பெட்டிக் கடை 10
சந்திப் பிழை
தமிழில் சந்திப் பிழையின்றி எழுதுவது அரிதாக உள்ளது. சில சொற்களில் பிழை இருப்பது தெரியாமலேயே சரியானது என்று பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். அவற்றில் ஒன்று வாழ்த்துக்கள் . பெரும்பாலோர் வாழ்த்துக்கள் என்றே எழுதுகின்றனர். நானும் அப்படித்தான் எழுதி வந்தேன். சிலர் சுட்டிக்காட்டிய பின் நான் மாற்றிக் கொண்டேன். வாழ்த்துகள் என்பதுதான் சரியாம். இருந்தாலும் சில சமயங்களில் என்னையும் அறியாமல் வாழ்த்துக்கள் என்றே எழுதிவிடுகிறேன். முன்னணிப் பத்தரிகைகள் கூட சந்திப் பிழைகளை கண்டு கொள்வதில்லை சில வேண்டுமென்றே அப்படி எழுதப் படுவதாகவும் சொல்கிறார்கள்.
சந்திப் பிழைகளை புரிந்து கொள்ள சில உதாரணங்களை குமுதத்தில் படித்தேன். இப்படி சொல்லிக் கொடுத்தால் மாணவர்களுக்கு புரியாமல் போக வாய்ப்பு இல்லை.
மேலே இருக்கறது படிச்சது. நம்ம சொந்த சரக்கையும் சேக்கணும் இல்ல.
நம்ம பதிவோட தலைப்பையே (பெட்டிக்கடை ) எடுத்துக்கிட்டேன் .
நீங்களும் பின்னூட்டத்தில இதைபோல பின்னலாம்
**********************************************************************

தொலைக்காட்சிகளில் சரவணா ஸ்டார் விளம்பரத்தில் அதன் உரிமையாளர் (மகன்) முன்னனி நடிகைகளுடன் விளம்பரத்தில் நடித்தது தேர்தல் பரபரப்புக்கு இடையிலும் இணையத்தில் கவனம் பெற்றது . ஒரு சாரார் அவரது உருவத்தையும் நிறத்தையும் கிண்டலடித்தனர். சிகப்பழகிகளுக்கு இடையில் ஒரு மாடலாக வந்து நின்றதை நகைப்புக்குரியதாக கருதி, கல்லாவுல ஒக்கராம இவருக்கு எதுக்கு இந்த வேலை' என்று இணையக் கலாய்ப்புக்கு ஆளானார் . ஒரு சிலர் அவருக்கு ஆதரவாகவும் பேசினர். சிவப்பாக இருப்பவர்கள்தான் திரையில் தோன்றுவதற்கு தகுதியானவர்கள் என்ற மன நிலை இன்னும் மாறவில்லை. சூர்யா ஆர்யாதான் விளம்பரங்களில் நடிக்க வேண்டுமா என்ன? நிறம் குறைந்தவர்கள் விளம்பரங்களில் தோன்றக் கூடாதா என்ன? சரவணா ஸ்டோர்ஸின் பலம் ஏழைமக்களும் நடுத்தர மக்களும் வாங்கும் விலையில் பொருட்களை விற்பதுதான்
சரவணா ஸ்டோர்ஸில் எனக்கு பிடித்தது (பிடிக்காத விஷயங்களும் உண்டு) அங்கு போகும் போதெல்லாம் வீணை, வயலின், கீபோர்டில் வாசிக்கப்பட்ட திரைப் பாடல்கள் இதமாக ஒலிக்கும். ரசித்துக் கொண்டே இருக்கலாம். (வீட்டு அம்மணி பொருள் வேட்டையில இருக்கும்போது நாம் சும்மாத்தானே இருக்கப் போறோம் )
சரவணா ஸ்டோர்ஸில் இன்னொரு கவர்ந்த அம்சம் பில் போடுபவர்கள் . நூற்றுக்கணக்கான பொருட்களைக் கொண்டு சென்றாலும் அதி வேகமாக பில் போடுவார்கள். பார் கோடிங் ரீடர் வேலை செய்ய வில்லை என்றாலும் கணினி விசைப்பலகையில் அவர்கள் அடிக்கும் வேகம் இருகிறதேஅபாரம்
மற்ற நகரங்களில் சரவணா போல் அனைத்துப் பொருட்களும் விற்கும் கடைகள் இருக்கிறதா? தெரிந்து கொள்ள ஆவல்
வடிவேலு நிகழ்ச்சியை கலகலப்பாக்கினார். ஒவ்வொரு நடிகையரின் பெயர் சொல்லி அவர்களின் பாடல்களைப் பாடிக்காட்டி அவர் கமென்ட் அடித்தது அட்டகாசம். அப்போது அந்த நடிகைகளின் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை யாரோ சொல்லிக் கொடுத்து அதை அப்படியே நடிக்கும். நடிகரல்ல வடிவேலு என்பதை நிருபித்து விட்டார்.
