என்னை கவனிப்பவர்கள்

மொக்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மொக்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 14 ஏப்ரல், 2020

கிணற்றுத் தவளைகள்


                                           கிணற்றுத் தவளைகள்

 குதித்து விளையாடிய தவளை 
கிணற்றிடம்சொன்னது
உன்னைவிடப் பெரிய
கடல் இல்லை

வெள்ளம் வந்து 
கிணறு மூழ்கியது
வெள்ளத்தில் அடித்து சென்ற தவளைக்கு 
இடம் கிடைத்தது  
இன்னொரு கிணற்றில் 

தவளைக்கு தலைகால் புரியவில்லை
புதிய கிணற்றை பெருங்கடல்
என்று கொண்டாடியது

காலப்போக்கில் தவளைக்கு
கிணறு தாவுதல் சகஜமானது

பிழைக்கத் தெரிந்த தவளை 
கிணறுகளை கடல்களாக்கிக் 
கொண்டிருந்தது

தவளை மட்டுமல்ல 
தன்னையே 
கடலாக வரித்துக் கொண்டிருக்கும் 
கிணறுகளுக்கும் 
ஒரு போதும் தெரியப் போவதில்லை 
கடல் என்று ஒன்று இருப்பது


---டி.என்.முரளிதரன்-
**********************************************************************************

 முந்தைய பதிவு படித்து விட்டீர்களா?
தமிழ்நாட்டுக்கு ஏன் குறைவான கொரோனா நிதி?




புதன், 6 மார்ச், 2019

500 வது பதிவு நானும் ஏர் ஃபோர்ஸ் ரிடர்ன்தான்



Image result for 500th blogger post
எனது 500 வது பதிவு .

------------------------------
இந்த விமானப் படைப் பணிக்கு சேரப் போன  எனது  அனுபவம்  கொஞ்சம் கற்பனை கலந்தது.

 வேலைக்காக காத்திருந்தபோது  இடையே ட்யூஷன் சொல்லிக் கொடுப்பது  வேலைக்கான போட்டித் தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பது என காலம் போய்க்கொண்டிருந்தது . ரயில்வே ரெக்ரூட்மெண்ட்., பேங்கிங் ரெக்ரூட்மெண்ட் ஸ்டாஃப் செலெக்‌ஷன், டி.என்.பி.எஸ்சி தேர்வுகளில் எதிலாவது தேர்ச்சி அடைந்து விடலாம் என்ற அல்ப ஆசை இருந்தது.  சில  புத்தகங்களை வாங்கி வைத்துக்கொண்டு படிப்பதும் உண்டு.  காம்படிஷன் சக்ஸஸ் போன்ற பத்திரிகைகளுக்கும் அவ்வப்போது  வாங்குவேன் .

         அதில் ஐ.ஏ,எஸ் தேர்வில் முதலிடம் பெற்றவர்களின் பெற்றவர்களின் பேட்டி இருக்கும்.  தலைப்பாகை  சிங்குகள் தனது வெற்றிக் கதையைக் கூறுவார்கள். அவர்கள் ஐ.ஐடில்  படித்தவர்களாக இருப்பார்கள். அதைப் படித்தாலே நமக்கு இதெல்லாம் சரிப்படாது என்று தோன்றினாலும் சும்மா எதற்காவது அப்ளை செய்வது   உண்டு
     ரயில்வே ஸ்டேஷன்ல 10000 பணியிடங்கள் 20000 பணியிடங்கள்னுகாலி  போட்டு உசுப்பேத்துவான். அப்ளிகேஷன்ஸ் சேல்ஸ் பயங்கரமா இருக்கும்.ஆனா வேலதான் கிடைக்காது. இப்போது எல்லாம் ஆன் லைன் ஆகிவிட்டது
     அப்போது  ஏர்ஃபோர்ஸ்ல  கிளார்க்  வேலைக்கு ஆள் எடுக்கிறார்கள் என்று  விளம்பரம் வந்தது  சுபயோக சுப தினத்தில் அப்ளை செய்தாயிற்று. நான் அப்ளை செய்தது வீட்டுக்கு தெரியாது.  வீட்டில் மற்றவர்கள் ஊருக்கு சென்றிருந்தனர். 
      ஒரு நாள் எழுத்துத் தேர்வுக்கு வரச் சொன்னார்கள். காலையில ஒரு எக்சாம். அதுல பாஸ் பண்ணவங்களுக்கு மத்தியானம் எக்சாம்.நானும் தேர்வு எழுத பேனா பென்சில் ரப்பர் போன்ற ஸ்கேல் போன்ற பயங்கர ஆயுதங்களுடன்  புறப்பட்டேன். 

