என்னை கவனிப்பவர்கள்

விழிப்புணர்வு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விழிப்புணர்வு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 31 டிசம்பர், 2024

குட் டச் -பேட் டச்

 
வலைப்பூ நண்பர்களுக்கு வணக்கம்

2024 ஐ வழி அனுப்ப இருக்கிறோம். இவ்வாண்டு வலைப்பக்கமே தலைகாட்டவில்லை ஒரு பதிவு கூட எழுதவில்லை..நேரமில்லை என்று சொல்வது ஒரு  சாக்கு மனம்தான் காரணம்.முக நூலில் நண்பர்களின் பதிவுகளை படித்து வந்தாலும் அங்கு பதிவுகள் எழுத ஏனோ விருப்பமில்லை. உண்மையில் முகநூலுக்கு தக்கவாறு மாற முடியவில்லை என்பதே உண்மை.   ஒவ்வோர் ஆண்டும் .குமுதத்தில் ஏதாவது எனது ஒருபக்கக்  கதை பிரசுரமாகிவிடும். பிரியா கல்யாணராமன் ஆசிரியராக இருந்தவரை பெரும்பாலும் நான் அனுப்பும் கதைகள் பிரசுரமாகி விடும். 2023 இல் வாத்தியாரை அடித்தவன் என்ற கதைக்குப் பின் ஒரு கதையும் வெளியாகவில்லை.  அப்படி அனுப்பிய கதையில்  ஒன்று, 

                                                           குட் டச்-பேட் டச்

டி.என்.முரளிதரன்


           பள்ளியில் ஆசிரியர் செய்த பாலியல் தொல்லை பற்றிய செய்தி டிவியில் ஃபிளாஷ் நியூசாக  ஓடிக் கொண்டிருந்தது.  “குட் டச்-பேட் டச்” பற்றி சொல்லிக் கொண்டிருந்தார் ஒரு உளவியல் டாகடர். 

        பள்ளிக்கு கிளம்பிக் கொண்டிருந்த ராதாவை அழைத்து, “ராதா! இங்க வா என்கூட ஒக்காந்து இந்தப் நிகழ்ச்சியப் பாரு” என்று அழைத்து பார்க்க வைத்தாள் சாரதா.
            டாக்டர் தொடுகையின் அர்த்தங்களை விளக்கி சொல்லிக் கொண்டிருந்தார்.
பாதுகாப்பான தொடுதல்,
  பாதுகாப்பற்ற  தொடுதல், தேவையற்ற தொடுதல் என்று தொடுதலின் வகைகளை அக்கு வேறு ஆணி வேறாக அலசினார். பிடிக்காத வகையில் தொடுதல் இருந்தால்  என்ன செய்ய வேண்டும்  என்று விளக்கினார்.

நிகழ்ச்சி முடிந்ததும் ராதாவைப் பார்த்து “புரிஞ்சுதா. எங்க காலத்தில எங்களுக்கு யாரும் இப்படிச் சொன்னதில்லை” என்றாள் சாரதா 

    “என்கிட்ட  எதுக்கும்மா சொல்ற?”

    புது ஸ்கூலுக்கு போகப்போற . ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும். இது பொம்பள பசங்களுக்கான  அறிவுரை மட்டும் இல்ல. ஆம்பளங்களும் இத தெரிஞ்சுக்கணும் நீ கேர்ள்ஸ் ஸ்கூல்ல வேல செய்யப் போற. அதுவும் பிளஸ் டூ பொண்ணுங்களுக்கு கிளாஸ் எடுக்கப் போற . இப்ப ப்ரோக்ராம்ல சொன்ன மாதிரி  சந்தேகப் படும்படியா யாரையும் தொடக் கூடாது. பொண்ணுங்களுக்கு அசௌகர்யமோ பயமோ வர்ற மாதிரி நடந்துக்கக்  கூடாது. குரு ஸ்தானத்தை தவறாப் பயன்படுத்தக் கூடாது. தெரிஞ்சுதா?” என்று உணர்ச்சி வசப்பட்டுக் கூற

          “அம்மா! நான் உன் பிள்ளைம்மா. கெட்ட பேர் வர்ற மாதிரி நடந்துக்க மாட்டேன். இந்த மாதிரி ஆம்பளைப் பசங்கள வளத்தா தப்பே நடக்காதும்மா” என்று  சொல்லிவிட்டுப் புறப்பட்டான் ஆசிரியராகப் பணியாற்றும் ராதா என்கிற ராதாகிருஷ்ணன்     

--------------------------------------------------------------------------------------------------------

-



குட் டச்-பேட் டச்

டி.என்.முரளிதரன்

        பள்ளியில் ஆசிரியர் செய்த பாலியல் தொல்லை பற்றிய செய்தி டிவியில் ஃபிளாஷ் நியூசாக  ஓடிக் கொண்டிருந்தது.  “குட் டச்-பேட் டச்” பற்றி சொல்லிக் கொண்டிருந்தார் ஒரு உளவியல் டாகடர். 

        பள்ளிக்கு கிளம்பிக் கொண்டிருந்த ராதாவை அழைத்து, “ராதா! இங்க வா என்கூட ஒக்காந்து இந்தப் நிகழ்ச்சியப் பாரு” என்று அழைத்து பார்க்க வைத்தாள் சாரதா.
            டாக்டர் தொடுகையின் அர்த்தங்களை விளக்கி சொல்லிக் கொண்டிருந்தார். பாதுகாப்பான தொடுதல்,
  பாதுகாப்பற்ற  தொடுதல், தேவையற்ற தொடுதல் என்று தொடுதலின் வகைகளை அக்கு வேறு ஆணி வேறாக அலசினார். பிடிக்காத வகையில் தொடுதல் இருந்தால்  என்ன செய்ய வேண்டும்  என்று விளக்கினார்.

நிகழ்ச்சி முடிந்ததும் ராதாவைப் பார்த்து “புரிஞ்சுதா. எங்க காலத்தில எங்களுக்கு யாரும் இப்படிச் சொன்னதில்லை” என்றாள் சாரதா 

    “என்கிட்ட  எதுக்கும்மா சொல்ற?”

    புது ஸ்கூலுக்கு போகப்போற . ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும். இது பொம்பள பசங்களுக்கான  அறிவுரை மட்டும் இல்ல. ஆம்பளங்களும் இத தெரிஞ்சுக்கணும் நீ கேர்ள்ஸ் ஸ்கூல்ல வேல செய்யப் போற. அதுவும் பிளஸ் டூ பொண்ணுங்களுக்கு கிளாஸ் எடுக்கப் போற . இப்ப ப்ரோக்ராம்ல சொன்ன மாதிரி  சந்தேகப் படும்படியா யாரையும் தொடக் கூடாது. பொண்ணுங்களுக்கு அசௌகர்யமோ பயமோ வர்ற மாதிரி நடந்துக்கக்  கூடாது. குரு ஸ்தானத்தை தவறாப் பயன்படுத்தக் கூடாது. தெரிஞ்சுதா?” என்று உணர்ச்சி வசப்பட்டுக் கூற

          “அம்மா! நான் உன் பிள்ளைம்மா. கெட்ட பேர் வர்ற மாதிரி நடந்துக்க மாட்டேன். இந்த மாதிரி ஆம்பளைப் பசங்கள வளத்தா தப்பே நடக்காதும்மா” என்று  சொல்லிவிட்டுப் புறப்பட்டான் ஆசிரியராகப் பணியாற்றும் ராதா என்கிற ராதாகிருஷ்ணன்


புதன், 9 செப்டம்பர், 2015

உண்மையில் உங்களுக்கு சமூக அக்கறை இருக்கிறதா?

