என்னை கவனிப்பவர்கள்

திங்கள், 30 மே, 2016

கழுதைக்குத்தான் பதவி- உள்குத்து ஏதுமில்லை



  நான்படித்த ரசித்த சில கதைகளை என் கற்பனை கலந்தும். சில சமயங்களில் முழுதும் கற்பனையாகவும்  எட்டிப் பார்த்துப் படித்த குட்டிக் கதைகள் என்ற தலைப்பில் பதிவிடுவதை  அறிந்திருப்பீர்கள். நீண்ட நாட்களுக்குப் பிறகு  

எட்டிப் பார்த்துப் படித்த குட்டிக் கதை 


அந்த அரசவையில் வானிலை ஆலோசகர்  பதவி காலியாக இருந்தது . மழை வெள்ளம்  பூகம்பம் முதலிய  இயற்கை இடர்பாடுகளை கணித்துக் கூறவேண்டும் அரசின் செயல்பாடுகளுக்கும் திட்டங்களும் தடைபடாமல் நடைபெற  வானிலை உகந்ததாக இருக்கிறதா என்று சொல்லவேண்டும். இவை வானிலை ஆலோசகரின் பணியாகும். இப்பதவிக்கு   தக்க அறிவும் புத்திசாலித்தனமும் நிறைந்தவரை நியமிக்க விரும்பினார் மன்னர். .அப்பதவிக்கு நிறையப் போட்டி இருந்தது. அவர்களில் அதிகம் கற்றவரை மன்னரிடம் அழைத்து வந்த அமைச்சர்.,"மன்னா இவர்தான் வந்தவர்களிலேயே மிகவும் கல்வி அறிவு உடையவர்.. வானவியல் பூகோளவியல் உள்ளிட்ட அனைத்தும் அறிந்தவர்,. இவரை இந்தப் பதவிக்கு நியமிக்கலாம்" என்றார்.
"அப்படியா! இவரிடம் ஒரு கேள்வி கேட்கிறேன்..  வேட்டைக்காக செல்லப் போகிறேன். இன்றைக்கு மழை வருமா? மழை உறுதியாக வராது என்று தெரிந்தால் மட்டுமே  வேட்டையாட செல்வேன். இவர் சொன்னபடி நடந்தால் இவரையே இப்பதவிக்கு நியமிக்கிறேன்."  என்றார் 
     அமைச்சர் அழைத்து வந்தவர் வானத்தை நான்கு பக்கமும் உன்னிப்பாக  பார்த்தார்,பின்னர் கையில் இருந்த ஓலை சுவடிகளைப் புரட்டிப் பார்த்தார்
" அரசே! இன்று வானிலை நன்றாக உள்ளது மழை நிச்சயம் வராது. மழை வராது  என்பதை கால சாஸ்திரமும்  உறுதிப்படுத்துகின்றன.  தாங்கள் தாரளமாக வேட்டைக்குச் செல்லலாம்." என்றார் 
     மன்னர் தன் பரிவாரங்களோடு வேட்டைக்கு காடு நோக்கி புறப்பட்டார். சிறிது தூரம் கடந்ததும் வழியில்வி வசாயி ஒருவன் வயலில் அறுவடை செய்து கொண்டிருந்தான். அறுவடை செய்யப்படும் பயிரைக்  கவனித்த மன்னர்  இன்னும் சில நாட்களுக்குப்  பிறகு செய்ய வேண்டிய அறுவடையை இப்போதே செய்து கொண்டிருந்தான். மன்னர் அவனை அழைத்து ஏனிப்படி பயிரை முன்னதாகவே அறுவடை செய்கிறாய் என்று கேட்டார் ,
அதற்கு அந்த விவசாயி , "அரசே! இன்று கடும் மழை பெய்யப் போகிறது மழை வந்தால் பயிர் நீரில் மூழ்கி  வீணாகி விடும் அதனால்தான் இப்போதே அறுவடை செய்கிறேன். நீங்கள்கூட, உங்கள் பயணத்தை  நிறுத்திவிட்டு திரும்பி விடுங்கள் " என்றான் 
   மன்னரும் கூட வந்தவர்களும் கொல்லென்று  சிரித்தனர் ."படித்த விவரம் அறிந்த அறிஞரே சொல்லிவிட்டார் இன்று மழை வராது என்று,.மழை வருவதற்கான எந்த அறிகுறியும் இல்லை. நீயோ முட்டாள்தனமாக மழை வரும் என்கிறாய் . உன்னைப் போன்ற முட்டாள்கள் என் நாட்டு மக்களாக இருப்பதைக் கண்டு வெட்கப்படுகிறேன், என்று சொல்லி விட்டு வேட்டைப் பயணம் தொடர்ந்தார்.
  நேரம் கடந்தது எதிர்பாராவிதமாக திடீரென்று காற்று  வீசியது. வானம் இருண்டது . மழை சட சடவெனப்  பெய்ய ஆரம்பித்தது. மழை மேலும் வலுத்துக் கொட்டிக் கொண்டிருந்தது. ஒதுங்க இடம் தேடி அலைந்து கடைசியில் ஒரு பாழடைந்த மண்டபத்தில் ஒதுங்கினர். மழை விட்டபாடில்லை. அதிகாலை வரை மழை பெய்து எங்கும் வெள்ளக் காடாக மாறி விட்டது. வேறு வழியின்று காலையில் வேட்டைக்கு  செல்ல முடியாமல்  அரண்மனை திரும்பினார் மன்னர் .
  அரண்மனை சென்றும் மன்னனின் ஆச்சர்யம் அகலவில்லை. கற்று அறிந்த அறிஞரால் மழை வரும் என்று கணித்துக் கூற முடியவில்லை கல்லாத விவசாயி மழை வரும் என்று அடித்துக் கூறுகிறான். அவனல்லவா சிறந்த வானிலை அறிஞன் என்று எண்ணினார் மன்னர். அந்த விவசாயியை அழைத்து வரச் செய்து,"நீதான் இனிமேல் என் வானிலை ஆலோசகன்" என்றார்
  விவசாயி  தயக்கத்துடன் மறுத்தான். மன்னன் மீண்டும் மீண்டும் வற்புறுத்தியும் அவன்  மறுக்கவே கோபம் அடைந்த மன்னர்."நீதான் என் வானிலை ஆலோசகன்.உடனே பதவி ஏற்க வேண்டும் இல்லையென்றால் சிறையில் தள்ளப்படுவாய் " என்றார் 
  விவசாயி அச்சத்துடன் மீண்டும் சொன்னான் "மன்னா! நான் மழை வரும் என்று சொன்னது  நடந்து விட்டதால்  தகுதி உடையவன் என்று என்னை இந்தப் பதவியை ஏற்றுக் கொள்ளச் சொல்கிறீர்கள். உண்மையில் எனக்கு அந்தத் தகுதி இல்லை. என் கழுதைதான் இந்தப் பதவிக்கு தகுதியானது" என்றான் .
மன்னர் குழப்பத்துடன் அவனைப் பார்க்க விவசாயி தொடர்ந்தான்"மழை வருவதன்  அறிகுறி தெரிந்தால் எனது கழுதையின்  காது நரம்பு புடைத்துக் கொள்ளும்.காதுகள் தொங்காமல் மேல்நோக்கி விறைப்பாக இருக்கும். நேற்று அப்படித்தான் இருந்தது. அப்படி இருக்கும்போதெல்லாம் கட்டாயம்  மழை வரும். இதுவரை ஒருமுறை கூட தவறியதில்லை. அதனால்தான் அவசர அவசரமாக அறுவடை செய்தேன். என் கழுதையை வேண்டுமானால்  ஆலோசகராக நியமித்துக் கொள்ளுங்கள்" என்றான் பெருமையுடன்  

*************************************************************************
பிற எட்டிப் பார்த்துப் படித்த குட்டிக் கதைகள் 
என்னைவிட புத்திசாலி நீதான்—ஐன்ஸ்டீன்

ஞாயிறு, 29 மே, 2016

நரிக்குறவர்களுக்கு இனிமேலாவது விடியுமா?




