என்னை கவனிப்பவர்கள்

நட்சத்திரப் பதிவர். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நட்சத்திரப் பதிவர். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 27 ஆகஸ்ட், 2012

பதிவர் சந்திப்பால் ஏமாற்றம்


என்னோட ரசிகர்கள்தான் சார்! நம்புங்க! (புகைப்படம்  அனுப்பியவர் திரு மோகன்குமார்)
    பின்ன என்ன சார்! நீங்களே நியாயத்தை சொல்லுங்க. நான் 20 ந் தேதியிலிருந்து தமிழ் மண நட்சத்திரப் பதிவரா இருக்கேன். இதை யாரும் அவ்வளவா கண்டுக்கலன்னா அதுக்கு காரணம் பதிவர் திருவிழாதான்!
   நானும் முதல் அதிர்ச்சி செய்திய வெளிட்டப்ப  அதை ஹிட்டாக்கினீங்க. அப்புறம்  நான் கழுதை ன்னு (அதுதான் ஏற்கனேவே தெரியுமேன்னு சொன்னீங்க) ஒருபதிவைப் போட்டேன். சரின்னு சொல்லி நீங்களும் அந்தக் கழுதைய, சாரி! கவிதைய போனாப் போகட்டும் ரொம்ப நல்ல கழுதை ன்னு பாராட்டினீங்க.அதையும் நான் உண்மைன்னு நினச்சு வடிவேலு வாங்கிய கழுதைன்னு இன்னொரு பதிவைப் போட்டேன்.அதையும் நீங்க ஹிட் ஆக்கினீங்க 
  
  வாருங்கள்!வரலாற்றில் இடம் பெறலாம்!.   ன்னு பதிவப் போட்டு கூப்பிட்டேன். நீங்களும் மொத்தமா கிளம்ப ஆரம்பிச்சீங்க. அதுக்கப்புறம் சுஜாதா சொன்ன பச்சைப் பொய்கள் பதிவை எழுதினேன். சுஜாதா ரசிகர்கள் கொஞ்சம் டென்ஷன் ஆயிட்டாலும் நிறையப் பேர் அதை படிச்சாங்க. ரொம்ப சந்தோஷமா இருந்தது. ஆவலுடன் அந்தரங்கம்னு அடுத்த பதிவை வெளியிட அதையும் ஆவலாத்தான் பாத்தீங்க!
    அப்புறம் முன்னணிப் பதிவர்களின் அலக்சா  தர வரிசை பின்னிலை ஏன்?அப்படின்னு பதிவைப் பாத்துட்டு இவனுக்கு ஏன் இந்த தொழில் நுட்ப பதிவு ஆசைன்னு கேட்டாலும், சரி பரவாயில்ல;  ஏதோ சுமாரா இருக்குன்னு ஒத்துக்கிட்டீங்க.

 அதுக்குள்ள 26 தேதி வந்துடுச்சா.பதிவர் திருவிழாவுக்கு போகணும்னு காலையில சீக்கிரம் எழுந்து ஒரு பதிவ போடலாமேன்னு மேகம் எனக்கொரு கவிதை தரும்  கவிதையைப் போட்டுட்டு (வித்தியாசமா பண்ணறேன்னு நினச்சி கட்டம் கட்டி கவிதை போட்டேன்) கிளம்பிட்டேன். சாயந்திரம் வீட்டுக்கு வந்து பாத்தா ஏமாந்திட்டேன் சார்! ஏமாந்துட்டேன்.
 
   நீ எல்லாம் எதுக்குடா கவிதை எழுதறன்னு கேக்காம கேட்டுட்டாங்க சார்!

  சரி இவ்வளவு நாள் எப்படி சகிச்சிட்டாங்கன்னு ஆராய்ச்சி பண்ணப்பதான் தெரிஞ்சுது என்பதிவைப்  பாக்கறவங்கல்லாம்  பதிவர் திருவிழாவுக்கு வந்துட்டங்கன்னு. அத்தனை பேரும் அங்க வந்துட்டதால (என்னா கூட்டம்! பார்க்க படம்) என்  கவிதைய படிக்கறதுக்கு ஆளில்லாம போச்சு சார். இதுவும் பத்தாதுன்னு இணையத்துலநேரடி ஒளிபாப்பு வேற. எப்படி என் பதிவு பக்கம் வருவாங்க! அதுவும் இல்லாம அங்க கவியரங்கத்தில கவிதை வேற வாசிச்சிட்டனா  இனிமே நம்ம பக்கம் வருவாங்களான்னு சந்தேகமாயிடுச்சி  சார்!

   இப்ப சொல்லுங்க எனக்கு நேத்து (26.08.2012) ஏமாற்றம் ஏற்பட்டதுக்கு  காரணம் இந்தப் பதிவர் திருவிழாதான் சார்! 

  ஆனா ஒண்னு சார்! இதுக்கெல்லாம் பயந்து கவிதை எழுதறத நிறுத்திடுவேன்னு மட்டும் நினச்சிடாதீங்க. இன்னொரு முடிவு பண்ணிட்டேன். இந்த மாதிரி பிரம்மாண்ட திருவிழா வரும்போது பதிவு எதுவும் போடக் கூடாது. குறிப்பா கவிதையை போட்டு ஏமாறக் கூடாதுன்னு.

என்ன சார்! நான் சொல்றது சரிதானே!

********************************************************

  நன்றி!
  கடந்த ஒரு வாரமாக தமிழ்மணம் நட்சத்திரப் பதிவராக பதிவுகளை இடும் அருமையான வாய்ப்பு கிடைத்தது. எட்டு பதிவுகள் மட்டுமே இட முடிந்தது. கடந்த ஒரு வாரமாக இதுவரை இல்லாத அளவிற்கு என் வலைப்பக்கத்திற்கு மூன்று மடங்கு அதிக பார்வையாளர்கள் வந்ததற்கு முக்கிய காரணம் தமிழ்மணமே.இந்த அங்கீகாரத்தை  நல்கிய தமிழ்மணத்திற்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    மேலும் இவ்வாய்ப்பை பெருவதற்கு   முக்கியக்  காரணமாக இருந்தவர்    திரு கோவி.கண்ணன் அவர்கள். முன்பின் தெரியாத என்னை  அவர் தமிழ்மணத்திற்கு பரிந்துரை செய்ததால்தான் இந்த அரிய  வாய்ப்பு கிடைக்கப் பெற்றது. அவருக்கு என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

    எனது பதிவுகளை படித்து கருத்தளித்து  வாக்கிட்டு,ஆலோசனை வழங்கியவர்களுக்கும்  பிற பார்வையாளர்களுக்கும் என் உளமார்ந்த நன்றிகள்.
   இந்த ஒரு வாரம் என் பதிவுலக வாழ்க்கையில் மறக்க முடியாத வாரம். 

மீண்டும் சந்திப்போம்.

*****************************************