  
  நடுத்தர மட்டும் மேல்தட்டு வர்க்கத்தினர்,  பணப் புழக்கம் காரணமாகவும்  மீடியா விளம்பரங்களின் தாக்கம் காரணமாகவும் நுகர்வு நோய்க்கு ஆட்பட்டு விடுகிறார்கள். இதை நுகர்வு வெறி என்று கூட கூறலாம். தேவைக்கு அதிகமான நுகர்ச்சி,பொறுப்பற்ற நுகர்ச்சி,தொடர்ந்து கடை பிடிக்க முடியாத நுகர்ச்சி இவை நுகர்வு வெறியின் அம்சங்களாகும். இவை வாங்கும் வசதி குறைந்தவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது 

   பல்வேறு மாயாஜாலம் காட்டும்  விளம்பரங்கள் நுகர்வோரை கவர்ந்திழுப்பதால் தேவையை கணக்கில் கொள்ளாமல் பொருட்கள் வாங்கிக் குவிக்கப் படுகின்றன. நுகர்வோரின் உரிமைகள் பேணப்படவேண்டும் என்பதில் ஐயமில்லை. ஆனாலும்  நுகர்வோருக்கென்று பொறுப்புகள் உண்டு. அவை என்னவென்று சிந்திக்க வேண்டியது அவசியமாகிறது. 

   நாம் வாங்கும் பொருள்களை பயன்படுத்தப் போவது நாம்தான் என்றாலும் அதன் பயன் பயன்பாடு மற்றவர்களையும் பாதிக்கக் கூடிய வாய்ப்பு உள்ளது.நமது நுகர்வில் எப்போதும் ஒரு சமூக அக்கறை இருப்பது நல்லது. நீங்கள் சமூத்தின்மீதும் நாட்டின்மீதும் அக்கறை கொண்டவரா என்பதை  கீழே கொடுக்கப் பட்டவற்றோடு  ஒப்பிட்டுப் பார்த்து மதிப்பீடு செய்து கொள்ளுங்கள்
நீங்கள் கடைக்கு சென்று பொருள் வாங்கும்போது இவற்றை எல்லாம் செய்கிறீர்களா?
  1. பணத்திற்கேற்ற மதிப்புள்ள பொருளைப் பெறுவதற்காக பல கடைகளுக்கு சென்று விசாரித்து வாங்குவேன்.
  2.  கெட்டுப் போகக் கூடிய பொருள்களை வாங்கும் முன்பு அவை காலாவதியாகும் நாள் கழிந்து போகாமல் இருக்கிறதா என்று பார்த்து வாங்குவேன்.
  3.  பொருளை வாங்குவதற்கு முன்பே அதற்கு இடப்பட்டுள்ள உறையை பின்னர் அப்புறப்படுத்த ஏற்ற முறையை சிந்திப்பேன்.
  4. வாங்கிய பொருளில் ஏதாவது குறை இருந்தால் திரும்பவும் கடைக்கு சென்று பதிலுக்கு வேறு பொருளை அல்லது அதற்கு கொடுத்த விலையை திருப்பித் தருமாறு கேட்டு வாங்குவேன்.
  5.   பொருளின் பெயர் சீட்டில் அல்லது உறையின் மீது எழுதப் பட்டுள்ள பாதுகாப்புக் குறிப்புகளை வாங்குவதற்கு முன்பே படித்து தெரிந்து கொள்வேன்.
  6. இறக்குமதி செய்யப்பட்ட பொருள்களை வாங்குவதற்கு முன்பு அவற்றுக்கு மாற்றாக உள்ளூரில் தயாரிக்கப் பட்டவை இருக்கின்றனவா என்று பார்ப்பேன்.
  7.  சந்தையில் பார்த்த குறையுள்ள பொருள் அல்லது சேவை பற்றி மற்றவர்களுக்கு தெரிவிப்பேன்.
  8. எதையும் வாங்குவதற்கு முன்பாக பொருள்கள் அல்லது சேவையைப் பற்றி கேள்விகள் கேட்பேன்.
  9. சந்தையில் பாதுகாப்பு வெளிப்படைத் தன்மை நேர்மை ஆகியவற்றை மேம்படுத்தும் செயல்களில் நானும் சேர்ந்து செயல்படுவேன்,
  10.  நான் என்னை ஒரு கற்றறிந்த உணர்வுள்ள நுகர்வோராக கருதி செயல் படுவேன்.
  11. நுகர்வோர் உரிமை பற்றி அறியாதவர்களுக்கும், படிப்பறிவில்லா தவர்களுக்கும், ஏழை மக்களுக்கும்  உதவுவேன்.
  12. எல்லாவற்றிற்கும் மேலாக பொருள் வாங்குவதற்கு முன் அப்பொருள் அவசியம் வாங்கத்தான்  வேண்டுமா என்பதை நன்கு ஆலோசித்த பின்பே  வாங்கவேண்டும். தேவையற்ற பொருள்களை வாங்கிக் குவிப்பது குப்பைகளை சேர்ப்பதற்கு ஒப்பாகும்.
இவற்றில் எட்டுகேள்விகளுக்காவது உங்களுடைய நேர்மையான பதில் ஆம் என்றால் நீங்கள் சமூக ஆர்வலர் என்றும் விழிப்புணர்வு மிக்கவர் பெருமை கொள்ளலாம். 

   (நான் ஆம் சொன்னதை எண்ணிப் பார்த்தேன். எட்டு தேறவில்லை. முயற்சிக்க வேண்டும்) 

    திங்கள், 3 ஆகஸ்ட், 2015

    பள்ளிக் கல்வியில் சமச்சீர் தன்மை அவசியமா?


    தில்லை அகத்து குரோனிக்கல்ஸ்  வலைப் பதிவில் பதிவர் துளசி கீதா அவர்கள்  கல்வி சார்ந்த நீண்ட கட்டுரையை எழுதி இருக்கிறார். கல்வியின் மீதான முக்கியத்துவத்தையும்  அவர் சமுதாயத்தின் மீது கொண்டிருக்கும் அக்கறையையும் தெள்ளத் தெளிவாக அறிய முடிகிறது . கல்வியில் நிலவும் ஏற்றத்தாழ்வுகள் நீக்கப் பட வேண்டும் என்ற ஆதங்கம் அவரது கட்டுரை முழுதும் காணப்படுகிறது. அவருடை நல்லெண்ணத்திற்கும் சிந்தனைகளுக்கும்  பாராட்டுக்கள் . அவரை சில முறை சந்தித்திருக்கிறேன்.அவரது ஆர்வமும் சுறுசுறுப்பும்  பரந்த அறிவும் என்னை வியக்க வைக்கும்  ஒன்று 
      அறிஞர்களும் கல்வியாளர்களும் மட்டுமே எழுதி வந்த கல்வி பற்றிய கருத்துகளும் விவாதங்களும்  இன்று பொது வெளிக்கு வந்துள்ளது இவை சாத்தியமானதற்கு இணையமும் ஒரு காரணம்.    நம்மைப்போன்ற சாதாரணர்களும் நமது கருத்தையும் வெளிப்படுத்த உதவும் களமாக இணையம் விளங்குகிறது.  பல்வேறு கோணங்களில் விவாதங்கள் முன் வைக்கப் படுகின்றன. இவை நல்ல மாற்றங்கள் ஏற்படுவதற்கான அறிகுறியாகக் கொள்ளலாம் . 
          கல்வி தொடர்பான என் சிற்றறிவுக்கு எட்டிய சில கருத்துகளை  கூற விரும்புகிறேன்.இதில் கூறப்பட்டுள்ளவை எனது சொந்தக் கருத்தே . நான் குறிப்பிடுபவை அனைத்தும் பள்ளிக்கல்வியைப் பற்றியதே . 

