என்னை கவனிப்பவர்கள்

சனி, 25 நவம்பர், 2017

சோதனை மேல் சோதனை

 

                     (சும்மா  ஒரு கற்பனை -சிரிப்பதற்கு மட்டுமே)
 
சோதனை மேல் சோதனை
போதுமடா சாமி
சோதனை தான்  வாழ்க்கை என்றால் தாங்காது போ நீ!
                (சோதனை மேல் சோதனை )

நித்தம் ஒரு சேதி வந்து கதி கலங்குது-ஒரு
சத்தம் இன்றி ரெய்டு வந்தால் மதி மயங்குது
நித்தம் ஒரு சேதி வந்து கதி கலங்குது
சத்தம் இன்றி ரெய்டு வந்தால் மதி மயங்குது
                                                  (சோதனை மேல் சோதனை )

ஆதாரம் இருக்குதம்மா   ஆதரவில்லை-நான்
 அவதாரம் இல்லையம்மா தப்பித்து செல்ல
பரிகாரம் தேடி இனி எவ்விடம் செல்ல-எனது
அதிகாரம் செல்லலையே யாரிடம் சொல்ல
ஒரு நாளும்  நானிது போல் அழுதவனல்ல-அந்த
 திருநாளும் வந்ததை நான்  என்னென்று சொல்ல

                                                            (சோதனை மேல் சோதனை ) 

(மாமா!சொத்தை பறிகொடுத்தவன் எல்லாம் பறிச்சவனைப்  பாத்து பயப்படுவாங்க  . பறிச்சவனே பயந்து நின்னா
கடன் வாங்கினவன்  எல்லாம் கந்து வட்டிக்  காரனைப் பாத்து கலங்குவாங்க  . கந்து வட்டிக் காரனே கலங்கி நின்னா யாரால் ஆறுதல் சொல்ல முடியும்?)

சாப்பிடத்தான் நான் நினச்சேன் ரெண்டு இலையில-அட
ஒத்த இலைக்குக் கூட இப்ப வழியும் தெரியல
கூட வந்த கூட்டத்துக்கு குறைவே இல்லை-அதில்
ஒருத்தனையும் இப்போ இங்கே காணவும் இல்ல
கோடி கோடி பணம் இருந்தும் பயனும் இல்ல -ஒரு
மோடி வித்தை செய்தால்தான் தீரும் தொல்லை

                                                         (சோதனை மேல் சோதனை )


-----------------------------------------------------------------------------------------------------------