என்னை கவனிப்பவர்கள்

செவ்வாய், 16 அக்டோபர், 2018

96 ம் சின்மயி x வைரமுத்து #MeToo

   
 வைரமுத்து நான் மதித்து வந்த ஒரு கவிஞர்.  அற்புதமான சொல்லாற்றல் உடையவர். திரைப் பாடல்களுக்கும் கவிதை உணர்வைத் தந்தவர். அவருடைய பல கவிதைகளை நான் என் வலைப் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.  அவரது கவிநயம் கண்டு வியந்திருக்கிறேன்.
       
       திரை உலக பிரபலங்கள் பெரும்பாலும் அரசியல் சூழ்நிலைக்கேற்ப தங்களை மாற்றிக் கொள்வார்கள். .ஆனால் ஜெயலலிதா கோலோச்சியபோது கூட கலைஞருடனான நெருக்கத்தை அவர் விடவில்லை வைரமுத்து. எனினும் அவர் அவ்வப்போது மோடியையும் புகழ்ந்து பேசவும்  தயங்கியதில்லை. அவர் புகழுக்கும்  விருதுகளுக்கும் ஆசைப் படுபவர்.அதை எப்படியாவது வாங்கும் திறமை படைத்தவர் என்பது பரவலாக அறியப்பட்ட ஒன்று. ஆனால் பாலியல் புகாருக்கு ஆளாவார் என்பது எதிர் பாராத ஒன்று

       #MeToo tag  மூலம் இந்தியா முழுதும் பல பிரபலங்களின் பாலியல் தொல்லைகள் அம்பலப் படுத்தப் பட்டு வருகின்றன. அதிகாரம் செல்வாக்கு பணபலம் இவற்றால்  தவறுகள் யாருக்கும் தெரியாது என்று இருமாப்புடன் இருந்தவர்களுக்கு வில்லனாய் வந்தது #MeToo.  தமிழ்நாட்டில் இந்த இயக்கத்தில் முதலில் சிக்கிக் கொண்டார் வைரமுத்து .அவரைப் பற்றி சின்மயி பாலியல் தொல்லை குற்றச்சாட்டு கூறியுள்ளது . தற்போது சமூக வலைதளங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில்  விவாதப் பொருளாக மாறியுள்ளது. பெரும்பாலான பெண்கள் சின்மயிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆண்களைப் பொறுத்தவரை பிஜேபி யினர் மற்றும் ஆண்டாள் பற்றிய வைரமுத்துவின் கருத்தின்மீது கோபம் கொண்டவர் மட்டுமே இவ்விஷயம் சார்ந்து வைரமுத்துவை கடுமையாக விமர்சித்துள்ளனர்.  

     இனம் சார்ந்த நோக்கில் ஆண்களில் பலர் சின்மயின்மீது குற்றம் சுமத்தவும் தவறவில்லை.  நீ என்ன யோக்கியமா என்ற தொனியில் ஆபாசமான வசை பாடல்களை காணமுடிகிறது. பெரியாரிய வாதிகள் . பலர் இன்று அமைதி காக்கின்றனர்.  . இதற்கு சின்மயியும் ஒரு காரணம். ஏற்கனவே  தன்னை பார்ப்பனர் என முன்னிலைப் படுத்திக் கொண்டதில் பார்ப்பனர் அல்லாதவரின் ஆதரவை இழந்தார்.. . இதனால் ஆண்டாளுக்கு ஆதரவான பார்ப்பன சதி என்று கூறிவிடவும் முடியவில்லை. காரணம் பார்ப்பனர் சிலரும்  #MeToo இல் சுட்டிக் காட்டப்பட்டனர். ஆனால் அவர்கள் வைரமுத்துவைப் போல் புகழ் பெற்றவர்கள் அல்ல என்பதால் கவன ஈர்ப்பு பெறவில்லை. என்மீது வழக்கு தொடருங்கள் நான் நல்லவனா கெட்டவனா என்பதை நீதி மன்றம் முடிவு செய்யட்டும் என்று பதிலுரைத்துள்ளார் வைரமுத்து. ஆனாலும் இன்று வரை புகார்கள் தொடர்கின்றன.