        பொதுவாக பலரும் விரும்புவது ஒரே சீரான கல்வி வேண்டும் ஏழைக் கொரு கல்வி பணக்காரர்களுக் கொரு கல்வி  என்ற நிலை இருக்கக் கூடாது ,நாடு முழுவதும் கல்வியில் சமச்சீர் தன்மை வேண்டும் என்பது. 
    இவ்வாறு குறிப்பிடுவதில் இரண்டு விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும் . ஒன்று கற்பிக்கும் பாடத்திட்டத்தில் சமச் சீர் தன்மை, பள்ளி வசதிகளில் கிடைக்கும் சமச்சீர் தன்மை. பணக்காரப்  பிள்ளைகள் படிக்கிற பள்ளிகளில் உள்ள அத்தியாவசிய குறைந்த பட்ச வசதிகளாவது ஏழைப் பிள்ளைகள் படிக்கும் அரசு பள்ளிகளிலும் கிடைக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.. ஆனால் பாடத் திட்டத்தில் சமச்சீர் தன்மை கொண்டு வருவதில்  சில சிக்கல்கள் உள்ளன 
         அரசு பள்ளிகளின் பாடத்திட்டத்தை விட மெட்ரிக் சற்று கடினம், சி.பி.எஸ்.சி. அதைவிட கடினம். எளிய பாடத்திட்டம் சற்று கடின பாடத் திட்டம், மிக கடினமான பாடத் திட்டம் என்ற பிரிவுகள் ஏற்படுத்தப் பட்டதன்  நோக்கம்  மாணவர்களின் கற்றல் திறனுக்கு  ஈடு கொடுக்கும் வகையில் திறமையை மேலும் வளர்ப்பதாகத்தான் இருக்கும் என்று கருதுகிறேன். ஆனால் இதில் உள்ள குறைபாடுகளை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு தனியார் கல்வி நிறுவனங்கள் கல்வி வியாபாரத்தை பெருக்கிக் கொண்டன. 
          இந்தியாவில் ஏராளமான பாடத் திட்ட முறைகள் பின்பற்றப் படுகின்றன . தமிழ் நாட்டிலும் மாநில அரசு பள்ளி ,மெட்ரிக் ஆங்கிலோ இந்திய,மத்திய அரசின் சி,பி எஸ்.சி பள்ளிகள் ,இன்டர்நேஷனல் பள்ளிகள் என பல்வேறு கல்வித் திட்டங்கள் நடை முறையில் உள்ளன. இதில் மாநில அரசின் கல்விப் பிரிவுகளாக  அரசு,மெட்ரிக் ஆங்கிலோ இந்திய கல்வித் திட்ட முறைகள்  பத்தாம் வகுப்பு வரை நடைமுறையில் இருந்தன தற்போது சமச்சீர் கல்வி முறை மூலம், தமிழ்நாடு  மாநில அரசு கல்வி முறைகள் அனைத்தும் ஒன்றாகி விட்டன. அவை அனைத்தும் +2 வரை ஒரே பாடத் திட்டத்தையே பின்பற்ற  வேண்டும்.
        முழுமையான   சமச்சீர் கல்வி என்பது விவாதத்திற்குரியது .தனியார் பள்ளிகள் அனைத்தும் நாட்டுடைமை ஆக்கப் பட்டால் ஒழிய கல்வியில் சமத்தன்மை பின்பற்றுவது சாத்தியமல்ல. என்னைப் பொறுத்தவரை ஏழைகளுக்கு எளிமையான கல்வி பணம் படைத்தவர்களுக்கு கடினமான கல்வி முறை பின்பற்ற வேண்டும் என்று கருதுகிறேன். இதன் பொருள் அரசு பள்ளிகளுக்கு சற்று எளிமையான கல்வி திட்டம். காரணம் வாழ்க்கையே போராட்டமான சூழலில் இருந்து வருபவர்க்கு  ஆதரவு அளிப்பது அரசு பள்ளிக் கூடங்களே .கல்வி திட்டம் கடுமையாக இருந்துவிட்டால் இடைநிற்றல் அதிகமாகி விடும். அதனால்தான் 8 ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி வழங்கப் படுகிறது. அனைவருக்கும் தேர்ச்சி வழங்கக் கூடாது அதனால்தான் தரம் குறைந்து விட்டது என்று கூறுவோர் உண்டு /இதில்  ஆசிரியர்களும் அடக்கம். நன்றாக கவனித்துப் பார்த்தால் ஒரு விஷயத்தை உணர முடியும் முன்பெல்லாம் மாணவர்களை பெயில் ஆக்க முடியும். அப்படி தேர்ச்சி பெறாதவர்கள் அடுத்த ஆண்டில் தேர்ச்சிக்குரிய  அடைவைப் பெற்றிருப்பார்களா என்றால் இல்லை என்பதுதான் உண்மை.அடுத்த ஆண்டு வேறு வழியில்லை என்று பாஸ் செய்து அனுப்பி விடுவார்களே தவிர  கற்றல் நிலையில் முன்னேற்றம் இருக்காது . தேர்ச்சி பெறாத மாணவர்கள் பலர் பள்ளியை  விட்டு நின்று விடுவார்கள். இதைத் தவிர்க்கவே முழுத் தேர்ச்சி அனுமதிக்கப் படுகிறது. அதனால் தேக்கம் செய்வதில்  எந்த பயனும் இல்லை.. எளிமையான பாடத்திட்ட த்திற்கே இந்த நிலை என்றால் கல்வி கடினமாக இருந்தால் எப்படி இருக்கும்?. பள்ளிகளுக்கு மாணவர்களை வரவழைப்பதற்கே  பெரும்பாடான நிலையில் தரமான கல்வி என்ற பெயரில் கடுமையான பாடத்திட்டத்தை அரசு பள்ளிகளுக்கும் பொருத்தினால் ஒரு தேக்க நிலை உருவாக வாய்ப்பு உண்டு. (கடினமான பாடத் திட்டத்தை தரமான கல்வி என்று பலரும் நம்புகிறார்கள் உண்மையில் கல்வியின் தரம் பாடத்திட்டம் மட்டும்  சார்ந்தது அல்ல. அதற்கு ஒரு தனிப் பதிவு எழுத வேண்டும்) 

