என்னை கவனிப்பவர்கள்

திங்கள், 11 பிப்ரவரி, 2019

வடிவேலு செல்ஃபோனை தட்டி விட்ட து ஏன்?



நம் அனைவரின் மனம் கவர்ந்த நடிகர் வடிவேலு. வடிவேலுவை கற்பனைப் பாத்திரமாகக் கொண்டு நகைச்சுவைக் கதைகள் எழுதி வந்தேன்.
நடிகர் சிவகுமார் முதல்முறை செல்போனை தட்டி விட்டபோது வடிவேலு இப்படி செய்திருந்தால் எப்படி இருக்கும் என்று என்று கற்பனையை தட்டி விட்டு ட்ராப்டில்  வைத்திருந்தேன். அதை வெளியிடுவதற்குள் அந்த செய்தி அவுட் ஆப் டேட் ஆகி விட்டது. அதனால் அப்படியே விட்டு விட்டேன். மீண்டும் விரைவிலேயே அந்த வாய்ப்பு கிடைக்கும் என நினைக்கவில்லை. இது முழுக்க முழுக்க கற்பனையே.

------------------------------------------------------------------------------------



     நீண்ட நாட்களுக்குப் பிறகு வடிவேலுவை சந்திக்கின்றனர் அவரது நண்பர்கள்
“அண்ணே! உங்களைப் பாத்து எவ்வளவு நாளாச்சு. எப்படி  இருக்கீங்க நீங்க இல்லாம எங்களை யாரும் கண்டுக்க மாட்டேங்ககறாங்க:

”என்னமோ இருக்கேண்டா போறபோக்கை பாத்த நம்மள மறந்துடுவாங்க போல இருக்கே!”

”சினிமாவுல நீங்க வரலன்னாலும் மக்கள் உங்கள மறக்கலேன்னே!இன்னிக்கும் மக்கள நீங்கதான் சிரிக்க வச்சுகிட்டிருக்கீங்க , உங்க வசனத்த சொல்லித்தான் மாம்ஸ் போடறாங்களாம்.”

”அது மாம்ஸ் இல்லடா மீம்ஸ்டா!. கழுத விடு எப்படியோ நம்மை ஞாபகம் வச்சுக்கிட்டிருந்தா சரி”

”இப்படியே விடக்கூடாதுண்ணே. பெரிய ஆளுங்கள்ளாம் அடிக்கடி சொட்டர்ல  ஸ்வீட் போடாறங்க நீங்களும் அடிக்கடி போடனும்ணே

”என்னடா சொல்லறீங்க .சொட்டர்ல  ஸ்வீட் போடறாங்களா? ” 
 அவங்களுக்கெல்லாம் வருமானத்துக்கு வழி இல்லாம போயிடுச்சா இது என்னடா கஷ்ட காலம்”

”ஐயோ இப்படி ஒன்னுமே தெரியாம இருக்கீங்களேன்னே அதாண்ணே  இண்டர் நெட்ல போடறாங்களே  செல்போன்ல கூட பாக்கறாங்களே?”

 “அடேய் அது  சொட்டர் இல்லடா டுவிட்டர் அதுல கருத்து சொன்னா அதுக்கு பேரு டுவீட் .அதெல்லாம் உங்களுக்கு எங்க தெரிய போகுது”
”அட! இவ்வளவு தெரிஞ்சு வச்சுருக்கீங்களே. நீங்க சொல்லாத கருத்தா. சும்மா அப்பப்ப அடிச்சு விடுங்கண்ணே  . ஒல்டு பேமஸ் ஆயிடுவீங்க.

”முடியலடா....அது ஓல்டு பேமஸ் இல்லடா வோர்ல்ட் பேமஸ்
ஏற்கனவே வாயால கெட்டது போதும். அதுல எதயாவது சொல்லி பிரச்சனையில மாட்டிக்க சொல்றியே  நமக்கு எதுக்குடா வம்பு.”

”அட போங்கண்ணேஉங்கள வச்சு நாங்களும்  பேமஸ் ஆகலாம்னு பாத்தா......”
பேசிக்கொண்டிருக்கும்போதே யாரோ ஒருவர் வர

அண்ணே உங்களை தேடி யாரோ வந்துகிட்டிருக்காங்க.

”வடிவேலு சார்! எப்படி இருக்கீங்க? . நாங்க புதுசா பெரிய துணிக்கடை திறக்கப் போறோம். எங்க குடும்பமே உங்க ரசிகங்க. அதனால கடையை நீங்கதான் திறந்து வைக்கணும்.எங்களுக்கும் விளம்பரமா இருக்கும்.