தமிழ்மண வாக்கை இங்கு க்ளிக் செய்தும் போடலாம் 
  நரிக்குறவர் பற்றி சமீபத்திய செய்தி ஒன்றை கேள்விப்பட்டிருப்பீர்கள். நரிக்குறவர் இனம் பழங்குடி மலைசாதியினர் பட்டியலில் சேர்க்கப்பட உள்ளறது. இதில் என்ன இருக்கிறது என்று கேட்கிறீர்களா? அவர்களை இவ்வளவு நாள் பழங்குடி இனத்தவர் பட்டியலைச் சேர்ந்தவர் என்றுதான் பலரும் நினைதிருக்கிறார்கள்.  அப்படியானால் அவர்கள் பழங்குடியினர் பட்டியலில்  இல்லையா என்ற ஆச்சர்யம் ஏற்படலாம். ஆம் அவர்கள் பழங்குடியினர் பட்டியலில் இல்லை. பள்ளிகளில் சேர்க்கப் படும்போது நரிக்குறவர் என்று சொன்னதும்    பல தலைமை ஆசிரியர்கள் நரிக்குறவர்கள் ST  என்றே பள்ளிப் பதிவேடுகளில் எழுதி விடுகின்றனர். ஆனால் நரிக்குறவர்களில் கூட பெரும்பாலோருக்கு தெரியாது அவர்கள் எந்தப் பிரிவில் இருக்கிறார்கள்  என்பது. பலரும் இவர்கள் பழங்குடி இனத்தவர் பட்டியலில் இருக்கிறார்கள் என்றே நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் இவர்கள் எம்.பி.சி பிரிவில் இருக்கிறார்கள். எல்லோர் மனதிலும் இவர்கள் பழங்குடியினர் என்று பதிந்துள்ளபோது அரசுக்கு மட்டுமே ஏன் இவர்கள் பழங்குடியினராகத் தெரியவில்லை.  இவர்களுக்கு பழங்குடியினர் அந்தஸ்து  வழங்கப் படாததன் காரணம் என்ன என்பது யாரேனும் சொன்னால் நலம் . 

     இவர்களில் பள்ளிகளில் சேர்ந்து தொடர்ந்து படிப்போரின் எண்ணிக்கை மிகக் குறைவே. பலரும் இடை  நின்று விடுகின்றனர். சான்றும் பெற்றுச் செல்வதில்ல்லை . இவர்கள் பள்ளியில்  இருந்து நின்றுவிடுவதற்கு பல காரணங்கள் பல உண்டு .அவர்களுக்காக குடியிருப்புகள் அமைக்கப் பட்டிருந்தாலும் அவர்கள் நிலையாக அங்கு தங்குவதில்லை. அவர்களது வழக்கமான நாடோடி வாழ்க்கை கல்வி கற்க தடையாக இருக்கிறது. கல்வியின் முக்கியத்துவத்தை அவர்களுக்கு உணரவைப்பார் யாருமில்லை. அவர்கள் இனத்தை முன்னேற்றம் பெறச்செய்ய தக்க தலைவர்கள் வாய்க்கவில்லை. இவர்களில் கல்வி அறிவு பெற்ற மிக சிலரும்   இவர்கள் இனம் கல்வி பெறவேண்டும் என்ற முனைப்போடு செயல்படுவதில்லை. சில சமூக நலன் விரும்பிகள் இவர்கள் மீது அக்கறை கொண்டு அவ்வப்போது கோரிக்கைகள் வைப்பது உண்டு.   நிலையாக  ஓரிடத்தில் வசிப்பவர்களும் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவதில்லை. பள்ளிகளில் இந்த மாணவர்கள் கேலிக்கு ஆளாக்கப் படுகின்றனர். நாங்கள் இவர்களை பள்ளிக்கு வரவழைக்க இவர்கள் இருப்பிடத்திற்கு சென்றால் ஓடி ஒளிந்து கொள்வார்கள்  மாணவர்கள். எங்க பசங்களை கிண்டல் பண்றங்கலாம் நாங்க ஸ்கூலுக்கு அனுப்ப மாட்டோம் என்கின்றனர் நரிக்குறவப் பெற்றோர். கையில் துப்பாக்கி வைத்திருந்தும் புரட்சி செய்யத் தெரியாத மக்கள் இவர்கள். கல்வி அறிவில் வேறு எந்த சமுதாயத்தையும் விட மிக மிக பின்தங்கிய நிலையில்தான் உள்ளனர் என்பது கண்கூடு 

  அரசு அலுவலகங்களில் தாழ்த்தப்பட்டவரை  காணலாம் . பழங்குடியினரைக் காண முடியும். ஆனால் உங்களுக்குத் தெரிந்து அரசு பணியில் எந்த நரிக்குறவர் இனத்தை சேர்ந்த யாராவது இருக்கிறார்களா?. இவர்கள் எம். பி. சி பிரிவில் இருந்தாலும் சமூக அந்தஸ்து தாழ்த்தப்பட்டவர்களை விட குறைவாகவே உள்ளது. நாய்களுக்கு கூட இவர்களைக் கண்டால் ஆகாது . தூரத்தில் வந்தாலே குலைக்க ஆர்ம்பித்து விடும். இவர்கள் அருகில் வரும்போது ஒரு வாடை வீசும் .சுகாதாரமின்மையும், இவர்கள் உணவு முறையும்தான் இந்த வாடைக்கு காரணம் என்று கூறப்படுகிறது. உணவு முறை  அவர்கள் உரிமை என்றாலும் அக்கறை கொண்டு  இவர்களை வழி நடத்த யாருமில்லை

  திரைப் படங்களில் அதிகமாக கேலி செய்யப்படும் சில இனங்களில் குருவிக்காரர் எனப்படும் நரிக்குறவர் இனமும் ஒன்று. மற்றவை  உங்கள் ஊகத்திற்கு. ஒரு படத்தில் வடிவேலு நரிக்குறவராக நடித்திருப்பார். அவர்கள் வாழ்க்கையை பகடி செய்வது போலவே இருக்கும். சின்ன சின்ன விஷயங்களுக்குக் கூட படத்தை வெளியிட தடை கோருவது சகஜமாக உள்ளது. ஆன இவர்களுக்காகப் பரிந்து பேச யாருமில்லை. இவர்கள் முன்னேற்றத்திற்கு எந்த அரசியல் கட்சியும் போராட்டம் நடத்தியதில்லை. காரணம் இவர்கள் நிலையான வாக்கு வாங்கி இல்லை. இவர்களுக்கென்று பெயர் சொல்லக் கூடிய தலைவர் குறைந்தபட்சம் ஒருங்கிணைப்பாளர் இருக்கிறாரா என்பதை இதுவரை அறிந்தேன் இல்லை.

தமிழ்நாட்டில் நரிக்குறவர் சமுதாயத்தில் இருந்து வந்திருக்கும், முதல் பொறியியல் பட்டதாரி ஸ்வேதா. கல்வி சூழலில் இருந்து விலகிய இனத்தில் பிறந்து சாதனை புரிந்திருக்கிறார் 
நரிக்குறவர்கள் இடையே கல்வியின்மை இல்லை என்ற நிலை வரவேண்டும். கல்வி கற்றால்தான் அடிப்படை சுகாதாரத்தையும், நாகரிகத்தையும் அவர்களால் கற்றுக் கொள்ள முடியும். அதுவரை நானும், என்னுடைய பெற்றோர்களும் அவர்களுக்காக உழைத்துக்கொண்டுதான் இருப்போம்!" என்று கூறும் ஸ்வேதாவின் கனவுகள் ஈடேற வாழ்த்துவோம் 
அவ்வப்போது அரசால் இவர்களுக்காக சில முயற்சிகள் எடுக்கப்பட்டன. நரிக்குறவர் களுக்காக கலைஞர் ஆட்சிக் காலத்தில் நரிக்குறவர் வாரியம் தொடங்கப் பட்டுள்ளது. . இதில் பதிவு செய்துள்ள வர்களுக்கு  நலத் திட்ட உதவிகள் பல இருப்பதாக தெரிகிறது. இவர்களில் எத்தனை பேர் இந்த உதவிகளைப் பெற்றிருக்கிறார்கள் என்ற விவரம் இல்லை. இன்றும், சென்னை பிராட்வே பேருந்து நிலையத்தில் பாசி மணி ஊசி மணிமாலை கோர்த்து விற்றுக்
கொண்டிருக்கிறார்கள். சிலர் ஒரு கம்பில் காந்தத்தைப் பொருத்தி குப்பைகளில் இரும்புப் பொருட்களை சேகரித்தும் செல்கிறார்கள்.. 

