என்னை கவனிப்பவர்கள்

புதன், 17 ஏப்ரல், 2019

தேர்தல் ஸ்பெஷல்-டெஸ்ட் ஓட்டு என்பது என்ன?

   
   முந்தைய பதிவில் சாலஞ் ஓட்டு என்றால் என்ன என்பதை விளக்கி இருந்தேன்.  டெஸ்ட் வோட் என்பது பலரும் அதிகம் அறியப்படாத ஒன்று. அது  என்ன என்பது இப்பதிவில் விளக்கப் பட்டுள்ளது   இதற்கான பதில்  மூன்றாவது கேள்வியில் உள்ளது.  தேர்தல் பணி செயத அனுபவத்தின் அடிப்படையிலும் தேர்தல் ஆணையத்தின் அதிகாரபூர்வமான வலைத் தளத்திலிருந்து  இத்தகவல்கள் சேகரிக்கப்பட்டு இங்கு அளிக்கப் பட்டுள்ளது.
சில நண்பர்கள் எழுப்பிய ஐயங்களும் அதற்கான பதில்களும்

1.VVPAT இன் பயன் என்ன?.   வாக்காளர்கள் தங்களின் விருப்பமான வேட்பாளருக்கு வாக்கை பதிவு செய்ய வாக்குப்பதிவு இயந்திரத்தில் பட்டனை அழுத்தியவுடன், இந்த VVPAT இயந்திரம் ஒப்புகைச் சீட்டு ஒன்றை காட்டும். அதில் வாக்காளர் தேர்வு செய்த வேட்பாளரின் பெயர் மற்றும் அவரின் தேர்தல் சின்னம் இடம்பெற்றிருக்கும். அந்த ஒப்புகைச் சீட்டு ஏழு விநாடிகளுக்கு மட்டுமே வாக்காளருக்கு காண்பிக்கப்படும். பின் அது ஒரு சீல் வைக்கப்பட்ட பெட்டியில் விழுந்துவிடும்.அதே சமயத்தில் ஏழு வினாடிகள் பீப் சத்தம் கேட்கும். 
2. VVPAT இயந்திரம் இப்போதுதான் பயன் படுத்தப் படுகிறதா? ஏற்கனவே எஙேனும் பயன்படுத்தப் பட்டதா

 2013 இல் உச்ச நீதி மன்ற தீர்ப்பின் படி  2014 மக்களவை தேரதலில்  இந்தியா முழுதும் உள்ள 543   தொகுதிகளில் LucknowGandhinagarBangalore SouthChennai CentralJadavpurRaipurPatna Sahib and Mizoram  ஆகிய 8 தொகுதிகளிலும் சோதனை முயற்சியாக பயன்படுத்தப் பட்டது.


3இந்த VVPAT(Voter Verrifiable Paper Audit Trail அனைத்து பூத்களிலும் வைக்கப்படுமா...? இல்லை குறிப்பிட்ட சில இடங்களிலா...? குறிப்பிட்ட இடங்களில் மட்டும் என்றால், என்ன காரணம்...?

இந்தத் தேர்தலில் எல்லா வாக்கு சாவடிகளிலும்  VVPAT இயந்திரம் வைக்கப்படும்.  


.4. அனைத்து வாக்குச் சாவடிகளிலும்  இய்ந்திரத்தின் மூலம் எண்ணப்படும் வாக்கு ஒப்புகைச் சீட்டு எண்ணிக்கையுடன் சரிபார்க்கப் படுமா?


 இல்லை. ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள ஏதேனும் 5 வாக்குசாவடிகளின் எண்ணிக்கை ஒப்புகைச் சீட்டு எண்ணிக்கையுடன் சரிபார்க்கப் படும். சில நாட்களுக்கு முன்பு ஒரு தொகுதிக்கு ஒரு வாக்க் சாவடி மட்டுமே வாக்கு ஒப்புகைச்
 சீட்டு எண்ணிக்கையுடன் சரிபார்க்கப் படும் என தெரிவித்திருந்தது. 50 % சரிபார்க்கப் படவேண்டும் என வழக்கு தொடுக்கப் பட்டது. நீதி மன்றம் ஒவ்வொரு தொகுதியிலும்  5 வாக்கு சாவடிகளுக்கு சரிபார்க்கப் படவேண்டும் எனக் கூறியுள்ளது. வாக்குச் சாவடிகள் வேட்பாளர்கள் முன்னிலையில் ரேண்டம் முறையில் தேர்ந்தெடுக்கப் படும். 


