என்னை கவனிப்பவர்கள்

புதன், 4 ஏப்ரல், 2012

சந்தேகப் பிராணி


                          இனியவளே!
                          மனதுக்குள் 
                          மலர்வனத்தை வைத்துக்கொண்டு 
                          முட்களை மட்டுமே 
                          காட்டுகிறாய்!

                          உன் உதட்டுக்கு 
                          இனியாவது 
                          உரிமை கொடு 

                          புன்னகை பூக்களை 
                          பூப்பதற்கு 
                          உன் இதழ்ச் செடிகளுக்கு 
                          உத்தரவு இடு.

                          மரத்துப்போன 
                          என் இதயத்திற்கு 
                          மறுபடியும் உணர்வு கொடு. 

                          சங்கிலிப் பிராணியாய் 
                          உன் பின்னால் நான்!

                          நீயோ இன்னும் 
                          சந்தேகப் பிராணியாய்......
                          நியாயமா பெண்ணே?

*****************************************


     

7 கருத்துகள்:

  1. சரியான புரிதல் அல்லது உணர வைத்தல் இதுதான் தீர்வு. இரண்டில் ஒரு இடத்தில் குறை இருந்தாலும், மற்றொரு இடத்தில் நிவர்த்திக்க வழி இருந்தால்.. எந்த பிரச்சினையும் இல்லை. நல்ல பகிர்வு நண்பா!

    பதிலளிநீக்கு
  2. நல்ல கவிதை முரளி!

    அனைத்தும் முத்துக்கள்!

    புன்னகை பூக்களை
    பூப்பதற்கு
    உன் இதழ்ச் செடிகளுக்கு
    உத்தரவு இடு.

    நயமிகு வரிகள்!
    நல்ல எதிர் காலம் உள்ளது
    வாழ்க வளர்க!

    சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  3. அருமை நண்பரே.. வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. வார்த்தைகளின் கோர்வை அழகு வாழ்த்துக்கள் .

    பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895