மனிதர்கள் முதலைகுணம் கொண்டவர்களா? சிலர் அதன் குணம் கொண்டவர்கள் என்கிறார் பாலகுமாரன் தனது கரையோர முதலைகளில்.
சீ! சீ! இந்தப் பழம் புளிக்கும் என்று எண்ணும் நரி குணம் உடையவர்கள் சிலர். ஓடி ஓடி களைத்து மானைப் பிடிக்க முடியாத புலி போல் சிலபேர்.கிடைத்தவரை தின்னும் ஆடு போல் சில பேர்.இப்படிப் பலவகைகளில் மனிதர்கள். ஆனால் முதலைகள் வித்தியாசமானவை
இதோ கரையோர முதலைகளில் ராமநாதன் என்ற பாத்திரத்தின் வாயிலாக பாலகுமாரன் படைத்த முதலைக் கவிதை
முதலைக் கவிதை-பகுதி 3
புலிகளைப் போல முதலை
மான்களை துரத்திப் போகா!
காக்கைகளைப் போலஎச்சில்
இலைகளை நோட்டம் போடா;
எலிகளோ, ஈசல் கொல்லும்
பல்லியோ அல்ல முதலை;
கழுத்துவரை நீரில் அமர்ந்து
கரையோரம் பார்த்திருக்கும்;
வேட்டைக்கு எறும்பு போகும்
புல்வெளியில் ஆடு மேயும்
உலகத்து உயிர்கள் எல்லாம்
உணவுக்கு பேயாய் பறக்க
வீட்டினில் இரையைத் தேடி
ஏங்குவது முதலை மட்டும்;
ஒரு இலை விழுந்தால் கூட
முதலையின் முதுகு சிலிர்க்கும்;
ஒரு சுள்ளி முறிந்தால் போதும்
முதலையின் முகவாய் நிமிரும்;
ஒரு முறை சிக்கினாலும்
உயிர் கொல்லும் போராட்டம்;
சக்கரம் அறுத்த போதும்
முதலைகள் பிடியைத் தளர்த்தா;
ஒரு அதிசயக் குழந்தை கேட்க
முதன் முதலாய் முதலை விட்டது
பின் மனிதரை வளர்த்ததெல்லாம்
நீர் முதலை வழங்கிய வேதம்!
**************************************************************************************************************
இதைப் படித்தீர்களா?
மனிதரைத் தவிர மற்ற பிறப்புகள் சுத்தம்-பாலகுமாரன்.
பாலகுமாரனின் முதலைக் கவிதைகள்-பகுதி 2 பாலகுமாரனின் கவிதைகள்!l
பாலகுமாரனின் இரும்பு குதிரைகள்-நிறைவுக் கவிதை
*************************************************************************************