*****************************************************************************
தொலைக் காட்சியில் காலையில் பழைய பாடல்கள் ஒளிபரப்பாகும். உயர்ந்த மனிதன் படத்தில் இருந்து நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா என்ற பழைய பாட்டு ஒளிபரப்பாகி கொண்டிருந்தது. பள்ளி வயதில் பழைய பாடல்கள் என்றால் பிடிக்காது. அதன் அருமை அப்போது தெரியவில்லை. இப்போது யோசித்துப் பார்த்தால் ஆச்சர்யமாகாத்தான் இருக்கிறது. இந்தப் பாடல் ஒளி பரப்பாகும்போதெல்லாம் அந்தப் பாடல் முடியும் வரை வேறு சேனலுக்கு மாற மனம் வராது. பி.சுசீலாவில் குரலில் வாணிஸ்ரீ யின் நடிப்பும் பாடல் வரிகளும் நம்மை எப்போதும் கட்டிப் போடும் சக்தி படைத்தவை. பாடல் தலைவனைப் பிரிந்த தலைவியின் . உள்ளத்தை அப்படியே படம் பிடித்துக் காட்டியது. பி. சுசீலா இவருக்கு மட்டும் எப்படி தேன் சுவைக் குரல்!. பேசும் போது தெலுங்கு வாசம் மணக்கப் பேசும் சுசீலா பாடும்போது மட்டும் சுத்தமான உச்சரிப்புடன் பாடுவது உண்மையில் பிரமிப்புதான். முதலில் இந்தப் பாடலை கேட்டபோது எழுதியது கண்ணதாசன் என்று நினைத்தேன், பெரும்பாலும் சிவாஜி பாடல்களுக்கு அவர்தானே எழுதிக் கொண்டிருந்தார்.. ஏதோ ஒரு ஐயம் வந்து தேடிப் பார்க்க இந்த பாடல் எழுதியது வாலியாம். இதை எழுதிய வாலி ஒரு பெண்ணாகவே மாறி எழுதி இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும், இது போன்ற பாடல்களைத் தந்த மெல்லிசை மன்னரை பாராட்ட வார்த்தைகள் இல்லை
இதோ அந்தப் பாடல்
பால் போலவே வான் மீதிலே
யார் காணவே நீ காய்கிறாய்
நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா
இன்று எந்தன் தலைவன் இல்லை சென்று வா நிலா
தென்றலே என் தனிமை கண்டு நின்று போய்விடு
வண்ண விழியின் வாசலில் என் தேவன் தோன்றினான்
எண்ணம் என்னும் மேடையில் பொன் மாலை சூடினான்
கன்னி அழகைப் பாடவோ அவன் கவிஞனாகினான்
பெண்மையே உன் மென்மை கண்டு கலைஞனாகினான்
சொல்ல நினைத்த ஆசைகள் சொல்லாமல் போவதேன்
சொல்ல வந்த நேரத்தில் பொல்லாத நாணம் ஏன்
மன்னன் நடந்த பாதையில் என் கால்கள் செல்வதேன்
மங்கையே உன் கண்கள் இன்று மயக்கம் கொண்டதேன்
*************************************************************************************
வெட்டி ப்ளாக்கர் குழுமம் சிறுகதைப் போட்டி
வெட்டி ப்ளாக்கர் பெயரில்தான் வெட்டியே தவிர உண்மையில் படைப்பாளிகளை ஊக்கு விக்கும் பணியை செய்து வருகிறது, வெட்டி பிளாக்கர் முக நூல் பக்கத்தில் வலைப்பூ எழுதுபவர்கள் தங்கள் பதிவுகளின் இணைப்பை அனுமதித்து ஊக்குவிக்கிறது. இதன் மூலம் படைப்புகள் நிறையப் பேரை சென்றடைகிறது.வெட்டி ப்ளாக்கர்ஸ் கடந்த 2014 இல் ஒரு சிறுகதையைப் போட்டியை நடத்தியது. வார இதழ்களில் கூட சிறுகதைகள் வெளியாவது குறைந்துள்ளது. சிறுகதைகளே பல பக்கங்கள் இருந்த நிலை மாறி நான்கைந்து பக்க்கங்களாகி ,ஒருபக்கக் கதைகளாகி. ஒரு நிமிடமாககக் குறைந்து 10 செகண்ட் கதைகளாகி விட்டது. இந்நிலையில் சிறுகதை படைப்பாளர்களுக்கு புத்துணர்வு ஏற்படும் வகையில் இந்த ஆண்டு சிறுகதைப் போட்டியை அறிவித்துள்ளது

இரண்டாம் பரிசு ரூ 5000
மூன்றாம் பரிசு ரூ 2500
சிறப்பு பரிசு ரூ750 ஆறு படைப்பாளிகளுக்கு
கதைக் களம் : தந்தை பற்றி அமைய வேண்டும்
1.வலைப்பதிவர்கள் மட்டும் (வலைப்பதிவு தொடங்கினால் போதுமானது)
2.ஒருவர் மூன்று கதைகள் வரை அனுப்பலாம்.
