நேற்று இரவு . நண்பரிடமிருந்து தொலைபேசி அழைப்பு. ATM கார்டை எடுத்துச் சென்ற தன்னுடைய மகன் அதை தொலைத்து விட்டதாகவும் என்ன செய்வது என்று தெரியவில்லை உதவி செய்ய முடியமா? என்று கேட்டார். அவரது குரலில் பதற்றம் தெரிந்தது. வீடு கட்டிக் கொண்டிருக்கும் அவரது கணக்கில் கொஞ்சம் அதிகமாகப் பணம் இருந்தது என்றும் கூறினார்.
"கவலைப் படாதீர்கள் பின் நம்பர் தெரியாதல்லவா.ATM லிருந்து பணம் எடுக்க முடியாது " என்றேன் நான்.
ATM லிருந்து எடுக்க முடியாது.ஆனால் கடைகளில் இருந்து பொருள்கள் வாங்கி விட முடியும்.பெட்ரோல் போட முடியும் என்றார். வங்கியோ இரவில் திறந்திருக்காது. எனக்கும் இது புதிதாக இருந்தாதால் என்ன செய்வது என்று தெரிய வில்லை. இணையத்தின் மூலமாக ATM கார்டை ப்ளாக் செய்ய முடிமா என்று பார்த்தேன். அதற்கான வழி எதுவும் தென் படவில்லை. அந்த வங்கியில் TOLL FREE எண் கிடைத்தது. நண்பருக்கு அந்த எண்ணை தெரிவித்து தொடர்பு கொள்ளுமாறு கூறினேன். சிறிது நேரத்திற்குப் பிறகு நண்பர் மீண்டும் அந்த என்னை தொடர்பு கொண்ட பொது ATM அட்டையின் எண்ணை கேட்பதாகக் கூறினார். அதை குறித்து வைக்க வில்லை என்றார் .அவரிடம்ருந்து கணக்கு எண்,வங்கி கிளை,ஊர்,தந்தை பெயர், வீட்டு முகவரி போன்றவற்றை குறித்து கொண்டு நான் அந்த TOLL FREE எண்ணுக்கு முயற்சி செய்தேன். இரண்டாவது முயற்சியில் நீண்ட நேர காத்திருப்புக்குப் பின் வாடிக்ஜையாளர் சேவை ஊழியர் லையனில் வந்தார். நான் விவரத்தை தெரிவித்து ATM கார்டை ப்ளாக் செயுமாறு கூறினேன்.அவரோ வாடிக்கையாளர்தான் நேரடியாக தொடர்பு கொண்டு வேண்டுகோள் விடுக்க வேண்டும் என்றார். "தாமதித்தால் கார்டை தவறாக பயன் படுத்த வாய்ப்பிருக்கிறது .தயவு செய்து ப்ளாக் செய்து விடுங்கள் .உடனே அவரை உங்களை தொடர்பு கொள்ள செய்கிறேன்" என்று கேட்டுக் கொண்டதன் பேரில் விவரங்களை சரிபார்த்து என்னுடைய விவரங்களையும் பதிவு செய்து கொண்டு கார்டை ப்ளாக் செய்து புகார் எண்ணை அளித்தார். நாளை வங்கி சென்று இதனை தெரிவிக்க வேண்டும் என்றார். நண்பரை அழைத்து விஷயத்தை சொன்னேன்.
:நீங்கள் இந்த உதவி செய்யவில்லைஎன்னால் இரவு நிம்மதியாக இருந்திருக்க முடியாது. வீடு கட்டுவதற்காக வைத்த்ருந்த பணம் அந்த அக்கவுண்ட்டில்தான் இருக்கிறது மிக்க நன்றி" என்றார்.
இணைய இணைப்பு இருந்ததால் இது சாத்தியமாயிற்று.
:நீங்கள் இந்த உதவி செய்யவில்லைஎன்னால் இரவு நிம்மதியாக இருந்திருக்க முடியாது. வீடு கட்டுவதற்காக வைத்த்ருந்த பணம் அந்த அக்கவுண்ட்டில்தான் இருக்கிறது மிக்க நன்றி" என்றார்.
இணைய இணைப்பு இருந்ததால் இது சாத்தியமாயிற்று.