  இவர்கள் வாழ்க்கை இயற்கையோடு இணைந்த வாழ்க்கை. பறவைகள் அணில்கள், முயல் போன்றவற்றை வேட்டையாடி அதனை உணவாகவும் உட்கொள்கிறார்கள். இந்தக் காலத்திலும் மற்ற சமூகத்தோடு ஒட்டி வாழ இயலாதவர்களாகவே 
இருக்கிறார்கள். சில பழங்குடியினர் வெளியுலக தொடர்பு அதிகம் இல்லாதவர்களாக இருப்பார்கள்., இவர்களோ நாகரீக  சமூகத்திற்கு இடையே வசித்தாலும் மாறுபட்ட வாழ்க்கை முறையை உடைய வர்களாக விளங்குகிறார்கள்.  இந்த இன சிறுவர்களின் விளையாட்டு ஆயுதம் உண்டி வில்.(காண்க பெட்டிச் செய்தி) .  நரிக்குறவர்கள் நாட்டுத் துப்பாக்கிகள் வைத்திருப்பதை பார்த்திருப்பீர்கள். இவர்கள் துப்பாக்கி பயன்படுத்த எப்படிக் கற்றுக்கொண்டார்கள் வேட்டையாட அனுமதி உண்டா? இதற்கெல்லாம் எப்படி இதற்கு உரிமம் வாங்குகிறார்கள். எப்படி புதுப் பிக்கிறார்கள் என்பது எனக்கு ஆச்சர்யமாக இருக்கும். 
  இப்போதெல்லாம் காதில் ஹியர் போனும் கையில் செல்போனும் வைத்துக் கொண்டு திரிந்து கொண்டிருக்கிறோம். ஆனால் இதற்கு முன்னோடியாக ரேடியோவையே தன கழுத்தில் மாட்டிக் கொண்டு பாட்டு கேட்டுக் கொண்டே  சென்றவர்கள் நரிக்குறவர்கள். டால்டா டப்பாக்கள் இப்போது இவர்கள் கையில் இல்லை என்றாலும் பெரிய மாற்றம் ஏதும்  இல்லை 
  மின்சார ரயிலில் இவர்கள் பயணம் செய்வதை பார்த்திருக்கிறேன். இவர்கள் ஒரு போதும் இருக்கையில் அமர்ந்து சென்றதில்லை. கூட்டமாக கீழே  உட்கார்ந்து கொண்டு விதம் 
ஒரு Y  வடிவக் கட்டையில் மேலுள்ளதுபோல ரப்பரை வைத்து  இணைக்கப் பட்டிருக்கும் மத்தியில் தோல் பகுதி இருக்கும். இதில் தான் கல்லை வைத்துப் பிடித்து குறிபார்த்து இழுத்து விடுவார்கள். சிறு கல் அதி வேகமாக சென்று இலக்கை தாக்கும். நரிக்குறவ மக்கள் இதனைப் பயன்படுத்துவதில் கில்லாடிகள்.  சிறுவர்கள் கூட அனாயாசமாக குருவி மைனா அணில்,புறா  போன்றவற்றை குறி தவறாமல் வீழ்த்தி விடுவார்கள்  
பள்ளி வயதில்   என் நண்பர்கள் நரிக்குறவர்கள் வைத்திருக்கும் உண்டி வில்லால் கவரப்பட்டு   அதைப் போலவே y வடிவ மரக்கிளையை தேடி எடுத்து  சைக்கிள் ட்யூபை வெட்டி இணைத்து உண்டி வில் செய்து விளையாடு வார்கள். ஆனால் அது அவ்வளவு உறுதியாக இருக்காது. வேகமாக இழுக்கும்போது பிய்ந்து விடும்   
விதமாக மணிமாலைகள் மாலைகள் வேகமாக  கோர்த்துக் கொண்டிருப்பார்கள். இன்றும் தூளி போல் கட்டி கழுத்தில் மாட்டிக்கொண்டு அதில் கங்காரு போல குழந்தைகளை லாவகமாக சுமந்து செல்கிறார்கள்.
  தற்போது இவர்களை பழங்குடி மக்கள் பட்டியலில் சேர்ப்பதற்கான அனுமதியை மத்திய அரசு அளித்துள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதும் எங்கள்  கோரிக்கைகளாலும் முயற்சிகளால்தான்  இது சட்டமானது என்று ஆளுக்கு ஆள்  சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இத்தனை நாள் இதற்கான முயற்சி ஏன் எடுக்கப்படவில்லை எனத் தெரியவில்லை  . வேறு என்ன காரணம் வெற்றியை நிர்ணயிக்கக் கூடிய வாக்கு வங்கி இவர்களுக்கு இல்லை என்பதே.
       நரிக்குறவர், குருவிக்காரர் உள்ளிட்ட சில  இனத்தவரை பழங்குடியினர் பட்டியலில்  சேர்த்தபின்னராவது நரிக்குறவர் வாழ்வில் விடியல் பிறக்கும் என்று நம்புவோம்.

****************************************************************************


வியாழன், 26 மே, 2016

நீயா? நானா?காதல் திருமணம்-அடம்பிடிக்கும் பெண்கள்


  காதல்- பதின் பருவத்தினரின் காந்த வார்த்தை.முதின் பருவத்தினரை நொந்து போக செய்யும் வார்த்தை. காலம் காலமாய் காவியங்களும் காப்பியங்களும் காதலை போற்றி வருகின்றன என்றாலும் காதலுக்கு சமூகம் மனதார அங்கீகாரம் கொடுக்கவில்லை. திரைப்படங்கள் வந்த நாள் முதல் இந்த நாள் வரை காதலைக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றன.  திரைப்படங்களில் கதைகளில் தொலைக் காட்சித் தொடர்களில் வயது வித்தியாசமின்றி காதலை ரசித்தாலும் நிஜ  வாழ்க்கையில் பெற்றோர் வயிற்றில் புளியைக் கரைக்கக் கூடிய வார்த்தையாகத்தான் காதல் இருக்கிறது. திரைப்படங்களில் காதலை எதிர்க்கும் வில்லத் தந்தைக்கு எதிரான  மனநிலையைக் கொண்டிருப்பார்கள்.. காதல் ஜெயிக்க விரும்பி காதல் ஜோடிகள் இணைத்தால் மன நிறைவு அடைவார்கள்.ஆனால் நிஜத்தில் காதலுக்கு எதிரான மனப்பான்மை கொண்டிருப்பதுதான் யதார்த்தம்.

