என்னை கவனிப்பவர்கள்

வைரமுத்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வைரமுத்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 25 நவம்பர், 2015

வைரமுத்து சொன்னது-மழை பேஞ்சுக் கெடுத்திருச்சே பெருமாளே! -

அடையாறு 

  வலைப் பக்கம் வந்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது . வாராது வந்த மாமழை பாடாய்ப் படுத்தி விட்டது.கடுமையான வெய்யிலை தாக்குப் பிடிக்கும்  நம்மை சில நாள் மழை சின்னாபின்னமாக்கி விட்டது.  நாளிதழ்கள் தொலைக்காட்சி மட்டுமல்லாது  சமூக வலை தலைகளிலும் மழை இன்னமும் கதாநாயகனாய் (வில்லனாய்) வலம் வந்து கொண்டிருக்கிறது.  நான் அறிந்து இப்போதுதான் சென்னை அதிக அளவு மழையால் பாதிக்கப் பட்டிருக்கிறது அடுத்த பதிவில் இதைப் பற்றி எழுத இருக்கிறேன்.


 மழையினால் கிராம மக்கள் நகர மக்கள்  என்ற வித்தியாசமின்றி  பாதிக்கப் பட்டாலும்   நீண்ட கால பாதிப்பு கிராம மக்களுக்கே. குறிப்பாக   மழை வந்தாலும் வராவிட்டாலும் அதிக அளவில்பாதிப்படைவது  விவசாயிகளே. இந்த பாதிப்புகள் வைரமுத்துவின் விதைசோளம்  என்ற மழை பற்றிய கவிதையை எனக்கு  நினவுபடுத்தியது . அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.  இந்தக் கவிதை இடம் பெற்ற கவிதை தொகுப்பு நூலின் தலைப்பு பெய்யெனப் பெய்யும் மழை 

                                         விதைச் சோளம்
                     ஆடி முடிஞ்சிரிச்சு
                      ஆவணியும் கழிஞ்சிரிச்சு
                      சொக்கிகொளம்  கோடாங்கி
                      சொன்ன கெடு முடிஞ்சிருச்சு.

                      காடு காஞ்சிரிச்சு
                      கத்தாழை கருகிடிச்சி
                      எலந்த முள்ளெல்லாம்
                      எலையோட உதிஞ்சிருச்சு
.
                      வெக்க பொறுக்காம
                      றெக்க  வெந்த குருவியெல்லாம்
                      வெண்காடு விட்டு
                      வெகுதூரம் போயிடிச்சி.

                      பொட்டு மழை பெய்யலையே
                      புழுதி அடங்கலையே
                      உச்சி நனையலையே
                      உள்காடு உழுகலையே

                      வெதப்புக்கு  விதியிருக்கோ
                      வெறகாக விதி இருக்கோ
                      கட்டி வெச்ச வெங்கலப்ப
                      கண்ணீர்  வடிச்சிருச்சு

                      காத்துல ஈரமில்ல
                      கள்ளியில பாலுமில்ல
                      எறும்பு குளிச்சேற
                      இரு சொட்டுத் தண்ணியில்ல

                      தெய்வமெல்லாம் கும்பிட்டு
                      தெசைஎல்லாம் தெண்டனிட்டு
                      நீட்டிப் படுக்கையிலே
                      நெத்தியில  ஒத்த மழை

                      துட்டுள்ள ஆள  தேடி
                      சொந்தமெல்லாம் வாரதுபோல்
                      சீமைக்குப் போயிருந்த
                      மேகமெல்லாம் திரும்புதையா!

                      வாருமையா வாருமையா
                      வருண பகவானே!
                      தீருமையா   தீருமையா 
                      தென்னாட்டுப் பஞ்சமெல்லாம்

                      ஒத்த ஏறு  நான் உழுக
                      தொத்தப்பசு வச்சுரிக்கேன்
                      இன்னும் ஒரு மாட்டுக்கு
                      எவனப் போய் நான் கேட்பேன்.

                      ஊரெல்லாம் தேடி
                      ஏர்மாடு  இல்லாட்டி
                      இருக்கவே இருக்கா என்
                      இடுப்பொடிஞ்ச பொண்டாட்டி

                      காசு பெருத்தவளே
                      கார வீட்டுக் கருப்பாயி
                      தண்ணிவிட்டு எண்ணயின்னு
                      தாளிக்கத் தெரிஞ்சவளே!

                      சலவைக்குப் போட்டா
                      சாயம் குலையுமின்னு
                      சீல தொவைக்காத
                      சிக்கனத்து மாதரசி

                      கால்மூட்ட வெதச் சோளம்
                      கடனாகத் தந்தவளே
                      கால் மூட்ட கடனுக்கு
                      முழு மூட்ட அளக்கறண்டி 

                      ஊத்துதடி ஊத்துதடி
                      ஊசிமழை ஊத்துதடி
                      சாத்துதடி சாத்துதடி
                      சடசட சடையா சாத்துதடி

                      முந்தா நாள் வந்த மழை
                      மூச்சு முட்டப் பெய்யுதடி
                      தெச ஏதும் தெரியாம
                      தெர  போட்டுக் கொட்டுதடி

                      கூர  ஒழுகுதடி
                      குச்சிவீடு நனையுதடி
                      ஈரம் பரவுதடி
                      ஈரக் கொலை நடுங்குதடி

                      வெள்ளம் சுத்தி நின்னு
                      வீட்ட இழுக்குதடி
                      ஆஸ்தியில சரிபாதி
                      அடிச்சிக்கிட்டுப் போகுதடி 

                      குடிகெடுத்த காத்து வந்து
                      கூர  பிரிக்குதடி
                      மழைத் தண்ணி ஊறி
                      மண்சுவரு சரியுதடி.