VVPAT இதன் பயன் நாம் அளித்த வாக்கை சரியாக இருக்கிறதா என்று பார்க்கும்போது .. தவறாக வந்தால் என்ன செய்வது...? ஏனென்றால் 7 வினாடிகள் தான் ஒளிரும் என்று படத்தில் உள்ளது



 இதற்குத்தான் டெஸ்ட் ஓட்டு பயன்படுகிறது. ஒரு வாக்காளர் தான் வாக்களித்த பின்னர் யாருக்கு வாக்களித்தாரோ அந்த சின்னமும் பெயரும் VVPAT  இயந்திரத்தில் காண்பிக்கப்படும் சீட்டில்  இல்லாமல்,  வேறு  சின்னமும் பெயரும் இடம் பெற்றிருந்தால் உடனடியாக  49     துணை விதி-1 இன் கீழ் வாக்கு சாவடி தலைமை அலுவலரிடம் புகார் அளிக்கலாம். அதற்கென படிவம் வாக்கு சாவடி அலுவலரிடம் உள்ளது. அதில் உறுதி அளித்து கையொப்பமிட்டு அளிக்க வேண்டும். இயந்திரம் தவறாகத்தான் காட்டியது என்ப்தை உறுதிப்படுத்த அவர் மீண்டும்  வாக்களிக்க அனுமதிக்கப் படுவார். இதற்குத்தான் டெஸ்ட்  ஓட்டு என்று பெயர் ஆனால் அவர் தனியாக வாக்களிக்க முடியாது. 
       இந்தப் புகார்,   வந்திருக்கும் கட்சி ஏஜென்டுகளுக்கு தெரிவிக்கப்பட்டு அவர்களுடன் வாக்குச் சாவடி தலைமை அலுவலர் முன்னிலையில் எந்த சின்னத்திற்கு வாக்களித்தார் என்று தெரியும் வகையில் வாக்களிக்க வேண்டும்.(எந்த சின்னத்திற்கும் வாக்களிக்கலாம்)  அவர் வாக்களிக்கும் சின்னத்தை அனைவரும் பார்ப்பார்கள். எல் இ டி விளக்குகள் சரியாக ஒளிர்கிறதா? சரியான சின்னம்   VVPAT இயந்திரத்தில்  காண்பிக்கப் படுகிறதா என  கவனிக்கப் படும். . இயந்திரத்தில் தவறாகக் காண்பித்தால் வாக்குப் பதிவை உடனடியாக நிறுத்தி மண்டல அலுவலருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.



 VVPAT  இயந்திரத்தில் சரியான விவரங்கள் காண்பித்தால் புகார் பொய்யானதாக கருதப்பட்டு  தவறான தகவல் கூறியதற்காக காவல் துறை வசம் ஒப்படைக்கப் படுவார்,

6. சரியாக இருக்கும் பட்சத்தில் ஒரு வாக்கு அதிகமாகி விடுமே என்ன செய்வது?



       இதற்காகத்தான் வாக்கு சாவடி அலுவலர் மற்றும் ஏஜெண்டுகள் முன்னிலையில் டெஸ்ட் வாக்கு  போட அனுமதிக்கப் படுகிறது.  டெஸ்ட் ஒட்டு  எந்த சின்னத்திற்கு போடப்பட்டது  என்ற விவரங்கள் உட்பட உரிய  படிவத்தில்  17 C ல் பதிவு செய்ய வேண்டும். இவை சீல் வைக்கப் பட்டு அனுப்பப் படும்.  வாக்கு எண்ணிக்கையின் போது  படிவத்தில் உள்ள டெஸ்ட் வாக்குகள் மொத்த பதிவான வாக்குகளில் இருந்து கழிக்கப் படும்.

                 


7. உண்மையாக இவ்வாக்குகள் கழிக்கப் படுகின்றனவா என்பதை எவ்வாறு அறிவது?


    இது மட்டுமல்ல. ஒரு பூத்தின்  வாக்குப் பதிவு  விவரம் அனைத்தும் சரிபார்த்துக் கொள்ள 17 படிவத்தின் நகல் அனைத்து ஏஜெண்டுகளுக்கும் வழங்கப் படும். தரவில்லை எனில் கட்டாயம் கேட்டுப் பெறவேண்டும். ஏனெனில் இப்படிவத்தில் மொத்த பதிவான வாக்குகள், வாக்குச் சாவடிகளில் பயன்படுத்தப் படும் மூன்று இயந்திரங்களின் ( வாக்குப்பதிவு இயந்திரம், கட்டுப்பாட்டு இயந்திரம். ஒப்புகை சீட்டு இயந்திரம்  VVPAT)  இவற்றின் சீரியல் எண்கள் சீல்வைப்பதற்குப் பயன்படுத்தப் பட்ட பலவதமான பேப்பர் ஸ்ட்ரிப் சீல் தாள்களின் வரிசை எண்கள் உள்ளிட்ட பல விவரங்கல் இருக்கும். இவற்றை வாக்கு எண்ணும் மையத்திற்கு எடுத்து சென்று வாக்கு எண்ணிக்கையின் போது சரிபார்த்துக் கொள்ளலாம் பேப்பர்சீல்களில் ஏஜெண்டுகளின் கையொப்பமும் இருக்கும்

