என்னை கவனிப்பவர்கள்

சனி, 28 ஏப்ரல், 2012

காந்தி தேசத் தந்தை இல்லையா?

       தகவல் அறியும் சட்டம் நமக்கு பலவிதங்களில் தகவல்கள் பெற உதவுகிறதோ இல்லையோ, ஆனால் ஒரு சிலர் பார்த்திபன் பாணியில் ஏதாவது கேள்விகேட்டு பிரபலமாக ஆவதற்கு உதவுகிறது. அப்படிப் பிரபலமானவர்களில் ஒருவர்தான் லக்னோவைச் சேர்ந்த ஐஸ்வர்யா பராஷர் என்ற ஆறாம் வகுப்பு படிக்கும் சிறுமி.
   
  அவர் என்ன கேட்டார் என்பதை நீங்கள் பத்திரிகைகளில் படித்திருப்பீர்கள்.
அவர் கேட்ட கேள்வி. காந்திக்கு தேசத் தந்தை என்ற பட்டம் யாரால் எப்போது வழங்கப்பட்டது?.
       தகவல் அறியும் உரிமை மூலம் கேட்கப்பட்ட இந்தக் கேள்விக்கு உள்துறை அமைச்சகம் முதல் பிரதமர் அலுவலகம் வரை யாரும் சரியான பதிலை அனுப்பி வைக்கவில்லையாம். இந்தக் கேள்வியை இந்திய ஆவணக் காப்பதற்கு அனுப்பிவைக்க அவர்களும் தங்களிடம் இதற்குத் தேவையான ஆவணங்கள் இல்லை என்று சொல்லிவிட்டனர்.
         
   இந்தக் கேள்வியைக் கேட்ட   ஐஸ்வர்யா பராஷரை பத்திரிகைகள் புகழ்ந்து தள்ளுகின்றன. இணையத்திலோ பலரும் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.? இனி பல உண்மைகள் வெளிச்சதற்கு வரும்? நீதி நிலைநாட்டப்படும் என்றெல்லாம் எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.

எனக்கு என்ன சந்தேகம் என்றால் இந்தக் கேள்வியை உண்மையிலேயே அந்த சிறுமிதான் கேட்டிருப்பாளா? என்பதே. சிறுமியின் தந்தை அல்லது உறவினர் ஒருவர் இந்த மாணவியைப் பயன்படுத்தி இந்தக் கேள்வியைக் கேட்டிருக்கக் கூடும்.
இணையத்தில் தேடினால் நிச்சயம்  இதற்கான விடைகள் கிடைக்கும் நிலை இருக்க இதை தகவல் அறியும் உரிமை மூலம் கேட்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை. இது போன்ற பட்டங்கள் யாரோ ஒருவர் ஒரு சந்தர்ப்பத்தில் சொல்ல அது மக்களுக்குப் பிடித்து விட்டால் நிலைத்துவிடும். மக்களுக்கு பிடித்தால் மட்டுமே நிலைத்திருக்கும். இதற்கு ஆதாரம் கிடைக்கவில்லை என்பதாலயே காந்தி தேசத் தந்தை என்று சொல்லப்படுவது இல்லை என்றாகிவிடுமா? அல்லது காந்தியை இவ்வாறு அழைப்பது தவிர்க்கப்படவேண்டுமா? எதை எதிர்பார்த்து இதுபோன்ற கேள்விகள்  கேட்கப்படுகின்றன? .
உண்மையில் காந்தியை தேசத் தந்தை என்று அழைத்தவர் அவரிடம் அதிக அளவு கருத்து வேறுபாடு கொண்ட நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தான்.
இதோ காந்தியின் மனைவி கஸ்துரிபா வின் மறைவுக்கு ரங்கூன் வானொலி மூலம் நேதாஜி சொன்ன செய்தியில் கீழ்க்கண்டவாறு உள்ளது.

"...........Nobody would be more happy than ourselves if by any chance our countrymen at home should succeed in liberating themselves through their own efforts or by any chance, the British Government accepts your `Quit India' resolution and gives effect to it. We are, however proceeding on the assumption that neither of the above is possible and that a struggle is inevitable.
Father of our Nation in this holy war for India's liberation, we ask for your blessings
and good wishes".

