ராஜ்ஜியங்களுக்காக ராஜாக்கள் சண்டையிட்டதை கேள்விப் பட்டிருக்கிறோம். இழந்த ராஜ்ஜியங்களை மீட்கவும் சண்டை இடலாம். நீங்கள் போடும் சண்டை எந்த வகை? கோலோச்சிய காலங்களில் கூடிக் குலவியதை மறந்துவிட்டு ஒருவர்மீது ஒருவர் குற்றம் சாற்றிக் கொண்டிருக்கிறீர்கள். புழுதிவாரி தூற்றிக் கொண்டிருக்கிறீர்கள். பத்திரிகைகள் அவரவர் பங்குக்கு தூண்டிவிட சிரிப்பாய் சிரித்துக் கொண்டிருக்கிறார்கள் மக்கள். உங்கள் மீது வைத்திருக்கும் மரியாதை நாளுக்கு நாள் தேய்ந்து கொண்டே போவதை நீங்கள் அறிவீர்களா? முந்தைய தலைமுறையின் மேதைகள் என்று அடையாளம் காட்டப்படும் நீங்கள் உங்களை அதிகம் அறியாத இன்றைய தலைமுறையினர் ஏளனத்தோடு பார்ப்பது தெரியுமா? இவ்வளவுதானா உங்கள் மேதாவிகள் என்று கேட்கும்போது பாரதிராஜா ரசிகனும் இளையராஜா ரசிகனும் பதில் சொல்லமுடியாமல் தவிப்பது உங்களுக்கு புரியுமா? வயதாகி விட்டாலே வாய்க்கு வந்தபடி பேசவேண்டும் என்று சட்டம் உள்ளதா? ஆணவமும் அகங்காரமும் கலைஞர்களுக்கு முதல் எதிரி என்பது உங்களுக்கு தெரியாதா? உங்கள் ரசிகர்கள் என்று சொல்வதற்கு வெட்கப் படவேண்டிய சூழ் நிலையை உருவாக்கி விடாதீர்கள்! இவ்வளவு வேற்றுமையை வைத்துக் கொண்டு எப்படி பணியாற்றினீர்கள் என்பது ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது. அப்போது சாதிக்க வேண்டும் என்ற வெறி; சண்டை போட நேரமில்லை. இப்போது சாதித்தாகி விட்டது. சரக்கு தீர்ந்துவிட்டது. சண்டை தொடங்கி விட்டது; கருத்து வேற்றுமைகள் விசுவரூபமாகிவிட்டன என்று எடுத்துக் கொள்ள்ளலாமா?
இளையராஜா சார்! நீங்கள் பாரதிராஜா பேசியதை குற்றமாக எடுத்துக் கொண்டீர்கள். ஆனால் நீங்கள் என்றைக்காவது மேடை நாகரீகத்துடன் பேசி இருக்கிறீர்களா? தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தேன். கெளதம் மேனன் நிகழ்ச்சியில் உங்களைப் பார்த்த மகிழ்ச்சியிலும் உங்கள் பாடல்களை கேட்கப் போகிறோம் என்ற உற்சாகத்திலும் விசில் அடித்தபோது, ரசிகர்களை பார்த்து விசில் அடிக்காதீர்கள் நான்வெளியே போய் விடுவேன் என்று மிரட்டியது எந்த வகையில் நியாயம் என்று நினைக்கிறீர்கள்? நீங்கள் பாரதிராஜாவின் பேச்சை புண் படுத்தியதாக கூறி இருக்கிறீர்களே! நீங்கள் ரசிகர்களை அவமதிப்பது சரியா?
ஒரு மேடையில் பாரதிராஜா, நீங்கள் அவர்கள் ஊருக்கு வந்து, திருவிழாவில் வாசித்தபோது கை குலுக்கியதை குறிப்பிட்டார். நீங்களோ அது நினைவில்லை என்று முகத்தில் அடித்தார் போல் கூறினீர்கள். உங்கள் பேச்சுக்கள் பல நேரங்களில் தலைக்கனத்தின் வெளிப்பாடாக அமைந்து விடுகிறது என்பதை நீங்கள் உணர்வீர்களா? உதாரணத்திற்கு ஹிந்துஸ்தானி இசையின் சிறப்பு அம்சம் என்ன என்ற கேள்விக்கு ஸ்ருதியை விட்டு விலகாமல் பிசகாமல் இசைக்க அதிலே லயித்துப் போய் பாடும் தன்மைதான் ஹிந்துஸ்தானி இசையின் சிறப்பு என்று கூறியதோடு நிறுத்தி இருந்தால் பரவாயில்லை. அதோடு கர்நாடக இசையில் உள்ள அளவு கடந்த ராகங்களும் தாளங்களில் உள்ள விரிவான அம்சமும் அதிலும் கொண்டு வரலாம் என்பது அவர்களுக்கு தெரியாது என்று கூறியது உங்களுக்குத்தான் எல்லாம் தெரியும் என்ற தொனியில் பேசுவது போல் அல்லவா உள்ளது.
