என்னை கவனிப்பவர்கள்

புத்தகக் கண்காட்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புத்தகக் கண்காட்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 21 ஜனவரி, 2013

பட்டிக்காட்டாரிடம் பதிவர்கள் கோரிக்கை.

  சைதப்பேட்டையில அலுவலக மீட்டிங் ஒண்ணு அட்டென் பண்ணிட்டு  அப்படியே பதிவர்கள் வராங்கன்னு கேள்விப்பட்டு புத்த கண்காட்சிக்கு விசிட் பண்ணேன்.

நூல் வெளியிட்ட பதிவர்களை
”அஞ்சிநடுங்கிட அரண்டு புரண்டிட
வாய் விட்டலறி மதிகெட்டோட”
     வைக்கணும்னு சதி திட்டத்தோட வந்திருந்த மெட்ராஸ் பவன் சிவகுமார் முதல்ல கண்ணுல பட்டார். தூரமா இருந்தாலும்  போன் பண்ணி கலாய்க்கறாங்களேன்னு இந்த முறை கூடவே இருந்தா தப்பிச்சிடலாம்னு  ஆரூர் மூணாவையும் பாதுகாப்புக்கு வச்சுக்கிட்டு பட்டிக்காட்டாரும் பக்கத்திலேயே இருக்க டிஸ்கவரி வாசல்ல நிறைய பதிவர்கள் ஒண்ணு கூடிட்டாங்க. புலவர் ஐயாவும் வந்திருந்தாரு.

   பெண் பதிவர்கள் பத்மா,தமிழரசி,சமீரா,தென்றல் சசிகலா,வெண்ணிலா வந்திருந்தாங்க இதுல  சசிகலாவையும், சமீரவையும் தவிர மற்றவங்களை முதன் முறையா பாக்கறேன். யார் பின்னாடியோ நின்னு தலைய மட்டும் நீட்டி எட்டிப் பாத்துக்கிட்டுருந்தவரை இவருதான்  "அஞ்சா சிங்கம்" ன்று அறிமுகம் செஞ்சார் ஜெய். இப்படி ஒளிஞ்சிக்கிட்டு இருக்கறதைப் பாத்தாலே தெரியுதே  அஞ்சா சிங்கம்னு யாரோ சொல்றது கேட்டது. தம்பி ஃபிலாசபி கருப்பு சட்டை வெள்ளை வேட்டி, நீளமான முடியோட கையைக் கட்டிக்கிட்டு போஸ் கொடுத்துகிட்டிருந்தாரு. 

    ஸ்ட்ரிக்டான ஆபீசர் மாதிரி  ப்ளாக்ல காட்சி அளித்த  கவியாழி கண்ணதாசன் நேர்ல பாத்தா சிரிச்ச முகத்தோட எளிமையா பல நாள் பழகின மாதிரி பேசினார். அவரோட ஆட்டோக்ராப் போட்ட  'அம்மா நீ வருவாயா? அன்பை மீண்டும் தருவாயா?" புத்தகத்தை ஆளுக்கு ஒண்ணு விலையில்லாம (ஓசிக்கு கௌரவமான பேரு) கொடுத்து அதிர்ச்சி(இன்ப அதிர்ச்சிதான்) குடுத்தார். குறிப்பா கவிதைன்னாலே காத தூரம் ஓடற சிவகுமார் கிட்ட குடுத்து இதை படிச்சி விமர்சனம் எழுதனும்னு அன்பு கட்டளை போட்டார். சிவகுமார்  மெட்ராஸ் பவன்ல பொங்கல் சாப்பிடும்போது  இஞ்சித் துண்டை கடிச்ச  கு.. (இருங்க! இருங்க! அவசரப்படாதீங்க)  குழந்தைமாதிரி  முழிச்சார் 

   சரிதாயணம்  எழுதின பாலகணேஷ் டிஸ்கவரிக்குள்ள அலவளவளவளாவிக் கொண்டிருந்தார். கண்ணதாசன் மாதிரி உங்க ஆட்டோக்ராப் போட்டு ஒரு புத்தகம் குடுங்கன்னு கேட்டதை காதுல வாங்காம, நீங்க ஒரு பாக்கியம் ராமசாமின்னு புகழ்ந்ததுக்கும் மயங்காம  காரியத்தில கண்ணா இருந்து ஸ்டாக் இல்லே இப்ப போய் எடுத்துட்டு வரப்போறேங்கராரு.( ஒசில குடுத்தா விமர்சனம் ஒழுங்கா இருக்கும். காசு குடுத்து வாங்கினா கராறா இருக்கும்.ஆமாம் சொல்லிட்டேன் )

   பதிவர் சத்ரியனோட கண் கொத்திப் பறவை நூல் அறிமுகத்திற்காக கேபிள் சங்கருக்கு காத்திருந்தாங்க!  சீக்கிரம் உள்ளே போனா சீப்பா நினைச்சுடு வாங்களோன்னு  கேட்லயே அரைமணி நேரம் நின்னுக்கிட்டு இருந்தாருன்னு நம்ப முடியாத வட்டாரத்தில இருந்து நம்பத் தகுந்த தகவல் வந்ததா சொன்னாங்க!

