என்னை கவனிப்பவர்கள்

students லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
students லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 14 ஜூலை, 2025

கடைசி பெஞ்ச்

 




 கடைசி பெஞ்ச் என்று
கழிவிரக்கம் வேண்டாம்

கடைசி பெஞ்ச்சில் இருக்கிறோம் என்று
அதில் இருக்கிற யாரும் கவலைப் பட்டதில்லை

கடைசி பெஞ்ச்.
கவனிக்காதவர்களின் இடம் அல்ல
அது கவனிக்கப் படாதவர்களின்
 புகலிடமாகக்கூட இருக்கலாம்

கடைசி பெஞ்ச்காரணை வைத்துத்தான்
ஒரு வகுப்பறையே
அடையாளம் காணப்படும்

கடைசி பெஞ்ச்காரன்தான்
வகுப்பறைக்கே பாதுகாப்பு 

அவன் ஒரு போதும்
 முதல் பெஞ்ச மாணவனிடம் 
போட்டிக்கு வந்ததில்லை

அவனைப் போல
 எப்போதும் எச்சரிக்கையாய்
இருக்கத் தேவை இல்லை..
நல்லவன் போல் நடிக்கத் தேவை இல்லை 

 கடைசி பெஞ்ச் காரர்கள்
வரலாறு படைக்கப் பிறந்தவர்கள்

முன் பெஞ்ச் மாணவர்களுக்கு
கடைசிபெஞ்ச் காரர்கள் மீது
பொறாமை உண்டு.
சில அறுவை ஆசிரியர்களிடமிருந்து தப்பிக்க
 கடைசி பெஞ்சுக்கு செல்லலாம் என்றால் முடியாது. 

அப்பனிடமும் சரி ஆசிரியர்களிடமும் சரி
அடி வாங்கத் தயங்காதவன்
கடைசி பெஞ்ச்காரன் 

கவிதை எழுதத் தெரிந்தவனை
கடைசி பெஞ்சில்தான் காணமுடியும்

 ஆசிரியரைப் போல அனைத்து
 மாணவர்களையும் பார்க்க முடிந்தவன் 
 கடைசி பெஞ்ச்காரன்தான்

அவர்களைப் போல் அல்லாது 
முன் பெஞ்ச் மாணவனின்
 பின்னனியும் தெரிந்தவன் 
 கடைசிபெஞ்ச் காரன்

காட்டிக் கொடுக்கத் தெரியாதவன்
கடைசி பெஞ்ச் காரன்/ 

ஆசிரியரைப் போலவே  கடைசி
பெஞ்ச்காரனால் மட்டுமே
வகுப்பறையக் கட்டுப்பாட்டில்
வைக்க முடியும்

ஆசிரியரையும் கற்றுக்கொள்ள
வைப்பவன்தான் கடைசி பெஞ்ச் மாணவன்


 கடைசி பெஞ்ச் இருக்கட்டும்-அதைக் 
காட்சிப் பொருளாக்கத் தேவை இல்லை..

சாட்சிப் பொருளாகவே தொடரட்டும்

 

-------------

டி.என்.முரளிதரன்

செவ்வாய், 10 மே, 2022

குமுதத்தில் கதை-வாத்தியாரை அடித்தவன்

  


வாத்தியாரை அடித்தவன்

(ஒரு பக்கக் கதை)

                                                                ……டி.என்.முரளிதரன்….

              பள்ளியின்  எச்.எம் ரூமில்   ஆசிரியர்கள் அனைவரும் குழுமி இருந்தனர். அதில் ஒருவர் தலைமை ஆசிரியரிடம்சார்நம்ம முத்துசாமி சாரை, அந்தப் பையன் அடிக்க வந்திருக்கான். இன்னிக்கு வாட்ஸ் அப், ஃபேஸ்புக், டுவிட்டர்னு இந்த வீடியோதான் வைரலா போயிக்கிட்டிருக்கு.. அவனை சஸ்பெண்ட் பண்ணனும் சார். ரெகார்ட் நோட் ஏன் எழுதலன்னு கேட்ட து தப்பாரிசல்ட் குறைஞ்சா மட்டும் நம்மளைக் கேள்வி மேல கேள்வி கேக்கறாங்க இல்ல. எவனோ ஒரு வாத்தியார் தப்பு செஞ்சா எல்லாருமே அப்படித்தான்னு பரப்பறாங்க இல்ல. இப்படியே விட்டா  சொல்லிக்கொடுக்கற  டீச்சருக்கு என்ன பாதுகாப்பு?” என்று கோபாவேசமாகப் பேச மற்றவர்களும் அதனை ஆமோதித்தனர்.

    அப்போது  முத்துசாமி சாரும் உள்ளே வர,

    “நீங்க சொல்றதும் சரிதான். முத்துசாமி சார்! நீங்க ஒரு புகார் எழுதிக் கொடுங்க, சி.. கிட்ட சொல்லி நடவடிக்கை எடுக்கலாம். சிவியர் பனிஷ்மெண்ட் கொடுத்தாத்தான் ரவுடிப் பசங்க திருந்துவாங்கஎன்றார் எச்.எம்.
       “
வேணாம்  சார்! என்றார் முத்துசாமி

    ”ஏன்? சாதிப் பிரச்சனையாகிடும்னு பயப்படறீங்களா?”

    “இல்ல சார். நான் சின்ன வயசுல  வீட்டுப்பாடம் எழுதலன்னு வாத்தியார் என்ன நல்லா திட்டிட்டார். அதனால நான் அவர் மேல கல்லெடுத்து அடிச்சுட்டு ஓடிட்டேன். இருந்தாலும் அவர் என்னை மன்னிச்சி ஸ்கூல்ல சேத்துக்கிட்டார்.. ஒரளவுக்கு படிச்சு இன்னைக்கு  நல்ல நிலைமையில இருக்கேன். அவர் மன்னிக்கலன்னா ஸ்கூல விட்டு நின்னுருப்பேன். அந்த நிலை அந்தப் பையனுக்கு வராம இருக்கணும்னு  விரும்பறேன். இதோட விட்டுடலாம் சார்.”

என்ற முத்துசாமி சாரை அனைவரும் ஆச்சர்யத்துடன் பார்த்தனர்.