8.  இந்த வாட்ஸ் ஆப் தகவல் உண்மையா?
  // வாக்குப்பதிவு இயந்திரத்தில் நீங்கள் விரும்பும் வேட்பாளரின்  சின்னத்தின் பட்டனை அழுத்தும்போது வேறு ஒரு வேட்பாளரின்  சின்னத்தில் உள்ள விளக்கு எரிந்தால் உங்கள் ஒட்டு திருடப் படுவதாக அர்த்தம். அழுத்திய பட்டனில் இருந்து விரலை எடுக்க வேண்டாம் அதிகாரிகளிடம் பத்திரிகையாளர்களிடம்  காட்டி நிருபித்த  பிறகு  விரலை எடுங்கள். பீ ப் ஒலி வந்து கொண்டே இருந்தாலும் பரவாயில்லை.//  இதெல்லாம் நடக்கிற காரியமா என்று நண்பன் திண்டுக்கன் தனபாலன் அவர்கள் கேட்டிருந்தார்.

  இது உண்மையல்ல.இதை .   தவறாக ஒளிர்ந்தால் டெஸ்ட் வோட் பயன்படுத்தி மீண்டும் வாக்களித்து  நிருபித்து வாக்குப் பதிவை நிறுத்தலாம்.

   பட்டனை அழுதத்திக் கொண்டே இருந்தாலும் பீப் சவுண்டு 7 வினாடிகளுக்கு மேல் நீடிக்காது. நீங்கள் வேண்டுமானால் வாக்குப் பதிவின் போது சோதனை செய்து பாருங்கள்.  ஒரு முறை பட்டனை அழுத்திக் கொண்டே   விடாமல் இருந்தாலும், அது அழுத்தியதுமே  மின்சுற்று தொடங்கி  பூர்த்தி அடைந்து விடும்.அதனால் ஒரு முறை மட்டுமே 7 வினாடிகள் பீப் சவுண்ட் நீடிக்கும். மறுபடியும் விரலை எடுத்தால் மட்டுமே அடுத்த முறை பட்டனை அழுத்த தயாராக இருக்கலாம். ஆனால் மீண்டும் உடனே பட்டனை அழுத்தினால் வாக்கு பதிவு ஆகாது. பீப் சவுண்டுக்குப் பின். வாக்குப் பதிவு அலுவலர் கண்ட்ரோல் யூனிட்டில் உள்ள பட்டனை அழுத்தினால் மட்டுமே அடுத்த ஒட்டு போடமுடியும். அடுத்த வாக்காளரின் சீட்டைப்பெற்ற பின்னர்தான் பட்டனை அழுத்துவார். அதன்பின்னரே வாக்களிக்க முடியும். 
    வீடுகளில் பார்க்கலாம் காலிங் பெல்லை அழுத்திக்  கொண்டே இருந்தாலும் சில வினாடிகள் ஒலித்து நின்றுவிடும்.  கையை எடுத்து விட்டு மீண்டும் அழுத்த வேண்டும்.

9. ஒரே நேரத்தில் இரண்டு பட்டனை அழுத்தினால் என்ன ஆகும்/.

   ஒரே நேரத்தில் இரண்டு பட்டனை அழுத்தினாலும் ஒரு வாக்கு மட்டுமே பதிவாகும். என்னதான் ஒரே நேரத்தில் பட்டனை அழுத்துகிறோம் என்று நாம் நினைத்தாலும்  எதாவது ஒரு விரல்  fraction of seconds இல் முன்னதாக அழுத்தி விடும். அதன் வோட்டே பதிவாகும்    

----------------------------------------------------

டெண்டர் வோட்டு என்றால் என்ன? 
மாதிரி வாக்குப் பதிவு எப்போது நடை பெறும்.? 
நோட்டா வோட்டு 14%க்கும் அதிகமானால் மறு தேர்தல் வருமா?
இன்று மாலை அடுத்த பதிவில்

முந்தைய பதிவு

பட்டியலில் பெயர் இல்லை.சேலஞ்ச் வோட் மூலம் வாக்களிக்க முடியுமா?



தொடர்புடைய பதிவுகள்

******************************************************************

சார்ந்த  பிற பதிவுகள் 

79 கருத்துகள்:

  1. நல்ல விளக்கம்... நன்றி...

