என்னை கவனிப்பவர்கள்

சனி, 15 அக்டோபர், 2011

புரியாத சோகம்

நிலவைப் பிடிக்க 
நெடுநாள் யோசித்து  
ஒரு நாள் வலை வீசினேன்
அன்று  அமாவாசை
என்பதை அறியாமல்!

சாதனையை 
அணைக்க நினைத்த நான் 
வேதனைத் தீயை 
வெறுங்கையால்  அணைக்கிறேன் 

மண்ணில் கூட 
நடக்கத் தெரியாத நான் 
விண்ணில் பறக்க 
ஆசைப்படுகிறேன் 

ஒருவழிப் பாதையில்
பயணம்  செய்துகொண்டு 
எதிர் வாகனத்தை 
எதிர் பார்க்கிறேன் 

வீதியில் எதையோ 
தொலைத்துவிட்டு 
வீட்டில் தேடுகிறேன்.

இன்னமும் தேடுகிறேன் 
இழந்தது எது 
என்று  தெரியாமல்.

வெளிச்சம் வேண்டுமென்று 
விளக்கைத் தேடினேன் 

விளக்கு என்னவோ
அருகில்தான் 
வெளிச்சம் மட்டும் 
ஏன் வெகு தூரத்தில்?










கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895