                      நாடு நடுங்குதையா
                      நல்லமழை போதுமையா
                      வெத வெதக்க  வேணும்
                      வெயில் கொண்டு வாருமையா.

                      மழையும் வெறிக்க
                      மசமசன்னு வெயிலடிக்க
                      மூலையில வச்சிருந்த
                      மூட்டையைப்  போய் நான் பிரிக்க

                      வெதச் சோளம் நனஞ்சிருச்சே
                      வெட்டியா பூத்திருச்சே
                      மொளைக்காத படிக்கு
                      மொளைகட்டிப் போயிடிச்சே

                      ஏர் புடிக்கும் சாதிக்கு
                      இதேதான் தலையெழுத்தா?
                      விதிமுடிஞ்ச ஆளுக்கே
                      வெவசாயம் எழுதிருக்கா?

                      காஞ்சு கெடக்குதேன்னு
                      கடவுளுக்கு மனு செஞ்சா
                      பேஞ்சுக்  கெடுத் திருச்சே
                      பெருமாளே என்ன  பண்ண?


****************************************************


முந்தைய தானே புயல் கடலூர் பகுதியை புரட்டிப் போட்டது அப்போது நான் எழுதிய கவிதை  நேரம் கிடைக்கும்போது படிச்சுப்பாருங்க 

தானே! உன்னோட தாக்கம் இன்னும் தீரலையே!

செவ்வாய், 23 ஜூன், 2015

நீயா? நானா? மதுரை எபிசோடு-வைரமுத்து கவிதை

     

     முன்பெல்லாம்   நீயா நானா நிகழ்ச்சியை பார்க்காமல் தவற விட்டால் யூ ட்யூபில் பார்த்துக கொள்ளலாம். வேண்டுமென்றால் டவுன்லோட் செய்து கொள்ள முடிந்தது. ஆனால் இப்போது நீயா நானா யூ ட்யூபில் கிடைப்பதில்லை. ஹாட்ஸ்டார் மூலமாகத்தான் பார்க்க முடிகிறது. அதுவும் டவுன்லோட் செய்ய முடிவதில்லை.பழைய எபிசோடுகளும் யூ ட்யூபில் இருந்து நீக்கப் பட்டுள்ளதாக தெரிகிறது.

        கடந்த  வார நீயா நானாவில் மதுரை நகரம் பற்றி மதுரை வாசிகள் பேசினார்கள். இந்த நிகழ்ச்சியை முழுமையாக பார்க்க்கவில்லை. பார்த்தவரை  அந்நகரத்தின் மீதான ஈர்ப்பு, 'நான் மதுரைக்காரன்' என்ற  பெருமை ஒவ்வொருவருடைய பேச்சிலும் தெரிந்தது.
    2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்கம் வளர்த்த  பழைய நகரமான  மதுரை இன்னமும் அதன் பொலிவை இழக்காவிட்டாலும் பெருமளவுக்கு வளரவில்லை என்பது சிலரின் ஆதங்கமாக இருந்தது.. நகரம் என்று சொல்லிக்கொண்டாலும் மதுரை கிராமத் தன்மை கொண்டதாகவே இருக்கிறது என்பது அதன் பெருமை என்றாலும் அதுவே குறைபாடும் ஆகும் என ஒரு சிலர் தெரிவித்தனர்.
       திரைப்படத்துறையில் மதுரைக்காரர்களின் ஆதிக்கம் செலுத்தி பெருமை சேர்த்தாலும் அதே சினிமாதான்  .மதுரை என்றாலே வீச்சரிவாள் ரவுடிகள் என்ற ஒரு பிம்பத்தையும் மதுரையைப் பற்றி அறியாதவர்களுக்கு ஏறபடுத்தியது
   நான் முழுமையாக் பார்க்கதாதால் விரிவாக எழுத முடியவில்லை.
ஆனால் என்ன? கவிப் பேரரசு வைரமுத்து தனது  கவிதையில் மதுரையை அழகாக நம் முன்னே கொண்டு வந்து நிறுத்தி இருப்பார்.அந்தக் கவிதையை நீங்கள் ஏற்கனவே படித்திருப்பீகள் என்றாலும் இன்னொரு முறை படித்தாலும் நிச்சயம் அலுக்காது .

இதோ உங்களுக்காக வைரமுத்து படைத்த மதுரை . 

                                                               மதுரை 

                             பாண்டியன் குதிரைக் குளம்படியும்-தூள்
                                   பறக்கும் இளைஞர் சிலம்படியும்-மதி 
                            தோண்டிய புலவர் சொல்லடியும்-இனம் 
                                    தோகைமார்தம் மெல்லடியும் 

                              மயங்கி ஒலித்த மாமதுரை -இது 
                              மாலையில் மல்லிகைப் பூமதுரை 

                             நீண்டு கிடக்கும் வீதிகளும்-வான் 
                                   நிமிர்ந்து முட்டும் கோபுரமும் 
                             ஆண்ட  பரம்பரை சின்னங்களும்-தமிழ்
                                  அழுந்தப் பதித்த சுவடுகளும் 

                             காணக்  கிடைக்கும் பழமதுரை-தன்
                             கட்டுக் கோப்பால் இள மதுரை !