இதிலிருந்து பல கருத்து வேறுபாடுகளுக்கு இடையிலும் காந்தியை சுபாஷ் எந்த அளவுக்கு மதித்தார் என்பது புலனாகும்.
   தென் ஆப்ரிக்காவில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியர்களுக்காக போராடியவர் காந்தி. அதன் பின்னர் இந்திய விடுதலைக்காக  30 ஆண்டுகளுக்கு மேலாக ஓயாது உழைத்தவர். ஏழை எளிய மக்கள் ஏற்றம் பெற வேண்டும். ஒற்றுமையுடன் வாழவேண்டும் என்று உண்மையாய் நினைத்தவர்.  அப்படிப் பட்டவரை தேசத் தந்தை என்று அழைப்பதிலே எந்த தவறும் இல்லை என்பது என் கருத்து.
 அதுவரை உலகம் அதிகமாக அறிந்திராத அறவழிப் போராட்டத்தை உலகுக்கே அறிமுகப் படுத்தியவர் மகாத்மா காந்திதானே! மார்டின் லூதர் கிங், நெல்சன் மண்டேலா போன்றவர்களும் காந்தியடிகளின் போராட்ட முறையால் கவர்ப் பட்டவர்கள் அல்லவா? காந்தியை தேசத் தந்தை என்று அழைப்பதால் சுதந்திரத்திற்காக பாடுபட்ட மற்றவர்களை குறைத்து மதிப்பிடுவதாக எண்ணிவிடக் கூடாது. 
        இதைப் போன்ற கேள்விகளைக் கேட்பவர்களுக்கு விளம்பரம் அளிக்காமல் இருப்பது நல்லது. இல்லையென்றால் தந்தை பெரியாருக்கு அப்பட்டத்தை யார் வழங்கினார்கள்? வ.உ.சிதம்பரம் பிள்ளைக்கு கப்போலோட்டிய தமிழன் என்ற பட்டம் எப்படி வழங்கப்பட்டது, பாரதிக்கு தேசிய கவி பட்டம் ஏன் வழங்கப்பட்டது? எந்த அமைப்பு சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு இந்தியாவின் இரும்பு மனிதர் என்ற பட்டத்தை அளித்தது? அண்ணாவுக்கு அறிஞர அண்ணா பட்டம் அதிகார பூர்வமாக வழங்கப்பட்டதா? என்று தகவல் உரிமை மூலம் கேட்க ஆரம்பித்து விளம்பரம் தேடிக்கொள்வார்கள். இவையெல்லாம் மக்கள் ஏற்றுக்கொண்ட பட்டம் என்று தெரிந்தும். 
    பல பாரத ரத்னாக்கள் இருக்கலாம், பல பத்ம பூஷன்கள் இருக்கலாம். இது போன்ற விருதுகளை அரசாங்கள் பலபேருக்கு அரசாங்கம் வழங்குகிறது. ஆனால் தேசத் தந்தை என்ற  சுபாஷ் சந்திரபோஸ் காந்தியை அழைத்ததை மக்கள் ஏற்றுக்கொண்டதால்அது விருதாக மாறிவிட்டது. அது அவர் ஒருவருக்கு மட்டுமே பொருத்தமானது.  
   காந்தியைப் பற்றி சொல்லும் ஆசிரியர்கள் அவரை பற்றி சரியான முறையில் மாணவர்களுக்கு கற்பிக்கத் தவறுகிறார்களோ என்ற ஐயம் எழுகிறது. இனவெறி, தீவிரவாதம், சுயநலம், மதவெறி போன்றவை பெருகிவரும் சூழ்நிலையில் காந்தியைப் பற்றிய எதிர்மறை உணர்வை ஏற்படுத்துவது எதிர்கால இளைய சமுதாயத்திற்கு நல்லதல்ல என்பது என்கருத்து. காந்தி காங்கிரஸ் காரர்களுக்கு மட்டும் சொந்தமானவர் அல்ல. நம்மைவிட அயல் நாட்டவரே அவரை  அதிகம் புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்று  தோன்றுகிறது. 
   இதோ இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற விஞ்ஞானி ஆல்பர்ட்  ஐன்ஸ்டீன் காந்தியைப் பற்றி சொல்வதை கேளுங்கள்.
 Generations to come will scarce believe that such a one as this ever in flesh and blood  walked upon this earth. 
   இதைவிட காந்தியின் மாண்புக்கு வேறு என்ன பெருமை வேண்டும்? ஆசிரியர்களுக்கும் மற்றவர்களுக்கும் ஒரு வேண்டுகோள். பிஞ்சு நெஞ்சங்களில் காந்தியைப் பற்றிய தவறான கருத்துகளை விதைத்து விடாதீர்கள். காந்தியைப் பற்றிய புத்தகங்களைப் படியுங்கள். எழுத்தாளர்   ஜெயமோகன் அவர்களின் வலைப்பதிவுகள் காந்தியைப் பற்றி அறிந்துகொள்ள உதவும் என்று நினைக்கிறேன்.

************************************************************************************************************* 

ஞாயிறு, 22 ஏப்ரல், 2012

VAO EXAM 2012 RESULT CUT OFF MARKS (தேர்வு முடிவுகள் )


CUTOFF_VAO2K10_GEN_<span style="background: none repeat scroll 0% 0% yellow;" class="goog-spellcheck-word">SFL</span>

 கடந்த பிப்ரவரி மாதம் 20ம் தேதி கிராம நிர்வாக அலுவலர் தேர்வு நடைபெற்றது. மொத்தம் உள்ள 3484 காலியிடங்களுக்காக நடந்த இந்தத் தேர்வில் கிட்டத்தட்ட 10 லட்சம் பேர் தேர்வு எழுதினர்.