       கடந்த வார நீயா நானா இன்னோர் வடிவத்தில்  காதலை விவாதப் பொருளாகக் கொண்டது. ஒரு பக்கம் காதல் செய்ய விரும்பும் பெண்கள் (காதலித்துக்  கொண்டிருக்கும் பெண்கள் அல்ல) இன்னொரு பக்கம் அவர்கள் பெற்றோர். பொதுவாக ஆண்களை விட பெண்கள் காதல் மீது அளவு கடந்த நம்பிக்கை வைத்திருப்பதாக நினைப்பதுண்டு. அதனால் சாதிப்பற்று ஆண்களை விட பெண்களுக்கு குறைவு என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தாய்மார்கள் சொன்ன கருத்தை பார்க்கும்போது என் கருத்தை மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியம் உள்ளதாகவே உணர்கிறேன். தனது சாதியில் உள்ள பெண்ணை தன் பெண் காதலித்தால்  பரிசீலிப்பதாக பெற்றோர், குறிப்பாக தாய்மார்கள்  கூறினர். இன்னொரு சாதிப் பையனை தன் மகள் காதலிப்பதை வந்திருந்த எந்தப் பெற்றோரும் விரும்பவில்லை. காதலே கூடாது என்ற எண்ணம் மாறி  இந்த அளவுக்காவது காதலை ஏற்றுக் கொள்கிறார்களே என்று மகிழ்சசி அடைய வேண்டியதுதான் போலிருக்கிறது. தன் மகளோ மகனோ எக்கணமும் காதல் வலையில் விழலாம் என்று பெற்றோர் எதிபார்த்துக் கொண்டேதான் இருக்கிரார்கள்
  ஆனால் இளம் பெண்கள் காதல் திருமணம் செய்வதையே விரும்புகிறார்கள் என்பது புரிகிறது. முன்பு போல பெற்றோரிடம் காதல் பற்றிப்பேச கூச்சப் படுவதில்லை. பெண்கள் தங்கள்  திருமணம் நிச்சயிக்கப் படும்வரை  வரை கூட தங்கள் காதலை பெற்றோரிடம் மறைத்துக் கொண்டு இருந்தது பழங்கதை.   இப்போது அப்படி அல்ல. பெற்றோரிடம் எவ்விதமாவது  காதலை அல்லது காதல் திருமணம் செய்து கொள்ள விரும்புவதை  மறைமுகமாக உணர்த்தவே விரும்புகிறார்கள்  என்பதை நிகழ்ச்சியில் வெளிப்படுத்தினர் கலந்து கொண்ட பெண்கள். பெற்றோரை கொஞ்சம் கொஞ்சமாக தயார் படுத்தும் முயற்சியில் எப்படியெல்லாம் ஈடுபடுவோம் என்பதையும் சுட்டிக் காட்டினர். இது நகரங்களில் படித்த மத்திய தர குடும்பத்தினரிடையே   இத்தகைய சூழலைக் காண முடிகிறது 
     முந்தைய  தலைமுறையினர்  தன பிள்ளைகள் காதலிக்க மாட்டார்கள் என்று உறுதியாக நம்பினார்கள். அப்படி ஏதேனும் நடந்து விட்டால் அதீத அதிர்ச்சியை வெளிப்படுத்தினர். தங்கள் சமூத்திற்கு அவப்பெயர் ஏற்பட்டுவிடும் என்று அஞ்சினர்.

      இக்காலப் பெற்றோரின் நிலை வேறு.   கல்வி அறிவு  சற்று முற்போக்காக சிந்திக்க வைத்ததாலும் அவர்களால் காதலை முழுமையாக எதிர்க்க முடிவதில்லை. ஆனாலும் ஏற்றுக் கொள்ளவும் முடியாத இரண்டும் கெட்டான் மன நிலையில் இருக்கிறார்கள். தன் மகள் காதல் பாடல்களை விரும்பிக் கேட்பதையும்  அறைக்குள் மணிக்கணக்கில் கைபேசியில் பேசிக்கொண்டிருப்பதையும்   கவனிக்கும்போதும் ஒரு கலவரம் வந்து மனதில் தொற்றிக் கொள்ள அதை தடுக்கும் முயற்சியில் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஈடுபடுகிறார்கள். காதல் , ப்ரேக் அப் என்னும் வார்த்தைகள் அவர்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. திரைப்படங்களில் வரும் கல்லூரிக் காட்சிகளில் காதலைத் தவிர வேறு எதுவும் இருப்பதில்லை. மேலும் படங்களில் நாயகிகள் ரவுடிகளையும் பொறுக்கிகளையும்  உருகி உருகி காதலிப்பதைப் பார்த்து உண்மையிலும் இப்படிப்பட்டவனைத்  தன் மகள் தேர்ந்தெடுத்து விடுவாளோ என்று அஞ்சுகின்றனர். இளம் பெண்களும் ஆண்களும் காதல் ஒன்றே குறிக்கோளாகக் சுற்றுவதாகவே மனதில் ஆழமாகப் பதிந்துள்ளது.
     தாங்கள் காதல் திருமணம் செய்து கொண்டவர்களாய் இருந்தாலும் .தன் பிள்ளைகள் காதல் திருமணம் செய்வதை பெரும்பாலும் பெற்றோர் விரும்புவதில்லை. தன் பிள்ளைகளின் காதல் மீது முழுமையான நம்பிக்கை வைக்க அவர்களால் இயல்வதில்லை. தங்கள் காதலைப் போல இந்தக் காலக் காதல் உண்மையானதல்ல; உறுதியானதல்ல என்ற  எண்ணமும் அதற்குக் காரணம்

   ஆனால் இந்தக் காலப் பெண்பிள்ளைகள் சாமார்த்திய சாலிகள்..தன் பெற்றோரை எப்படியாவது சம்மதிக்க வைத்து  விட முடியும் என்று நம்பு கிறார்கள்..
     கடைசி  ஆயுதமாக காதலை ஏற்றுக்  கொள்ள வைப்பதற்கு ஒரு பெண் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டுவேன் என்று சொன்னபோது அந்த பெண்ணின் தாயார் பரவாயில்லை போகட்டும் என்று சொன்னது அதிர்ச்சி..ஆனால் அந்தப் பெண் அதிர்ச்சி அடைந்ததாகத் தெரியவில்லை.
 பெற்றோர் இப்போது ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் அவர்களை எப்படியாவது கொஞ்சம் கொஞ்சமாக சம்மதிக்க வைத்து விட முடியும் என்றே நம்புவதாக பலரும் தெரிவித்தனர்.  பெற்றோரின் சம்மதம் பெற்றுவிடவேண்டும் என்பதில் பலரும் முனைப்பாக இருக்கின்றனர் என்பது மட்டும் உறுதியாக தெரிந்தது.
     பெற்றோரின் பிடிவாதத்தால்   ரெண்டு மூணு லவ் ப்ரபோசல் நழுவிப் போச்சு என்று ஒரு பெண் சொன்னது  யதார்த்த இளமை வருத்தம்

