காந்தியின் சத்திய சோதனை தமிழாக்கத்தை புரட்டிக் கொண்டிருந்தேன். நான் படித்த பகுதிகளில் என்னைக் கவர்ந்த ஒரு பகுதி. பொது வாழ்வில் உள்ளவர்களுக்கு இது ஒரு பாடம்
காந்தி இரண்டாவது முறையும் தென்னாப்பரிக்கா சென்று அங்கு இந்தியர் நலனுக்காக போராடினார் எனபது அனைவருக்கும் தெரிந்ததே. பின்னர் இந்தியா திரும்ப விரும்பிய காந்தியை அவ்வளவு எளிதில் இந்தியா அனுப்ப விரும்பவில்லை அங்குள்ள மக்கள். காந்தி உறுதியாக இருக்கவே "நாங்கள் விரும்பினால் மீண்டும் நீங்கள் இங்கே வரவேணும் என்று அன்புக் கட்டளையுடன் இந்தியா திரும்ப சம்மதித்தனர். காந்தி தாய்நாட்டுக்கு புறப்பட்டபோது அவருக்கு ஏராளமான வெகுமதிகளை அவருக்கு அளித்தனர் தென்னாப்பரிக்க இந்தியர். அதை காந்தி விவரிப்பில் காண்போம்
"1899-இல் நான் இந்தியாவுக்குப் புறப்பட்டபோதும் இத்தகைய வெகுமதிகளை எனக்குக் கொடுத்தனர். ஆனால், இத் தடவையிலோ, பிரிவுபசாரம் அளவு கடந்ததாக இருந்தது. வெள்ளி, தங்கச்சாமான்களும் அன்பளிப்பில் அடங்கியிருந்ததோடு, விலை உயர்ந்த வைரச் சாமான்களும் இருந்தன.
இந்த வெகுமதிகளையெல்லாம் ஏற்றுக்கொள்ள எனக்கு என்ன உரிமை இருக்கிறது? இவைகளையெல்லாம் வாங்கிக் கொண்ட பிறகு,ஊதியம் பெறாமல் சமூகத்திற்குச் சேவை செய்து வந்திருப்பதாக நான் எண்ணிக் கொள்ளுவது எப்படி?என் கட்சிக்காரர்கள் கொடுத்த சில வெகுமதிகளைத் தவிர மற்றவை யாவும், சமூகத்திற்கு நான் செய்த சேவைக்கு என்றே முற்றும் எனக்கு அளிக்கப்பட்டவைகள் ஆகும். என் கட்சிக் காரர்களும் பொது வேலையில் எனக்கு உதவி செய்திருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது, கட்சிக்காரர்கள் வேறு, பொது ஊழியர்கள் வேறு என்று பாகுபாடு செய்துகொள்ளுவதற்கும் இல்லை.
கிடைத்த வெகுமதிகளில் ஒன்று தங்கச் சங்கிலி. அது 52 பவுன் பெறு மானம் உள்ளது. என் மனைவிக்கு என்று அதை அளித்தனர். ஆனால், அதுவும்கூட என்னுடைய பொதுச்சேவைக்கு அளிக்கப்பட்ட வெகுமதியே. ஆகையால் மற்றவைகளிலிருந்து அதை நான் தனியாக பிரித்துவிட முடியாது.
ஒரு நாள் மாலை, இந்த வெகுமதிகளில் பெரும் பகுதியை எனக்கு அளித்தார்கள். அன்று இரவெல்லாம் என்னால் தூங்கவே முடியவில்லை. என் அறையில் அங்கும் இங்கும் இரவெல்லாம் உலாவினேன்; தீவிரமாகச் சிந்தித்தேன்.ஆனால், ஒரு முடிவுக்கும் வரமுடியவில்லை. ஆயிரக்கணக்கில் மதிப்புள்ள இந்த வெகுமதிகளை வேண்டாம் என்று துறந்து விடுவது எனக்குக் கஷ்டமாக இருந்தது. அவைகளை வைத்துக்கொள்ளுவதோ இன்னும்அதிகக் கஷ்டமாக இருந்தது அவைகளை நான் வைத்துக் கொள்கிறேன் என்றாலும் என் குழந்தைகளின் கருத்து என்ன? என் மனைவியின் விஷயம் என்ன? சேவைக்கு வேண்டிய வாழ்க்கை நடத்த அவர்கள் பயிற்சி பெற்றிருக்கிறார்கள். சேவை ஒன்றே அதற்குரிய சன்மானம் என்றும் அவர்களுக்குச் சொல்லி வந்திருக்கிறேன்.