                             மல்லிகை மௌவல் அரவிந்தம்- வாய்
                                 மலரும் கழுநீர் சுரபுன்னை 
                             குல்லை வகுளம் குருக்கத்தி-இவை 
                                 கொள்ளை அடித்த வையை நதி 

                              நாளும் ஓடிய நதி மதுரை-நீர் 
                              நாட்டியமாடிய பதிமதுரை

                             தென்னவன் நீதி பிழைத்ததனால்-அது 
                                  தெரிந்து மரணம் அழைத்ததனால் 
                              கண்ணகி திருகி எறிந்ததனால்-அவள் 
                                  கந்தக முலையில் எரிந்ததினால் 

                             நீதிக்  கஞ்சிய தொன்மதுரை -இன்று 
                             ஜாதிக் கஞ்சும் தென்மதுரை 

                             தமிழைக் குடித்த கடலோடு-நான் 
                                 தழுவேன் என்றே சபதமிட்டு
                             அமிர்தம் பரப்பும் வையை நதி -நீர் 
                                 ஆழி கலப்பது தவிர்ப்பதனால் 

                             மானம் எழுதிய மாமதுரை-இது 
                             மரபுகள் மாறா வேல் மதுரை 

                             மதுரை  தாமரைப் பூவென்றும் -அதன் 
                                 மலர்ந்த இதழே தெருவென்றும் 
                            இதழில் ஒட்டிய தாதுக்கள்-அவை 
                                 எம்குடி மக்கள் திரளென்றும்-பரி

                             பாடல் பாடிய பால் மதுரை-வட
                             மதுரா புரியினும் மேல்மதுரை

                            மீசை  வளர்த்த பாண்டியரும்-பின் 
                                களப்பிறர் பல்லவர் சோழர்களும்-மண் 
                           ஆசை வளர்த்த அந்நியரும்-அந்த 
                               அந்நியரில் சில கண்ணியரும்

                            ஆட்சிபுரிந்த தென்மதுரை-மீ 
                            னாட்சியினால்  இது பெண்மதுரை 

                             மண்ணைத் திருட வந்தவரை- தம்
                               வயிற்றுப் பசிக்கு வந்தவரை-செம்
                            பொன்னைத் திருட வந்தவரை-ஊர் 
                               பொசுக்கிப் போக வந்தவரை-தன்

                             சேயாய்  மாற்றிய தாய்மதுரை-அவர்
                              தாயாய் வணங்கிய தூயமதுரை 

                            அரபுநாட்டுச் சுண்ணாம்பில்-கரும்பு 
                               அரைத்துப் பிழிந்த சாறூற்றி
                            மரபுக் கவிதைபடைத்தல் போல் -ஒரு 
                                மண்டபம் திருமலை கட்டியதால் 

                            கண்கள்  மயங்கும் கலைமதுரை-இது 
                             கவிதைத் தமிழின் தலை மதுரை 

                            வையைக் கரையின் சோலைகளும்-அங்கு 
                                 வரிக்குயில் பாடிய பாடல்களும் 
                            மெய்யைச் சொல்லிய புலவர்களும்-தம் 
                                 மேனி கருத்த மறவர்களும் 

                            மிச்சமிருக்கும்  தொன்மதுரை-தமிழ் 
                                 மெச்சி முடிக்கும் தென் மதுரை 

                           போட்டி வளர்க்கும் மன்றங்களும்-எழும் 
                                பூசைமணிகளின் ஓசைகளும்-இசை 
                           நீட்டி முழங்கும் பேச்சொலியும்-நெஞ்சை 
                                நிறுத்திப் போகும் வளையொலியும்

                            தொடர்ந்து கேட்கும் எழில் மதுரை-கண் 
                              தூங்காதிருக்கும் தொழில்மதுரை 

                            ஆலைகள் தொழில்கள் புதுக்காமல்-வெறும் 
                                  அரசியல் திரைப்படம் பெருக்கியதில் 
                             வேலைகள்  இல்லாத் திருக்கூட்டம் -தினம் 
                                   வெட்டிப் பேச்சு வளர்ப்பதனால் 

                              பட்டாக்  கத்திகள் சூழ்மதுரை-இன்று 
                              பட்டப் பகலில் பாழ்மதுரை 

                              நெஞ்சு வறண்டு போனதனால் -வையை 
                                  நேர்கோடாக ஆனதனால் 
                              பஞ்சம் பிழைக்க வந்தோர்-நதியைப் 
                                  பட்டாப் போட்டுக் கொண்டதனால் 

                             முகத்தை இழந்த முதுமதுரை-பழைய 
                                    மூச்சில் வாழும் பதிமதுரை



அவர் கருத்து சரிதானா என்பதை நீங்கள்தான் சொல்லவேண்டும் 


**************************

கொசுறு:மதுரை என்றதுமே எனக்கு நினைவுக்கு வந்தது கடந்த  ஆண்டில் நடந்த அற்புதமான பதிவர் சந்திப்புதான். திரை உலகம் மட்டுமல்ல வலை உலகிலும் மதுரைப் பதிவர்கள் கலக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்றுதான் சொல்லவேண்டும். 



புதன், 24 டிசம்பர், 2014

வைரமுத்து பயன்படுத்திய வார்த்தை சரியா?




நேற்று கவிப் பேரரசு வைரமுத்து எழுதிய எய்ட்ஸ் நோய் பற்றிய விழிப்புணர்வு கவிதையை வெளியிட்டிருந்தேன். ( படிக்க நேற்றைய பதிவு      எய்ட்ஸ் பற்றி வைரமுத்து)
அவை வெண்பா வடிவத்தில் அமைந்திருந்தன. மிக சிறப்பாக எழுதப் பட்டிருந்தது

 இவ்வெண்பாக்கள் ஒன்றில்  ஒரு வார்த்தையை வித்தியாசமாக உணர்ந்தேன் என்று குறிப்பிடேன்.ஆனால் மற்ற எவரும் அதனை குறிப்பிடவில்லை என்பதால்  எனது புரிதலில்தான் தவறு உள்ளது என்றே இப்போது எண்ணுகிறேன். இருந்தாலும் எனது என்ன ஓட்டத்தையும் சொல்லி விடுகிறேன்
அந்த வெண்பா இதுதான்

                      தோகைமார் தந்த சுகநோயோ உன்கட்டை
                      வேகையிலும்   விட்டு விலகாதே-ஆகையினால்
                      விற்பனைப் பெண்டிரொடு வேண்டாம் விளையாட்டு
                      கற்பனையை வீட்டுக்குள் காட்டு

விற்பனைப் பெண்டிர் என்ற வார்த்தைதான் எனக்கு சற்று நெருடலை ஏற்படுத்தியது.

