என்னை கவனிப்பவர்கள்

குப்பை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குப்பை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 22 ஆகஸ்ட், 2012

சுஜாதா சொன்ன பச்சைப் பொய்கள்


தமிழின் மிகச் சிறந்த, இன்றும் இளைஞர்களின் மனம் கவர்ந்த விஞ்ஞான எழுத்தாளர் சுஜாதா சொல்கிறார்
      "முன்னேற்ற நாடுகளில் இப்போது சுற்றுச் சூழல் பற்றி கவனம் அதிகமாயிருக்கிறது. ஓசோன் ஓட்டை அதிகமாகி விட்டது; அடுத்த நூற்றாண்டில் மூச்சுத் திணறி  சாகப் போகிறோம்; கழிவுப்பொருட்களை நதியில் கலக்கக் கூடாது;பிளாஸ்டிக் அலுமினிய விரயங்கள் செய்யக் கூடாது;ஆஸ்பத்திரிக் குப்பைகளை எரிக்க வேண்டும் என்றெல்லாம் கூறப்படுகின்றன. இவை எல்லாம் பச்சைப் பொய்கள்.இவற்றைப் புரிந்து கொள்வோம்.

பொய் 1. பழைய பேப்பர் அலுமினியக் குப்பைகளை திரும்பப் பயன்படுத்துவதே சிறந்தது.

விளக்கம்: உண்மைதான். ஆனால் அது அலுமினியத்துக்குத்தான் முற்றும் பொருந்தும். பழைய பேப்பரை நியூஸ் ப்ரிண்டாக அல்லது அட்டைப் பெட்டியாக மாற்றலாம்  ஆனால் அவற்றை வெளுக்கப் பயன்படுத்தும் தண்ணீரில் உள்ள கழிவுப் பொருட்கள் மூலக் காகித உற்பத்தியில் உள்ள கழிவுப்பொருட்களைவிட அதிகம்.காகிதத்தை திரும்பப் பெறுவதால் மரங்களை வெட்டுவதை நிறுத்துகிறோம் என்பதும் தவறு. காகித உற்பத்திக்காக மரங்கள் நட்டு வெட்டப் படுகிறது .தேவை குறைந்து விட்டால் மரம நடுவதும் குறைந்து விடும்.

பொய் 2: பிளாஸ்டிக் எப்போதுமே கெடுதல் தருவன. அது சுற்று சூழலுக்கு எதிரி அது லேசில் மக்காது.அதில் உள்ள விஷப் பொருட்கள் நிலத்தடி நீரில் கலந்துவிடும்.பிளாஸ்டிக் நூற்றாண்டுகளாக அப்படியே இருக்கும் மண்ணோடு மண்ணாக மாறாது

விளக்கம்: பிளாஸ்டிக் மண்ணுடன் கரையாமல் மாறாமல் இருப்பதே பத்திரம். .அதே போல பேப்பரும் ஆண்டுக் கணக்கில் அழிவதில்லை.
ஒரு பேப்பர் குப்பையும் பாலிஸ்டைரின் குப்பையும் ஒப்பிடும்போது பின்னதை உற்பத்தி செய்ய ஆறில் ஒரு பாகம் மூலப் பொருட்களும் 12 இல் ஒரு பாகம் நீராவியும் மின்சாரமும்தான் தேவைப் படுகிறது. விலையும் பாதிதான்.அதில் ஓசோன் ஓட்டையை  உண்டாக்கக் கூடிய சி.எஃப்.சி யும் (  CFC ன்னா குளோரோ புளோரோ கார்பன்தானே?)   பயன் படுத்தப் படுவதில்லை.

  எல்லா பிளாஸ்டிக்குகளுமே கெட்டதல்ல உதாரணமாக பால் பாக்கெட்டுக் பிளாஸ்டிக் உறைகள் செய்ய கண்ணாடி குப்பிகளுக்கு ஆகும் மின் செலவை விட பாதியளவே தேவைப் படுகிறது.மறைமுகமாக பிளாஸ்டிக்கினால்  சுற்று சூழல் பாதிப்பு குறைவு.