அதன் தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன.

 மதிப்பெண்களை அறிந்துகொள்ள கீழே க்ளிக் செய்யவும். பின்னர் பதிவெண்ணை உள்ளிடவும்.
தேர்வு செய்யப்பாட்டவர்களின் இன்வாரியான கட் ஆப் மதிப்பெண்கள்.
மொத்த மதிப்பெண்கள் 300 

TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION
VILLAGE ADMINISTRATIVE OFFICER
IN THE TAMIL NADU MINISTERIAL SERVICE, 2010
CUTOFF MARKS PARTICULARS

MARKS Educational Date of Birth Communal Categories
Qualification
(1) (2) (3) (4)
276.00 DEGREE 16/09/1981 General Turn (General)
271.50 DEGREE 25/05/1982 General Turn (Women)
241.50 DEGREE 10/06/1965 General Turn (Exservicemen)
232.50 SSLC 01/06/1974 General Turn (Destitute Widow)
264.00 DEGREE 02/06/1981 General Turn (General) - DA - Ortho
258.00 DEGREE 12/04/1984 General Turn (Women) - DA - Ortho
270.00 DEGREE 03/02/1976 Backward Class - Other than BC -
Muslims (General)
267.00 HSC/DIPLOMA 20/01/1972 Backward Class - Other than BC -
Muslims (Women)
231.00 HSC/DIPLOMA 27/03/1972 Backward Class - Other than BC -
Muslims (Exservicemen)
217.50 HSC/DIPLOMA 13/05/1979 Backward Class - Other than BC -
Muslims (Destitute Widow)
256.50 PG.DEGREE 10/06/1978 Backward Class - Other than BC -
Muslims (General) - DA - Ortho
249.00 PG.DEGREE 03/07/1978 Backward Class - Other than BC -
Muslims (Women) - DA - Ortho
262.50 HSC/DIPLOMA 22/06/1988 Backward Class - Muslims
(General)
259.50 PG.DEGREE 01/05/1982 Backward Class - Muslims
(Women)
105.00 SSLC 19/06/1978 Backward Class - Muslims
(Destitute Widow)
256.50 PG.DEGREE 14/01/1976 Backward Class - Muslims (Destitute
Widow) - Substitute
249.00 DEGREE 15/06/1978 Backward Class - Muslims (General) -
DA - Ortho
270.00 HSC/DIPLOMA 25/03/1980 Most Backward Class/Denotified
Communities (General)
264.00 DEGREE 17/03/1973 Most Backward Class/Denotified
Communities (Women)
225.00 HSC/DIPLOMA 03/06/1968 Most Backward Class/Denotified
Communities (Exservicemen)

 | P a g e
MARKS Educational Date of Birth Communal Categories
Qualification
(1) (2) (3) (4)
188.50 HSC/DIPLOMA 15/05/1983 Most Backward Class/Denotified
Communities (Destitute Widow)
253.50 DEGREE 13/04/1982 Most Backward Class/Denotified
Communities (General) - DA - Ortho
232.50 HSC/DIPLOMA 21/06/1974 Most Backward Class/Denotified
Communities (Women) - DA - Ortho
268.50 DEGREE 20/04/1983 Scheduled Caste (General)
262.50 HSC/DIPLOMA 13/06/1985 Scheduled Caste (Women)
210.00 HSC/DIPLOMA 13/01/1973 Scheduled Caste (Exservicemen)
193.50 DEGREE 21/04/1968 Scheduled Caste (Destitute Widow)
258.00 DEGREE 25/05/1977 Scheduled Caste (General)- DA - Ortho
246.00 DEGREE 07/02/1983 Scheduled Caste (Women) - DA - Ortho
264.00 DEGREE 04/04/1980 Scheduled Caste - Arunthathiar
(General)
259.50 SSLC 11/12/1971 Scheduled Caste - Arunthathiar
(Women)
90.00 SSLC 05/04/1974 Scheduled Caste - Arunthathiar
(Destitute Widow)
253.50 DEGREE 12/04/1984 Scheduled Caste - Arunthathiar
(Destitute Widow) - Substitute
247.50 PG.DEGREE 06/05/1975 Scheduled Caste - Arunthathiar
(General) - DA - Ortho
244.50 DEGREE 01/06/1980 Scheduled Tribe (General)




 TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION VILLAGE ADMINISTRATIVE OFFICER 
IN THE TAMIL NADU MINISTERIAL SERVICE, 2010 (SC/SC-A/ST SHORT FALL VACANCIES) 
CUTOFF MARKS PARTICULARS
RKS Educational Date of Birth Communal Categories
Qualification (3) (4)
(1) (2)
258.00 DEGREE 27/05/1986 Scheduled Caste (Shortfall)
250.50 DEGREE 10/06/1972 Scheduled Caste – Arunthathiar
(Shortfall)
231.00 SSLC 17/07/1976 Scheduled Tribe (Shortfall)
Note: 1. In case of two or more candidates scoring equal marks, the candidates possessing the highest educational qualification is placed above in the merit list.
2. When the marks obtained in the Written Examination and the educational qualifications are also the same, then the candidate senior in age is placed above in the merit list.
3. When the age too is equal, then the candidate who has submitted his/her application earlier to the Commission is placed above in the merit list

எதிரியே! எதிரில் வா!