     ஒரு சிலர் பெட்ரோல் விலை உயர்வு, ரபேல் விவகாரம் போன்றவற்றை மறப்பதற்காக திட்டமிடப்பட்டு பரப்பப் படுகிறது என்கின்றனர். ( அப்படி எல்லாம் கஷ்டப் படவே தேவை இல்லை. எப்படி இருந்தாலும் ரெண்டு நாள்ல நாமளே மறந்துடுவோம்.)

       இதனை ஏன் சின்மயி அப்போதே சொல்லவில்லை என்ற கேள்வி எழுகிறது. நடைமுறை  வாழ்க்கையில் சில விஷயங்கள் சில ஆண்டுகளுக்குப் பின்னரே சுட்டிக் காட்டப்பட்டு பிரச்சனை தொடங்கப் படுகிறது.  ..  மனைவி திடீரென்று ஒரு நாள் கணவனிடம் முதன் முதல்ல உங்க அம்மா என்ன பண்ணாங்க தெரியுமா என்று மாமியார் தொல்லைகளை கோபத்துடன் கூறுவார். இத அப்பவே சொல்ல வேண்டியதுதானே என்றால்,  ’அப்ப எங்க சொல்ல விட்டீங்க?’ என்று தொடங்கி நீங்க செஞ்சதை சொல்லவா என தொடர்வதும் நடைமுறை!
ஆண்கள் தங்கள் திரும்ணத்திற்கு முந்தைய காதலையோ அல்லது அந்தரங்க சம்பவங்களையோ தன் நண்பர்களிடம் கூச்ச மின்றி குற்ற உணர்வின்றி பகிர்ந்து கொள்ள் முடியும். ஆனால் எல்லா பெண்களும் தங்கள் நெருங்கிய தோழிகளிடம் கூட பகிர்ந்து கொளவார்களா என்பது ஐயமே

        வைரமுத்து சபலம் அடைந்திருக்கலாம். நெறி பிறழ்ந்திருக்கலாம்.தன் செல்வாக்கை பயன்படுத்தி இருக்கலாம் ஆனால் காமக் கொடூரன் அளவுக்கு சித்தரிப்பது சற்று அதிகமோ என்றே தோன்றியது. ஆனால் வைரமுத்துவின் மீது புதுப்புது புகாராக முளைத்துக் கொண்டிருப்பது அவர் மீதான நம்பிக்கையை குலைத்துவிட்டது.  பிரபலங்கள் இதனை பாடமாகக் கொள்வது நல்லது
.
   #MeToo  வில் பெண்கள் தைரியமாக தங்கள் அனுபவத்தை  பகிர்கிறார்கள். ஆனால் 96 படத்தை பார்த்து விட்டு ஆண்கள் ( நான் இன்னும் பார்க்கவில்லை) உருகி உருகி தங்கள்  பழைய காதலை முகநூலில்  பகிர்ந்தார்கள்.  அவர்கள் அனைவ்ரும் ஆண்களே. ஆனால் இதில் ஒரு பெண்கூட தன் காதலை  பகிர்ந்ததாகத் தெரியவில்லை.  முந்தைய தலைமுறை ஆண்களின் மனதை அறிந்தவர்கள் பெண்கள். . அதனால் இதுபோன்ற விஷயங்களை பகிர்ந்து சிக்கலை உருவாக்கிக் கொள்ள விரும்புவது இல்லை.