  முன்பின் தெரியாத ஒருவனை ஏற்றுக்கொள்ளச் சொல்லி பெற்றோர் வற்புறுத்துகிறார்கள்  என்று குற்றம் சாட்டும் இப்பெண்கள். நண்பர்களின் தூண்டுதல் காரணமாகவோ  தொடர் அணுகுதல் காரணமாகவோ முன்பின் அதிகம் அறியாத ஒருவனைத்தான் காதலிக்கிறார்கள். அவனைத்தான் திருமணம் செய்துகொள்வேன் என்றும் பிடிவாதம் பிடிக்கிறார்கள். ஆறு மாதமோ ஒருவருடமாகவோ காதலிக்கும் பெண்ணுக்கு   காதலனின் உண்மை முகம் தெரிய ஆரம்பித்தாலும் காதலை துறக்க விருபுவதில்லை. குறைகள் இருப்பினும் அவனையே திருமணம் செய்து கொள்ள விரும்புகின்றனர். பின்னால் தனக்கு ஏற்றவனாக மாற்றிக் கொள்ள முடியும் என்று நம்புகின்றனர். அல்லது அவனுக்கேற்ற மாறிவிடவும் தயாராக உள்ளனர். நிச்சயிக்கப்பட்ட திருமணங்களிலும் இதே நிலைதானே?. என்ன பழகுனர் காலம் இல்லை.?  அவ்வளவுதானே!. ஏன் தங்கள்   விருப்பத்தை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்பதுபெற்றோரின் வாதம்  
 காதலின் போது பரஸ்பரம்  குறைகள் கண்ணுக்கு புலப்படுவதில்லை. திருமணத்திற்குப் பிறகுதான் குறைகள் தென்பட ஆரம்பிக்கும் என்கின்றனர் பெற்றோர்.
    இந்த நிகழ்ச்சியில் பேசிய பெண்கள் சொல்வதில் இருந்து இன்னொன்றும்  புரிந்தது. காதலன் காதலியிடம் தன் குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்துப் போக வேண்டும் என்று விரும்புகிறான். அவ்வப்போது தன் வீட்டாரின் குணங்களை  காதலியிடம் சொல்கிறான். அதற்கேற்றபடி தன் காதலி நடந்து கொள்ள வேண்டும் என்றே விரும்புகிறான்   
  இவர்கள் காதலித்துக் கொண்டிருப்பவர்கள் அல்ல ஆனால் காதல் திருமணம் செய்து கொள்ள விரும்புபவர்கள் என்று சொன்னாலும் உண்மையில் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெரும்பாலான பெண்களின் பேச்சை வைத்துப் பார்க்கும்போது  ஏற்கனவே காதலித்துக் கொண்டிருப்பதாகத்தான் தெரிந்தது. தன் பெற்றோருக்கு  குறிப்புணர்த்தவே நிகழ்ச்சியில் பெற்றோரை அழைத்து வந்ததாகத் தோன்றுகிறது. இவை எல்லாம் பெரும்பாலும் நகரப்புறங்களில் மட்டுமே  ஆனால் கிராமங்களின் காதலின் நிலை வேறு .
   இந்த நிகழ்ச்சியைப் பார்த்த பெற்றோரின் அச்சம் மேலும் அதிகரிக்கலாம்.  பெரும்பாலும் இது பெண்களைப் பெற்றவர்களின் அச்சமாகத் தான் இருக்கிறது. ஏனெனில் காதலால் பாதிக்கப் படுவது பெண்கள்தான் என்ற எண்ணமே அதற்குக் காரணம்  .
     பொதுவாக கோபிநாத் தன்னை இளைய தலைமுறையினரின் ஆதரவாளாராகவே காட்டிக் கொள்வார். இந்நிகழ்ச்சியிலும் அப்படியே!. எனக்கு ஒரு சந்தேகம்! உண்மையில் இந்த நீயா நானா நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களில்  யார் விண்ணப்பித்திருப்பார்கள் பெற்றோரா  அல்லது இந்தப் பெண்களா?  சாதியைப் பற்றிக் கவலைப்படும் பெற்றோர் இந்த நிகழ்ச்சிக்கு வர எப்படி ஒப்புக் கொண்டார்கள்? அல்லது விஜய் டிவியின் திட்டமிடப்பட்ட  ஏற்பாடா?
  அது எப்படியோ! காதலுக்காக பெற்றோரின் சம்மதம் பெறப் போராடும் இந்தப் பெண்களுக்கு வாழ்த்துகள் 

****************************************************


செவ்வாய், 24 மே, 2016

பெட்டிக்கடை-சரவணா ஸ்டோர்விளம்பரம் +தேர்தலில் தப்பிய வடிவேலு +கண்ணதாசனா?வாலியா?


பெட்டிக் கடை 10
சந்திப் பிழை 
தமிழில் சந்திப் பிழையின்றி  எழுதுவது  அரிதாக உள்ளது. சில சொற்களில் பிழை இருப்பது தெரியாமலேயே சரியானது என்று பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். அவற்றில் ஒன்று வாழ்த்துக்கள் . பெரும்பாலோர் வாழ்த்துக்கள்  என்றே எழுதுகின்றனர். நானும் அப்படித்தான் எழுதி வந்தேன். சிலர் சுட்டிக்காட்டிய பின் நான் மாற்றிக் கொண்டேன். வாழ்த்துகள் என்பதுதான் சரியாம். இருந்தாலும் சில சமயங்களில் என்னையும் அறியாமல் வாழ்த்துக்கள் என்றே எழுதிவிடுகிறேன். முன்னணிப் பத்தரிகைகள் கூட சந்திப் பிழைகளை கண்டு கொள்வதில்லை சில வேண்டுமென்றே அப்படி எழுதப் படுவதாகவும் சொல்கிறார்கள். 
சந்திப் பிழைகளை  புரிந்து கொள்ள சில உதாரணங்களை குமுதத்தில் படித்தேன். இப்படி சொல்லிக் கொடுத்தால் மாணவர்களுக்கு  புரியாமல் போக வாய்ப்பு இல்லை.




மேலே இருக்கறது படிச்சது.  நம்ம சொந்த சரக்கையும் சேக்கணும் இல்ல.
 நம்ம பதிவோட தலைப்பையே (பெட்டிக்கடை ) எடுத்துக்கிட்டேன் . 


நீங்களும் பின்னூட்டத்தில இதைபோல  பின்னலாம் 

**********************************************************************

தொலைக்காட்சிகளில் சரவணா ஸ்டார் விளம்பரத்தில் அதன் உரிமையாளர் (மகன்) முன்னனி நடிகைகளுடன் விளம்பரத்தில் நடித்தது  தேர்தல் பரபரப்புக்கு இடையிலும் இணையத்தில் கவனம் பெற்றது . ஒரு சாரார் அவரது உருவத்தையும் நிறத்தையும்  கிண்டலடித்தனர். சிகப்பழகிகளுக்கு இடையில் ஒரு மாடலாக வந்து நின்றதை நகைப்புக்குரியதாக கருதி, கல்லாவுல ஒக்கராம இவருக்கு எதுக்கு இந்த வேலை' என்று இணையக் கலாய்ப்புக்கு ஆளானார் . ஒரு சிலர் அவருக்கு ஆதரவாகவும்  பேசினர். சிவப்பாக இருப்பவர்கள்தான் திரையில் தோன்றுவதற்கு தகுதியானவர்கள் என்ற மன நிலை இன்னும் மாறவில்லை. சூர்யா ஆர்யாதான் விளம்பரங்களில் நடிக்க வேண்டுமா என்ன? நிறம் குறைந்தவர்கள்   விளம்பரங்களில் தோன்றக் கூடாதா என்ன?     சரவணா ஸ்டோர்ஸின் பலம்  ஏழைமக்களும் நடுத்தர மக்களும் வாங்கும் விலையில் பொருட்களை விற்பதுதான்

      சரவணா ஸ்டோர்ஸில் எனக்கு பிடித்தது (பிடிக்காத விஷயங்களும் உண்டு) அங்கு போகும் போதெல்லாம் வீணை, வயலின், கீபோர்டில் வாசிக்கப்பட்ட திரைப் பாடல்கள் இதமாக ஒலிக்கும். ரசித்துக் கொண்டே இருக்கலாம். (வீட்டு அம்மணி பொருள் வேட்டையில இருக்கும்போது நாம் சும்மாத்தானே இருக்கப் போறோம் )
  சரவணா ஸ்டோர்ஸில் இன்னொரு கவர்ந்த அம்சம் பில் போடுபவர்கள் . நூற்றுக்கணக்கான பொருட்களைக் கொண்டு சென்றாலும் அதி வேகமாக பில் போடுவார்கள்.   பார் கோடிங்  ரீடர் வேலை  செய்ய வில்லை என்றாலும் கணினி விசைப்பலகையில் அவர்கள் அடிக்கும் வேகம் இருகிறதேஅபாரம்
 மற்ற  நகரங்களில் சரவணா போல் அனைத்துப் பொருட்களும் விற்கும் கடைகள் இருக்கிறதா? தெரிந்து கொள்ள ஆவல் 