               என் எதிரியே
               எங்கே இருக்கிறாய்?
               எதிரில் வா!

                கண நேரத்தில்
                என்னை
                களங்கப் படுத்துகிறாய்!

                சமயம்
                கிடைக்கும் போதெல்லாம்
                சங்கடப் படுத்துகிறாய்!

                களிப்புடன்
                காயப்படுத்துகிறாய்!

                என்
                மகிழ்ச்சியை
                மட்டுப் படுத்துகிறாய்.

                நான்
                புலம்பும்போதேல்லாம்
                புன்னகைக்கிறாய்!


                உதவி செய்ய
                நினைக்கும்போதெல்லாம்
                ஓடி வந்து
                தடுக்கிறாய்!

                வெற்றியை நெருங்கும்போது
                தட்டிப் பறிக்கிறாய்.

                தோல்விகளில்
                துவளும்போதும்
                துன்புறுத்தவே 
                நினைக்கிறாய்!



                தைரியம் இருந்தால்
                முன்னால் வா!

                உன்னை
                ஒழித்துக்கட்டாமல்
                நான்
                ஓயப் போவதில்லை

                எதிரில் இல்லாத எதிரி
                ஏளனத்துடன்
                சொன்னான்
                "என்னை ஏன்
                 வெளியில்
                 தேடுகிறாய்

                 நான்
                 உன்னுள்
                 அல்லவா
                 உறைந்திருக்கிறேன்" 

**************************************************************
                                                                              


வெள்ளி, 20 ஏப்ரல், 2012

என்னைவிட புத்திசாலி நீதான்—ஐன்ஸ்டீன்

   ஆல்பர்ட ஐன்ஸ்டீன் இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற விஞ்ஞானி யாகக் கருதப்படுவர். மிகச் சிறந்த அறிவாளி என்று உலகத்தாரால் ஒப்புக்கொள்ளப் பட்டவர்.அவரது E=mc2.  என்ற ஆற்றல்,நிறை, ஒளி இவற்றிகிடையே உள்ள தொடர்பை விளக்கும் ஃபார்முலா அறிவியல் உலகில் புரட்சியை ஏற்படுத்தியது. அவர் நோபல் பரிசு வாங்கியதும் எல்லோருக்கும் தெரிந்துதான் .(இது பற்றி இதுக்குமேல எனக்கு  ஒன்னும் தெரியாது).
நான் சொல்லப்போவது ஐன்ஸ்டீன் பற்றிய ஒரு சம்பவம். உங்களுக்கும் தெரிந்திருக்கலாம். (இது உண்மைதானா அப்படின்னு ஆராய்ச்சி பண்ணக் கூடாது.)

  ஐன்ஸ்டீன் தன்னுடைய புவிசார்புக் கொள்கையை வெளியிட்டதும், அதை அப்போது பலரால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. சொல்லப்போனால் எளிதில் புரிந்துகொள்ள முடியவில்லை என்பதே உண்மை.. அதனால் அவர் ஊர் ஊராகச் சென்று பல்வேறு அறிஞர்களுக்கு மத்தியில் பல்கலைக் கழகங்களில் சென்று விளக்க உரை ஆற்றுவது வழக்கம். அப்போது அவர்கள் கேட்கும்  சந்தேகங்களுக்கும் தெளிவாக விடை அளிப்பார்.
  ஒருமுறை ஒரு  பல்கலைக் கழகத்திற்கு உரையாற்றுவதற்காக செல்ல வேண்டி இருந்தது. ஏராளமான விளக்கக் குறிப்புகளுடன் காரில் ஏறினார் ஐன்ஸ்டீன்.
  காரை இயக்கிய ஓட்டுனர் இதைப் பார்த்து சிரித்தார். "எதற்கு சிரிக்கிறாய்" என்று கேட்டார் ஐன்ஸ்டீன். "ஐயா, ஒவ்வொரு நாளும் பல இடங்களுக்கு சென்று இதைப் பற்றியே சொற்பொழிவு ஆற்றுகிறீர்கள். நீங்கள் என்னென்ன பேசுவீர்கள் என்று எனக்கே நன்றாகத் தெரியும்." ஐன்ஸ்டீன் ஆச்சரியம் அடைந்தார். "உனக்கு இந்த அறிவியல் தத்துவம்  புரிகிறதா?" என்று கேட்டார். "எனக்கு அது புரியாது. ஆனால்  நீங்கள் என்ன பேசுவீர்களோ அவை எனக்கு ஒரு வரி கூட விடாமல் மனப்பாடமாகத் தெரியும்" என்றார். 