வீட்டில் என்னிடம் விலை உயர்ந்த நகை எதுவும் இல்லை. எங்கள் வாழ்க்கையையே விரைவாக எளிமை ஆக்கிக்கொண்டு வந்திருக்கிறோம். அப்படியிருக்கத் தங்கக் கடிகாரங்களை நாங்கள் எவ்வாறு வைத்துக் கொள்ள சங்கிலிகளையும் வைரமோதிரங்களையும் நாங்கள் எவ்வாறு அணிந்துகொள்ள முடியும்? மக்கள், நகைகளின் மீது இருக்கும் ஆசையை விட்டுவிட வேண்டும் என்று பல தடவை நான் மக்களுக்கு உபதேசம் செய்தும் இருக்கிறேன். அப்படியிருக்க என்னிடம் வந்திருக்கும் நகைகளை நான் என்ன செய்வது?
இந்த வெகுமதிகளையெல்லாம் நான் வைத்துக்கொள்ளக் கூடாது என்ற முடிவுக்கு வந்தேன். இவற்றையெல்லாம்ச மூகத்திற்கே சொந்த மானதாக்கி விட வேண்டும். இதற்கு என் மனைவியைச் சம்மதிக்கச் செய்வதில் கொஞ்சம் சிரமம் இருக்கும் என்பதை அறிவேன். குழந்தை களைப் பொறுத்த வரையில் எந்தவிதமான கஷ்டமும் இராது என்பதும் எனக்குத் தெரியும். ஆகவே, அவர்களையே என் வக்கீல்கள் ஆக்கிக் கொண்டு விடுவது என்ற முடிவுக்கு வந்தேன்.
என் யோசனைகளைக் குழந்தைகள் உடனே ஏற்றுக் கொண்டு விட்டனர். “இந்த விலையுயர்ந்த வெகுமதிகள் நமக்குத் தேவை யில்லை. ஆகையால், அவற்றைச் சமூகத்திற்குத் திருப்பிக் கொடுத்து விடவேண்டியதே சரியானது.அவை நமக்கு எப்பொழுதாவது தேவைப்பட்டால் நாம் அவற்றை எளிதில் விலைக்கு வாங்கிக் கொள்ளலாம்” என்று குழந்தைகள் கூறினர்.
நான் ஆனந்தம் அடைந்தேன். “அப்படியானால், உங்கள் தாயாரிடம் இதைக் குறித்து எடுத்துக் கூறி, அவளும் இதற்குச் சம்மதிக்கச் செய்வீர்கள் அல்லவா?” என்று கேட்டேன். “நிச்சயமாகச் செய்வோம். அது எங்கள் வேலை. அம்மாவுக்கு நகைகள் வேண்டியதில்லை. அவைகளை எங்களுக்காக வைத்திருக்க வேண்டும் என்றே அவர் விரும்புவார் அவை எங்களுக்கு தேவை இல்லை என்று நாங்கள் கூறும்போது, அவற்றைக் கொடுத்துவிட அம்மா ஏன் சம்மதிக்க மாட்டார்? என்றும் கூறினார்கள்.
