முள்ளின் புலம்பல் !

             
                         என் சிந்தையில்உள்ளே 
                   வீற்றிருக்கும் 
                   சிறிய முள்ளே!


                   நமக்கு 
                   இடம் கொடுத்தது 
                   என்பதற்காக 
                   எத்தனை நாள் 
                   இந்த 
                   கடிகார எண்களையே
                   சுற்றி வருவது?

                   மனிதனுக்கு 
                   மணிகாட்டுவதும் 
                   சொல்லும்போது  
                   சோர்வின்றி 
                   அவனை 
                   எழுப்புவது மட்டுமா 
                   நம் வாழ்க்கை?


                   உன்னை பலமுறை 
                   சந்தித்து மன்றாடியும் 
                   நீ என்னை 
                   துரத்துவதையே 
                   தொழிலாகக்
                   கொண்டிருக்கிறாய் 


                    மணிக்கு
                    ஒருமுறை மட்டுமே 
                    நாம் இருவரும் 
                    ஒருவராகிப் போனோம் 


                    மணி பன்னிரண்டு 
                    இப்பொழுதாவது 
                    நம் இயக்கத்தை 
                    நிறுத்திக் கொள்வோம்!


                    மனிதன் நம்மை 
                    மறுபடி 
                    இயக்கும் வரையாவது 
                    நாம் 
                    பிரியாமல் 
                    இணைந்திருப்போம்!

 ====================================================================================


புதிர்! உங்களுக்கு தெரிஞ்சா விடை சொல்லுங்க !



1 கருத்து:

  1. Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !

    http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html

    Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !


    http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html

    பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895