      விற்பனைப் பெண்டிர் என்ற வார்த்தையை Sales women என்றே என்னால் சட்டென்று பொருள் கொள்ள முடிந்தது. ஆனால் விற்பனைப் பெண்டிர் என்ற வார்த்தையை பாலியல் தொழில் செய்யும்  பெண் என கவிஞர் பயன்படுத்தியதை தவிர்த்திருக்கலாம் என்பதே எனது கருத்து.  Sales girls எல்லாம் Call girls அல்ல

       இந்தக் கவிதையில் முதலில் இருந்தே காசுக்காக காம சுகம் தரும் பெண்களைப் பற்றி பேசுவதால் விற்பனைப் பெண்டிர் என்ற வார்த்தை பாலியல் தொழில் செய்யும் பெண்ணையே குறிப்பதாக மனது ஏற்றுக் கொண்டு விடுவதால் அந்த வார்த்தை யாருக்கும் தவறாக தோன்றவில்லை என நினைக்கிறேன்.
     
       எனக்கென்னவோ விற்பனைப் பெண்டிர் என்றதும் சரவணா ஸ்டோர், போதீஸ் போன்றவற்றில் கால்கடுக்க நின்றுகொண்டு கேட்டதை எடுத்துக் கொடுக்கும் பெண்களும், வாசல் கதவை தட்டி ரெண்டு  வாங்கினா ஒண்ணு ப்ரீ விளம்பர ஆஃபர் சார் வாங்கிக்கோங்க   என்று கெஞ்சும்  பெண்களுமே கண்முன் வந்து போனார்கள்.
உங்கள் கருத்து  என்ன?

            ****************************************************

தொடர்புடைய பிற பதிவுகள் 

****************************************************

வெள்ளி, 20 டிசம்பர், 2013

ஒல்லியான ஊசிக்கு பேரு குண்டூசியா?-வைரமுத்து


கவிப்பேரரசு வைரமுத்து (Vairamuthu) தன் ஆயிரக்கணக்கான திரைப்பாடல்கள் மூலமாக நம் நெஞ்சங்களைக் கவர்ந்தவர். திரைப் பாடலுக்கு புதிய பரிமாணம் தந்தவர். புதுக் கவிதைகளையும் பிரபலப் படுத்தியவர். ஆனால் அவர் எழுதிய முதல் கவிதை நூல் வைகறை மேகங்கள் முழுவதும் மரபுக் கவிதைகளால் ஆனது. அருமையான சொல்லாட்சியும் பொருளழகும் கொண்ட கவிதைகளாக அவை அமைந்திருப்பதைக் காணலாம். இந்நூலுக்கு கண்ணதாசன் அணிந்துரை எழுதியுள்ளார்
        இதில் குண்டூசி என்ற தலைப்பில் கவிஞர் எழுதியுள்ள கவிதை எனக்கு மிகவும் பிடித்த கவிதையாகும். ஒரு சாதாரண  குண்டூசியைப் பார்த்த வைரமுத்துவின கவிச்சிறகு எப்படி பறக்கிறது பாருங்கள்? இதோ அந்தக் கவிதை .  அறுசீர் விருத்தத்தில் எழுதப் பட்ட இந்தக் கவிதையை மடக்கி எழுதினால் புதுக்கவிதையாகவும் கொள்ள முடியும் . 
 
குண்டூசி
       என்னைப்போல் இளைத்துப் போனாய்
           இணைப்புக்குத் தேவை யானாய்
       திண்ணைப் போர் புரிந்துகொண்டே
           சேல்களை ஆட்டும் பெண்ணின்
       கண்ணைப் போல் கூர்மையான
           கழுத்திலாத் தொப்பிக்காரன்
       மின்னல்போல் மறைந்து துன்பம்
           விளைக்கும் நீ இரும்புக் குச்சி


       குண்டூசி என்ற பேரைக் 
            கொடுத்தது சரியா? காமம்  
       கொண்டாடும் நடிகை வீட்டை         
            கண்ணகி இல்லம் என்று
       சொன்னாலும் சொலலாம் ஆனால்
            சுருங்கிய ஊசி உன்னை
       குண்டூசி என்றே இங்கே
            கூறுதல் தவறே? ஆமாம்!



       கருப்பாணி பெற்ற பிள்ளை
            காகிதக் களத்துக் கத்தி
       ஒருசிலர் பல் வீட்டிற்கே
             ஒட்டடை போக்கும் குச்சி
       செருப்பாணி போல தைத்துச்
             சிறுதாளை எல்லாம் ஒன்றாய்
       உருவாக்கும் உன்னை தூய
             ஒற்றுமைச் சின்னம் என்பேன்


        விடையிலாக் கேள்வியாக்கி
              விலையிலாச்  சரக்காய் என்னைப்
        படைத்தவன் பாவி; உன்னைப்
               படைத்தவன் ஞானி; இங்கே
        உடையினை அணிந்துகொண்ட
               உயிர்ப்பிண மனிதர்க் கென்றும்
        எடையிலே குறைந்து போனாய்
               இயல்பிலே உயர்ந்து போனாய்


        வெறுப்பினால் உன்னை தூர
               வீசுவார் ஆமாம்! அந்தக்
        கிறுக்கற்குத் தேடும் போது
             கிடைக்காமல் ஆட வைப்பாய்!
        உறுதியாய் உரைப்பேன் இங்கே
              உனக்குள தன் மானத்தில்
        அறுபதில்  ஒரு பங்கேனும்      
                ஆமிந்த  மனிதர்க் கில்லை 