‘அதெல்லாம் முடியாதுங்க இப்ப நான் வெளிய வர்றதில்ல. நாலு பேர் நாலு கேள்விய கேட்பான். நீங்க யாருன்னுகூட கேப்பான். கடைய திறக்கறது விழாவுக்கு போறதுன்னு ஒரு வேற ஒருத்தர் இருக்காரே அவர கூப்பிடலாமே”

“அவரதான் கூப்பிடலாம்னு நினச்சோம்.ஆனா அவரு   ரொம்ப கோவக்காரரா இருக்காராம் அதுவும் இல்லாம மணிக்கணக்கா பேசுவாராம். அதனால உங்கள கூப்பிடறோம். அதுவும் இல்லாம   நீங்க ரொம்ப நல்லவரு. எவ்வளவு பணம் கேட்டாலும் கொடுக்கறோம் நீங்க வந்தா நல்லா இருக்கும்”

வடிவேலு யோசிக்க

நண்பர்கள் ”ஒத்துக்கங்கண்ணே. பணம் தரேன்னு சொல்றாரே நமக்கும் செலவுக்கு ஆகும்.
”எனக்குன்னு சொல்லு. உங்கள ஏண்டா சேத்துக்கறீங்க”.
“எந்த பங்கஷனுக்கு போனாலும் நாலுபேரோட போனாத்தானே பந்தாவா இருக்கும். “

வந்தவரைப் பார்த்து ”சரி உங்களுக்காக ஒத்துக்கறேன்.  என்னைக்குனு சொல்லுங்க நாங்க எல்லாரும் வருவோம் . வண்டி அனுப்புங்க.”

கடைக்காரர் ”ரொம்ப நன்றி சார் பக்காவா ஏற்பாடு பண்ணிடறேன். ஒரே ஒரு ரிக்வொஸ்ட். யாரும் ஃப்ங்ஷன்ல யாரும் செல்ஃபி எடுக்காம பாத்துக்கறோம் அப்படி எதிர்பாராவிதம யாராவது எடுத்தா கண்டுக்கக்கூடாது”
“சே!சே! செல்ஃபி1 குல்ஃபி1 எத வேணாலும் எடுத்துங்க. எனக்கு ஆட்சேபணை இல்ல’
அவர் கிளம்பி சென்றார்.

”நண்பர்களைப் பார்த்து கூட வந்து மானத்த வாங்கக் கூடாது. டீசண்டா நடந்துக்கணும்.  என்ன மாதிரி நல்லா ட்ரெஸ் பண்ணிக்கிட்டு வரணும் ஒகே”

   ஃபங்ஷன் அன்றூ கடை ஓனர் கார் அனுப்ப வடிவேலுவும் அவர் நண்பர்களும் கடை திறப்பு விழாவுக்கு புறப்பட்டனர். கடை வாசலில் கார் நின்றது. விளம்பரம் செய்திருந்ததால் கூட்டம் ஏராளமாக வந்திருந்தது.
    கார் நிற்கும் இடத்திலிருந்து கடை வாசல் வரை சிவப்புக் கம்பளம் சிவப்புக் கம்பளம் விரிக்கப் பட்டிருந்தது.
கடை முதலாளி கார் கதவை திறந்து வணக்கம் சொல்லி வரவேற்க. வடிவேலுவும் அவர் நண்பர்களும் இறங்கினர்.:
“எல்லாரும் வழி விடுங்க .வடிவேலு சார் வந்திருக்கார் ” என்று கூற
அனைவரும் வடிவேலுவைப் பார்த்ததும் சந்தோஷமாக குரல் கொடுக்க  கம்பீரமாக நடந்து சென்றார் வடிவேலு

திடீரென்று வடிவேலு  பின்னாலிருந்து அழகான ஒரு பெண் செல்போனுடன் ஒடி வந்து செல்ஃபி எடுக்க மூயற்சி செய்தார்.

”அண்ணே! அண்ணே! ஒரு பொண்ணு செல்பி எடுக்க வருதுண்ணே!.”

”வரட்டும்டா. எத்தனை நாள்தான் உங்களோடவேசெல்பி எடுத்துக்கறது”.

அந்தப் பெண் வடிவேலுக்கு அருகில் வந்து செல்போனை இப்படியும் அப்படியும் அட்ஜஸ் செய்து செல்பி எடுக்க தயாராக இருக்க .

“அண்ணே! சும்மா கம்பீரமா   பாருங்கண்ணே!” என்று ஒருவன் சொல்ல

செல்ஃபோனை உற்றுப் பார்த்த  வடிவேலுவுக்கு என்ன ஆச்சோ தெரியவில்லை தெரியவில்லை  திடீரென்று  பெண்ணின் கையில் இருந்த செல்போனை  தட்டி விட்டு வேகமாக திரும்பி கடகட வென ஒடி காரில் ஏறிக்கொண்டார்.

    ஐய்யய்யோ! வடிவேலு கோபித்துக் கொண்டாரே என்று அனைவரும் ஓடிவர,

”வடிவேலு சார்! மன்னிச்சுக்கோங்க .கோவப்படாம தயவு செஞ்சு கடைய திறக்க வாங்க.  இனிமே யாரும் யாரும் செல்பி எடுக்க மாட்டாங்க அந்தப் பெண்ணை  அனுப்பிட்டேன்.என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே வடிவேலு வெளியே வந்தார்.

   கடையை ரிப்பன் வெட்டி திறந்து விட்டு எல்லோரும் என்னை மன்னிச்சுடுங்க என்று சொல்லிவிட்டு நணபர்களையும் அழைத்துக் கொண்டு புறப்பட்டு விட்டார். 