*********************************************************************************

வடிவேலு இந்த தேர்தலில் பிரச்சார வலையில் சிக்கிக் கொள்ளவில்லை. தப்பித்துக் கொண்டார். நல்ல முடிவுதான். தொலைக் காட்சியில் நட்சத்திர சங்கமம் என்ற நிகழ்ச்சியை நடிகர் சங்கம் நடத்தியது, பழம் பெரும் நடிக நடிகையர்கள்முதல் இன்றைய நடிகர்கள் வரை கலந்து கொண்டனர். இப்போதெல்லாம் சினிமா நடிக நடிகையர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளுக்கு முன்பு போல வரவேற்பு இருப்பதில்லை.  என்றாலும் வடிவேலு தோன்றிய விளம்பரம் லேசான ஆர்வத்தை உண்டாக்கியது. ,சரோஜா, சாரதாதேவி, லதா,வாணிஸ்ரீ, சச்சு. எம்.என்.ராஜம் சாரதா,விஜயகுமாரி போன்ற கொடிகட்டிப் பரந்த பழம் பெரும் நடிகைகள்  கொண்டனர். ஒரு சிலரைத் தவிர பலரை சட்டென்று அடையாளம் கண்டறிய முடியவில்லை. தங்கள் பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர் . 
வடிவேலு நிகழ்ச்சியை கலகலப்பாக்கினார். ஒவ்வொரு நடிகையரின் பெயர் சொல்லி அவர்களின் பாடல்களைப் பாடிக்காட்டி அவர் கமென்ட் அடித்தது அட்டகாசம். அப்போது அந்த நடிகைகளின் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை யாரோ சொல்லிக் கொடுத்து அதை அப்படியே  நடிக்கும். நடிகரல்ல வடிவேலு என்பதை நிருபித்து விட்டார். 
*****************************************************************************


தொலைக் காட்சியில்  காலையில் பழைய பாடல்கள் ஒளிபரப்பாகும். உயர்ந்த மனிதன் படத்தில் இருந்து  நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா என்ற பழைய பாட்டு ஒளிபரப்பாகி கொண்டிருந்தது. பள்ளி வயதில் பழைய பாடல்கள் என்றால் பிடிக்காது. அதன் அருமை அப்போது தெரியவில்லை. இப்போது யோசித்துப் பார்த்தால் ஆச்சர்யமாகாத்தான் இருக்கிறது. இந்தப் பாடல் ஒளி பரப்பாகும்போதெல்லாம் அந்தப் பாடல் முடியும் வரை வேறு சேனலுக்கு மாற மனம் வராது. பி.சுசீலாவில் குரலில் வாணிஸ்ரீ யின் நடிப்பும் பாடல் வரிகளும் நம்மை எப்போதும் கட்டிப் போடும் சக்தி படைத்தவை. பாடல்  தலைவனைப் பிரிந்த தலைவியின் . உள்ளத்தை  அப்படியே  படம் பிடித்துக் காட்டியது.  பி. சுசீலா இவருக்கு மட்டும்  எப்படி தேன் சுவைக்  குரல்!. பேசும் போது தெலுங்கு வாசம் மணக்கப் பேசும் சுசீலா பாடும்போது மட்டும் சுத்தமான உச்சரிப்புடன் பாடுவது உண்மையில் பிரமிப்புதான். முதலில் இந்தப் பாடலை கேட்டபோது எழுதியது  கண்ணதாசன் என்று நினைத்தேன், பெரும்பாலும் சிவாஜி பாடல்களுக்கு அவர்தானே எழுதிக் கொண்டிருந்தார்.. ஏதோ ஒரு ஐயம் வந்து தேடிப்  பார்க்க இந்த பாடல் எழுதியது வாலியாம்.  இதை எழுதிய வாலி ஒரு பெண்ணாகவே மாறி எழுதி இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும், இது போன்ற பாடல்களைத் தந்த மெல்லிசை மன்னரை பாராட்ட வார்த்தைகள் இல்லை

இதோ அந்தப் பாடல்

பால் போலவே வான் மீதிலே
யார் காணவே நீ காய்கிறாய்

நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா
இன்று எந்தன் தலைவன் இல்லை சென்று வா நிலா

தென்றலே என் தனிமை கண்டு நின்று போய்விடு

வண்ண விழியின் வாசலில் என் தேவன் தோன்றினான்
எண்ணம் என்னும் மேடையில் பொன் மாலை சூடினான்

கன்னி அழகைப் பாடவோ அவன் கவிஞனாகினான்
பெண்மையே உன் மென்மை கண்டு கலைஞனாகினான்

சொல்ல நினைத்த ஆசைகள் சொல்லாமல் போவதேன்
சொல்ல வந்த நேரத்தில் பொல்லாத நாணம் ஏன்

மன்னன் நடந்த பாதையில் என் கால்கள் செல்வதேன்
மங்கையே உன் கண்கள் இன்று மயக்கம் கொண்டதேன்

*************************************************************************************

வெட்டி ப்ளாக்கர் குழுமம் சிறுகதைப் போட்டி
வெட்டி  ப்ளாக்கர் பெயரில்தான் வெட்டியே தவிர உண்மையில் படைப்பாளிகளை  ஊக்கு விக்கும் பணியை செய்து வருகிறது, வெட்டி பிளாக்கர் முக நூல் பக்கத்தில் வலைப்பூ எழுதுபவர்கள் தங்கள் பதிவுகளின் இணைப்பை அனுமதித்து  ஊக்குவிக்கிறது. இதன் மூலம் படைப்புகள் நிறையப் பேரை சென்றடைகிறது.வெட்டி ப்ளாக்கர்ஸ் கடந்த 2014 இல் ஒரு சிறுகதையைப் போட்டியை நடத்தியது. வார இதழ்களில் கூட சிறுகதைகள் வெளியாவது   குறைந்துள்ளது. சிறுகதைகளே பல பக்கங்கள் இருந்த நிலை மாறி  நான்கைந்து பக்க்கங்களாகி ,ஒருபக்கக் கதைகளாகி. ஒரு நிமிடமாககக் குறைந்து 10 செகண்ட் கதைகளாகி விட்டது.  இந்நிலையில் சிறுகதை படைப்பாளர்களுக்கு புத்துணர்வு  ஏற்படும் வகையில் இந்த ஆண்டு சிறுகதைப் போட்டியை அறிவித்துள்ளது

பரிசுத் தொகை

முதல் பரிசு ரூ 8000

இரண்டாம் பரிசு ரூ 5000

மூன்றாம் பரிசு ரூ 2500

சிறப்பு பரிசு ரூ750 ஆறு படைப்பாளிகளுக்கு 
கதைக் களம் : தந்தை பற்றி அமைய வேண்டும் 


விதிமுறைகள்.

1.வலைப்பதிவர்கள் மட்டும் (வலைப்பதிவு தொடங்கினால் போதுமானது)

2.ஒருவர் மூன்று கதைகள் வரை அனுப்பலாம்.

3.இதுவரை எங்கும் வெளியாகாத கதைகளாக இருக்க வேண்டும்

4.இரண்டாயிரம் வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

5. கதைக்களம் தந்தையைப் பற்றி இருக்க வேண்டும். முடிந்தவரை சம கால மொழிநடை வழக்கில் எழுத்துப் பிழையின்றி இருத்தல் நலம்..

6. நடுவர்கள் தீர்ப்பே இறுதியானது; வெட்டிப் பிளாக்கர் அட்மின்கள், நடுவர்கள் கலந்து கொள்ளக் கூடாது.

7.PDF/ MS WORD/ NOTEPAD மற்றும் பிற வடிவில் இணைப்பாக அனுப்ப வேண்டாம். யுனிக்கோடு முறையில் தட்டச்சு செய்து மின்னஞ்சலில்  மட்டுமே அனுப்பவும்.

********************************************

கதைகளை அனுப்பும் முறை & அதற்கான விதிமுறைகள்


உங்களுடைய கதைகளை உங்கள் பெயர், வலைதள முகவரி, உங்கள் தொடர்பு எண் குறிப்பிட்டு vettiblogger2014@gmail.com என்கின்ற முகவரிக்கு
 14-04-2016 லிருந்து 01-06-2016 இரவு 12.00க்குள் அனுப்பவும். 

· கதாசிரியரின் பெயர், தொடர்பு எண்கள் பொது வெளியில் வெளியிடப்படாது. போட்டி முடிந்தபின் அவர்களின் பெயர்கள் வெளியிடப்படும். 