        சீரான கல்வி திட்டம் செயல் படுத்தப் படும்போது சில சிக்கல்கள்  எழுவது இயல்பானதே. தமிழ் நாட்டில் இப்போது சமச்சீர் கல்வி முறை உள்ளதை ஏற்கனவே குறிப்பிட்டுள்ளேன். ஆனால் +2 தொடங்கப் பட்ட காலத்தில் இருந்தே அனைத்து முறை பள்ளிகளுக்கும் ஒரே +2 சிலபஸ்தான்  . ஒரே பொதுத் தேர்வுதான் சி பி. எஸ் சி பள்ளிகளைத் தவிர. இதர பள்ளிகளான மெட்ரிக் ,ஆங்கிலோ இந்தியன்,பள்ளிகளிலும் +2 வுக்கு மட்டும் ஒரே பாடத் திட்டம்தான் பின்பற்றப் பட்டு வருகின்றன.   முன்பு இவை 10 வகுப்பு வரை வெவ்வேறு பாடத்திட்டங்களை பின்பற்றி வந்தன. தற்போது சில ஆண்டுகளாகத்தான் 10 வகுப்புவரையிலான பாடத் திட்டமும் மாநில கல்வித்திட்ட பள்ளிகளுக்கும் ஒன்றாக உள்ளது. அது மிக எளிமையானது. அது மெட்ரிக் பள்ளிகளுக்கு சாதகமாகப் போய் விட்டது . எளிமையான பாடத் திட்டத்தில் மெட்ரிக் பள்ளிகள் மதிப்பெண்களை வாரிக் குவித்து விடுகின்றன. இதனால் பாதிக்கப் படுவது அரசு பள்ளி மாணவர்கள்தான். என்றாலும் தனியார் பள்ளிகள் 10 வகுப்பு வரையிலான சமச்சீர் கல்வியை விரும்புவதில்லை. 

           என்னைப் பொருத்தவரை தனியார் பள்ளிகளுக்கு கடுமையான பாடத் திட்டம் வைக்கவேண்டும். அரசு பள்ளிகளில் ஏழை மற்றும் தங்கியுள்ள நிலையில் உள்ள  முதல் தலைமுறை மாணவர்கள் படிக்க வரும்போது எளிமையாக கல்வி  அவர்களை அச்சுறுத்தாத வகையில் அமைய வேண்டும். படித்த தலைமுறையினரின் பிள்ளைகளோடு ஏழைப் பிள்ளைகள் போட்டியிடுவது எளிதல்ல .  

      பொறியியல் மருத்துவம் முதலியவற்றில் சேர்க்க  +2 வில் பெறும் மதிப்பெண்களே  அடிப்படை.  +2 பாடத் திட்டம் அரசுபள்ளிக்கு  தனியாகவும் தனியார பள்ளிகளுக்கு தனியாகவும் வைக்க வேண்டும்.  என்பது என் கருத்து. கடினமான சிலபஸில் குறைவான மதிப்பெண்களே பெற முடியும். அதனால் அதை பெற்றோர் விரும்ப மாட்டார்கள் அப்படி செய்தால் பல மெட்ரிக் பள்ளிகள் நிலை சரியத் தொடங்கும். கல்வி வியாபாரத்தை ஓரளவாவது தடுக்கலாம்.
         சமச்சீர் கல்வி நடைமுறைக்கு வரும்  வரை தனியார் பள்ளிகள் 10  வகுப்பு வரை கடினமான சிலபசை பயன்படுத்திவிட்டு +2 வுக்கு எளிதான ஸ்டேட் போர்ட் தேர்வில் மதிப்பெண்கள் பெற வைத்து விடுகின்றன . இப்போது எளிமையாக்கப் பட்ட சமச்சீர் கல்வி அவர்களுக்கு கொஞ்சம் சிக்கலை ஏற்படுத்தி யுள்ளது.அதற்கு எதிர்ப்பும் தெரிவித்தனர்.  10வகுப்பு வரையிலான சமச்சீர் கல்வியை தரமற்றது என்று எதிர்த்த தனியார் பள்ளிகள்,  தொடங்கிய காலத்தில் இருந்தே பொதுவாக இருந்து வரும் +2 பாடத் திட்டத்தை தங்களுக்கென்று தனியாகக் கோரவில்லை.காரணம் இந்த +2 வில்தான் அதிக மதிப்பெண் பெற வைக்க முடியும்.  சி.பி எஸ்.சிக்கு மாறி விடுவோம் என்று பூச்சாண்டி காட்டினவே தவிர  மாறவில்லை.ஏனெனில் சி.பி.எஸ்.சி +2 வில் மதிப்பெண்கள் எடுக்க வைப்பது  கடினம். 

         சிலர் மதிப்பெண் பெரும் நோக்கத்துக்காகவே 10 வரை சி.பி.எஸ்.சி யில் படித்தவர் +2 வின் போது ஸ்டேட் போர்டுக்கு  மாறுவது வழக்கமாக இருந்து வருகிறது. புகழ் பெற்ற கல்லூரிகளில் மருத்துவம் பொறியியல் சேர்க்கைக்கு சி.பி.எஸ்.சி யில் பெறும்  மதிப்பெண்கள் போதுமானதாக இருப்பதில்லை. அதீத திறமை வாய்ந்தவர்களே இதில் சாதிக்க முடியும். அதனால் ஸ்டேட் போர்டு +2 வுக்கு மாறி விடுகிறார்கள் இப்படி கல்வி முறையை விருப்பம் போல் மாற்றிக் கொள்ள அனுமதிப்பது அரசு பள்ளி மாணவர்களுக்கு பாதகமான நிலையை ஏற்படுத்துகிறது.அவர்கள் பின் தள்ளப் படுகிறார்கள்.

      இன்று அரசு பள்ளிகள் மாணவரின்றி காலியாகக் கிடக்கின்றன. எவ்வளவுதான் இலவச திட்டங்கள்  நடைமுறைப் படுத்தபட்டாலும் ஆங்கில மோகம் காரணமாகவும் சற்று வசதிவாய்ப்புகள் பெருகியதன் காரணமாகவும் தனியார் பள்ளிகளை நாடுகிறார்கள் பெற்றோர்.இதன் காரணமாகத்   அரசு பள்ளிகளில்  ஆங்கில வழிக் கல்வியும் நடை முறைப் படுத்தப் பட்டுள்ளது. ஆனால் மாணவர் எண்ணிக்கையை கணிசமான அளவிற்கு உயரத்த இது உதவவில்லை. அரசு பள்ளியில் பயின்றவர்க்கு அரசு வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை கொடுக்க வேண்டும். அரசுப் பணியில் உள்ளவர்கள் மட்டுமல்லாது, மக்கள் பிரதிநிதிகள்  உயர் அதிகாரிகள் உட்பட  தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளிகளில் படிக்க வைக்க வேண்டும். நடுத்தர மக்களை அரசு பள்ளிகள் பக்கம் ஈர்க்க இது ஒரு வழியாக அமையும்.

          ஆனால் அரசு பள்ளிகளில் தரம் இல்லை என்று பிரச்சாரம் செய்யப் படுகிறது.அப்படியானால் அரசு பள்ளிகளில் குறைகளே இல்லையா என்றால் ஏராளமாக உள்ளது, ஒரு சில ஆசிரியர்களின் அர்ப்பணிப்புக் குறைவு,உள்கட்டமைப்பு வசதிகள்(தற்போது பல தனியார் பள்ளிகளை விட மேலான நிலையிலேயே உள்ளது)நிர்வாக சிக்கல்கள் கிராமப் புறங்களில் ஆசிரியர்கள் பணியாற்ற விரும்பாமை, வேறு சில நிர்பந்தங்கள்   போன்றவை  அரசு பள்ளிகளுக்கு தடையாக உள்ளன .