 ஒருபக்கம் #MeToo ஆண்களின் (பெரும்பாலும் வயதானவர்கள்) இன்னொரு பக்கத்தை வக்கிரங்களை   அடையாளம் காட்டுவது போலவே அடுத்த தலைமுறை ஆண்களின்  மனமாற்றத்தையும் (பெருந்தன்மையை?)  வெளிக்காட்டுகிறது என்று கூறலாம் கணவனிடம் தன் சிறுவயதில் நடந்த #MeToo சம்பவங்களை தைரியமாக பகிர்ந்து விட முடியாது. அதை கணவன் சரியாகப் புரிந்து கொள்வானா என்பது ஐயமே.ஆனால்  அதனை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் ஆண்களுக்கு இப்போது வந்திருக்கிறது என்பதை சம்பவங்கள் உணர்த்துகின்றன. ஆனாலும்  தன் மனைவியின் கடந்த கால அந்தரங்க சம்பவங்கள் வெளியில் தெரிவதை எந்தக் கணவனும் விரும்பமாட்டான் என்பது நிதர்சனம். ஆனால்  தற்போது தைரியமாக சொல் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சிலர் ஆதரவு அளிக்கிறார்கள். அதனால் பலரும் உசுப்பிவிடப் பட்டது போல் தங்களுக்கு நேர்ந்ததை கொஞ்சம் மிகைப்படுத்தியும்  தைரியமாக சொல்கின்றனர்..

 #MeToo வால் சில நன்மைகள் விளைந்தாலும் சில குறைகளும் உண்டு.  பெண்கள் ஒரு வித கழிவிரக்கத்தை தங்கள்மீதே ஏற்படுத்திக் கொள்ளவும் வாய்ப்பு உண்டு. இயல்பாக நடந்தவற்றைக் கூட பாலியல் சார்ந்ததாக இருந்திருக்குமோ என்ற எண்ணத் தோன்றும்.. இதைப்  பற்றி பேசும் பெண்கள் எல்லாம் இது உங்கள் வீட்டில் நடக்கலாம். பக்கத்து  வீட்டில் நடக்கலாம் என்று கூறுவதை காணலாம். இதனால்  தினந்தோறும் இப்படித்தான் நடக்கிறதோ என்ற மாயை உருவாக்கி விடும் அபாயம் உள்ளது. #MeToo வைக் காண்போர் நமக்கு   10 வயது இருக்குபோது தாய்மாமா என்னை இடுப்பைப் பிடித்து தூக்கி மடியில் உட்காரவைத்துக் கொண்டு கன்னத்தை கிள்ளி கொஞ்சினாரே அது கூட பாலியல் வன்முறையாக இருக்குமோ என்று ஆராயத் தொடங்கினாலும் ஆச்சர்யப் படுவத்ற்கில்லை.

     பொது வாழ்வில் உள்ளவர்கள் பிரபலங்களின் முகத்தை தோலுரித்துக் காட்டப் படுவதால் இனி தவறுகள் குறைவதற்கான வாய்ப்புகள் உண்டு. இதன் மூலம் எந்த பிரபலத்தின் மீதும் சேற்றை வாரி இறைத்து விடமுடியும். அதனால் பெண்கள் உண்மை எனும் பட்சத்தில் மட்டும் பகிர வேண்டும்.  ஆனால் நடைமுறை வாழ்வில் வீடுகளில் அலுவலகங்களில் இத் தொல்லைகளை அனுபவித்தவர்களுக்கு இதனால் அதிகப் பயன் ஏதுமில்லை/ இன்னும் சில நாட்களில் #MeToo மறக்கப் பட்டுவிடும்.  


15 கருத்துகள்:

  1. கத்தி மேல் நடப்பது போல... எதை நம்புவது என்று புரியாத நிலை. ஒரு உண்மைக்கு எதிராக பல பொய்கள் வரிசை கட்டும்போது உண்மை திணறும் நிலை ஏற்படும், நீர்த்துப்போய்விடும்.

    பதிலளிநீக்கு
  2. உண்மைதான் ஐயா
    பிரபலங்கள் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும் வரை பரபரப்பாக இருக்கும் அதன் பின் தொலைக் காட்சிகள் கண்டுகொள்ளாவிட்டால், மீ டூ என்று ஒரு அமைப்பு இருப்பதே மறந்து விடும்.