· நடுவர்களுக்கே யார் எழுதியது என்று தெரிவிக்கப்பட மாட்டாது 

· போட்டி முடிந்தபிறகு உங்கள் வலைத்தளங்களில் வெளியிடலாம் அதுவரை எங்கும் வெளியிடக்கூடாது. 

·கதைகள் http://vettibloggerstories.blogspot.in/ தளத்தில் மட்டுமே வெளியிடப்படும் 


*****************************************************************************

முந்தைய பெட்டிக்கடை சரக்குகள்



பெட்டிக்கடை9-வடிவேலு பார்த்திபன்+ஈவிகே எஸ்+புதிர் விடை தெரியுமா?


*****************************************************************************************************




வெள்ளி, 20 மே, 2016

வெற்றி தோல்வியை மாற்றிய நோட்டா வோட்டுகள்-NOTA

  

    கண்ணாமூச்சி காட்டிய தேர்தல் முடிவுகள் வெளிவந்துவிட்டன. மீண்டும் அதிமுக, ஆட்சியைப் பிடித்துவிட்டது. ஆனால் முன்பு போல் மாபெரும் வெற்றியை ஈட்டமுடியவில்லை. மூன்றாவது நான்காவது அணிகளை யெல்லாம் மக்கள்  பொருட்படுத்தவில்லை  எனபது  தெள்ளத் தெளிவாக விளக்கிவிட்டது.(விலக்கிவிட்டது). வாக்களித்தவர் மட்டுமல்ல வாக்களித்தவர் களைவிட வாக்களிக்காத வர்கள்தான் வெற்றியைத் தீர்மானித்தனர் என்றும் கொள்ளலாம். இம்முறை கணிசமான பேர் யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்பதை நோட்டாவில் ஓட்டளித்து பதிவு செய்துள்ளனர், 
    எல்லாத் தொகுதிகளிலும் சேர்த்து  559245 பேர் நோட்டாவுக்கு வாக்களித்துள்ளனர்.  அதிக பட்சமாக சோழிங்கநல்லூர் தொகுதியில் 7332 பேர் நோடாவுக்கு வாக்களித்துள்ளனர் . குறைந்தபட்சமாக  மேலூர் தொகுதியில் 757 நோட்டா ஓட்டுகள் பதிவாகியுள்ளன. இனி வரும் தேர்தல்களில் இவ்வெண்ணிக்கை அதிகரிக்கக் கூடும், நோட்டா பற்றி தேர்தல் நாளன்று ஒரு பதிவு எழுதி இருந்தேன்
.(படிக்காதவர்கள்  இங்கு செய்து படிக்க)
 தற்போதைக்கு நோட்டாவினால் எந்த பாதிப்பும் வேட்பாளர்களுக்கு இல்லை . இந்த வோட்டுகள் வேட்பாளர்களின் வெற்றி தோல்வியை நேரடியாக பாதிக்காது என்றாலும் இத் தேர்தலில் பல வேட்பாளர்கள் நோட்டா  ஒட்டுகளைவிட குறைந்த  ஓட்டு வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ளனர். நோட்டா வோட்டுகள் இந்த வேட்பாளர்களுக்கு கிடைத்திருந்தால் ஒரு சிலரின் வெற்றி தோல்வியில் மாற்றம் இருந்திருக்கும். இது இரண்டு பெரிய கட்சிகளுக்கும் பொருந்தும்.
நோட்டா போடுவதில் ஓரே ஒரு நன்மை உண்டு. வாக்கு சாவடி சென்று ஒட்டு போட்டு விடுவதால் உங்கள் ஓட்டை வேறு யாரும் போட்டு விட முடியாது என்பதே. சரி அதை விடுங்கள் 
உங்கள் தொகுதியில் எவ்வளவு நோட்டா வாக்குகள் பதிவாகி யுள்ளன  என்பதை கீழே உள்ள என்ற பட்டியளில் தொகுத்து  தந்திருக்கிறேன்.
(ஏன் இந்த வெட்டி வேலைன்னு கேக்கப் படாது?)


TAMILNADU ASSEMBLY ELECTIONS 2016
CONSTITUENCY WISE NOTA VOTES
SNO
CONSTITUENCY
DISTRICT
NOTA
1
Ariyalur
Ariyalur
1896
2
Jayankondam
Ariyalur
1950
3
Anna Nagar
Chennai
4048
4
Chepauk-Thiruvallikeni
Chennai
3494
5
Dr.Radhakrishnan Nagar
Chennai
2873
6
Egmore (SC)
Chennai
2840
7
Harbour
Chennai
2101
8
Kolathur
Chennai
3554
9
Mylapore
Chennai
3788
10
Perambur
Chennai
3167
11
Royapuram
Chennai
2348
12
Saidapet
Chennai
3541
13
T. Nagar
Chennai
3570
14
Thiru. Vi. Ka. Nagar (SC)
Chennai
2685
15
Thousand Lights
Chennai
3633
16
Velachery
Chennai
4225
17
Villivakkam
Chennai
3409
18
Virugambakkam
Chennai
3897
19
Coimbatore (North)
Coimbatore
4574
20
Coimbatore (South)
Coimbatore
3331
21
Kavundampalayam
Coimbatore
5274
22
Kinathukadavu
Coimbatore
3884
23
Mettuppalayam
Coimbatore
3408
24
Pollachi
Coimbatore
2254
25
Singanallur
Coimbatore
3732
26
Sulur
Coimbatore
3679
27
Thondamuthur
Coimbatore
3248
28
Valparai (SC)
Coimbatore
2206
29
Bhuvanagiri
Cuddalore
1132
30
Chidambaram
Cuddalore
1714
31
Cuddalore
Cuddalore
2062
32
Kattumannarkoil (SC)
Cuddalore
1025
33
Kurinjipadi
Cuddalore
1541
34
Neyveli
Cuddalore
1710
35
Panruti
Cuddalore
1988
36
Tittakudi (SC)
Cuddalore
1957
37
Vriddhachalam
Cuddalore
2255
38
Dharmapuri
Dharmapuri
2251
39
Harur (SC)
Dharmapuri
2092
40
Palacodu
Dharmapuri
1880
41
Pappireddippatti
Dharmapuri
1467
42
Pennagaram
Dharmapuri
2081
43
Athoor
Dindigul
2105
44
Dindigul
Dindigul
2783
45
Natham
Dindigul
1844
46
Nilakkottai (SC)
Dindigul
1819
47
Oddanchatram
Dindigul
1274
48
Palani
Dindigul
1460
49
Vedasandur
Dindigul
2256
50
Anthiyur
Erode
1546
51
Bhavani
Erode
2716
52
Bhavanisagar (SC)
Erode
2980
53
Erode (East)
Erode
3096
54
Erode (West)
Erode
3403
55
Gobichettipalayam
Erode
2751
56
Modakkurichi
Erode
2715
57
Perundurai
Erode
1991
58
Alandur
Kanchipuram
4727
59
Chengalpattu
Kanchipuram
3584
60
Cheyyur (SC)
Kanchipuram
1827
61
Kanchipuram
Kanchipuram
3645
62
Madurantakam (SC)
Kanchipuram
1525
63
Pallavaram
Kanchipuram
5823
64
Sholinganallur
Kanchipuram
7332
65
Sriperumbudur (SC)
Kanchipuram
2956
66
Tambaram
Kanchipuram
5007
67
Thiruporur
Kanchipuram
2116
68
Uthiramerur
Kanchipuram
1647
69
Colachal
Kanniyakumari
1593
70
Kanniyakumari
Kanniyakumari
1570
71
Killiyoor
Kanniyakumari
1142
72
Nagercoil
Kanniyakumari
1802
73
Padmanabhapuram
Kanniyakumari
1359
74
Vilavancode
Kanniyakumari
1149
75
Aravakurichi
Karur

