என்னை கவனிப்பவர்கள்

திங்கள், 14 ஜூலை, 2025

கடைசி பெஞ்ச்

 




 கடைசி பெஞ்ச் என்று
கழிவிரக்கம் வேண்டாம்

கடைசி பெஞ்ச்சில் இருக்கிறோம் என்று
அதில் இருக்கிற எவனும் கவலைப் பட்டதில்லை

கடைசி பெஞ்ச்.
கவனிக்காதவர்களின் இடம் அல்ல
அது கவனிக்கப் படாதவர்களின்
 புகலிடமாகக்கூட இருக்கலாம்

கடைசி பெஞ்ச்காரணை வைத்துத்தான்
ஒரு வகுப்பறையே
அடையாளம் காணப்படும்

கடைசி பெஞ்ச்காரன்தான்
வகுப்பறைக்கே பாதுகாப்பு 

அவன் ஒரு போதும்
 முதல் பெஞ்ச மாணவனிடம் 
போட்டிக்கு வந்ததில்லை

அவனைப் போல
 எப்போதும் எச்சரிக்கையாய்
இருக்கத் தேவை இல்லை..
நல்லவன் போல் நடிக்கத் தேவை இல்லை 

 கடைசி பெஞ்ச் காரர்கள்
வரலாறு படைக்கப் பிறந்தவர்கள்

முன் பெஞ்ச் மாணவர்களுக்கு
கடைசிபெஞ்ச் காரர்கள் மீது
பொறாமை உண்டு.
சில அறுவை ஆசிரியர்களிடமிருந்து தப்பிக்க
 கடைசி பெஞ்சுக்கு செல்லலாம் என்றால் முடியாது. 

அப்பனிடமும் சரி ஆசிரியர்களிடமும் சரி
அடி வாங்கத் தயங்காதவன்
கடைசி பெஞ்ச்காரன் 

கவிதை எழுதத் தெரிந்தவனை
கடைசி பெஞ்சில்தான் காணமுடியும்

 ஆசிரியரைப் போல அனைத்து
 மாணவர்களையும் பார்க்க முடிந்தவன் 
 கடைசி பெஞ்ச்காரன்தான்

அவர்களைப் போல் அல்லாது 
முன் பெஞ்ச் மாணவனின்
 பின்னனியும் தெரிந்தவன் 
 கடைசிபெஞ்ச் காரன்

காட்டிக் கொடுக்கத் தெரியாதவன்
கடைசி பெஞ்ச் காரன்/ 

ஆசிரியரைப் போலவே  கடைசி
பெஞ்ச்காரனால் மட்டுமே
வகுப்பறையக் கட்டுப்பாட்டில்
வைக்க முடியும்

ஆசிரியரையும் கற்றுக்கொள்ள
வைப்பவன்தான் கடைசி பெஞ்ச் மாணவன்


 கடைசி பெஞ்ச் இருக்கட்டும்-அதைக் 
காட்சிப் பொருளாக்கத் தேவை இல்லை..

சாட்சிப் பொருளாகவே தொடரட்டும்

 

-------------

டி.என்.முரளிதரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895