    பதிலளிநீக்கு
  3. ஆமா சார்., நானும் உங்களப் போலத்தான் நினைத்தேன். may be அவர் சபலம் அடைந்திருக்கலாம், ஆனா தப்பா நடந்திருக்க மாட்டார்.. சின்மயி திருமண போட்டோல , திருமண வீடியோல வைரமுத்துட்ட ஆசீர்வாதம் வாங்கும் சின்மயி. இப்போது ஏன் பொங்க வேண்டும் என்பது சிந்திக்க வேண்டிய ஒன்று. தன்னுடைய சிவிஸ் அனுபவங்களை தொகுத்து " ஒரு கிராமத்துப் பறவையும் சில கடல்களும்" புத்தகத்தில் எழுதிருக்கார். சத்தியமாக , நிச்சயமாக என்னால் சொல்ல முடியும் தெளிவான பார்வை, தெளிவான சிந்தனை உடைய வைரமுத்து சின்மயியை சீண்டியிருப்பார் என நம்பமுடியவில்லை.. வேண்டுமானால் வேண்டியிருக்கலாம் !! விருப்பத்தை கேட்பது நாகரீகம் தானே.. விருப்பத்தை கேட்டு விருப்பம் இல்லை என்று சொன்ன பிறகு தொந்தரவு செய்யாமல் இருப்பதும்
    நாகரீகம் தான்..

    பதிலளிநீக்கு
  4. வை.மு. யோக்கியன் என்று உறுதியாக சொல்ல இயலாது காரணம் துறை(ரை)யின் நிலைப்பாடு அப்படி.

    தான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் தனது நூல்களை அதிகாரத்தை வைத்து லட்சக்கணக்கான ரூபாய்க்கு விற்று வந்தவன்.

    சி.ம.இவள் உத்தமியும் கிடையாது வாய்ப்புக்காக பாடகர் ஹரிஹரனை இசைக்கடவுள் வருகிறார் என்று சொல்லி
    துபாய் ஸ்கூல் சபையில் இருந்த பல்லாயிரம் நபர்களை (கில்லர்ஜி ஒருவனைத் தவிர) எழுந்து நிற்க வைத்து ஜால்ரா அடித்தவள்.

    ஆக இவர்கள் மொள்ளமாறிப் பயலும், முடிச்சவித்த சிறுக்கியும்தான் இவர்களது கற்பைப்பற்றி பெரிதாக நினைக்க ஒன்றுமேயில்லை.

    என்னுடைய வருத்தமெல்லாம் சின்மயி புருசனை தூக்கிப்போட்டு ராவணும்.

    (அப்படி எல்லாம் கஷ்டப் படவே தேவை இல்லை. எப்படி இருந்தாலும் ரெண்டு நாள்ல நாமளே மறந்துடுவோம்.)

    ஹா.. ஹா.. உங்களுக்கு அருமையான புரிதல் நண்பரே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக மிக சரியான பார்வை. அற்புதம் நண்பா. நான் எழுதியிருந்தால் கோபத்தில் இன்னும் தவறாக எழுதியிருப்பேன். நீங்க சரியாக எழுதிஇருக்கீங்க. நன்றி.

      நீக்கு
  5. Someone misbehaved with you? just keep off from him! If you pretend like nothing happened for 13 years? And mean while you invited him for your wedding as if nothing happened??? Then THERE IS SOMETHING WRONG with you and your "approach"

    How can you invite such a person to your wedding? I dont understand. Ok, if you had forgiven him, WHY BRING UP again NOW??

    நான் பார்த்த வரைக்கும் தமிழ் பண்டிட்கள், கல்லூரியில் தமிழ் சொல்லிக்கொடுக்கும் பேராசிரியர்கள் பலர் கல்லூரி மாணவிகளீடம் இது போல் 'ஸொல்லக்கூடாத" கவிதை சொல்லி வழிவார்கள். அவர்கள் வரம்பு மீறூவது அவர்களூக்கே தெரியாது. பார்க்கப் பரிதாபமாயிருக்கும் அவர்கள் தன்னை மறந்து வழிவது. பொதுவாக அதுக்கு மேலே அவர்கள் தொடுவதோ அல்லது அதற்கு மேலோ எதுவும் செய்வதில்லை.