  வியப்படைந்த ஐன்ஸ்டீன் எங்கே சொல் பார்க்கலாம் என்று கேட்க  ஓட்டுனர் காரை ஒட்டிக்கொண்டே ஐன்ஸ்டீனின் உரையை பேசிக்காட்டினார் ஓட்டுனர். நிறையப் பேர் வழக்கமாக கேட்கும் சில சந்தேகங்களைக் கேட்க அதற்கும் ஓட்டுனர் ஐன்ஸ்டீன் போலவே விளக்கம் அளித்தார்.
   இதைக் கேட்ட ஐன்ஸ்டீன் ஒரு குறும்பு செய்ய நினைத்தார்.

  ஒட்டுனரைப் பார்த்து, "இப்போது நான் உரையாற்றச் செல்லும் பலகலைக் கழகத்தில் உள்ளவர்கள் இதுவரை  யாரும் என்னைப் பார்த்ததில்லை. அதனால்  எனக்கு பதிலாக நீ உரையாற்று. உனது ஓட்டுனராக நான் வருகிறேன்". என்றார்.
      ஓட்டுனர் ஐன்ஸ்டீனின் ஆடைகளை அணிந்து கொள்ள, ஐன்ஸ்டீன் ஒட்டுனாராக மாற, பேச வேண்டிய அரங்கிற்குள் நுழைந்தனர். இருவருக்கும் பலமான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஐன்ஸ்டீனாகச் சென்ற ஓட்டுனர் மேடையில் அமர ஒட்டுனராகச் சென்ற ஐன்ஸ்டீன் முன் வரிசையில் உட்கார  வைக்கப்பட்டார்.(வி.ஐ.பி. இன் ஓட்டுனர் ஆயிற்றே)

      ஓட்டுனர் சொற்பொழிவைத் தொடங்கினார். ஐன்ஸ்டீன் போலவே ஏற்ற இறக்கத்துடன் தடுமாற்றமின்றி மிகக் கடினமான அந்த அறிவியல் கருத்தை அற்புதமாக விளக்கினார்.  கூட்டம் மெய் மறந்து கேட்டுக் கொண்டிருந்தது.  உரை முடிந்ததும் அனைவரும் எழுந்து நின்று கைகளைத் தட்டி பாராட்டு தெரிவித்தனர். ஐன்ஸ்டீனும் ஒட்டுனருடைய  திறமையைக் கண்டு கைகள் தட்டி பாராட்டினார்.
     பின்னர் அரங்கில் உள்ள அறிஞர்களும் மாணவர்களும் தங்கள் ஐயங்களை கேட்க ஆரம்பித்தனர். இவை வழக்கமாக எல்லா இடங்களிலும் கேட்கப் படுவதால் எல்லோருடைய சந்தேகங்களுக்கும் சாமார்த்தியமாக விடை அளித்தார்  ஓட்டுனர்.
         திடீரென்று மாணவன் ஒருவன் எதிர்பாரா விதமாக  இதுவரை யாரும் கேட்காத ஒரு கேள்வியைக் கேட்டான்.
     இந்தக் கேள்விக்கு எப்படி பதில் சொல்லப் போகிறாய்? என்று சொல்வது போல் குறும்பு சிரிப்புடன் ஓட்டுனரை நோக்கினார் ஐன்ஸ்டீன்.
     எதிர்பாராத இந்தக் கேள்வியால் சில வினாடிகள் தடுமாறிய ஓட்டுனர், தன்னைப் பார்த்து கிண்டலாகச்  சிரித்துக்கொண்டிருந்த ஐன்ஸ்டீனைப் பார்த்தார்.
 பிறகு சட்டென்று, கேள்வி கேட்ட அந்த மாணவனைப் பார்த்து, “ தம்பி! இந்த எளிதான விஷயம் உனக்குப் புரியாதது எனக்கு ஆச்சர்யம் அளிக்கிறது. உனது ஐயத்தை தீர்க்க நான் தேவை இல்லை. இதோ எதிரில் அமர்ந்திருக்கும் எனது ஒட்டுனரே போதும். ஓட்டுனரே! வந்து  இந்த கேள்விக்கு விடை சொல்லுங்கள் என்று  ஐன்ஸ்டீனை அழைத்தார்.
      