    // நீதி மன்றம் 5 தொகுதிகளுக்கு சரிபார்க்கப் படவேண்டும் எனக் கூறியுள்ளது...//

    அங்கே தான் ஏதோ நெருடுகிறது...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒவ்வொரு தொகுதியிலும் ஏதேனும் 5 வாக்குச் சாவடியின் வாக்குப்பதிவுகள் ஒப்புகை சீட்டுகளுடன் சரிபார்க்கப் படும், அதாவது 543 x 5= 2715 வாக்கு சாவடிகளில் ஒப்புகை சீட்டுடன் சரி பார்க்கப் படும். பதிவில் உள்ள வாக்கியப் பிழை சரி செய்யப்பட்டது . நன்றி

      நீக்கு
  2. நல்ல தகவல்கள். தெரிந்திராத பலருக்கும் பயன்படும்.

    பதிலளிநீக்கு
  3. வாக்களிக்க சொந்த ஊருக்குச் செல்ல முடியாதவர்கள் இருக்கும் இடத்திலேயே வாக்களிக்க முடியும் என்று இன்றைய செய்தித்தாளில் செய்தி வந்திருக்கிறது. ஒரு வாட்சாப் பார்வேர்டும் வந்தது. nvsp.in எனும் அந்த தளத்துக்குச் சென்று பார்த்தால் அது இப்போதைக்கு ஆகும் காரியமாகத் தெரியவில்லை. இந்தச் செய்தியை முன்னாலேயே பிரசுரித்திருக்கலாம் செய்தித்தாள்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படிஓட்டளிக்க முடியாது. தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளோர். ராணுவத்தினர் வெளிநாட்டில் அரசால் உள்ள பணிக்கு அனுப்பப் பட்டுள்ளோர் ஆகியோருக்கு மட்டும் போஸ்டல் மூலம் வாக்களிக்கலாம் அதற்காக தகுந்த சான்றுகளுடன் விண்ணப்பித்தால் அவர்களுக்கு வாக்கு சீட்டு அனுப்பி வைப்பார்கள். அவர்கள் வாக்களித்து திருப்பி அனுப்ப வேண்டும்.

      நீக்கு
    2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
  4. டெஸ்ட் வோட் போடும்போது சீக்ரசி இல்லாமல் போகுமே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Test vote போடுவதற்கு முன்பாக முதல் ஓட்டு போட்டாரே அது. ரகசியமானதுதான் அது அப்படியே பதிவாகி விடும் அதைதவறு என்று சொல்வதால் மெஷின் தவறாக இயகிறதா என்ப்தை அறிய இரண்டாம் முறை அவருக்கு வாய்ப்பு அளிக்கப் படுகிறது. முந்தைய ஓட்டு தவறு எனில் அடுத்ததும் தவறாக இருந்தால் இயந்திரம் சரியாக இயங்கவில்லை என்பதை அறியலாம். அவர் முன்பு போட்ட அதே சின்னத்திற்குத்தான் ஒட்டு போடவேண்டும் என அவசியம் இல்லை.

      நீக்கு
    2. இந்தியாவில் உள்ளோர் நிச்சயமாக ஆன்லைனில் வாக்களிக்க வாய்ப்பு இல்லை. NRI கள் ஆன்லைனில் வாக்களிக்கும் வசதி இருப்பதாகத் தெரியவில்லை தேடிக் கொண்டிருக்கிறேன். இருந்தால் தெரிவிக்கிறேன்

      நீக்கு
    3. நல்ல தகவல்கள் சகோ!

      ஆன்லைனில் வாக்களிக்க முடிந்தால் நல்லதாக இருக்கும். எங்களைப் போன்றோர் பயணம் செய்ய இயலாத நிலையில் எங்களால் வாக்கு அளிக்க முடியாத நிலை.

      கீதா

      நீக்கு
  5. https://www.indiatoday.in/elections/lok-sabha-2019/video/india-today-e-chunav-2019-watch-how-to-vote-online-before-you-vote-offline-1492223-2019-04-02

    இப்படி ஒரு சுட்டி பார்த்தேன் இது சரியா சகோ? இந்த விளக்கம். இதில் அளிக்க முடியுமா

    கீதா

    பதிலளிநீக்கு
  6. சகோ ஆன்லைன் வோட்டிங்க் இல்லை என்று தெரிந்த

    மிக்க நன்றி

    கீதா

    பதிலளிநீக்கு

  7. Introducing outboardmotorengmbh -
    Experience unmatched power, reliability, and performance on the water with Outboard Motor EN GmbH.

    பதிலளிநீக்கு

  8. Wholesale Clearance Stock wholesaleclearancestock – Affordable Wholesale Solutions for Growing Businesses

    பதிலளிநீக்கு

  9. Introducing globalpeptidesupply - Discover the future of research excellence with Global Peptide Supply!

    பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895