**********************************************************

புதன், 15 மே, 2013

சாதி வன்முறைகள் பற்றி வைரமுத்து

    தமிழனின் தோலோடு தோலாக ஓட்டிக்கொண்டிருக்கிறது  சாதிச் சட்டை .அது கழற்றப் படக் கூடாது என்பதில் கவனமாக இருக்கின்றன சாதிக் கட்சிகள். பொதுநலப் போர்வையில் சுய நல அரசியலுக்காக சாதீயை அணைக்க விடாமல் அடம் பிடித்துக் கொண்டிருக்கிறது சுய நல அரசியல்.  மறக்க விரும்பினாலும் அது முடியாது என்பதை  உரைத்துக் கொண்டிருக்கின்றன மரக்காணம் வன்முறைகள் 

  இந்த சம்பவங்களை நினைத்து மனம் வெதும்பிக் கொண்டிருக்கையில் சமீபத்தில் படித்த கவிப் பேரரசு வைரமுத்துவின் பெய்யெனப் பெய்யும்  மழை கவிதைத் தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் தீ அணையட்டும் என்ற கவிதை நினைவுக்கு வந்தது. இந்தக் கவிதைதான் சாதிக்கு எதிரான இறுதிக் கவிதையாக இருக்கவேண்டும் என்று விரும்புவதாகக் கூறி தொடங்குகிறார்.

இதோ அந்தக் கவிதை
சாதீ

                  தெற்கே வடக்கே  சாதிகள் மூட்டும்
                     தீயே பரவாதே -பழங்
                  கற்காலத்து பாம்பே எங்கள்
                     காலைச் சுற்றாதே

                  மண்பானைகளும் மண்பானைகளும்
                     மல்லுக்கு நிற்பதுவோ -இங்கே
                  கண்ணீர்த் துளிகளுள் கண்ணீர்த் துளிகளும்
                     கைகள் கலப்பதுவோ

                  முன்னூறாண்டை முன்னுக் கிழுக்குது
                      முரட்டு விஞ்ஞானம்-நாமோ
                  முன்னூறாண்டு பின்னே செல்வது
                      முழுக்க அஞ்ஞானம்

                  அந்நியரோடு சண்டை இட்டது
                     ஆறோ ஏழோதான்-சொந்த
                  மன்னவரோடுசண்டையிட்டது
                     மணலினும் அதிகம்தான்

                  செயற்கை மனிதன் செவ்வாயோடு
                      சிற்றில் ஆடுகையில் -இங்கே
                  இயற்கை மனிதர் சாதி சண்டையில்
                      இடுப்பு முறிவதுவோ

                  .நீண்ட நாள் முன் யாரோ விதைத்த
                      நெருப்பின் மிச்சத்தில்-மண்ணை 
                  ஆண்ட பரம்பரை இன்றுவரைக்கும் 
                      அழிந்து கருகுவதோ?

                   புதைந்த தமிழின் சங்கம் மூன்றை 
                      புதுக்க எண்ணாமல்-நம்மை 
                   புதைக்கும் சாதி சங்கத்துக்குள் 
                      புதைந்து போவீரோ?

                   வறுமை  ஏழ்மை பேதமைக் கெதிராய்
                       வாளை எடுக்காமல் -நாம் 
                   ஒருவரை ஒருவர் எரித்து மகிழும்
                       உற்சவம் நடத்துவதோ?

                    புத்தகம் தந்து கல்விச் சாலை 
                       போகும் சிறுபிள்ளை-கையில் 
                    கத்திகள் தந்து சாதிக் களத்தில் 
                       கருகச் செய்வீரோ?

                    மனிதன் எனும் நிஜத்தை நீங்கள் 
                        மறந்து தொலைத்து விட்டு-சாதி 
                    சனியன்  என்னும் கற்பனைக்காக 
                         சமர்கள் புரிகுவதோ?

                    ஆயு தங்களை  கட்டும் கையால் 
                         அணைகள் கட்டுங்கள்-அந்த 
                    ஆயதங்களைஉருகி உருக்கி 
                         ஆலைகள் எழுப்புங்கள் 

                     சிலைகள் எடுக்கும் செலவில் நீங்கள் 
                         சிறகுகள் வாங்குங்கள்-வீணே 
                     தரையில் சிதறும் ரத்தம் போதும் 
                         தானம் புரியுங்கள் 

                     முன்னே வள்ளுவன் பின்னே பாரதி 
                         முழங்கினர் ஊருக்கு- அட 
                     இன்னும் நீங்கள் திருந்தாவிட்டால் 
                         இலக்கியம் ஏதுக்கு?


***********************************************************************************************************************

வெள்ளி, 5 ஏப்ரல், 2013

கண்ணகிபோல் இருக்காதீர்!-வைரமுத்து

 வைரமுத்துவைப் பற்றி  நான் சொல்லித்தான் தெரிய வேண்டியதில்லை. வைரமுத்து எழுதிய முதல் கவிதை நூலான "வைகறை மேகங்கள்" முழுவதும் மரபுக் கவிதைகளால் நிரம்பியது. அதில் கண்ணகியைப் பற்றி அவர் எழுதிய கவிதை கருத்தாலும் வார்த்தை சாலங்களாலும் என்னை கவர்ந்தது. மிக நீளமான அந்தக் கவிதையை சுவை கருதி  பாதியாக்கி  சுருக்கித் தந்திருக்கிறேன். (வைரமுத்து மன்னிப்பாராக) உங்களுக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்.