  இதை எதிர்பாராத ஐன்ஸ்டீன் என்னைவிட நீதான் புத்திசாலி என்று மனதுக்குள் ஓட்டுனரின் சமயோசித புத்தியைப் பாராட்டிக்கொண்டே  விளக்கம் சொல்ல எழுந்தார்.
************************************************************

ஞாயிறு, 15 ஏப்ரல், 2012

ஒரு கல் ஒரு கண்ணாடி -கவிதையில் விமர்சனம்


     ஒரு கல்,(ஒரு) கண்ணாடி படத்தைப் பார்த்தேன்
     விமர்சனம் எழுதிட விருப்பம் கொண்டேன்.
     கேபிள் சங்கர் அட்ரா சக்கை
     விமர்சன வித்தகர் பலரும் இருக்க
     எந்தன் விமர்சனம் எப்படி எடுபடும்
     என்ற தயக்கம் என்னுள் எழுந்தது
     புதிய முயற்சி எடுத்திட நினைத்தேன்
     கவிதையில் விமர்சனம் எழுதிட முனைந்தேன்.
     நகைச்சுவை நம்பி எடுத்த படமிது
     கதையோ கடுகாய் கொண்ட படமிது 
     வேலை வெட்டி ஏது மின்றி
     காலை தொடங்கி மாலை வரையில் 
     பெண்ணைத் துரத்திக் காதலித்து
     நண்பன் துணையுடன் கைப்பிடிக்கும் 
     நகைச்சுவை இணைப்பே இப் படமாம் 
     ஹன்சிகா வுக்கு அழகு அதிகம்
     அதைவிட அளவு கொஞ்சம் அதிகம்
     உதய நிதிக்கு அக்கா போலே
     சில காட்சிகளில் தெரியுது எனக்கு
     நடிகர்  ஜீவா முகத்தின் சாயல்
     உதய நிதிக்கு இருப்பது உண்மை.
     நடிப்பதில் சிறிது சிரமமிருந்தாலும்
     நன்றாய் சமாளித்து நடித்தும் விட்டார்
     உண்மையில் நாயகன் சந்தா னம்தான்
     உரைப்பது நானல்ல படம் பார்ப்பவர்தான்
     வைகைப் புயலும் கரையைக் கடக்க
     விவேக்கையும் மக்கள் விலக்கத் தொடங்க
     சந்தானக் காட்டில் மழையும் பொழிந்தது
     சிரிப்பில் ரசிகர் உள்ளம் நனைந்தது
     இளைஞர்கள் மனதில் இடம் பிடித்துவிட்டார்
     அரங்கம் நிரம்ப இவர் தேவைப்பட்டார்
     வாயைத் திறந்து எது சொன்னாலும்
     விசிலை அடிக்குது ரசிகர் கூட்டம்

     பாடல்கள் எல்லாம் நன்றுதான் ஆனால்
     எல்லாம் எங்கோ கேட்ட மெட்டுதான்
     அயல் மொழி இசையை அப்பட்டமாக
     காப்பி அடிப்பது ஹாரிஸ் வழக்கம்
     ராஜா  ரஹ்மான் இருவரைப் பார்த்து  
     ஹாரிஸ் கொஞ்சம் கற்பது நன்று  
     நாயகன் நண்பர் இன்னும் சிலரும்
     ஐயோ என்று லேசாய் தலையில்
     அடித்துக் கொள்ளும் காட்சிகள் அனைத்தும்
     எண்ணிப் பார்த்தேன் இருபதைத் தாண்டும்
     சரண்யா நடிப்பில் கொள்ளை கொள்கிறார்
     ஆர்யா கடைசியில் அசத்திப் போகிறார்
     எடிட்டிங் கேமரா பின்னணி இசையில்
     சிறப்பாய் சொல்ல ஒன்றும் இல்லை
     சிரித்திட மட்டும் நினைப்போருக்கு
     நிச்சயம் இதுவோர் சிறந்த படம்தான்
     இயக்குனருக்கு இன்னொரு வெற்றி
     வாழ்த்துச் சொல்லலாம் கைகளைப் பற்றி 

********************************************************************************
தங்கள் கருத்துக்களை மறக்காமல் தெரிவிக்கவும்

சனி, 14 ஏப்ரல், 2012

தொலைக்காட்சி சிறப்பு நிகழ்ச்சிகளில் என்னைக் கவர்ந்தவை

   தொலைக் காட்சியில் தமிழ்ப் புத்தாண்டு முன்னிட்டு பல சிறப்பு  நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டன.அவற்றை நான் முழுமையாக பார்க்காவிட்டாலும் பார்த்ததில் என்னைக் கவர்ந்த மூன்றை மட்டும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