    போட்டோவுக்கு  போஸ் கொடுத்து நூல் வெளியிடும்போது சத்ரியன் பேசினார். மைக் இல்லாததால புத்தகைத்த சுருட்டி மைக் மாதிரி பிடிச்சிக்கிட்டிருந்தார் ஜெய். மைக்க பாத்ததுமே குஷியான பாலச்சந்தரின்(விவரத்திற்கு;கண்டேன் கே.பாலச்சந்தரை)  அறிமுகமான சிவா, "முன்னால போய் மைக்ல பேசுங்க" "முன்னால போய் மைக்ல பேசுங்க" ன்னு குரல் குடுக்க ஆரம்பிச்சிட்டாரு. இந்த சீனை ஒராயிரம் டேக் எடுத்ததால அந்த வசனத்தை மறக்க முடியலையாம். அவங்க அம்மா கிட்ட பேசும்போது கூட முன்னால போய் மைக்ல பேசுங்கன்னு சொல்றாருன்னா பாத்துக்குக்கோங்களேன்.

   சிவமைந்தனோட  திருவிளையாடல் அதோட முடியல நூல்  அறிமுகம் முடிஞ்சதும் அப்படியே கிளம்பிடலாம்னு நினச்சவங்களை புத்தகம் வெளியிட்டவங்க ட்ரீட் கொடுக்க தள்ளிட்டுப்  போய்ட்டார்.முதல் ரவுண்டு சத்ரியன் வேற வழியில்லாம எல்லோருக்கும் ஜூஸ் வாங்கிக் கொடுக்க அடுத்த ரவுண்டு கவியாழியும் மாட்டிகிட்டார். அதுலயும் திருப்தி அடையாம என் கிட்ட " சார்! நீங்க  புக் போட்டிருக்கீங்களா"ன்னு கேக்க அக்கறையா கேக்கறதா நினச்சி இல்லன்னு சொல்ல அடுத்த வருஷம் போடப் போறீங்களான்னு   திருப்பியும் கேட்க அடுத்த ரவுண்டு ஜூசுக்கு அடி போடறதை புரிஞ்சிக்கிட்டு இல்லேன்னு சொல்லி எஸ்கேப்.ஆயிட்டேன்

புக் வெளியிடுறதவிட ஜூஸ் செலவு அதிகாமாகும் போல இருக்கேன்னு நினைக்க வச்சு பதிவர்களை நூல் வெளியிடக் கூடாதுன்னு சதித்திட்டம் தீட்டிய சிவா பேச்சலராத் திரியறதாலதனா இந்த ஆட்டம் ஆடறார். அவர பேச்சு இலர் ஆக்கி கையது கொண்டு மெய்யது பொத்தி ஷாப்பர் பேக் தூக்க வைக்கனும்னு கங்கணம் கட்டிக்கிட்டு  நாலஞ்சு பேரு ரகசியமா கூடிப் பேசினங்கன்னு  ஒரு தகவல் சொல்லுது

  சும்மாவே  கைப்பேசி வாங்கி போன் போட்டு,  நடுவில கொஞ்சம் பையனைக் காணோம்னு தேடவச்சி டென்ஷன் ஆக்கி, அதைப் பதிவா போட்டு பட்டிக்காட்டாரை துப்பாக்கி  தூக்கி விஸ்வரூபம் எடுக்கற அளவுக்கு  அளவுக்கு செஞ்ச சிவாவுக்கு ,  பாடம் கத்துக் கொடுக்கிற ஒரே ஆள் பட்டிக்காட்டார்தான்னு முடிவு  பண்ணி அவரை அப்ரோச் பண்ணி இருக்காங்களாம்.