        தமிழகத்தில் பல பள்ளிகள் மூடப் படுவதாக வந்த செய்திகளை பத்திரிகைகளில் படித்திருக்கலாம் ஆசிரியர் இல்லாத காரணத்தால் பள்ளிகள் மூடப் படுவதில்லை. மாணவர்கள் இல்லாததால்தான் பள்ளிகள் மூடப் படும் நிலை ஏற்படுகிறது. தமிழகத்தை பொறுத்தவரை  ஒரு கிலோமீட்டர் சுற்றளவில் ஒரு பள்ளியாவது இருக்கிறது. 

         இந்த நிலையில் கல்வி உரிமை சட்டத்தின் கீழ்  தனியார் பள்ளிகளில் அறிமுக வகுப்பில் ( L.K.G , VI) 25% இட ஒதுக்கீடு வாய்ப்பு மறுக்கப் பட்ட பிரிவினர். நலிவடைந்த பிரிவினருக்காக  வழங்க வழி வகை செய்யப் பட்டிருக்கிறது. இதில் மைனாரிட்டி பள்ளிகளுக்கு மட்டும் விதி விலக்கு உண்டு. இதன்படி சேர்க்கப்பட்ட மாணவர்களுக்குரிய கட்டணத் தொகையை அரசாங்கமே வழங்க முன் வந்துள்ளது.  இதனால் அரசு பள்ளிகளில் சேர்க்கை மேலும் குறைவதற்கானநிலை ஏற்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் ஏரளமான தனியார் பள்ளிகளும் புற்றீசல் போல் முளைத்து வருகின்றன.  

        கடந்த தலைமுறையில் அரசு பள்ளியில் பயின்று  தற்போது நல்ல நிலையில் உள்ள பெற்றோரின்  மனப்பான்மை காரணமாகவே கல்வி வியாபாரமாகி விட்டது. இந்த அணுகுமுறையே கல்வியை சந்தைப் பொருளாக்கி விட்டது. இன்னும் சிந்திக்கப் படவேண்டியதும் விவாதிக்கப் படவேண்டியதும் பல உள்ளன. நீளம் கருதி   இத்துடன் முடித்துக் கொண்டு பின்னர் தொடர்கிறேன்.
       கீதா அவர்களின் பதிவில் ஜோதிஜி அவர்கள் கூறியுள்ள கருத்து கவனிக்கத் தக்கது..தனியார் பள்ளிகளின் கற்பிக்கும் முறைகள், அவை பின்பற்றும் நடைமுறைகள்,  பற்றி எழுத பல பக்கங்கள் தேவை.
    அரசு பள்ளிகளில் செயல் படுத்தப்படும் செயல் வழிக் கற்றல்.படைப்பாற்றல் கல்வி முறை, முழுமை மறு தொடர் மதிபீட்டு முறைகள் பற்றியும் ,நல திட்டங்கள் இவைபற்றி சற்று இன்னொரு சந்தர்ப்பத்தில் எழுதுவேன்.

    ******************************************************************

    செவ்வாய், 23 டிசம்பர், 2014

    எய்ட்ஸ் பற்றிய வைரமுத்துவின் கவிதை


    சமீபத்தில்  வலையுலகில் வெண்பா புயல் வீசியது. ஊமைக் கனவுகள் வலைப் பதிவர் கவிஞர் விஜூ அவர்கள் அற்புதமாக வெண்பா படைக்க கற்றுக்  கொடுக்க  கவிஞர் முத்து நிலவன் அவர்கள் ஊக்கம் கொடுக்க பல புதுக் கவிஞர்கள் வெண்பா பாட முயற்சித்தனர்.  ஏற்கனவே, பிரான்சு வாழ் கவிஞர் பாரதிதாசன், புலவர் ராமானுசம் ஐயா அவர்கள், அருணா செல்வம், கவிஞர் சிவகுமாரன் போன்றோர் அழகான வெண்பாக்களை அள்ளிக் கொடுத்துக் கொண்டிருந்தனர். 
    இன்றுவரை பெரும்பாலான கவிஞர்களுக்கு வெண்பா பிடித்தமான ஒன்றாகவே இருக்கிறது. எனக்கும் வெண்பாமீது விருப்பம் உண்டு. வெண்பாக்களை ரசித்துப் படிப்பேன். பலவித கட்டுப்பாடுகள் இருந்தாலும் நல்ல வெண்பாவின் ஈற்றடி ஒரு பஞ்ச் டயலாக் போல அமைந்திருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தும்.
    சமீபத்தில் கவிஞர் வைரமுத்துவின் 'பெய் எனப்  பெய்யும் மழை' என்ற கவிதைத் தொகுப்பை படித்தேன். அதில்எய்ட்ஸ் விழிப்புணர்வு பற்றி வெண்பா வடிவத்தில்  அற்புதமாக எழுதி இருந்தார்.
    அவற்றில் ஒரு சில 

                         போதை மருந்தில் பொருந்தாத இன்பத்தில்
                         பாதை வழுவிய பாலுறவில் காதைக்
                         கழுவாத ஊசி, கழிவுரத் தத்தில்
                         நுழையும் உயிர்க் கொல்லி நோய்

                         இடைகாட்டி மெல்ல இளைய தனத்தின்
                         எடைகாட்டி  இன்பம் இழைப்பாள்-மடையா
                         கொலைமகள் ஆகியே கொல்லுவாள் உன்னை
                         விலைமகள் ஆசை விடு

                         கண்ணுக்குத் தோன்றாத காமக் கிருமிகளோ
                         புண்ணுக்குள் சென்று புலன் கொல்லும் -கண்ணா
                         முறையோடு சேராத மோகம் பிறந்தால்
                          உறையோடு போர் செய்தே உய்

                          கரைமீறி சேர்ந்தாடும் காமக் கலப்பில்
                          உறைமீறி நோய் சேர்வதுண்டே -உறைநம்பிக்
                          கம்மாக் கரையோ கடற்கரையோ  தேடாமல்
                          சும்மா இருத்தல் சுகம்

                          தோகைமார் தந்த சுகநோயோ உன்கட்டை
                          வேகையிலும்   விட்டு விலகாதே-ஆகையினால்
                          விற்பனைப் பெண்டிரொடு வேண்டாம் விளையாட்டு
                          கற்பனையை வீட்டுக்குள் காட்டு

                          கலவிக்குப் போய்வந்த காமத்து நோயை
                          தலைவிக்கும் ஈவான் தலைவன் -கலங்காதே
                          காவலனாய் வாய்த்தவனே கண்ணகிக்கு நோய் தந்தால்
                          கோவலனைக் கூசாமல் கொல்

                          ஓரின சேர்க்கை உறவாலே மானுடத்தில்
                          பேரின சேர்க்கையே பிய்ந்துவிடும்-பாரில்
                          இயற்கை உறவென்னும் இன்பம் இருக்க
                          செயற்கை உறவென்ன சீ!