நண்பர் சொன்னது போல ATM கார்டை பின் நம்பர் இன்றி பயன்படுத்த முடியும் என்று கேள்விப் பட்டிருந்தபோதிலும் அதை நான் நம்பவில்லை. பலரை விசாரித்ததில் அது உண்மை என்று தெரிய வருகிறது. அப்படியானால் ATM கார்டை மிக பத்திரமாக வைத்திருக்க வேண்டும். இது பற்றிய தேடலில் கிடைத்த விவரங்கள்.
வங்கிகள் சில நிறுவனங்களை MERCHCHANT ESTAMBLISHMENT ஆக வைத்துள்ளன. பெட்ரோல் பங்குகள், சில பெரிய கடைகள், இந்தப் பட்டியலில் உள்ளன. இவற்றில் ATM கார்டை பயன்படுத்தும்போது பின் நம்பர் தேவை இல்லை. பின் நம்பர் இல்லாமலேயே உங்கள் கார்டை தேய்த்து பணம் எடுத்து விடுவார்கள்.
நியாயமாக கார்டை பயன் படுத்தி முடிந்ததும் ரசீதில் கையொப்பம் பெற்றுக் கொள்வார்கள். கடைக்காரர் உங்கள் கையொப்பமும் CARD இல் உள்ள கையொப்பமும் ஒன்றாக இருகிறதா என்று பார்க்க வேண்டும். இந்த நிபந்தனையின் அடிப்படையில்தான் PIN நம்ப இன்றி பயன்படுத்த வங்கிகள் அனுமதித்திருக்கக் கூடும். உண்மையில் அப்படிப் பார்க்கிறார்களா என்று தெரியவில்லை. இது சரியான முறையாகவும் தோன்றவில்லை.
இதனால் கார்டு தொலைந்து விட்டால் அதை தெரிவிப்பதற்குள் கண்டெடுத்தவர் பொருட்களை வாங்கி விட்டு கார்டை தூக்கி எறிந்து விட முடியும்.
வங்கிகள் சில நிறுவனங்களை MERCHCHANT ESTAMBLISHMENT ஆக வைத்துள்ளன. பெட்ரோல் பங்குகள், சில பெரிய கடைகள், இந்தப் பட்டியலில் உள்ளன. இவற்றில் ATM கார்டை பயன்படுத்தும்போது பின் நம்பர் தேவை இல்லை. பின் நம்பர் இல்லாமலேயே உங்கள் கார்டை தேய்த்து பணம் எடுத்து விடுவார்கள்.
நியாயமாக கார்டை பயன் படுத்தி முடிந்ததும் ரசீதில் கையொப்பம் பெற்றுக் கொள்வார்கள். கடைக்காரர் உங்கள் கையொப்பமும் CARD இல் உள்ள கையொப்பமும் ஒன்றாக இருகிறதா என்று பார்க்க வேண்டும். இந்த நிபந்தனையின் அடிப்படையில்தான் PIN நம்ப இன்றி பயன்படுத்த வங்கிகள் அனுமதித்திருக்கக் கூடும். உண்மையில் அப்படிப் பார்க்கிறார்களா என்று தெரியவில்லை. இது சரியான முறையாகவும் தோன்றவில்லை.
இதனால் கார்டு தொலைந்து விட்டால் அதை தெரிவிப்பதற்குள் கண்டெடுத்தவர் பொருட்களை வாங்கி விட்டு கார்டை தூக்கி எறிந்து விட முடியும்.
எனவே அடிக்கடி ATM/CREDIT கார்டுகள் பயன்படுத்துவோர் கீழ்க்கண்டவற்றை கவனத்தில் கொள்வது நல்லது என்பதை நண்பரின் அனுபவத்தில் இருந்து கற்றுக் கொண்டேன்.
- ATM கார்டில் அதற்குரிய இடத்தில் கட்டாயம் கையொப்பம் இட வேண்டும்.(என் கார்டை பார்த்தபோது அதில் என்னுடைய கையொப்பம் இல்லை.
- கார்டு எண்ணை பாதுகாப்பாக குறித்து வைத்துக் கொள்ளுங்கள்
- நீங்கள் வாடிக்கையாளராக உள்ள வங்கியின் தொலைபேசி எண் மற்றும் எமர்ஜென்சி தொலைபேசி எண்ணை கட்டாயம் கேட்டு பெற்றுக் கொள்ளவும்.
- கார்டோடு பின் நம்பரை எழுதி வைக்காதீர்கள்.