பேச்சளவில் இது எளிதாகத்தான் இருந்தது. ஆனால், காரியத்திலோ அது அதிகக் கஷ்டமாக இருந்தது. என் மனைவி கூறியதாவது: “இவையெல்லாம் உங்களுக்குத் தேவைப் படாமல் இருக்கலாம் . உங்கள் குழந்தைகளுக்கும் அவை வேண்டாம் என்று இருக்கலாம். அவர்களை நீங்கள் தட்டிக் கொடுத்தால், உங்கள் இஷ்டப்படியெல்லாம் அவர்கள் கூத்தாடுவார்கள்.நகைகளை நான் போட்டுக் கொள்வதை நீங்கள் அனுமதிக்காமலிருப்பதை நான் புரிந்து கொள்ளுகிறேன். ஆனால், என் மருமகப்பெண்கள் வரும்போது அவர்கள் விஷயம் என்ன? நிச்சயம் அவர்களுக்கு நகைகள்வேண்டியிருக்கும் நாளை நம் நிலை எப்படி இருக்கும் என்பது யாருக்குத் தெரியும்? அதிக அன்போடு அளிக்கப்பட்ட இந்த வெகுமதிகளைத் திருப்பிக் கொடுத்துவிட நான் ஒரு போதும் சம்மதிக்கவே மாட்டேன்.”
இவ்வாறுஅவள், வாதங்களை சண்டமாருதமாகப் பொழிந்தாள். முடிவில் கண்ணீர் வடித்தும் அவற்றைப் பலப்படுத்தினாள். ஆனால், குழந்தைகளோ உறுதியுடன் இருந்தார்கள். நானும் அசையவில்லை. நான் சாந்தமாகப் பின்வருமாறு கூறினேன்: “குழந்தைகளுக்கு இனிமேல்தான் விவாகம் நடக்க வேண்டும். அவர்கள் குழந்தைகளாக இருக்கும் போதே விவாகம் செய்து வைத்துவிட நாம் விரும்பவில்லை. அவர்கள் வளர்ந்ததும், அவர்கள் காரியங்களை அவர்களே முடித்துக்கொள்ளுவார்கள். மேலும், நகைப் பித்துப் பிடித்த பெண்களை நம் குமாரர்களுக்கு நாம் மணம் செய்து வைக்கப் போவதில்லை என்பதும் நிச்சயம். அவர்களுக்கு நகை போட வேண்டிய அவசியம் ஏற்பட்டாலும் அவற்றை வாங்கிக் கொடுக்க நான் இருக்கிறேன். அப்பொழுது நீ என்னைக் கேள்.”
அதற்கு அவள், “உங்களைக் கேட்பதா?இவ்வளவு நாள் பழகியும் உங்களை எனக்குத் தெரியாதா? என் நகைகளைப் பிடுங்கிக் கொண்டீர்கள். அவற்றை நான் போட்டுக்கொண்டு நிம்மதியாக இருக்கவும் நீங்கள் என்னை விடவில்லை. இப்படிப்பட்ட நீங்கள் மருமகள்களுக்கு நகை வேறு செய்து போட்டுவிடப் போகிறீர்களாக்கும்! முடியாது. நகைகளை நான் திருப்பிக் கொடுக்கப்போவதில்லை. மேலும், என்னுடைய கழுத்துச் சரத்தைக் கேட்க, உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது?” என்றாள்.
“ஆனால், அந்தக் கழுத்துச் சரத்தை, உனக்குக் கொடுத்தது என் சேவைக்காகவா?, உன் சேவைக்காகவா?” என்று நான் கேட்டேன்.
“உங்கள் சேவைக்காகவே என்பதை ஒப்புக் கொள்ளுகிறேன். ஆனால், நீங்கள் செய்த சேவை, நான் செய்த சேவையே அல்லவா? உங்களுக்காக இரவு பகல் நான் பாடுபட்டு உழைத்திருக்கிறேன். அதெல்லாம் சேவையல்லவா? போகிறவர்கள் வருகிறவர்களையெல்லாம் வீட்டுக்கு அழைத்து வந்து, அவர்களுக்கெல்லாம் உழைத்து, நான் கண்ணீர் வடிக்கச்செய்தீர்கள். அவர்களுக்கெல்லாம் அடிமையாக உழைத்தேனே!” என்றாள், என் மனைவி.