                          தேன் குடிக்கப் போன திருவிடத்தில்  உன்னுடைய
                          ஊன் குடிக்க ஓட்டும் உயிர்க் கொல்லி-ஆண்மகனே
                          உல்லாச நோய் சிறிய ஒட்டையிலும் உட்புகுமே
                          சல்லாப வாசல்களை சாத்து

                           பெண்ணின் சதைமட்டும் பேணுகின்ற ஏடுகளை
                           கண்ணைக் கெடுக்கும் கலைகளை-இன்றே
                           எரியூட்ட வேண்டும் இளஞர்கள் வாழ
                           அறிவூட்ட வேண்டும் அறி

                           துணையோடு மட்டும் தொடர்கின்ற வாழ்வுக்(கு)
                           இணையாக வேறுமருந் தில்லை  மனைவிஎன்னும்
                           மானிடத்து மட்டுமே மையல் வளர்த்திந்த
                           மானுடத்தை வாழ்விப்போம் வா!


     படித்து விட்டீர்களா? ஒரு கேள்வி?
    இவற்றில் ஒரு வெண்பாவில் உள்ள ஒரு வரி சற்று உறுத்தலாகவும்   உள்ளதாகஎனக்குப் படுகிறது. அதை சற்று மாற்றி அமைத்திருக்கலாம். உங்களுக்கும் அப்படித் தோன்றியதா? தெரிவிக்கலாம்

    *********************************************************

    அந்த வார்த்தை எது என அறிய கீழுள்ள இணைப்பை க்ளிக் செய்க

    திங்கள், 1 ஜூலை, 2013

    எச்சரிக்கை! கவனியுங்கள் சிறு நீரகங்களை!

     
      சென்னை நுங்கம்பாக்கம்  ரயில்வே ஸ்டேஷன் அருகில் துண்டு சீட்டுகள் விநியோகித்துக் கொண்டிருந்தார்கள்.எனக்கும் ஒன்று கொடுத்தார்கள். ஏதோ ரியல் எஸ்டேட்விளம்பரமாக இருக்கும்அல்லது  கணினி கல்வி நிலையங்களின் விளம்பரமாக இருக்கும் என்று நினைத்தேன். சாதாரணமாக இது போன்ற விளம்பர நோட்டீசுகளை வாங்கிய பின் அவர்கள் எதிரிலேயே தூக்கி எறியாமல் கொஞ்சம் தள்ளி வந்து எறிவது வழக்கம். பெரும்பாலும் அது என்னவென்று பார்ப்பதில்லை. ஆனால் தற்செயலாக இதனை பார்த்தபோது சிறுநீரகம் பற்றிய தகவல்கள் அந்த துண்டு சீட்டுகளில் இடம் பெற்றிருந்தன. சிறுநீரகக் கோளாறுகளினால் பலர் அவதிப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள். சரியாக கவனிக்காமல் போனால் இக் கோளாறுகள் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கக் கூடியாதாக மாறிவிடும். அலட்சியம் காரணமாகவும் நோய்க்கான அறிகுறிகளை அறிந்தும் அலட்சியமாக இருப்பவர்  உண்டு .

     இதன் பொருட்டு  விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்திற்காக  சென்னை நுங்கம் பாக்கத்தில் உள்ள உள்ள தமிழ் நாடு கிட்னி ரிசர்ச் பவுண்டேஷன் என்னும் அமைப்பு  சிறுநீரகம் பற்றி சாதாரண மக்களும் அறிந்து கொள்ளும் வகையில்  அச்சடித்த நோட்டீஸ்கள் தான் அவை.
       சிறுநீரகம்  பற்றிய அடிப்படையான  விஷயங்கள் எளிமையாக அந்த துண்டுச் சீட்டில் கூறப் பட்டிருந்தது. அதன் சாராம்சம் இதோ!
    • நம் உடலில் 2 சிறுநீரகங்கள் உள்ளன .
    • ஒவ்வொன்றும் சுமார் 10 செ.மி நீளம் 5 செ.மீ அகலம் 150 கிராம் எடையும் உடையது 
    • உடலின் பின் பகுதியில் உள்ளது 
    • அவரை விதை வடிவம் கொண்டது
    • இடது சிறுநீரகம் வலது சிறுநீரகத்தைவிட சற்று பெரியது.
      சிறுநீரகத்தில்  முக்கிய பணிகள்
    • ரத்தத்தை பெறுவதும் வெளி அனுப்புவதும் 
    • உடலில் உற்பத்தி ஆகும் நச்சுப் பொருட்களை பிரித்தல் 
    • உடலில் நீரின் அளவை சமப் படுத்துதல் 
    • உடலில் உள்ள உப்பின் அளவை சமப் படுத்துதல் 
    • அமிலத் தன்மையை சமநிலைப் படுத்துதல் 
    • இரத்தக் கொதிப்பை சீர் செய்தல்
    • சிறு  நீரகத்தில் சுரக்கும் ஒருவித ஹார்மோன்கள் இரத்த உற்பத்திக்கு காரணமாகிறது 
    • வைட்டமின் D உருவாக்க உதவுகிறது.
    சிறுநீரகக்  கோளாறின் அறிகுறிகளாக என்னென்ன இருக்கும்?
    • முகத்தில் வீக்கம் 
    • சிறுநீர் குறைவாக வெளியேறுதல் 
    • கால்களில் வீக்கம்
    • சிறுநீரில் ரத்தம், சிறுநீர் கழிப்பதில் சிரமம்,பசியின்மை 
    • வாந்தி ,உடல் அழற்சி 
    • தூக்கம் இன்மை 
    •  அரிப்பு 
    • சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் 
    இவற்றில்  ஒன்றோ சிலவோ அடிக்கடி ஏற்பட்டால் மருத்துவரை நாட வேண்டியது அவசியம்.  இந்த அறிகுறிகள்  இருந்தால் சிறுநீரைக் கோளாறுகள் இருந்துதால் ஆகவேண்டும் என்ற கட்டாயம் இல்லை,
    இல்லை என்பதை உறுதிப் படுத்திக் கொள்வது நல்லது அல்லவா?

    யாரை அதிகம் பாதிக்கும்?
    • சர்க்கரை நோய் இருந்தால் 
    • அதிக ரத்தக் கொதிப்பு 
    • புகை பிடித்தல் 
    • அதிக உடல் பருமன் 
    • குடும்பத்தில் யாருக்காவது சிறுநீரக நோய் இருந்தால் 
    சிறுநீரகக்   கோளாறுகளில் இருந்து தற்காத்துக் கொள்வது எப்படி?
    • சீரான உணவு பழக்கம் 
    • உணவில் உப்பை குறைத்தல் 
    • புகை பிடிப்பது மது அருந்துவதை நிறுத்துதல்
    • தினமும் நடப்பதில் அல்லது எளிய உடற் பயிற்சியோ செய்தல்
    • நிறைய தண்ணீர் குடித்தல் 
    • சுய மருத்துவத்தை தவிர்த்தல் குறிப்பாக வலிநிவாரணிகளை தவிர்த்தல் 
    தமிழ்  ஆங்கிலம் இரண்டு மொழிகளிலும் துண்டு சீட்டுகள் இருந்தன.