  ஜெயா டிவியில் ஒளி பரப்பான பட்டிமன்றம் இந்தியாவின் எதிர் காலம் உழவனின் கழனியிலா? உள்ளங்கை கணினியிலா? பட்டிமன்ற நடுவர் அனைவருக்கும் பரிச்சியமான பேராசிரியர் கு,ஞானசம்பந்தன் அவர்கள் நடுவராக அமர்ந்து சொன்ன தீர்ப்பு அருமை. தீர்ப்பு எதிபார்த்ததுதான் என்றாலும் அவர் சொன்ன விளக்கம் பொருத்தமானது. மனிதன் கண்டுபிடித்த கருவிதானே கணினி அது மனிதனுக்கு மட்டும்தான் உதவும். உணவு உற்பத்திக்கு கழனிதானே தேவை, கணினி இல்லாமல் உயிர்கள் வாழமுடியும். கழனி இல்லாமல் உயிர்கள் வாழ முடியாது. கழனியில் உற்பத்தி செய்யும் பொருளை காக்காய்,குருவி,புறா,அணில் போன்ற பறவைகள் விலங்குகள் உண்டு மகிழும். அதனால் இந்தியாவின் எதிர் காலம் கழனியில்தான் என்று தீர்ப்பளித்ததோடு, உங்கள் கைகளில் கணினி தவழட்டும் ஆனால் கால் கழனியில் இருக்கட்டும் என்று முத்தாய்ப்புடன் முடித்தது சிறப்பு.
**********************************************************************************************************
வேலாயுதம் படத்தில் ஒரு காமெடி சீன் ஒரு புடவைக் கடையில் ஒருபுடவை எடுத்து இழுத்து புரட்டி பார்த்து இந்தப் புடவைதான் வேணும் என்று கடைக்காரனிடம்  சொல்ல அத அந்த அம்மாதான் சொல்லணும் என்று சொல்ல அப்போதுதான் தெரிந்தது அவர்கள் கையில் வைத்திருந்த புடவை ஒரு பெண் கட்டியிருந்த புடவை என்று தெரிய அந்தப் பெண் கோபத்துடன் முறைக்க நல்ல நகைச்சுவை கலாட்டா.
**********************************************************************************************************
 விஜய் டிவியில் ஒளி பரப்பான எங்கேயும் எப்போதும் திரைப்படம்.ஏற்கனவே பலராலும் பாரட்டப்பட்ட படம் என்பதால் முதன் முறையாக முழுவதும் பார்த்தேன். கடைசி வரை நன்றாக இருந்தாது விபத்தை அடிப்படையாகக் கொண்ட இறுதிக்காட்சிகள் கண்கள் கலங்க வைத்தன. 
     அந்தப் படத்தில் எனக்கு மிகவும் பிடித்தது ஒரு பாடல் காட்சி.  அனன்யா தனக்கு உதவி செய்த சரவ்வின் பெயரைக்கூட தெரிந்து கொள்ளவில்லை.
   மிக எச்சரிக்கையுடன் இருந்தும் காதல் வசப்படுவதை தடுக்க இயலாது போக சரவ்வை நினைத்து பாடும் "உன் பேரே தெரியாது" என்ற பாடல் மிகவும் அருமை. சமீப காலங்களில் வெளிவந்த பாடல்களில் எனக்கு மிகவும் பிடத்த பாடல் இதுதான். இசை யார்?பாடலாசிரியர் யார்? பாடியவர் யார் என்பதை வலையில் பார்த்துத்தான் தெரிந்து கொண்டேன். நா.முத்துக்குமார் ஒரு பெண்ணாகவே மாறி பாடல் எழுதியிருப்பாரோ என்று எண்ணுமளவுக்கு மிகச் சிறப்பாக இலக்கிய நயத்துடன் எளிய வார்த்தைகளுடன் எழுதியிருப்பது பாரட்டத்தக்கது. பாடிய மதுஸ்ரீ யின் குரல் தேனினும்  இனிமை. "சொல்லி விட்டால் உதடு ஒட்டும் , எழுதிவிட்டால் தேனும் சொட்டும்" என்ற வரிகளைப் பாடும்போது உண்மையாகவே தேன் சொட்டுவது போல் உணர்வை ஏற்படுத்தியது. அற்புதமான மெட்டுப் போட்ட இசை அமைப்பாளர் சத்யாவிற்கு பாராட்டுக்கள்.
இந்தப்பாட்டை வரிகளைப் படித்துக்கொண்டே கேட்டுப் பாருங்கள் 


படம் : எங்கேயும் எப்போதும்
இசை : சத்யா
பாடியவர் : மதுஸ்ரீ
பாடலாசிரியர் : நா. முத்துக்குமார்

எங்கேயும் எப்போதும் - உன் பேரே தெரியாது பாடல் வரிகள்


உன் பேரே தெரியாது
உன்னை கூப்பிட முடியாது
நான் உனக்கொரு பேர் வைத்தேன்
உனக்கே தெரியாது
அந்த பேரை அறியாது
அட யாரும் இங்கேது
அதை ஒரு முறை சொன்னாலே தூக்கம் வாராது
அட தினம் தோறும் அதை சொல்லி உனை கொஞ்சுவேன்
நான் அடங்காத அன்பாலே உனை மிஞ்சுவேன்


ஹோ சூடான பேரும் அது தான்
சொன்ன உடன் உதடுகள் கொதிக்கும்
சூரியனை நீயும் நினைத்தால் அது இல்லையே
ஜில்லென்று பேரும்  அது தான்
கேட்ட உடன் நெஞ்சம் குளிரும்
நதி என்று நீயும் நினைத்தால் அது இல்லையே
சிலிர்க்க வைக்கும் தெய்வம் இல்லை
மிரள வைக்கும் மிருகம் இல்லை 
ஒளி வட்டம் தெரிந்தாலும்
அது பட்ட பேரில்லை
என் பேரின் பின்னால் வரும் பேர் நான் சொல்ல வா...