- கார்டை பணம் எடுப்பதற்காக பிள்ளைகளிடம் கொடுத்தனுப்பாதீர்கள். கைபேசி,கணினி,போன்றவற்றை கையாள்வதில் பிள்ளைகள் திறமைசாலிகள் என்பதில் ஐயமில்லை. ஆனால் விளையாட்டுத் தனம் மற்றும் அலட்சியம் கவன திசை திரும்பல் இவற்றின் காரணமாக கார்டு போன்றவற்றை தொலைப்பதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது
- வங்கிக் கணக்கு எண், வங்கியில் கொடுத்துள்ள வசிப்பிட முகவரி போன்றவற்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
- ATM இல பணம் எடுக்கப் பட்டால் கைபேசியில் குறுஞ்செய்தி வரும் வசதியை கட்டாயம் பயன்படுத்துங்கள்
- கடைகளில் கார்டை பயன் படுத்தும்போது உடனிருந்து கவனியுங்கள்
- கொடுக்கப் படும் ரசீதுகளை பத்திரமாக வைத்திருந்து PASS BOOK என்ட்ரி போட்டு சரி பார்க்கவும்.
- உங்கள் ATM கார்டு , கிரெடிட் கார்டு எங்களை தொலைபேசியில் யாரிடமும் சொல்லாதீர்கள். இணையத்திலும் எந்தக் காரணத்தைக் கொண்டும் இவற்றை தெரிவிக்காதீர்கள்.
- கார்டுகளை இருபுறமும் ஜெராக்ஸ் எடுத்து பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள்.இது வெளியில் யார் கைக்கும் கிடைத்து விடக் கூடாது.
- ATM/Credit Card விவரங்களை எல்லோருக்கும் தெரியும் வண்ணம் உங்கள் வீட்டில் கூட வைக்காதீர்கள்.
- அவ்வப்போது பின் நம்பர்களை மாற்றி விடுங்கள்
- ATM கவுண்டர்களில் முன்பின் தெரியாதவர்களின் உதவியை நாடாதீர்கள்
- கார்டு தொலைந்து விட்டால் வேலை நேரமாக இருந்தால் வங்கிக்கு நேரிலோ அல்லது தொலை பெசியிலோ உடனடியாக தெரிவித்து விடுங்கள்
- மற்ற நேரங்களில் தொலைந்து விட்டால் ஒவ்வொரு வங்கிக்கும் அவசர உதவிக்காக Toll Free தொலைபேசி என்மூலம் தொடர்பு கொண்டு கார்டை ப்ளாக் செய்யலாம். இதற்கு சற்று பொறுமை அவசியம்
18004253800 இல் தொடர்பு கொண்டேன். நல்ல காலம் வேலை செய்தது.
இதோ இன்னும் சில
வங்கிகளின் அவசர எண்கள்
State Bank Oof India 1800 425 3800
Indian Bank 1800 425 4422
ICICI Chennai: 42088000 / 33667777
Indian Bank 18004254445
Canara Bank 1800 425 7000
இணையத்தில் இந்தப் பட்டியல் கிடைத்தாலும் சோதித்துப் பார்த்ததில் அவற்றில் பல வேலை செய்யவில்லை. மேற்குறிப்பிட்டவற்றை வேலை செய்கிறது. உங்கள் வங்கியில் தற்போது பயன்பாட்டில் உள்ள அவசர தொலைபேசி எண்களை கேட்டு குறித்து வைத்துக் கொள்ளுங்கள்
மேலுள்ள தொடர்பு எண்கள் அந்தந்த வங்கிகளின் இணைய தளத்திலிருந்து எடுக்கப்பட்டவை
************************************************************************************************************
இதோ இன்னும் சில
வங்கிகளின் அவசர எண்கள்
State Bank Oof India 1800 425 3800
Indian Bank 1800 425 4422
ICICI Chennai: 42088000 / 33667777
Indian Bank 18004254445
Canara Bank 1800 425 7000
இணையத்தில் இந்தப் பட்டியல் கிடைத்தாலும் சோதித்துப் பார்த்ததில் அவற்றில் பல வேலை செய்யவில்லை. மேற்குறிப்பிட்டவற்றை வேலை செய்கிறது. உங்கள் வங்கியில் தற்போது பயன்பாட்டில் உள்ள அவசர தொலைபேசி எண்களை கேட்டு குறித்து வைத்துக் கொள்ளுங்கள்
மேலுள்ள தொடர்பு எண்கள் அந்தந்த வங்கிகளின் இணைய தளத்திலிருந்து எடுக்கப்பட்டவை
************************************************************************************************************