    இந்த அமைப்பு சிறுநீரகக் கோளாறு இருந்தும் சரியாக மருத்துவம்  செய்ய இயலாமல் இருக்கும் ஏழை மக்களுக்கு  சிகிச்சைக்கு உதவுகிறார்கள்.
       இதுபற்றி முழுவிவரம் அறிய அவர்கள் வலைதளத்திற்கு செல்லவும் வலைத்தள முகவரி 
      ஏழைமாணவர்கள் அதிகம் படிக்கும் மாநகராட்சி பள்ளிகளுக்கு இந்த துண்டு சீட்டுகளை வழங்கி ஆசிரியர்கள் மூலமாக மாணவர்களுக்கும் சொல்ல வைத்திருக்கிறார்கள். விழிப்புணர்வு செய்தியை பாமர மக்களும் அறிந்து கொள்ளும் வகையில் சிறுநீரகம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த குறிப்புகளை  அச்சடித்து விநியோகித்த தமிழ்நாடு கிட்னி ரிசர்ச் பவுண்டேஷனுக்கு நன்றி சொல்லலாம்.

    ********************************************************************************************************

    வெள்ளி, 22 மார்ச், 2013

    உண்மையில் நீங்கள் சமூக அக்கறை உள்ளவரா?


      சினிமாவைப் போலவே ஒரு பதிவு ஹிட்டாகுமா ஹிட்டாகாதா என்று கணிக்க முடிவதில்லை. ஒரு சினிமா ஹிட்டாகா  விட்டால் நஷ்டம் ஏற்படும். பதிவு ஹிட்டாகாவிட்டால் நஷ்டம் ஏற்படாது  என்றாலும் கொஞ்சம் மனக் கஷ்டம் ஏற்படுவதுண்டு.  நாம் நம்பிக்கையுடன் எழுதும் சில பதிவுகள் அதிகம் பேரின் கவனத்தைக் கவர்வதில்லை. அல்லது கவரும் விதத்தில் அப்பதிவு எழுதப் படவில்லை. அப்படிப்பட்ட பதிவில் ஒன்றுதான் கடந்தவாரம் நுகர்வோர் உரிமை நாளில்(15.03.213) நான் எழுதிய "நுகர்வு வெறி" என்ற பதிவு. வழக்கத்தை விட மிகக் குறைவானவர்களே பார்த்தபோதும் எப்படியோ தட்டுத் தடுமாறி எட்டு ஓட்டுக்கள் வாங்கி விட்டது.(தற்போதெல்லாம் பார்வையாளர் எண்ணிக்கை அதிகரித்தாலும் தமிழ்மண வாக்குகள் மிகக் குறைவாகவே கிடைக்கிறது.) அப்பதிவின்  தொடர்ச்சியை எழுதுவதை  கைவிட்டுவிடலாம் என்று நினைத்தேன். ஆனாலும் பதிவுலகில் இதெல்லாம் சகஜம் என்பதை உணர்ந்து  தொடர முடிவு செய்து விட்டேன். 
    முந்தைய பதிவு :நுகர்வு வெறி

       நாம் வாங்கும் பொருள்களை பயன்படுத்தப் போவது நாம்தான் என்றாலும் அதன் பயன் பயன்பாடு மற்றவர்களையும் பாதிக்கக் கூடிய வாய்ப்பு உள்ளது.நமது நுகர்வில் எப்போதும் ஒரு சமூக அக்கறை இருப்பது நல்லது. நீங்கள் சமூத்தின்மீதும் நாட்டின்மீதும் அக்கறை கொண்டவரா என்பதை  கீழே கொடுக்கப் பட்டவற்றோடு  ஒப்பிட்டுப் பார்த்து மதிப்பீடு செய்து கொள்ளுங்கள்
    நீங்கள் கடைக்கு சென்று பொருள் வாங்கும்போது இவற்றை எல்லாம் செய்கிறீர்களா?
    1. பணத்திற்கேற்ற மதிப்புள்ள பொருளைப் பெறுவதற்காக பல கடைகளுக்கு சென்று விசாரித்து வாங்குவேன்.
    2.  கெட்டுப் போகக் கூடிய பொருள்களை வாங்கும் முன்பு அவை காலாவதியாகும் நாள் கழிந்து போகாமல் இருக்கிறதா என்று பார்த்து வாங்குவேன்.
    3.  பொருளை வாங்குவதற்கு முன்பே அதற்கு இடப்பட்டுள்ள உறையை பின்னர் அப்புறப்படுத்த ஏற்ற முறையை சிந்திப்பேன்.
    4. வாங்கிய பொருளில் ஏதாவது குறை இருந்தால் திரும்பவும் கடைக்கு சென்று பதிலுக்கு வேறு பொருளை அல்லது அதற்கு கொடுத்த விலையை திருப்பித் தருமாறு கேட்டு வாங்குவேன்.
    5.   பொருளின் பெயர் சீட்டில் அல்லது உரையின் மீது எழுதப் பட்டுள்ள பாதுகாப்புக் குறிப்புகளை வாங்குவதற்கு முன்பே படித்து தெரிந்து கொள்வேன்.
    6. இறக்குமதி செய்யாப்பட்ட பொருள்களை வாங்குவதற்கு முன்பு அவற்றுக்கு மாற்றாக உள்ளூரில் தயாரிக்கப் பட்டவை இருக்கின்றனவா என்று பார்ப்பேன்.
    7.  சந்தையில் பார்த்த குறையுள்ள பொருள் அல்லது சேவை பற்றி மற்றவர்களுக்கு தெரிவிப்பேன்.
    8. எதையும் வாங்குவதற்கு முன்பாக பொருள்கள் அல்லது சேவையைப் பற்றி கேள்விகள் கேட்பேன்.
    9. சந்தையில் பாதுகாப்பு வெளிப்படைத் தன்மை நேர்மை ஆகியவற்றை மேம்படுத்தும் செயல்களில் நானும் சேர்ந்து செயல்படுவேன்,
    10.  நான் என்னை ஒரு கற்றறிந்த உணர்வுள்ள நுகர்வோராக கருதி செயல் படுவேன்.
    11. நுகர்வோர் உரிமை பற்றி அறியாதவர்களுக்கும், படிப்பறிவில்லா தவர்களுக்கும், ஏழை மக்களுக்கும்  உதவுவேன்.
    12. எல்லாவற்றிற்கும் மேலாக பொருள் வாங்குவதற்கு முன் அப்பொருள் அவசியம் வாங்கத்தான்  வேண்டுமா என்பதை நன்கு ஆலோசித்த பின்பே  வாங்கவேண்டும். தேவையற்ற பொருள்களை வாங்கிக் குவிப்பது குப்பைகளை சேர்ப்பதற்கு ஒப்பாகும்.
       இப்படி நம்மை நாம் சுயமதிப்பீடு செய்துகொள்வோம்.

    (மாவட்ட நுகர்வோர் குறை தீர்ப்பு அமைப்புகளின் முகவரிகள் அடுத்த வாரம்)
                                                                  (தொடரும்)  


    ************************************************************

    வெள்ளி, 15 மார்ச், 2013

    நுகர்வு வெறி !