சொல்லம்புகள் என் உள்ளத்தில் தைத்தன. அவற்றுள் சில ஆழப் பதிந்தன. ஆனாலும், நகைகளைத் திருப்பிக் கொடுத்துவிடுவது என்று நான் உறுதி கொண்டுவிட்டேன். இதற்கு அவளும் முடிவாகச் சம்மதித்துவிடும்படி செய்வதில் எப்படியோ வெற்றி பெற்றேன். 1896, 1901-ஆம் ஆண்டுகளில் கொடுக்கப்பட்ட அன்பளிப்புகள் யாவும் திருப்பிக் கொடுக்கப்பட்டு விட்டன. ஒரு தருமகர்த்தாப் பத்திரம் தயாரித்தேன். அந்த வெகுமதிகளையெல்லாம் ஒரு பாங்கில் ஒப்படைத்தேன். என் விருப்பப்படியோ, தரும கர்த்தாக்களின் விருப்பபடியோ, இந் நிதியைச் சமூகத்தின் சேவைக்குப் பயன்படுத்துவது என்று ஏற்பாடு செய்தேன்.
பொதுஜன காரியங்களுக்கு நிதி எனக்குத் தேவைப்பட்டு, ‘இந்தத் தரும நிதியிலிருந்து எடுத்துக்கொள்ள வேண்டியதே’ என்று நான் எண்ணிய போதெல்லாம், தேவைக்கு வேண்டிய பணத்தை வெளியிலேயே வசூல் செய்துகொள்ள என்னால் முடிந்திருக்கிறது. ஆகையால், அந்த நிதி அப்படியே செலவாகாமல் இருந்தது. அந்த நிதி இன்னும் இருந்து வருகிறது. தேவைப்படும் போது செலவிட்டு வருகிறார்கள். ஒழுங்காக அந்நிதி சேர்ந்து கொண்டும் வருகிறது.
இவ்வாறு இந்நிதியை உண்டாக்கியதற்காக நான் என்றும் வருந்தியதே இல்லை. சில ஆண்டுகளானதும், அப்படிச் செய்தது தான் புத்திசாலித்தனமானது என்பதை என் மனைவியும் அறிந்து கொண்டாள். எத்தனையோ ஆசைகளிலிருந்து அது எங்களைப் பாதுகாத்தது.
பொதுஜன சேவையில் ஈடுபட்டிருப்பவர்கள், விலை உயர்ந்த
வெகுமதிகளை ஏற்றுக்கொள்ளவே கூடாது என்பது என்னுடைய
திடமான அபிப்பிராயம்.
***********************************************************
இதைப் படித்ததும் கீழக்கண்ட எண்ணங்கள் என் மனதில் தோன்றின
1.இப்படிக் கூட ஒரு மனிதர் இருப்பாரா . இவைதான் மனிதரை மகாத்மா ஆக்கியிருக்கிறது
2.மகாத்மாக்களுக்கு மனைவியாய் இருப்பதைப் போல துன்பம் வேறில்லை
3.மாமனிதர்கள் அவர்கள் குடும்பத்திருக்கு உவப்பானவர்களாக இருப்பதில்லை
4. சலுகைகளோடு வெகு மானங்களையும் பொது சொத்தையும் குற்ற உணர்வின்றி அனுபவித்துக் கொண்டிருக்கும் அரசியல்வாதிகள் அதிகாரிகளை இதனை ஒரு முறையாவது படிக்க செய்ய வேண்டும்
--------------------------------------------------------------
தொடர்புடைய பதிவுகள்
1. காந்தியைப் பற்றி சுஜாதா
2.நீதிபதியின் கேள்வி-மிஸ்டர் காந்தி! இது மோசடி வேலை .
3.வக்கீல் தொழில் பொய்யர்களின் தொழிலா? தெரிந்த வரலாறு...
2.அகிம்சை அண்ணல் சுடப்பட்டபோது
3.சர்ச்சில் கேட்டார்-காந்தி இன்னும் சாகவில்லையா?சசித...
4.கோச் வண்டிக்காரரிடம் அடி வாங்கிய காந்தி
5.காந்தி- தெரிந்த வரலாறு தெரியாத சம்பவங்கள்-
6 .காந்தி தேசத் தந்தை இல்லையா?
7.எழுதியது யார்? கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்
8. தெரிந்த வரலாறு! தெரியாத சம்பவங்கள்!
--------------------------------------------------------------
தொடர்புடைய பதிவுகள்
1. காந்தியைப் பற்றி சுஜாதா
2.நீதிபதியின் கேள்வி-மிஸ்டர் காந்தி! இது மோசடி வேலை .