    அப்பா வயது தாத்தா வயது ஆம்பள எல்லாம் 20-30 வயது பெண்கள் எல்லோரையும் மகளாக நினைப்பதில்லை. அப்படி யாரும் நினைப்பதாக சொன்னாலும் அது வெறூம் நடிப்பே! வைரமுத்து நடத்தை பற்றீ சொல்லும்போது அதுபோல் நான் பார்த்த தமிழ் பேராசிரியர்கள்தான் என் கண் முன்னால் நிற்கிறாங்க.

    ஒன்ணு: ஹோட்டலுக்கு அழைத்ததாக சொல்லப்படும் குற்றச்சாட்டு.

    ரெண்டு: எதையோ செய்யவில்லை என்றால் நான் அந்த பாலிட்டிசியனிடம் உன்னைப் பத்தி சொல்லுவேன். உன் காரியர் அவ்வளவுதான்.

    எனக்கென்னவோ இந்தம்மாவை எட் ரூம்க்கு அழச்சதா தோனல. சுவிட்சர்லாந்தில் நண்பர்கள் இல்லாமல் சும்மா "சாட் பண்ண" நிச்சயம் அழைத்து இருக்கலாம். அதை சாதாரணமாகக் கூட எடுத்துக்கலாம்.

    ரெண்டாவது விசயம், பவர் கேம், எல்லாத் தொழிலும் உண்டு அறீவியல் துறயிலும்- ஆண் பெண் பாகுபாடெல்லாம் கெடையாது. வலிமையானவர் எளீயவரை மிரட்டுவது, உனக்கு நல்ல ரெக்கமென்டேசன் தர மாட்டேன். உனக்கு நல்ல வேலை வாய்ப்பு அமைத்துத் தர மாட்டேன். என்றூ மிரட்டுவது.

    இது ரெண்டுமே நடந்து இருக்கலாம். பொதுவாக இதையெல்லாம் தட்டி விட்டுட்டுப் போயிடுவாங்க.

    இப்போ ஊத ஆரம்பிச்சாச்சா? It is going to be a problem for BOTH of them. We all know, NOBODY is perfect. When you pick on one person, someone else is going to pick on you, heartlessly- just like what you do. Get ready to face it!









    பதிலளிநீக்கு
  6. வைரமுத்து நக்கி வருணுக்கு ,

    சின்மயி மட்டுமல்ல வேறு இரண்டு பாடகிகள் வைரமுத்து மேல் புகார் அளிச்சிருக்காங்க
    இப்போ இதுக்கு என்ன சொல்ல போற

    பதிலளிநீக்கு
  7. ***பெயரில்லா17 அக்டோபர், 2018 ’அன்று’ முற்பகல் 9:22

    வைரமுத்து நக்கி வருணுக்கு ,

    சின்மயி மட்டுமல்ல வேறு இரண்டு பாடகிகள் வைரமுத்து மேல் புகார் அளிச்சிருக்காங்க
    இப்போ இதுக்கு என்ன சொல்ல போற ***

    அனானிமசா வந்து நிக்கும் தேவடியா மகன் உன்னைப் போல இன்னொரு தேவடிஆமகன் அனானிமசா வந்து சொல்லியிருக்கலாம். யாருக்குத் தெரியும். உன்னமாதிரி எத்தனை ஈனப் பயலுக தெரிகிறானுகள்ணு

    உன்னை மாதிரி ஏகப்பட்ட தேவடியாமகன் கள் இருக்கானுகடா தமிழ்நாட்டில்!

    பதிலளிநீக்கு
  8. ஏன்டா, உன் ஆத்தாட்ட சொல்லிட்டு வந்துட்டுயா? வருண் ட்ட செருப்படி வாங்கிட்டு வரப் போறேன். அனானிமசா போனதால நான் செருப்படி வாங்கினது எனக்கு மட்டும்தான் தெரியும்னு?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வைரமுத்து சூ -- நக்கி வருண் ,

      உனக்கு என்னை தெரியலையா ?
      பாவம்டா நீ
      உன் பொண்டாட்டிக்கு என்னை ரொம்ப தெரியும்டா

      Rishabraj Rajendra

      உன்னையும் தான் இங்கே யாருக்கும் தெரியாதுடா
      உன் பொண்டாட்டியால் எனக்கு உன்னை தெரியும்டா

      நீக்கு
    2. உன்னைமாதிரி எத்தனையோ ஈனப்பயலுக என்னிடம் செருப்படி வாங்கி இருக்கானுக. அதுவும் உன்னை மாதிரி அனானிமஸ் பொறூக்கிப் பயலுக ஏகப்பட்ட பேர்.