அன்னக்கொடியும் கொடிவீரனும் பாடல் வெளியீட்டு விழா நிகழ்ச்சிக்கு வைரமுத்துவையும் அழைக்க விரும்பியதாகவும். உங்கள் பிடிவாதத்தின் காரணமாக அவரை அழைக்கவில்லை என்றும் தெரிகிறது. வைரமுத்துவின் மீது ஏன் அவ்வளவு காழ்ப்புணர்ச்சி?. முகத்தில விழிக்கக் கூடாத அளவுக்கு அப்படி அவர் என்னதான் தவறு செய்தார் என்று இது நாள் வரை தெரியவில்லை. உங்களுக்குப் பின்னால் உங்களிடத்தை ஏ.ஆர்.ரகுமான் பிடித்துவிட்டார்.ஏன்? ஒரு படி அதிக உயரத்திலும் இருக்கிறார். ஆனால் வைரமுத்துவின் இடத்தை நிரப்ப இன்றுவரை அவருக்கு இணையானவர் வரவில்லை. என்பது உங்களுக்குத் தெரியாமல் போய் இருக்க வாய்ப்பில்லை. அவரை அவமதிப்பதில் அவ்வளவு மகிழ்ச்சியா? இசைஞானியாகத்தான் உங்களை நினைத்திருக்கிறோம். நீங்கள் வசைஞானியாய் மாறிவிடாதீர்கள். உங்களை ஒருமையில் பேசியதும் நீங்கள் தலைக்கனம் பிடித்தவர் என்ற ரீதியில் பேசியதும் தவறு என்றாலும், அதற்கு காரணமும் நீங்கள் தானே!
நட்புக்கு இலக்கணமாய் இல்லாவிட்டாலும் பகைமைக்கு முன்னுதாரணமாக மாறிவிடாதீர்கள். திருவாசகம் இசையால் மனங்களை உருக வைத்த நீங்கள் வசை வாசகங்களால் கருக வைக்காதீர்கள் (வசையிலும் இசை உண்டு என்று தத்துவம் பேசிவிடாதீர்கள்)
பாரதிராஜாசார்! உங்களுக்கும் எங்கள் எண்ணங்களை தெரிவிக்கவேண்டும். எப்போதுமே உணர்ச்சி வசப்பட்டு பேசுதல் நல்லது என்றா நினைக்கிறீர்கள். ஒருவர் விரும்பாதபோது அவரைப் பற்றிய எண்ணங்களை வெளிப்படையாக சொல்வது ஏற்புடையதல்ல. என்னதான் நெருங்கியவர்களாக இருந்தாலும் ஒருமையில் பேசுவது உங்களுக்கு அழகல்ல. வைரமுத்துவோடு இளையராஜாவை சேர்த்துவைக்க முயன்றீர்கள். இன்று நீங்களே பிரிந்து நிற்கிறீர்கள். ஊர் ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பது பழமொழி. இப்போதெல்லாம் கலைஞர்கள் ரெண்டு பட்டால் பத்திரிகைகளுக்கும் ஊருக்கும் கொண்டாட்டம் என்பது நாங்கள் சொல்லியா தெரிய வேண்டும்?. பொது நிகழ்ச்சிகளில் பேசுவதற்கு முன் என்ன பேசவேண்டும் என்பதை முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்ளுங்கள். நான் நிர்வாணமாவன் என்றெல்லாம் பேசுவதை தவிர்க்கவும். பண்பைக் கற்றுகொடுக்க முடியாவிட்டாலும் பகைமையை கற்றுக் கொடுக்காதீர்கள்.
நல்ல படைப்புகளைத் தரும் கலைஞர்கள் நற்பண்புகள் உடையவர்களாக இருப்பார்கள் என்று நம்பும் அப்பாவித் தமிழர்களின் நம்பிக்கையில் சிறிதளவாவது உண்மை இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
உண்மையாக புன்னகைத்துப் பாருங்கள்; உலகமே அழகாகத் தெரியும்.
அன்புடன்
கலையோடு கலைஞனையும் நேசிக்கும் தமிழர்கள்
***************************************************************************************
நேரம் இருந்தா இதையும் படிச்சிப் பாருங்க!