3.வக்கீல் தொழில் பொய்யர்களின் தொழிலா? தெரிந்த வரலாறு...
2.அகிம்சை அண்ணல் சுடப்பட்டபோது
3.சர்ச்சில் கேட்டார்-காந்தி இன்னும் சாகவில்லையா?சசித...
4.கோச் வண்டிக்காரரிடம் அடி வாங்கிய காந்தி
5.காந்தி- தெரிந்த வரலாறு தெரியாத சம்பவங்கள்-
6 .காந்தி தேசத் தந்தை இல்லையா?
7.எழுதியது யார்? கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்
8. தெரிந்த வரலாறு! தெரியாத சம்பவங்கள்!

காந்தியை விட காந்திக்காக அவரது மனைவியே நிறைய தியாகம் செய்திருக்கிறார். இதை வாசித்த போது எங்கள் ப்ளாகின் சீதை ராமனை மன்னித்தாள் நினைவுக்கு வந்து கொண்டே இருந்தது.
பதிலளிநீக்குகாந்தி ஒரு தலைவராகச் செய்தது மிகவும் சரியே! ஆனால், ஒரு கணவனாகச் செய்தது என்று பார்த்தால் சரியாகத் தெரியவில்லை. அதே சமயம் ஒரு தலைவர் மக்கள் சேவையில் ஈடுபட்டிருக்கும் ஒரு தலைவர் தன் குடும்பத்திற்காகக் கூடச் சொத்து சேர்க்கக் கூடாது என்பதில் அது விலை உயர்ந்த பரிசுப் பொருளாக இருந்தாலும் என்று காந்தி கொண்டிருந்த உறுதி போற்றுதற்குரியது...ஏனென்றால் இப்போதைய நம் தலைவர்களைச் சற்று நினைத்துப் பாருங்கள்!!
ஆனால் ஒன்றே ஒன்று பரிசுப்பொருள்களை விடுங்கள் பின்னர் கஸ்தூரி பாயே அது சரியென்று ஒத்துக் கொண்டிருக்கிறார்...ஆனால்... கஸ்தூரி பாய் வருபவர்களுக்கெல்லாம் அடிமை போன்று உழைத்திருப்பது கொஞ்சம் மனதை உறுத்துகிறது...காந்தி செய்தது சரியா என்று...கேட்கத் தோன்றுகிறது
கீதா
எனக்கும் நினைவு வந்தது கீதா... நன்றி!
நீக்கு:))
தலைப்பு யோசிக்க வைத்தாலும், முடிவு அபாரம்...
பதிலளிநீக்குநாட்டில் எளிய ஜனநாயகவாதியாக திகழ்ந்தவர் தன் வீட்டில் வாழ்ந்திருக்கிறாரே!. அதனால் தானே அவர் மஹாத்மா ஆனார்.
பதிலளிநீக்குஅந்த காலத்தில் காந்தி செய்தது மிகவும் சரி அதனால்தான் அவருக்கு மகாத்தமா பட்டம் கிடைத்ததுஆனால் இந்த காலத்தில் அவர் இருந்து அப்படி செய்து இருந்தால் அவர் மனைவி அவரை விவவாகரத்து செய்து இருப்பார் மக்களும் அவருக்கு பைத்தியகாரர் பட்டம் சூட்டி இருப்பார், வைகோவின் அண்ணனாக அவரை மக்கள் கேலி செய்து கொண்டிருப்பார்கள் ஹும்ம்
பதிலளிநீக்குஅருமையான பகிர்வு.