 கருப்பு நிலா
 
             கண்ணகியே! தாயே! கருப்பான இரும்பிடையே 
             பொன்னகையே பூவே! புரட்சித் துறவியவன் 
             தீட்டி வைத்த காவியமே! திருமகளே! தேனுக்குள் 
             போட்டுவைத்த பழம்போல் பூந்தமிழர்க் கினிப்பவளே!
             உச்சி குளிர்ந்துவிட உன்னைப் புகழ்ந்துவிட்டேன்.
             நிச்சயமாய் இனிஎன் நினைப்பை சொல்லுகின்றேன்.
             அந்திப்பூ விரிவதுபோல் அறிவை விரித்து வைத்து 
             சிந்தித்தேன் ஆமாம்! சிரிப்புத்தான் வந்ததம்மா!
             உள்ளபடி உன்வாழ்க்கை  உலகுக் குதவாத
             செல்லுபடி ஆகாத சிறுகாசு தானென்பேன்!

             தொட்டு மாலையிட்டோன் தோகையரை கூடியபின் 
             விட்டுப் பிரிந்து வேறு திசை போனாலும் 
             கண்ணீரை தினம்சிந்தி கண்மூடி வாழ்வதுதான் 
             பெண்டிர்க்கு கற்பென்று பேசினால் அக்கற்பே 
             இந்த உலகத்தில் இல்லா தொழியட்டும்
             சந்தையிலே விலைபோகா சரக்காகிப் போகட்டும்.
             கட்டில் சுகம் காண காளையவன் செலும்போதே 
             தட்டிக் கேட்டிருந்தால் தவறி இருப்பானா?
             பெட்டிப் பாம்பாக பேசா திருந்ததுதான் 
             கட்டழகே நீ செய்த கடுங்குற்றம்!முதற்குற்றம்!

             உப்புக் கடல் நோக்கி ஓராறு செல்லுவதும் 
             இப்புவியில் வியப்பில்லை எழில்மகளே! உன்கணவன்
             தப்பான கடல் நோக்கி தாவி செல்லும்போதே 
             அப்பப்பா ஈதென்ன அநியாயம் எனச்  சொல்லி 
             அணையொன்றைக் கட்டி அந்த ஆண்மகனைத் தடுத்திருந்தால்
             திணைவனத்துக் கிளிபோல திருமகளே வாழ்ந்திருப்பாய்
             அறம்பாடி மதுரை அரசன் புகழ்சாடி 
             திறம்பாடும் பூநகரை தீயால் எரித்தாயே!
             அத்திறத்தை சோனாட்டில் அணுவளவு காட்டி நின்றால் 
             சத்தியமாய் வாழ்வில் தளிர்த்து  செழித்திருப்பாய்
             மன்னவனும் மாண்டதனால் மதுரை எரிந்தததனால் 
             உன் கணவன் நிலையாக உன்னிடத்தில் மீண்டானா?
             கயவன் இழிந்த மகன் கண்மூடிப் போனவுடன் 
             மயங்கி விழுந்தாயே மடமகளே! வாழ்நாளில் 
             பொய்யாகிப் போனமகன் புழுதியிலே செத்ததனால் 
             ஐயோ! ஆ! என்றலறி அழுது துடித்தாயே 
             காவியத்தில் உனைக்கண்டு கண்ணீரா நான் வடித்தேன்?
             ஆவி சிலிர்த்தேனா? அல்ல சிரித்துவிட்டேன்.

             மோகக்  கதையதனை முடித்துவிட்டே உன்கணவன்
             வேகமாய் உன்னை நாடி வீடு தேடி வந்தவுடன் 
             "சிந்தை நிலாக் காவலரே!சிலம்பிதனை நாடித்தான் 
             வந்தீரோ?என்றுனது வாய் நிறைய தேன்வழிய 
             சொன்னாயே பாவி! சுவையொழுக சிலம்புதனை
             அன்னவனின் கைமீது அளிக்கத் துணிந்தாயே
             பத்தினியாய் நீயிருந்தும் பயனில்லை! உண்மையிலே 
             பித்தம் பிடித்தவள் நீ பேதை பெரும்பேதை 
             அநியாயக்  காரனுக்கே ஆரத்தி எடுத்தவள் நீ
             கனிஎன்றே எண்ணிக் கருங்கல்லைக் கடித்தவள் நீ 

             பல்லுடைந்து  போனதற்கும் பதறித் தவிப்பதற்கும்
             எள்ளுருண்டை காரணமா? ஏந்திழையே! உன்கணவன் 
             பதமான சுகம் கண்டு பாவிமகள் உனைப்பற்றி 
             முதலிரவில் சொன்னதெல்லாம் மோகமொழி தானென்றே 
             அறியாமல் போனாயே அதுவுந்திரன் பிழையன்றோ?
             பிரிக்காத ஏடுன்னை பிரித்தெங்கோ  போனானே!
             விட்டுப் பிரியாத வேலையினை செய்வதற்கு 
             சுட்டு  விழியாலே சொக்கவைத்து தக்கவைக்க 
             தவறவிட்ட உன்னையந்த தாய்க் குலமா பாராட்டும்?
             கவலைக் காவியம் நீ கண்ணீரால்தான் முடிந்தாய்!

             தாய்க்குலமே! தாய்க்குலமே !தங்க மகன் சொல்லுகின்றேன்.
             வாய்சாலக்  காரனென்று வார்த்தையினைத் தள்ளாதீர்!
             கற்பொன்றில் மட்டும் கண்ணகியைப் போலிருங்கள்!
             மற்றவற்றில் அந்த மடமைகளை மறந்திருங்கள்!
             இப்போதும் அவளைபோல் ஏமாந்து நின்றிருந்தால் 
             முப்போதும் கண்ணீரில் மோன நிலை கொண்டிருந்தால் 
             கடலுள் விழுந்த கடுகாகிப் போவீர்கள்!
             இடருள் சிக்குண்டு எருக்கம்பூ ஆவீர்கள் 
             கருவுடைந்த முட்டைஎன கருகித் தவிப்பீர்கள் 
             வருத்தத்தில் தானுங்கள் வாழ்நாளைக் கழிப்பீர்கள் 

             சீறுகின்ற பெரியீர்! சிந்தையிலே அறப்பாட்டுக் 
             கூறுகின்ற பூமகளை கொஞ்சுதமிழ் அஞ்சுகத்தை 
             நிந்தித்து எழுதவில்லை! நினைவெல்லாம் ஒரு நிலையாய் 
             சிந்தித்தே எழுதியுள்ளேன்! சிந்திக்க வேண்டுகின்றேன்!.