ஏ.ஆர்.ரஹ்மான், இளையராஜா, எம்.எஸ்.வி :பலங்கள்-பலவீனங்கள்- குறைகள்
இளையராஜா செய்தது சரியா?
அன்னக்கொடியும் கொடிவீரனும் பாடல் வெளியீட்டு விழா நிகழ்ச்சிக்கு வைரமுத்துவையும் அழைக்க விரும்பியதாகவும். உங்கள் பிடிவாதத்தின் காரணமாக அவரை அழைக்கவில்லை என்றும் தெரிகிறது. வைரமுத்துவின் மீது ஏன் அவ்வளவு காழ்ப்புணர்ச்சி?. முகத்தில விழிக்கக் கூடாத அளவுக்கு அப்படி அவர் என்னதான் தவறு செய்தார் என்று இது நாள் வரை தெரியவில்லை. உங்களுக்குப் பின்னால் உங்களிடத்தை ஏ.ஆர்.ரகுமான் பிடித்துவிட்டார்.ஏன்? ஒரு படி அதிக உயரத்திலும் இருக்கிறார். ஆனால் வைரமுத்துவின் இடத்தை நிரப்ப இன்றுவரை அவருக்கு இணையானவர் வரவில்லை. என்பது உங்களுக்குத் தெரியாமல் போய் இருக்க வாய்ப்பில்லை. அவரை அவமதிப்பதில் அவ்வளவு மகிழ்ச்சியா? இசைஞானியாகத்தான் உங்களை நினைத்திருக்கிறோம். நீங்கள் வசைஞானியாய் மாறிவிடாதீர்கள். உங்களை ஒருமையில் பேசியதும் நீங்கள் தலைக்கனம் பிடித்தவர் என்ற ரீதியில் பேசியதும் தவறு என்றாலும், அதற்கு காரணமும் நீங்கள் தானே!
நட்புக்கு இலக்கணமாய் இல்லாவிட்டாலும் பகைமைக்கு முன்னுதாரணமாக மாறிவிடாதீர்கள். திருவாசகம் இசையால் மனங்களை உருக வைத்த நீங்கள் வசை வாசகங்களால் கருக வைக்காதீர்கள் (வசையிலும் இசை உண்டு என்று தத்துவம் பேசிவிடாதீர்கள்)
பாரதிராஜாசார்! உங்களுக்கும் எங்கள் எண்ணங்களை தெரிவிக்கவேண்டும். எப்போதுமே உணர்ச்சி வசப்பட்டு பேசுதல் நல்லது என்றா நினைக்கிறீர்கள். ஒருவர் விரும்பாதபோது அவரைப் பற்றிய எண்ணங்களை வெளிப்படையாக சொல்வது ஏற்புடையதல்ல. என்னதான் நெருங்கியவர்களாக இருந்தாலும் ஒருமையில் பேசுவது உங்களுக்கு அழகல்ல. வைரமுத்துவோடு இளையராஜாவை சேர்த்துவைக்க முயன்றீர்கள். இன்று நீங்களே பிரிந்து நிற்கிறீர்கள். ஊர் ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பது பழமொழி. இப்போதெல்லாம் கலைஞர்கள் ரெண்டு பட்டால் பத்திரிகைகளுக்கும் ஊருக்கும் கொண்டாட்டம் என்பது நாங்கள் சொல்லியா தெரிய வேண்டும்?. பொது நிகழ்ச்சிகளில் பேசுவதற்கு முன் என்ன பேசவேண்டும் என்பதை முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்ளுங்கள். நான் நிர்வாணமாவன் என்றெல்லாம் பேசுவதை தவிர்க்கவும். பண்பைக் கற்றுகொடுக்க முடியாவிட்டாலும் பகைமையை கற்றுக் கொடுக்காதீர்கள்.
நல்ல படைப்புகளைத் தரும் கலைஞர்கள் நற்பண்புகள் உடையவர்களாக இருப்பார்கள் என்று நம்பும் அப்பாவித் தமிழர்களின் நம்பிக்கையில் சிறிதளவாவது உண்மை இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
உண்மையாக புன்னகைத்துப் பாருங்கள்; உலகமே அழகாகத் தெரியும்.
அன்புடன்
கலையோடு கலைஞனையும் நேசிக்கும் தமிழர்கள்
***************************************************************************************
நேரம் இருந்தா இதையும் படிச்சிப் பாருங்க!
ஏ.ஆர்.ரஹ்மான், இளையராஜா, எம்.எஸ்.வி :பலங்கள்-பலவீனங்கள்- குறைகள்
இளையராஜா செய்தது சரியா?