பொய் 3. நாம் அதிகமாக குப்பை போடுகிறோம் குப்பையை பள்ளங்களில் நிரப்பக் கூடாது..

விளக்கம்: குப்பை அதிகம் என்பது சரிதான் ஆனால் Land Fills. என்ற குப்பையை சேகரித்து  ஊருக்கு வெளியே தாழ்வுப் பகுதிகளை நிரப்பும் முறையை சரியாகப் பிரயோகித்தால் ஆயிரம் வருஷங்களுக்கு உண்டான குப்பையை ஒரு சில நிரப்பலில் போடலாம் என்கிறார்கள் இதில்  எரிப்பதிலோ மாற்றுவதிலோ உள்ள செலவை விட குறைந்த செலவே ஆகும். எனவே குப்பை அதிகமில்லை .அதைக் கொட்டும் முறைதான் சரி இல்லை

பொய் 4 . பூச்சிக் கொல்லி மருந்துகள் அபாயமானவை.அவை ஆரோக்கியத்தை பாதிக்கிறது .

விளக்கம்: கலிபோர்னியாவில் உள்ள ஆராய்ச்சி சாலையில் பரிசோதித்துப் பார்த்தபோது சில முடிவுகள் வேடிக்கையாக இருந்தன .தாவரங்கள் இயற்கையாகவே உற்பத்தி செய்து கொள்ளும்  ரசாயனங்களின் அளவு செயற்கை பூச்சிக் கொல்லிகள் படிந்த அளவை விட அதிகம். டையாக்சின் போன்ற வேதிப் பொருள்களை தாவரங்களே  உற்பத்தி செய்து கொள்கின்றன. செயற்கை பூச்சி கொல்லி அபாயத்தை பற்றி தவறான தகவல்கள் பரவுவதால் மக்கள் பயந்து போய் பழங்கள் சாப்பிடுவதை நிறுத்திவிட்டு அதனால் கேன்சர் வரக கூடிய அபாயம்தான் அதிகரித்திருக்கிறது .இது போல் ஜனத்தொகை அதிகம் என்பதும் அமிலமழை நம் காடுகளை அழிக்கின்றன என்பதும் பச்சைப் பச்சைப் பொய்களே!"

   (சுஜாதா ரசிகர்கள் எல்லாம் கோவமா பாக்காதீங்க. இதெல்லாம் எப்ப சொன்னார்னு  கேக்கறீங்களா? இப்படில்லாம் மிரட்டினீங்கன்னா எனக்கு பதில் சொல்லத் தெரியாது. நான் அழுதுடுவேன். அது வந்து அமெரிக்க தூதரகத்தின் செய்தி நிறுவனம் SCIENCE UPDATES என்ற அறிவியல் இதழில் மேலே சொன்னததான்  "பச்சைப் பொய்கள்" என்ற தலைப்பில் வெளியான கட்டுரையில் சொல்லி இருந்துதாம். அதைத்தான் நம் சுஜாதா சார்  "இந்த நூற்றாண்டின் இறுதியில் சில சிந்தனைகள்" (திருமகள் நிலையம் பதிப்பகம்) என்ற புத்தகத்தில் ஓசோன் ஓட்டை என்ற  தலைப்பில் சுட்டிக்காட்டி சொல்லி இருந்தாரு.   அதைத்தான் நானும் சொல்லி இருக்கிறேன். ஹிஹிஹிஹி . அநியாமா இந்த பச்ச புள்ள மேல கோவத்தை காட்டாதீங்க! )

உங்க குப்பைய எல்லாம், சாரி! கோவத்த எல்லாம் கம்மென்ட் பாக்ஸ்ல கொட்டுங்க
******************************************************************

நாளை: ஆவலுடன் அந்தரங்கம்
*******
இதைப்  படித்து விட்டீர்களா?
நான் கழுதை!