3.இதுவரை எங்கும் வெளியாகாத கதைகளாக இருக்க வேண்டும்
4.இரண்டாயிரம் வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
5. கதைக்களம் தந்தையைப் பற்றி இருக்க வேண்டும். முடிந்தவரை சம கால மொழிநடை வழக்கில் எழுத்துப் பிழையின்றி இருத்தல் நலம்..
6. நடுவர்கள் தீர்ப்பே இறுதியானது; வெட்டிப் பிளாக்கர் அட்மின்கள், நடுவர்கள் கலந்து கொள்ளக் கூடாது.
7.PDF/ MS WORD/ NOTEPAD மற்றும் பிற வடிவில் இணைப்பாக அனுப்ப வேண்டாம். யுனிக்கோடு முறையில் தட்டச்சு செய்து மின்னஞ்சலில் மட்டுமே அனுப்பவும்.
********************************************
கதைகளை அனுப்பும் முறை & அதற்கான விதிமுறைகள்
உங்களுடைய கதைகளை உங்கள் பெயர், வலைதள முகவரி, உங்கள் தொடர்பு எண் குறிப்பிட்டு vettiblogger2014@gmail.com என்கின்ற முகவரிக்கு 14-04-2016 லிருந்து 01-06-2016 இரவு 12.00க்குள் அனுப்பவும்.
· கதாசிரியரின் பெயர், தொடர்பு எண்கள் பொது வெளியில் வெளியிடப்படாது. போட்டி முடிந்தபின் அவர்களின் பெயர்கள் வெளியிடப்படும்.
· நடுவர்களுக்கே யார் எழுதியது என்று தெரிவிக்கப்பட மாட்டாது
· போட்டி முடிந்தபிறகு உங்கள் வலைத்தளங்களில் வெளியிடலாம் அதுவரை எங்கும் வெளியிடக்கூடாது.
·கதைகள் http://vettibloggerstories.blogspot.in/ தளத்தில் மட்டுமே வெளியிடப்படும்
மேலும் விவரங்களுக்கு வெட்டி ப்ளாக்கர்ஸ் சிருகதைப் போட்டி 2016
*****************************************************************************
முந்தைய பெட்டிக்கடை சரக்குகள்
பெட்டிக்கடை - 1-திருக்குறளில் இலக்கணப் பிழையா?
பெட்டிக் கடை-2- ஆடி(யோ) மாதம்,வளர்பிறையும் தேய்பிறையும்
பெட்டிக் கடை-2- ஆடி(யோ) மாதம்,வளர்பிறையும் தேய்பிறையும்
பெட்டிக் கடை 4-புதிர் விடை+ஆச்சர்யம் +போட்டி +இன்னும்
பெட்டிக்கடை.5-இந்தியரைப் பெருமைப் படுத்திய கூகுள்
பெட்டிக்கடை 6-சூப்பர் சிங்கர் ஜூனியர்+சாவித்திரி+தினமணியில் பொருட்பிழை
பெட்டிக்கடை.5-இந்தியரைப் பெருமைப் படுத்திய கூகுள்
பெட்டிக்கடை 6-சூப்பர் சிங்கர் ஜூனியர்+சாவித்திரி+தினமணியில் பொருட்பிழை
- பெட்டிக்கடை 7-சூப்பர் சிங்கரில் சித்ராவின் கோபம்+புத...
- பெட்டிக்கடை 8-இளையராஜா எனும் புதிர்+வாட்ஸ் அப் வக்கிரங்கள்
பெட்டிக்கடை9-வடிவேலு பார்த்திபன்+ஈவிகே எஸ்+புதிர் விடை தெரியுமா?
*****************************************************************************************************