   அவரும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் சிவா  வீட்டுக்குப் போய் அவங்க அம்மாகிட்ட இருக்கறதையும் இல்லாததையும் சொல்லி ஒரு கால் கட்டு போட்டு அவரோட கொட்டத்தை அடுத்த புக் ஃபேருக்குள்ள அடக்கறதா ஒத்துக்கிட்டார்.
  இதுக்கு ஃபிலாசபியும், அஞ்சாசிங்கமும் ரகசிய ஆதரவு தெரிவிச்சி இருக்காங்களாம். இது சக்சஸ் ஆனா இன்னும் நிறையப் பதிவர்கள் நிறைய நூல் வெளியிடுவாங்கன்னு ஒரு கருத்துக் கணிப்பு சொல்லுது

*******************************************************************************************

திங்கள், 16 ஜனவரி, 2012

நானும் போனேன்! புத்தகக் கண்காட்சி 2012



     சென்னையிலே இருந்துகொண்டு புத்தகக் கண்காட்சிக்கு போகாமல் இருந்தால் நன்றாக இருக்குமா? 14.01.2012  அன்று நானும் போயிருந்தேன். தென் சென்னை பகுதியிலிருந்து புத்தகக் கண்காட்சி நடக்கும் இடத்திற்கு சரியான போக்குவரத்து வசதி இல்லாததால் இரு சக்கர வாகனம்,மின்சார ரயில்,பேருந்து என்று பயணம் செய்து கண்காட்சி நடக்கும் இடத்தை அடைய வேண்டி இருந்தது. 
     நல்ல கூட்டம் வந்திருந்தது. திறந்த வெளி அரங்க மேடையில் லேனா தமிழ்வாணனின் மகன் பேசிக் கொண்டிருந்தார்.தமிழ் வாணனின் பேத்தியை (இரண்டு வயது இருக்கும்) வேறு வாழ்த்துக்கூற அழைத்தார் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர். குழந்தை பேச மறுத்தால் பிறகு வேறு முயற்சி செய்யலாம் என்று கூறினார். நல்ல காலம் குழந்தை அழகாகப் பேசியது. (பார்வையாளர்கள் தப்பித்தார்கள்.). வாரிசுகளை முன்னிலைப் படுத்துவதில் எந்தப் பிரபலங்களும் விதிவலக்கல்ல.

   சற்று அருகில் சென்று பார்த்தபோது, அட! நம்ம T. ராஜேந்தர். பக்கத்தில் அவ்வை நடராஜன். அவர்களுடைய  பேச்சைக் கேட்க ஆவலாக இருந்தாலும் நேரமாகி விட்டதால் உள்ளே நுழைந்தேன். புத்தக வாசனை மூக்கைத் துளைத்தது. எந்தப் புத்தகங்களை வாங்குவது என்று தெரியாமல் பல கடைகளை பார்த்துக்கொண்டே சென்று ஒரு சில புத்தகங்களை தேர்ந்தெடுத்து வைத்துக்கொண்டு ஒரு சுற்று வந்தபின் பிறகு வாங்கலாம் என்று முடிவு செய்தேன்.
       கடை எண் 334 டிஸ்கவரி புக் பேலஸ் இல் நமது கேபிள் சங்கர் வாசகர்களுடன் ஜாலியாகப் பேசிக் கொண்டிருந்தார். ஒரு நண்பர் கேபிள் ஐ சமீப காலமாக கலாய்த் துக்கொண்டு வரும் (http://spoofking.blogspot.com)சாம் ஆண்டெர்சன் பற்றி அவரிடமே கேட்டுக்கொண்டிருந்தார். நானும் என்னை பிளாக்கர் என்று அறிமுகப் படுத்திக்கொள்ள விரும்பினேன். என்றாலும் எனது தன்மானம் தடுத்தது. காரணம்;  Face Book இல் எனது நண்பராய் இருந்த கேபிள் என்னை  friend list  இல் இருந்து எடுத்து விட்டார்.          (நண்பர்களின்  எண்ணிக்கை  5000 த்திற்கும் மேல் போய் விட்டதால் யாரோ ஒருவர் நண்பர்களில் சிலரை தூக்கி விடுங்கள் என்று கூற நண்பர்கள் லிஸ்ட்டில் நான் காணாமல் போனேன்.)  
         அதை விடுவோம். மூன்று மணிநேரம் கடந்து விட்ட நிலையில் 
ஜவஹர்லால் நேரு எழுதிய GLIMPSES OF WORLD HISTORY, சேத்தன் பகத் எழுதிய ONE NIGHT @ THE CALL CENTER, கே.என். ஸ்ரீநிவாஸ் எழுதிய 'கண்டு  பிடித்தது  எப்படி?' விகடன் பிரசுரத்தின் 'அச்ச ரேகை தீர்வு ரேகை', கீதா பிரஸ்ஸின் 'அத்யாத்ம ராமாயணம்' உள்ளிட்ட புத்தகங்களை வாங்கிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தேன்.
 (அப்பாடா! புத்தகக் கண்காட்சி பற்றிய பதிவைப் போட்டுவிட்டேன். )

***********************************************************************************************
இதையும் படிச்சி பாருங்க! கருத்து சொல்லுங்க 


நானும் நானும்  
தானே! உன்னோட தாக்கம் இன்னும் தீரலையே!
ஏ.ஆர்.ரஹ்மான் - வாழ்த்துக் கவிதை!
யாரோ பார்க்கிறார்கள்!