பதிலளிநீக்குஉண்மைதான். தன்னலம் இல்லாத தலைவர்களின் காலம் 60 களுக்கு முன்னரே முடிந்து விட்டது. இன்னொரு கருத்தும் பின்னர் பேசப்பட்டது. மகாத்மாவின் எளிமையை தொடர நிறைய செலவு செய்ய வேண்டி இருந்ததாம். கிடைக்காத இடத்தில் ஆட்டுப்பால் போன்ற பொருட்களைத் தருவிக்க... தம 6
பதிலளிநீக்குசலுகைகளோடு வெகு மானங்களையும் பொது சொத்தையும் குற்ற உணர்வின்றி அனுபவித்துக் கொண்டிருக்கும் அரசியல்வாதிகள் அதிகாரிகளை இதனை ஒரு முறையாவது படிக்க செய்ய வேண்டும்
பதிலளிநீக்கு/////////////////////
போங்கண்ணே காமெடி பண்ணிக்கிட்டு
இந்தப் பதிவைப் படிக்கும் போது காந்தி சொன்னதாகச் சொல்லப்படும் ஒரு வாக்கியம்நினைவுக்கு வருகிறது உன் தேவைக்கு மீறி நீ எடுத்துக் கொள்ளும் எதுவும் எங்கோ ஒரு ஏழையையோ பிச்சைக்காரனையோ உருவாக்குகிறது
பதிலளிநீக்குஇன்றைய அரசியல்வாதிகளில் யாராவது இப்படியொரு மனிதர் இருப்பாரா ?
பதிலளிநீக்குநானும் படித்திருக்கிறேன் !அதனால்தான் அவர் மகாத்மா முரளி!
பதிலளிநீக்குத ம 10
காந்தி மகான் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளைக்காக தென் ஆப்பிரிக்க இந்தியர்கள் திரட்டி அளித்த நிதியை வாயில்போட்டு விழுங்கி ஏப்பம் இட்ட செய்தியை நீங்கள் வாசிக்கவில்லையென்று தோன்றுகிறது. :-)
பதிலளிநீக்குதேடி வாசிக்க முயற்சிக்கிறேன்.
நீக்கு//மகாத்மாக்களுக்கு மனைவியாய் இருப்பதைப் போல துன்பம் வேறில்லை//
பதிலளிநீக்கு100% உண்மை. சுதந்திர தினத்தன்று பொருத்தமான கட்டுரை.
இப்படி தியாகம் செய்த தலைவர்கள் எங்கே ?அரசு கஜானாவில் சேர வேண்டியதை எல்லாம் தன் வீட்டுக் கஜானாவில் சேர்த்தவர்களும் தலைவர்களாக இன்று இருப்பது ,கொடுமையிலும் கொடுமை :)
பதிலளிநீக்குஇன்றைய அரசியல்வாதிகளை நினைத்துப் பார்க்கின்றேன்
பதிலளிநீக்குவேதனைதான் நிரம்பி வழிகின்றது ஐயா
தம =1
அருமையான பகிர்வு ஐயா....
பதிலளிநீக்குகாந்தியிடம் நிறைய ஆச்சரியங்கள் இருந்தன - சில கட்டுக்கதை போல் தோன்றினாலும் அடிப்படையில் அந்த மனிதர் நம்மிலிருந்து மாறுபட்டவர் என்றே நினைக்கிறேன்.
பதிலளிநீக்குஅருமையான பதிவு
பதிலளிநீக்கு63977A50AC
பதிலளிநீக்குtakipçi satın al
Youtube Takipçi Hilesi
Para ile Takipçi
Bayan Takipçi
MMORPG Oyunlar
DD9776E729
பதிலளிநீக்குtakipçi almak
MLBB Hediye Kodu
Osm Para Hilesi Programsiz
Pubg Mobile 10000 Uc Hilesi Bedava
Bedava Pes Hesapları
Happn Beğenenleri Görme Hilesi
İtem Kasmalı Oyunlar
Kelimelik Oyun Hilesi
swivel accent chair set of 2
0E6A8D6535
பதிலளிநீக்குtürk takipçi satın al
swivel glider accent chair
C56EA9C038
பதிலளிநீக்குGörüntülü Sex
Ücretli Show
Canlı Cam Show
3998C399
பதிலளிநீக்குKars
Karaman
Bolu
Tokat
Osmaniye
Muğla
Amasya
Giresun
Bingöl
D7DD6AF0
பதிலளிநீக்குHopa
Bahçelievler
Finike
Arsuz
Kapaklı
Kartepe
Kaş
Mezitli
Çorlu
778308B5
பதிலளிநீக்குYeşilyurt
Akhisar
Polatlı
Silopi
Bala
Çerkezköy
Salihli
Balçova
Yıldırım