என்னை கவனிப்பவர்கள்

ஞாயிறு, 9 அக்டோபர், 2011

நிலா

வானப்பெண் 
இரவில் சூடிய 
சந்தனப்பொட்டு 

விண்வெளி வீதியில் 
உலா வரும் 
ஒளிக்கதிர் 

நட்சத்திரத் தொண்டர்கள் 
புடைசூழ 
இரவு மைதானத்தில் 
பேரணி நடத்தும் 
பெருந்தலைவர் 

கறுப்புத் தட்டில் 
கணக்கற்ற  நட்சத்திரக் 
கற்கண்டுகள் நடுவே 
வைக்கப்பட்ட லட்டு 

வள்ளுவன் முதல் 
வைரமுத்து வரை 
கவிஞர் பலருக்கு 
சேதிகள் பல சொன்ன 
போதிமரம் 

இருட்டைப் போக்கும் 
ஒளியை 
இரவல்  வாங்கியேனும் 
இப்பூமிக்கு 
ஈந்தளிக்கும் வள்ளல் 

வான ஏட்டில் 
இறைவன் எழுதிய 
இணையிலா 
இயற்கை கவிதை 
****************************************************************

 படித்துவிட்டீர்களா? 













1 கருத்து:

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895