76
Karur
Karur
3595
77
Krishnarayapuram (SC)
Karur
4742
78
Kulithalai
Karur
1906
79
Bargur
Krishnagiri
1382
80
Hosur
Krishnagiri
3445
81
Krishnagiri
Krishnagiri
1855
82
Thalli
Krishnagiri
2450
83
Uthangarai (SC)
Krishnagiri
1717
84
Veppanahalli
Krishnagiri
1482
85
Madurai Central
Madurai
2683
86
Madurai East
Madurai
3246
87
Madurai North
Madurai
3479
88
Madurai South
Madurai
2918
89
Madurai West
Madurai
2759
90
Melur
Madurai
757
91
Sholavandan (SC)
Madurai
1930
92
Thirumangalam
Madurai
1572
93
Thiruparankundram
Madurai
3111
94
Usilampatti
Madurai
1672
95
Kilvelur (SC)
Nagapattinam
1049
96
Mayiladuthurai
Nagapattinam
1688
97
Nagapattinam
Nagapattinam
996
98
Poompuhar
Nagapattinam
1478
99
Sirkazhi (SC)
Nagapattinam
1360
100
Vedaranyam
Nagapattinam
1206
101
Kumarapalayam
Namakkal
2994
102
Namakkal
Namakkal
3828
103
Paramathi Velur
Namakkal
1658
104
Rasipuram (SC)
Namakkal
2795
105
Senthamangalam (ST)
Namakkal
2664
106
Tiruchengodu
Namakkal
2279
107
Coonoor
Nilgiris
2283
108
Gudalur (SC)
Nilgiris
1825
109
Udhagamandalam
Nilgiris
2912
110
Kunnam
Perambalur
3024
111
Perambalur (SC)
Perambalur
3040
112
Alangudi
Pudukkottai
1068
113
Aranthangi
Pudukkottai
775
114
Gandharvakottai (SC)
Pudukkottai
1556
115
Pudukkottai
Pudukkottai
1637
116
Thirumayam
Pudukkottai
2114
117
Viralimalai
Pudukkottai
974
118
Mudhukulathur
Ramanathapuram
1059
119
Paramakudi (SC)
Ramanathapuram
1598
120
Ramanathapuram
Ramanathapuram
1528
121
Tiruvadanai
Ramanathapuram
939
122
Attur (SC)
Salem
2742
123
Edappadi
Salem
1913
124
Gangavalli (SC)
Salem
1766
125
Mettur
Salem
1829
126
Omalur
Salem
1739
127
Salem (North)
Salem
4009
128
Salem (South)
Salem
4121
129
Salem (West)
Salem
3107
130
Sankari
Salem
2934
131
Veerapandi
Salem
2828
132
Yercaud (ST)
Salem
3136
133
Karaikudi
Sivaganga
1688
134
Manamadurai (SC)
Sivaganga
2193
135
Sivaganga
Sivaganga
1530
136
Tiruppattur
Sivaganga
1939
137
Kumbakonam
Thanjavur
2593
138
Orathanadu
Thanjavur
1882
139
Papanasam
Thanjavur
1911
140
Pattukkottai
Thanjavur
1541
141
Peravurani
Thanjavur
1294
142
Thanjavur
Thanjavur

143
Thiruvaiyaru
Thanjavur
1987
144
Thiruvidaimarudur (SC)
Thanjavur
1899
145
Andipatti
Theni
1909
146
Bodinayakanur
Theni
1966
147
Cumbum
Theni
2219
148
Periyakulam (SC)
Theni
2275
149
Kovilpatti
Thoothukudi
2350
150
Ottapidaram (SC)
Thoothukudi
2612
151
Srivaikuntam
Thoothukudi
1457
152
Thoothukkudi
Thoothukudi
2177
153
Tiruchendur
Thoothukudi
1814
154
Vilathikulam
Thoothukudi
1581
155
Lalgudi
Tiruchirappalli
1953
156
Manachanallur
Tiruchirappalli
2274
157
Manapaarai
Tiruchirappalli
3364
158
Musiri
Tiruchirappalli
2485
159
Srirangam
Tiruchirappalli
4110
160
Thiruverumbur
Tiruchirappalli
2676
161
Thuraiyur (SC)
Tiruchirappalli
2441
162
Tiruchirappalli (East)
Tiruchirappalli
4329
163
Tiruchirappalli (West)
Tiruchirappalli
4100
164
Alangulam
Tirunelveli
2089
165
Ambasamudram
Tirunelveli
2041
166
Kadayanallur
Tirunelveli
1969
167
Nanguneri
Tirunelveli
1399
168
Palayamkottai
Tirunelveli
2947
169
Radhapuram
Tirunelveli
1821
170
Sankarankovil (SC)
Tirunelveli
2259
171
Tenkasi
Tirunelveli
3391
172
Tirunelveli
Tirunelveli
2218
173
Vasudevanallur (SC)
Tirunelveli
2763
174
Avanashi (SC)
Tirupur
3534
175
Dharapuram (SC)
Tirupur
2883
176
Kangayam
Tirupur
3141
177
Madathukulam
Tirupur
2147
178
Palladam
Tirupur
3904
179
Tiruppur (North)
Tirupur
3447
180
Tiruppur (South)
Tirupur
2445
181
Udumalpet
Tirupur
3306
182
Ambattur
Tiruvallur
5603
183
Avadi
Tiruvallur
4994
184
Gummidipundi
Tiruvallur
1484
185
Madavaram
Tiruvallur
4291
186
Maduravoyal
Tiruvallur
6655
187
Ponneri (SC)
Tiruvallur
2284
188
Poonamallee (SC)
Tiruvallur
3265
189
Thiruvallur
Tiruvallur
1418
190
Thiruvottiyur
Tiruvallur
2917
191
Tiruttani
Tiruvallur
2076
192
Arani
Tiruvannamalai
1749
193
Chengam (SC)
Tiruvannamalai
1403
194
Cheyyar
Tiruvannamalai
2248
195
Kalasapakkam
Tiruvannamalai
1510
196
Kilpennathur
Tiruvannamalai
1164
197
Polur
Tiruvannamalai
1230
198
Tiruvannamalai
Tiruvannamalai
1803
199
Vandavasi (SC)
Tiruvannamalai
2421
200
Mannargudi
Tiruvarur
1774
201
Nannilam
Tiruvarur
2182
202
Thiruthuraipoondi (SC)
Tiruvarur
1768
203
Thiruvarur
Tiruvarur
2177
204
Ambur
Vellore
1632
205
Anaikattu
Vellore
1237
206
Arakkonam (SC)
Vellore
2049
207
Arcot
Vellore
2004
208
Gudiyattam (SC)
Vellore
2241
209
Jolarpet
Vellore
1483
210
K. V. Kuppam (SC)
Vellore
1990
211
Katpadi
Vellore
2492
212
Ranipet
Vellore
2121
213
Sholingur
Vellore
1692
214
Tirupattur
Vellore
1193
215
Vaniyambadi
Vellore
1774
216
Vellore
Vellore
2400
217
Gingee
Villupuram
2326
218
Kallakurichi (SC)
Villupuram
3008
219
Mailam
Villupuram
1722
220
Rishivandiyam
Villupuram
867
221
Sankarapuram
Villupuram
1032
222
Tindivanam (SC)
Villupuram
2112
223
Tirukkoyilur
Villupuram
2110
224
Ulundurpettai
Villupuram
829
225
Vanur (SC)
Villupuram
1430
226
Vikravandi
Villupuram
1385
227
Villupuram
Villupuram
1701
228
Aruppukkottai
Virudhunagar
2509
229
Rajapalayam
Virudhunagar
2290
230
Sattur
Virudhunagar
1455
231
Sivakasi
Virudhunagar
2704
232
Srivilliputhur (SC)
Virudhunagar
2166
233
Tiruchuli
Virudhunagar
1328
234
Virudhunagar
Virudhunagar
2835

TOTAL

559245



******************************************************************

சார்ந்த முந்தைய  பதிவுகள் 
*******************************************************************************