அனவரும் வடிவேலு இப்படி நடந்து கொண்டது ஏன் என ஆச்சர்யம் அடைந்தனர். 
செல்ஃபி எடுத்தா தட்டி விடமாட்டேன்னுதான்னுதானே சொன்னார் இப்ப ஏன் இப்படி செஞ்சார்  என்று காரணம் தெரியாமல் விழித்தார் கடை ஓனர்.

அவர மாதிரியே இவரும் இப்படி பண்ணிட்டாரே என்று அதிர்ச்சி அடைந்தனர் வடிவேலுவின் நண்பர்கள்
வழியில்
“அண்ணே என்ன இருந்தாலும் நீங்க பண்னது தப்புண்ணே. . குல்ஃபி மாதிரி இருக்கற பொம்பள புள்ள செல்ஃபி எடுக்க வந்ததை தட்டி விட்டுட்டீங்களேண்ணே. ரொம்ப அசிங்கமா போச்சுண்ணே எங்களுக்கு. நாளக்கு டிவில பேப்பர்ல பேஸ் புக்குல கிழி கிழின்னு கிழிக்கப் போறாங்க”

“ அடேய் அதுக்கு காரணம் இருக்குடா”

“காரணம் என்னவா இருந்தாலும் தப்பு தப்புதாண்ணே!”

 ”செல்போனை தட்டிவிடலன்னா எனக்கு அசிங்கமாப் போயிருக்கும்டா.”
  நாளைக்கு பேஸ்புக்கு டுவிட்டர் வாட்சப்புன்னு நாறிப் போயிருக்கும்டா?

”என்னண்ணே சொல்றீங்க”

“ஆமாண்டா . அந்தப் பொண்ணு செல்பி எடுக்க வந்ததா? நானும் போனா போவுது எடுக்கட்டும்னு விட்டுட்டேன். அந்த பொண்ணூ செல் போன இப்படி அப்படி அட்ஜஸ் செஞ்சி  எங்க ரெண்டுபேர் உருவமும் ஃபுல்லா தெரிஞ்சது அப்பதாண்டா கவனிச்சேன். நான் பேண்ட் ஜிப் போடாம இருந்தது தெரிஞசது. நல்ல கேமராபோன் போல இருக்கு மூஞ்சி சரியா தெரியலன்னாலும் ஜிப் போடாதது மட்டும்  பளிச்சுன்னு தெரியுது.  அப்படியே அந்தப் பொண்ணோட  செல்பி எடுத்தா நல்லாவா இருக்கும். நாளைக்கு அந்தப் பொண்ணு போட்டாவை நெட்ல ஏத்தி விட்டா ஏன் மானம் என்னடா ஆவறது

இப்ப சொல்லுங்கடா! நான் செல்போனை தட்டிவிட்டது  தப்பா?”


-------------------------------------------------------------------------------------------------------------


அடுத்த பதிவு 500 வது பதிவு


என் கற்பனையில் வடிவேலு நகைச்சுவைகள்




  • புதிர் கணக்கு! வடிவேலுக்கு உதவுங்கள்!
  • 2புதிர் கணக்கு! விடை-வடிவேலுக்கு உதவியது யார்?
  • வேலை தேடும் வடிவேலு - பகுதி 1
  • வேலை தேடும் வடிவேலு - பகுதி 2 -விடை
  • வடிவேலுக்கு வேலை கிடைத்ததா? பகுதி 3
  • ஹோட்டலில் வடிவேலு
  • வடிவேலு வாங்கிய கழுதை
  • புதிர்! உங்களுக்கு தெரிஞ்சா விடை சொல்லுங்க 
  • 9. உண்மையூர் பொய்யூர் புதிருக்கு விடை
  •     10. பீப் சாங் பற்றி வடிவேலு சொன்னது என்ன?





  • 10 கருத்துகள்:

    1. சொட்டர்ல ஸ்வீட் ...
      செமை தோழர்

      பதிலளிநீக்கு
    2. ஹா... ஹாங்....!

      உங்கள் பாணியில் அருமை... ரசித்தேன்...

      பதிலளிநீக்கு
    3. ஒவ்வொரு செயலுக்கும் ஒரு காரணமுண்டு யாராய் இருந்தால் என்ன

      பதிலளிநீக்கு
    4. ஹா ஹா ஹா ஹா ஹா மிகவும் ரசித்தோம் நல்ல கற்பனை....காரணம்!!

      துளசிதரன், கீதா

      பதிலளிநீக்கு
    5. It is a serious issue, imho, Mr. Muralidharan.

      You do not have any right to take photo (selfie or whatever fuck it is) with another person without his/her approval. "I am your fan" claim does not give anybody the right to take a selfie with whomever he wants. It is as simple as that. Why it is too hard to understand?!

      This is our culture! We feel sorry for the "wrong people" and let them grow and later we dont know how to deal with that issue. That's why we have SLUM everywhere, we have BEGGARS everywhere, People pissing anywhere! This is not freedom. This is abuse!

      When serious issues turned out to be a "joke" things get fucked up! That's why nobody can save India ever!

      பதிலளிநீக்கு

    நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
    கைபேசி எண் 9445114895