என்னை கவனிப்பவர்கள்

தன்னம்பிக்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தன்னம்பிக்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 13 அக்டோபர், 2013

சொல்லுங்கண்ணே!சொல்லுங்க! இதை எழுதியது யார்?

          

நிறையக்  கவிதை படிப்பவரா நீங்கள்? இந்தக் கவிதை எழுதியது யாரென்று சொல்லுங்கள் பார்க்கலாம்?


திண்ணையை இடித்து தெருவாக்கு 

      உட்கார் நண்பா நலந்தானா?-நீ 
      ஒதுங்கி வாழ்வது சரிதானா?
      சுட்டுவிரல் நீ சுருங்குவதா?-உன் 
      சுய பலம் உனக்குள் ஒடுங்குவதா?

      புல்லாய்ப் பிறந்தேன் நானென்றே இனி 
      புலம்ப வேண்டாம்-நெல்கூட
      புல்லின் இனத்தை சேர்ந்ததுதான் -அது 
      பூமியின் பசியைப் போக்க வில்லை?

      கடலின் நான் ஒரு துளிஎன்று
      நீகரைந்து போவதில் பயனென்ன?
      கடலில் நான் ஒரு முத்தென்று -நீ
      காட்டு; உந்தன் தலைதூக்கு 

      வந்தது யாருக்கும் தெரியாது- நீ
      வாழ்ந்ததை உலகம் அறியாது
      சந்ததிகூட மறந்துவிடும் -உன் 
      சரித்திரம் யாருக்கு நினைவு வரும்?

      உணவு ஆடை வீடென்று -உன் 
      உடைமையைப் பெருக்கிக் கொள்ளாதே!
      மனைவி  மக்கள் வீடென்று -உன் 
      மனதின் எல்லையை சுருக்காதே 

      திண்ணைதானா உன்தேசம்-உன் 
      தெருவொன் றேவா உன் உலகம் 
      திண்ணையை இடித்து தெருவாக்கு -உன் 
      தெருவை மேலும் விரிவாக்கு 

      எத்தனை உயரம் இமய மலை -அதில் 
      இன்னொரு சிகரம் உனது தலை
      எத்தனை ஞானிகள் பிறந்த தரை-நீ 
      இவர்களை விஞ்சிட என்ன தடை?

      பூமிப் பந்து என்ன விலை -உன் 
      புகழைத் தந்து வாங்கும் விலை;
      நாமிப்  பொழுதே புறப்படுவோம்-வா 
      நல்லதை எண்ணிச் செயல்படுவோம் 

*******************************************************
இக் கவிதை எழுதிய கவிஞரின் பெயரை அறிய கீழே கிளிக் செய்யுங்கள். அவரது இன்னொரு கவிதையையும் படியுங்கள் 

                 விடை

********************************************************* 

ஞாயிறு, 23 அக்டோபர், 2011

வெற்றிக்கு வழி

முன்னேறியவர்கள்
சொன்னதை
முன் மாதிரியாகக் கொள்


நம்பிக்கைச் செடியை
நட்டு வை


உழைப்பு என்ற
நீரை ஊற்று


நாணயம் என்ற
நல்லுரம் இடு


உறுதி என்ற
வேலி போடு


எதிர்ப்பு என்ற
களைகளை
 எச்சரிக்கையுடன்
அகற்று


பொறுமையாய்
காவல் இரு


பின்னர்
வெற்றி
பூவாய்,
காயாய்,
கனியாய்
உன் கையில்!


ஆம்
எல்லாம் உன்
தன்னம்பிக்கையில்