*************************************************************************************
கொசுறு: இந்நூல் வைரமுத்துவின் 17 வயதிற்குள் எழுதப் பட்டு 19 வயதில் வெளியிடப்படதாம்.

இதைப்  படித்து விட்டீர்களா?

நுகர்வோரின் குறைகளை எங்கு முறையிடுவது?
நிலா அது வானத்து மேலே





வியாழன், 7 பிப்ரவரி, 2013

எப்படி இருந்த மதுரை!-வைரமுத்து


  சங்கத் தமிழ் வளர்த்த மதுரை மாநகர் மீது எனக்கு ஒரு பிரமிப்பும் ஈர்ப்பும் உண்டு ஒரே ஒருமுறைதான் மதுரைக்கு சென்றிருக்கிறேன். அதுவும் கோவில் மட்டும்தான் பார்த்திருக்கிறேன். கலை நகரமான மதுரை என்றாலே கொலை நகரம் என்ற தோற்றத்தை உருவாக்கியதில் நமது சினிமாக்களுக்கு பெரும் பங்கு உண்டு. இருந்தாலும் அது உண்மையோ என்ற எண்ணத்தை    சமீபத்தில் நடந்த கொலை நிகழ்வு ஏற்படுத்தி விட்டது.
இந்த சூழலில் வைரமுத்துவின் மதுரை என்ற கவிதை நினைவுக்கு வருகிறது. மனதை மயக்கும் கவிதை இது.உங்களுக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்.

                               மதுரை  

                  பாண்டியன் குதிரைக் குளம்படியும்-தூள்
                     பறக்கும் இளைஞர் சிலம்படியும்-மதி 
                  தோண்டிய புலவர் சொல்லடியும்-இனம் 
                     தோகைமார்தம் மெல்லடியும் 

                  மயங்கி ஒலித்த மாமதுரை -இது 
                     மாலையில் மல்லிகைப் பூமதுரை 

                  நீண்டு கிடக்கும் வீதிகளும்-வான் 
                     நிமிர்ந்து முட்டும் கோபுரமும் 
                  ஆண்ட  பரம்பரை சின்னங்களும்-தமிழ்
                     அழுந்தப் பதித்த சுவடுகளும் 

                  காணக்  கிடைக்கும் பழமதுரை-தன்
                      கட்டுக் கோப்பால் இள மதுரை !

                  மல்லிகை மௌவல் அரவிந்தம்- வாய்
                      மலரும் கழுநீர் சுரபுன்னை 
                  குல்லை வகுளம் குருக்கத்தி-இவை 
                      கொள்ளை அடித்த வையை நதி 

                  நாளும் ஓடிய நதி மதுரை-நீர் 
                     நாட்டியமாடிய பதிமதுரை

                  தென்னவன் நீதி பிழைத்ததனால்-அது 
                     தெரிந்து மரணம் அழைத்ததனால் 
                  கண்ணகி திருகி எறிந்ததனால்-அவள் 
                     கந்தக முலையில் எரிந்ததினால் 

                  நீதிக்  கஞ்சிய தொன்மதுரை -இன்று 
                    ஜாதிக் கஞ்சும் தென்மதுரை 

                  தமிழைக் குடித்த கடலோடு-நான் 
                     தழுவேன் என்றே சபதமிட்டு
                  அமிர்தம் பரப்பும் வையை நதி -நீர் 
                     ஆழி கலப்பது தவிர்ப்பதனால் 

                  மானம் எழுதிய மாமதுரை-இது 
                     மரபுகள் மாறா வேல் மதுரை 

                  மதுரை  தாமரைப் பூவென்றும் -அதன் 
                     மலர்ந்த இதழே தெருவென்றும் 
                  இதழில் ஒட்டிய தாதுக்கள்-அவை 
                     எம்குடி மக்கள் திரளென்றும்-பரி

                   பாடல் பாடிய பால் மதுரை-வட
                     மதுரா புரியினும் மேல்மதுரை

                   மீசை  வளர்த்த பாண்டியரும்-பின் 
                     களப்பிறர் பல்லவர் சோழர்களும்-மண் 
                   ஆசை வளர்த்த அந்நியரும்-அந்த 
                      அந்நியரில் சில கண்ணியரும்

                   ஆட்சிபுரிந்த தென்மதுரை-மீ 
                        னாட்சியினால்  இது பெண்மதுரை 

                    மண்ணைத் திருட வந்தவரை- தம்
                        வயிற்றுப் பசிக்கு வந்தவரை-செம்
                    பொன்னைத் திருட வந்தவரை-ஊர் 
                        பொசுக்கிப் போக வந்தவரை-தன்

                    சேயாய்  மாற்றிய தாய்மதுரை-அவர்
                         தாயாய் வணங்கிய தூயமதுரை 

                    அரபுநாட்டுச் சுண்ணாம்பில்-கரும்பு 
                        அரைத்துப் பிழிந்த சாறூற்றி
                    மரபுக் கவிதைபடைத்தல் போல் -ஒரு 
                        மண்டபம் திருமலை கட்டியதால் 