      உன்னை மாதிரியேதான் சில ஈனப்பயலுக மீ டூ ல வந்து அனானிமசா, இவன் எனக்கு கவிதை சொன்னான், என் நம்பரைக் கொடுத்து ஏதாவது சான்ஸ் கெடைக்கிதானு கேட்டேன். பேசாமல் வேலையை வாங்கிக் கொடுஹ்ட்துட்டுப் போகாமல், கால் பண்ணீ கவிதை சொன்னாரு னு சொல்றானுக சில ஈனப்பயலுக- உன்னை மாரியேதான். உன்னைப் போலவே மீ டூவில் பலவிதமான பொறூக்கிப் பயலுக திரிகிறானுக.

      என் தோழி கையப் பிடிச்சான். என ஆத்தாக்கு கவிதை சொன்னான், என் ஆத்தா ஆண்டாளூக்கு கவிதை சொன்னான் அப்படி இப்படினு..

      கீழே பாரு..

      ****
      போலி புகார்: இனி உங்கள் பேச்சை யார் நம்புவார்கள் சின்மயி?

      கல்யாண் மாஸ்டர்

      கல்யாண் மாஸ்டர் மீது விளையாட்டாக ஒருவர் பொய் புகார் தெரிவிக்க அதை சின்மயி ட்விட்டரில் வெளியிட்டார். அதன் பிறகு அந்த நபர் தான் விளையாட்டுக்காக அப்படி செய்ததாக கூறியதுடன் சின்மயி இப்படித் தான் யார் என்ன அனுப்பினாலும் கேள்வி கேட்காமல் ட்வீட் செய்கிறார். அவர் பேச்சை நம்ப வேண்டாம் என்றார். ****

      உன்னமாரி அனானிமசா வர்ர தேவடியாமகனுகள மொத்தல்ல கொளூத்தனும்..

      நீக்கு
  9. மேல்நாட்டார் நாகரிக அடிப்படையில் இந்தியாவில் நுழைந்தனவற்றுள் இதுவும் ஒன்று. பலவற்றை இந்தியாவுடன் ஒத்துப்பார்க்க முடியாது. மீடூ செயல்படுதோ இல்லையோ, அது ஆரம்பித்துவைத்த வக்கிரங்களால் (நம் தொலைக்காட்சி தொடர்களைப்போல) பல பாதிப்புகள் ஏற்படும்.

    பதிலளிநீக்கு
  10. METWO வினால் ஒரு நல்லது நடந்திருக்கிறது. இனிமேல் எந்த ஜொள்ளு பார்ட்டியும்
    பெண்கள் மீது கை வைக்க அச்சப்படுவார்கள். சுய கட்டுப்பாடு இல்லாத ஆண்களும் பெண்களும் ஆபத்தானவர்கள். கலைத்துறையில் குறிப்பாக கவிஞர்கள் பெண்கள் விடயத்தில்
    பலவீனமானவர்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். தைரியமாக இனிமேல் பெண்கள்
    ஆண்களின் அத்துமீறலை பகிரங்க படுத்தலாம்.

    பதிலளிநீக்கு
  11. மீ டூ வினால் ஆண்களுக்கு ஒரு எச்சரிக்கை விடப்பட்டிருந்தாலும், இது நீர்த்துப் போனால் அவர்களின் திமிர்(மன்னிக்கவும், எனக்கு வேறு வார்த்தை தெரியவில்லை) அதிகமாகிவிடும் அபாயம் உள்ளது. கலைஞர்கள் இதைச் செய்வது கண்ணாடி வீட்டிர்க்குள் இருந்து கொண்டு கல் எறிவது போல.

    பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895