பெரிதான பேரும் அது தான்
சொல்ல சொல்ல மூச்சே வாங்கும்
எத்தனை எழுத்துக்கள் என்றால் விடை இல்லையே
சிறிதான பேரும்  அது தான்
சட்டென்று முடிந்தே போகும்
எப்படி சொல்வேன் நானும் மொழி இல்லையே
சொல்லி விட்டால் உதடு ஒட்டும்
எழுதிவிட்டால் தேனும் சொட்டும்
அது சுத்த தமிழ் பேர் தான்
அயல் வார்த்தை அதில் இல்லை
என் பேரின் பின்னால் வரும் பேர் நான் சொல்ல வா...


உன் பேரே தெரியாது
உன்னை கூப்பிட முடியாது
நான்  உனக்கொரு பேர் வைத்தேன்
உனக்கே தெரியாது
அட தினம் தோறும் அதை சொல்லி உனை கொஞ்சுவேன்
நான் அடங்காத அன்பாலே உனை மிஞ்சுவேன் 

********************************************************************************************

வெள்ளி, 13 ஏப்ரல், 2012

இனிமைத் தமிழ்மொழி எமது

  
இன்று தமிழ் புத்தாண்டு. அனைத்து உலகத் தமிழருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். நந்தன ஆண்டை வந்தனம் கூறி வரவேற்போம். 

          இனிமைத் தமிழ் மொழி எமது-எமக் 
             கின்பம் தரும்படி வாய்த்த நல் அமுது 
          கனியைப் பிழிந்திட்ட சாறு -எங்கள் 
             கதியில் உயர்ந்திட யாம் பெற்ற பேறு
          தனிமைச் சுவையுள்ள சொல்லை-எங்கள் 
               தமிழினும் வேறெங்கும் யாம் கண்டதில்லை 
           நனியுண்டு நனியுண்டு காதல்-நற்
               றமிழர்கள் யாவருக்கு மேதமிழ் மீதில்  

இது புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் "எங்கள் தமிழ்" என்ற தலைப்பில் எழுதிய பாடலின் முதற் பகுதி. இதை நான் எப்போது எங்கே படித்தேன் என்று நினைவில் இல்லை. ஆனால் இந்த செய்யுள் என் மனதில் பசுமரத்தாணி போல் பதிந்துள்ளது. இது தமிழின் மீது கவிஞர் எவ்வளவு பற்று வைத்திருக்கிறார் என்பதை எடுத்துக்காட்டுகிறது. எனக்கும் தமிழின் மீது சிறிதளவாவது பற்று  இருக்கிறது என்று சொன்னால் அதற்கு இந்தப் பாடலும் ஒரு காரணம். 
ஆனால் இன்று 
நனியுண்டு நனியுண்டு காதல்-நற்
   றமிழர்கள் பலருக்கும் ஆங்கிலம் மீதில்

என்ற நிலையே நிலவுகிறது. தமிழ் எனக்குத் தெரியாது என்று சொல்வதை பெருமையாகக் கருதுகின்றனர்.  என் பையனுக்கு தமிழே வரமட்டேங்குது. என்று பெற்றோர்கள் பெருமையுடன் சலித்துக்  கொள்வதை பார்த்திருக்கலாம்.
அவர்களுக்கெல்லாம் முகநூல் நண்பர் ஒருவர் பகிர்ந்த கவிதையை சில திருத்தங்களுடன்  சொல்ல ஆசைப் படுகிறேன்.

          அலறும்போது  மட்டும்   அ , ஆ 
          சிரிக்கும்போது மட்டும்    இ , ஈ 
          சூடு பட்டால் மட்டும்    உ , ஊ 
          அதட்டும்போது மட்டும்   எ , ஏ 
          ஐயத்தின்போது மட்டும்   ஐ 
          ஆச்சர்யத்தின் போது மட்டும்   ஒ , ஓ
          வக்கனையின்போது மட்டும்   ஒள
          விக்கலின் போது மட்டும்    ஃ , ஃ 
          என்று  தமிழ் பேசி 
          மற்ற நேரம் வேற்று மொழி பேசும் 
          தமிழர்களிடம் மறக்காமல் சொல் 
          உன் தாய்மொழி 
          தமிழ் என்று 

   இன்று இந்த தமிழ் புத்தாண்டு தினத்திலாவது தமிழை நினைத்திருப்போம்! தமிழால் இணைந்திருப்போம்! 
************************************************************
இதையும் படியுங்க!

நினைவுதிர் காலம்