                    கண்கள்  மயங்கும் கலைமதுரை-இது 
                       கவிதைத் தமிழின் தலை மதுரை 

                    வையைக் கரையின் சோலைகளும்-அங்கு 
                       வரிக்குயில் பாடிய பாடல்களும் 
                    மெய்யைச் சொல்லிய புலவர்களும்-தம் 
                       மேனி கருத்த மறவர்களும் 

                    மிச்சமிருக்கும்  தொன்மதுரை-தமிழ் 
                        மெச்சி முடிக்கும் தென் மதுரை 

                    போட்டி வளர்க்கும் மன்றங்களும்-எழும் 
                        பூசைமணிகளின் ஓசைகளும்-இசை 
                    நீட்டி முழங்கும் பேச்சொலியும்-நெஞ்சை 
                        நிறுத்திப் போகும் வளையொலியும்

                    தொடர்ந்து கேட்கும் எழில் மதுரை-கண் 
                         தூங்காதிருக்கும் தொழில்மதுரை 

                    ஆலைகள் தொழில்கள் புதுக்காமல்-வெறும் 
                        அரசியல் திரைப்படம் பெருக்கியதில் 
                     வேலைகள்  இல்லாத் திருக்கூட்டம் -தினம் 
                          வெட்டிப் பேச்சு வளர்ப்பதனால் 

                     பட்டக்  கத்திகள் சூழ்மதுரை-இன்று 
                          பட்டப் பகலில் பாழ்மதுரை 

                     நெஞ்சு வறண்டு போனதனால் -வையை 
                         நேர்கோடாக ஆனதனால் 
                      பஞ்சம் பிழைக்க வந்தோர்-நதியைப் 
                          பட்டாப் போட்டுக் கொண்டதனால் 

                      முகத்தை இழந்த முதுமதுரை-பழைய 
                            மூச்சில் வாழும் பதிமதுரை

***********************************************************************************************************************

 

செவ்வாய், 25 டிசம்பர், 2012

ஒரு நாத்திகர் எப்படி எழுதினார் இதை?

  கிறித்துவ நண்பர்களுக்கு  மனம் கனிந்த கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் 
       இசைக்கும் பக்திக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருக்கிறது.பெரும்பாலான பாடல் ஆசிரியர்களும் இசை அமைப்பாளர்களும் இறை நம்பிக்கை உடையவர்களாகவே இருக்கிறார்கள். இசை மனதை  ஈர்க்கிறதே!. அதன் காரணம் என்ன?  சில இசை வடிவங்கள் உள்ளத்தை உருக வைக்கிறதே அது எப்படி ? நம்மையும் அறியாமல் கண்ணீர் வரவழைத்து விடுகிறதே ஏன்? 

      அப்படி ஒரு பாடல்தான் திரைப் பாடல்தான் மின்சாரக் கனவு என்ற படத்தில் இடம் பெற்று எல்லோர் மனதையும் கவர்ந்த  'அன்பென்ற மழையிலே' என்ற பாடல் ஏ.ஆர் ரகுமானின் அருமையான மெட்டமைப்பும் அனுராதா ஸ்ரீராமின் காந்தக்  குரலும் வைரமுத்துவின் வைர வரிகளும் அப்பப்பா!
  
       இதில்  எனக்குள் எழுந்த கேள்வி என்னவென்றால் ஒரு நாத்திகராக  (நாத்திகராக  இருந்தாலும் வைரமுத்துவுக்கு பிடித்த வார்த்தை பிரம்மன்) 
வைரமுத்துவால் பக்தி மனம் கவழும் ஒரு பாடலை எப்படி இயற்ற முடிந்தது.

    வைரமுத்து உண்மையில்ஒரு நாத்திகர்தானா என்ற ஐயம் எழும் அளவிற்கு எழுதி இருப்பார். இதோ அந்த வரிகளைப் படித்துப் பாருங்கள் பாடலையும் கேட்டுப் பாருங்கள். 

  இயற்றியவர் நாத்திகர்,பாடியவர் ஹிந்து, இசை அமைத்தவர் இஸ்லாமியர்.பாடலோ கிறித்துவம்.
 இசை மதங்களுக்கு அப்பாற்பட்டது. மனங்களுக்கு நெருக்கமானது


அன்பென்ற  மழையிலே அகிலங்கள் நனையவே
அதிரூபன் தோன்றினானே!
வைக்கோலின் மேலொரு வைரமாய் வைரமாய்
வந்தவன் மின்னினானே!
விண்மீன்கள் கண் பார்க்க சூரியன் தோன்றுமோ
புகழ்மைந்தன் தோன்றினானே!
கண்ணீரின் காயத்தை செந்நீரில் ஆற்றவே
சிசுபாலன் தோன்றினானே!

அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே
அதிரூபன் தோன்றினானே!
போர் கொண்ட பூமியில் பூக்காடு காணவே
புகழ்மைந்தன் தோன்றினானே!

கல் வாரி மலையிலே கல்லொன்று பூக்கவும்
கருணை மகன் தோன்றினானே!
நூற்றாண்டு இரவினை நொடியோடு போக்கிடும்
ஒளியாகத் தோன்றினானே!
இரும்பான நெஞ்சிலும் ஈரங்கள் கசியவே
இறைபாலன் தோன்றினானே!
முட்காடு எங்கிலும் பூக்காடு பூக்கவே
புவிராஜன் தோன்றினானே!

                               (அன்பென்ற மழையிலே)

கொசுறு:
   இப்படிப்பட்ட  அருமையான பாடலை எழுதிய வைரமுத்து நீர்ப்பறவை படப் பாடல்களுக்காக விமர்சனத்து உள்ளானார்.உண்மையில் கிறித்துவர்கள் மனம் புண்படும் நோக்கத்துடன் அவர் எழுதியிருக்க மாட்டார் என்றே கருதுகிறேன்.

**************************************************************************************************************
 இதைப் படிச்சாச்சா!