வலைப்பூ நண்பர்களுக்கு வணக்கம்
2024 ஐ வழி அனுப்ப இருக்கிறோம். இவ்வாண்டு வலைப்பக்கமே தலைகாட்டவில்லை ஒரு பதிவு கூட எழுதவில்லை..நேரமில்லை என்று சொல்வது ஒரு சாக்கு மனம்தான் காரணம்.முக நூலில் நண்பர்களின் பதிவுகளை படித்து வந்தாலும் அங்கு பதிவுகள் எழுத ஏனோ விருப்பமில்லை. உண்மையில் முகநூலுக்கு தக்கவாறு மாற முடியவில்லை என்பதே உண்மை. ஒவ்வோர் ஆண்டும் .குமுதத்தில் ஏதாவது எனது ஒருபக்கக் கதை பிரசுரமாகிவிடும். பிரியா கல்யாணராமன் ஆசிரியராக இருந்தவரை பெரும்பாலும் நான் அனுப்பும் கதைகள் பிரசுரமாகி விடும். 2023 இல் வாத்தியாரை அடித்தவன் என்ற கதைக்குப் பின் ஒரு கதையும் வெளியாகவில்லை. அப்படி அனுப்பிய கதையில் ஒன்று,
குட் டச்-பேட் டச்
டி.என்.முரளிதரன்
பள்ளிக்கு
கிளம்பிக் கொண்டிருந்த ராதாவை அழைத்து, “ராதா! இங்க வா என்கூட ஒக்காந்து இந்தப் நிகழ்ச்சியப்
பாரு” என்று அழைத்து பார்க்க வைத்தாள் சாரதா.
டாக்டர் தொடுகையின் அர்த்தங்களை
விளக்கி சொல்லிக் கொண்டிருந்தார்.
பாதுகாப்பான தொடுதல், பாதுகாப்பற்ற தொடுதல், தேவையற்ற தொடுதல் என்று தொடுதலின் வகைகளை அக்கு வேறு ஆணி வேறாக
அலசினார். பிடிக்காத வகையில் தொடுதல் இருந்தால் என்ன செய்ய வேண்டும் என்று விளக்கினார்.
நிகழ்ச்சி முடிந்ததும் ராதாவைப் பார்த்து “புரிஞ்சுதா. எங்க
காலத்தில எங்களுக்கு யாரும் இப்படிச் சொன்னதில்லை” என்றாள் சாரதா
“என்கிட்ட எதுக்கும்மா சொல்ற?”
“புது ஸ்கூலுக்கு போகப்போற . ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும். இது பொம்பள
பசங்களுக்கான அறிவுரை மட்டும் இல்ல. ஆம்பளங்களும் இத தெரிஞ்சுக்கணும் நீ
கேர்ள்ஸ் ஸ்கூல்ல வேல செய்யப் போற. அதுவும் பிளஸ் டூ பொண்ணுங்களுக்கு கிளாஸ் எடுக்கப்
போற . இப்ப ப்ரோக்ராம்ல சொன்ன மாதிரி சந்தேகப்
படும்படியா யாரையும் தொடக் கூடாது. பொண்ணுங்களுக்கு அசௌகர்யமோ பயமோ வர்ற மாதிரி நடந்துக்கக் கூடாது. குரு ஸ்தானத்தை தவறாப் பயன்படுத்தக் கூடாது. தெரிஞ்சுதா?” என்று
உணர்ச்சி வசப்பட்டுக் கூற
-
குட் டச்-பேட் டச்
டி.என்.முரளிதரன்
பள்ளியில்
ஆசிரியர் செய்த பாலியல் தொல்லை பற்றிய செய்தி டிவியில் ஃபிளாஷ் நியூசாக ஓடிக் கொண்டிருந்தது. “குட் டச்-பேட் டச்” பற்றி சொல்லிக்
கொண்டிருந்தார் ஒரு உளவியல் டாகடர்.
பள்ளிக்கு
கிளம்பிக் கொண்டிருந்த ராதாவை அழைத்து, “ராதா! இங்க வா என்கூட ஒக்காந்து இந்தப் நிகழ்ச்சியப்
பாரு” என்று அழைத்து பார்க்க வைத்தாள் சாரதா.
டாக்டர் தொடுகையின் அர்த்தங்களை
விளக்கி சொல்லிக் கொண்டிருந்தார். பாதுகாப்பான தொடுதல், பாதுகாப்பற்ற தொடுதல், தேவையற்ற தொடுதல் என்று தொடுதலின் வகைகளை அக்கு வேறு ஆணி வேறாக
அலசினார். பிடிக்காத வகையில் தொடுதல் இருந்தால் என்ன செய்ய வேண்டும் என்று விளக்கினார்.
நிகழ்ச்சி முடிந்ததும் ராதாவைப் பார்த்து “புரிஞ்சுதா. எங்க
காலத்தில எங்களுக்கு யாரும் இப்படிச் சொன்னதில்லை” என்றாள் சாரதா
“என்கிட்ட எதுக்கும்மா சொல்ற?”
“புது ஸ்கூலுக்கு போகப்போற . ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும். இது பொம்பள
பசங்களுக்கான அறிவுரை மட்டும் இல்ல. ஆம்பளங்களும் இத தெரிஞ்சுக்கணும் நீ
கேர்ள்ஸ் ஸ்கூல்ல வேல செய்யப் போற. அதுவும் பிளஸ் டூ பொண்ணுங்களுக்கு கிளாஸ் எடுக்கப்
போற . இப்ப ப்ரோக்ராம்ல சொன்ன மாதிரி சந்தேகப்
படும்படியா யாரையும் தொடக் கூடாது. பொண்ணுங்களுக்கு அசௌகர்யமோ பயமோ வர்ற மாதிரி நடந்துக்கக் கூடாது. குரு ஸ்தானத்தை தவறாப் பயன்படுத்தக் கூடாது. தெரிஞ்சுதா?” என்று
உணர்ச்சி வசப்பட்டுக் கூற
“அம்மா!
நான் உன் பிள்ளைம்மா. கெட்ட பேர் வர்ற மாதிரி நடந்துக்க மாட்டேன். இந்த மாதிரி
ஆம்பளைப் பசங்கள வளத்தா தப்பே நடக்காதும்மா” என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டான் ஆசிரியராகப் பணியாற்றும் ராதா என்கிற ராதாகிருஷ்ணன்
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 2025
பதிலளிநீக்குஅருமை...
பதிலளிநீக்குஇனிய புத்தாண்டு வாழ்த்துகள்...