         இன்று நுகர்வோர் உரிமை நாள்.மார்ச் 15 ம் நாள் நுகர்வோர் உரிமை நாளாக உலகம் முழுவதும் கொண்டாடபடுகிறது.அந்த நாளில்தான் (15.03.1983)அமெரிக்க  நாட்டின் ஜனாதிபதியாக இருந்த ஜான் கென்னடி அவர்கள் நுகர்வோரின் உரிமைகளைப் பிரகடனம் செய்து உரை நிகழ்த்திய நாள். நாம் பணம் கொடுத்துப் பெறும் எந்த ஒருபொருளும் அல்லது சேவையும் அதன் மதிப்புக்கேற்ப இருக்க வேண்டும். அப்படி இல்லாது போனால் அதை தட்டிக்கேட்கவும் உரியதைப் பெறவும் நுகர்வோருக்கு முழு உரிமை உண்டு.நுகர்வோர் உரிமையைப் பாதுகாக்க தேவையான அளவு சட்டங்களும் உள்ளன.
     
        சமீப காலங்களில் நுகர்வோரின் உரிமைகள் பற்றி அதிகமாக பேசப்பட்டு வந்தாலும் நுகழ்வோர் விழிப்புணர்வு நம்நாட்டில் குறைவு என்றே கூறுகிறார்கள்.  
       படித்தவர்களும்  நுகர்வோர் உரிமைகளை அறியாதவர்களாகவோ அல்லது நமக்கு  எதற்கு இந்த வம்பு என்ற மனப்பான்மை உடையயவர்களாகவே இருக்கிறார்கள். சிலர் கௌரவம் கருதியும் உரிமைகளை கேட்கத் தயங்குவது கண்கூடு. இந்த நிலை காரணமாக வாழ்வின் அத்தியாவசிய தேவையான உணவு மற்றும் மருந்துப் பொருட்களை வாங்கும்போது கூட நுகர்வோர் ஏமாற்றப்படுகிறார்கள். அல்லது குறைபாடுடைய சேவையைப் பெறுகிறார்கள்.

       நடுத்தர மட்டும் மேல்தட்டு வர்க்கத்தினரின் பணப் புழக்கம் காரணமாகவும் மீடியாக்களின் விளம்பரங்களின் தாக்கம் காரணமாகவும் நுகர்வு நோய்க்கு ஆட்பட்டு விடுகிறார்கள்.இதை நுகர்வு வெறி என்று கூட கூறலாம்.தேவைக்கு அதிகமான நுகர்ச்சி,பொறுப்பற்ற நுகர்ச்சி,தொடர்ந்து கடை பிடிக்க முடியாத நுகர்ச்சி இவை நுகர்வு வெறியின் வகைகளாகக் கொள்ளலாம். 

       பல்வேறு மாயாஜாலம் காட்டும்  விளம்பரங்கள் நுகர்வோரை கவர்ந்திழுப்பதால் தேவையை கணக்கில் கொள்ளாமல் பொருட்கள் வாங்கிக் குவிக்கப் படுகின்றன. நுகர்வோரின் உரிமைகள் பேணப்படவேண்டும் என்பதில் ஐயமில்லை. ஆனாலும்  நுகர்வோருக்கென்று பொறுப்புகள் உண்டு. அவை என்னவென்று சிந்திக்க வேண்டியது அவசியமாகிறது. அவை
    1. ஆராய்ந்து அறியும் பொறுப்பு: நாம் வாங்கிப் பயன்படுத்தும் பொருள் அல்லது சேவையின் விலை தரம் ஆகியவற்றைப் பற்றி விழிப்புடன் இருந்து கேள்விகள் கேட்கவேண்டும்.பொருள் அல்லது சேவையை பற்றிய உண்மைகளை வெவேறு இடங்களிலிருந்தும் விசாரித்து அறிந்து வாங்க வேண்டும்.பணத்துக்கு மதிப்பு, சுற்றுச் சூழலுக்கு மதிப்பு,மக்களுக்கு மதிப்பு ஆகியவற்றைப் பற்றியும் கேட்டறிய வேண்டும்.
    2. செயல்படும்  பொறுப்பு: நுகர்வோரான நாம் நம் உரிமைகளை நிலைநாட்டி நமக்கு நியாயம் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் செயல்படவேண்டியது நமது பொறுப்பாகும். சமுதாயத்தில் இருக்கும் மற்றவர்களோடு நமக்கு உள்ள உறவுகளை நாம் மதிக்கிறோம். ஆனால் நமது மதிப்புகளை விட்டுக்கொடுக்காமல் நியாயம் பெறுவதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும்.
    3. சமுதாயம் பற்றிய சிந்தனை: ஒரு பொருளையோ சேவையையோ நாம்  பயன்படுத்துவதால் மற்ற குடிமக்களுக்கு குறிப்பாக உலகின் பல்வேறு பகுதிகளிலும் இருக்கின்ற வசதியும் வலிமையும் இல்லாத சமுதாயங்களைச் சேர்ந்த மக்களுக்கு ஏற்படக் கூடிய விளைவுகளை எண்ணிப் பார்த்து உணர்கின்ற தன்மை உடையவர்களாக இருப்பது நமது பொறுப்பாகும். நாம் பயன் படுத்தும் பொருள்களும் சேவைகளும் மற்றவர்களுக்கு துன்பம் தராத சூழ்நிலைகளில் தயாரிக்கப் பட்டவைதானா என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.
    4. சுற்றுச் சூழல் பற்றிய சிந்தனை : நம்முடைய நுகர்ச்சியினால் சுற்று சூழலுக்கும் மற்ற வகையிலும் ஏற்படக்கூடிய விளைவை எண்ணிப் பார்க்க வேண்டும்.நாம் வாழும் இந்த பூமியும் இயற்கை வளங்களும்  எதிர்காலச் சந்ததியினருக்கும் சொந்தம் என்பதை உனர்ந்து அவற்றை வீணாக்காமல் பாதுகாக்கவும் பொறுப்பேற்க வேண்டும். பொருள்களின் அல்லது சேவைகளின்  உற்பத்தி, பயன்பாடு மற்றும் அப்புறப் படுத்துதல் ஆகியவை சூற்றுச் சூழலுக்கு தீங்கு செய்யாதவையாக இருப்பதை உறுதி செய்யும் பொறுப்பும் நம்முடையதாகும்.
    5. இணைந்து செயல்படல்: நுகர்வோர் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து ஓர் அமைப்பை நிறுவுகின்ற பொறுப்போடு நுகர்வோர் நலத்தை பாதுகாக்கவும் மேம்படச் செய்யவும் உலகமும் சந்தையும் நீதியுடனும் நேர்மையுடனும் திகழச்செய்ய பாடுபடுபவரோடு துணை நிற்பதும் நம் பொறுப்பாகும்.நுகர்வோர் நலம் பற்றி அறியாத பாமரமக்களுக்கு உதவுவதும் நம் கடமையாகும்.  
         இவற்றை எல்லாம் மனதில் கொண்டு நுகர்வு அமைதல் நாட்டுக்கும் வீட்டுக்கும் நன்மை பயக்கும். 

      பொறுப்பான  நுகர்வோருக்கான அடையாளங்கள்,மாவட்ட நுகர்வோர் குறைதீர்ப்பு மையங்களின் முகவரிகள் ஆகியவற்றை அடுத்த வாரம் காண்போம். 
                                                    (தொடரும்)
      *****************************************************************************************************