     கிழக்கு தாம்பரம் ஏர்ஃபோர்ஸ் கேம்புக்குள்(Camp) நுழைந்தேன். உள்ளே சிறிது தூரம் நடக்க வேண்டி இருந்தது. அங்கு  மஞ்சள் நிறத்தில் குட்டி விமானங்ள் சில இருந்தன. இவை வானத்தில் பறக்கும்போது பார்த்திருக்கிறேன்.

    காலையில்  500 பேர் தேர்வு எழுதினார்கள். தேர்வு எளிமையாக இருந்தது.  9 மணிக்கு ஆரம்பித்து 11 மணிக்கு முடிந்து விட்டது.   ஒரு மணிக்கு ரிசல்ட் சொல்லி விட்டார்கள். முதல் தேர்வில் செலக்ட் ஆகி இருந்தேன்.  முதல் தேர்வில் செலக்ட் ஆன  கொஞ்சம் பேருக்கு இரண்டு மணிக்கு 2 ஆவது தேர்வு  வைத்தார்கள்.  அதன் ரிசல்டும் உடனே சொல்லி விட்டார்கள். ஆச்சர்யம்! அதிலும் தேர்வு செய்யப்பட்டிருந்தேன்.  மறு நாள்  மெடிக்கல் டெஸ்டுக்கு வர வேண்டும் என்று சொல்லி விட்டார்கள்.  கூட  இருந்தவர்கள் உனக்கு கன்ஃபார்மா செலக்ட் ஆயிடும் என்றார்கள். 
சந்தோஷமாக வீட்டுக்கு வந்தேன். 

     என் நண்பன் ஒருவன் மிலிட்டரில இருந்தான். அதிர்ஷ்டவசமாக அவன் ஊருக்கு வந்திருந்தான்  அவன்கிட்ட விஷயத்தை சொல்லி   ஆலோசனை கேட்டேன். 

”ஏர் ஃபோர்ஸ்லயா சேரப்போற! ரொம்ப கஷ்டமாச்சே . செம பெண்டெடுப்பான். அனேகமா பார்டர்லதான் போஸ்டிங் போடுவான். இருபதுல இருந்து இருபத்தைந்து  வயசுக்குள்ளதான் காஷ்மீருக்கு அனுப்புவான். மத்தவங்களால அந்தக் குளிர தாங்க முடியாது. பயங்கரமா இருக்கும். நீ பயப்படாத. என்ன? சண்டை வந்தா ஃப்ளைட்ல போய் குண்டு போடனும்.அவ்வளவுதான் ”: என்று சொல்லி ஒரு குண்டைப் போட்டான்.

”அடப்பாவி நான் அப்ளை பண்ணி இருக்கறது க்ளெர்க் போஸ்ட்தானே நான் ஏன் அதெல்லாம் செய்யனும் “
“அதெல்லாம் கிடையாது சண்டன்னு வந்துட்டா  எல்லாரையும்தான் அனுப்புவாங்க”
உன்ன எப்பாவாவது சண்டை போட அனுப்பி இருக்காங்களா”
“ம்  எனக்கு அந்த சான்ஸ் கிடைக்கல உனக்காவது கிடைக்கட்டும்” என்று வாழ்த்தி பீதி ஏற்றினான்”
மேலும் விடாமல் “ஆமா1  நீ வெஜிடேரியனாச்சே மிலிடரில நான் வெஜ்தானே சாப்பிடனும். சரி பரவாயில்ல போகப்போக சரியாயிடும்.  “

நாங்கள் பேசிக் கொண்டிருப்பதைக் கேட்டுக் கொண்டே நண்பனின் அப்பா அங்கு வந்தார்.  அவர் ரிட்டயர்டும் மிலிட்டர் ஆஃபீசர்.
விஷயத்தை கேட்டு விட்டு கடகடவென சிரித்தார். பயமுறுத்தாத போடா! என்று அவனை அனுப்பி விட்டு , அதெல்லாம் ஒன்னும் இல்ல. தைரியமா போ. ஏர்போர்ஸல  நீ ஜாயின் பண்ற போஸ்டுக்கு  ஏத்த சிவில் ஒர்க்தான்  அல்லாட் பண்ணுவங்க” என்று தைரியம் கொடுத்தார்.அப்புறம் பல சந்தேகங்களைக் கேட்டும் தெளிவு பெறாமல் வீட்டுக்குத் திரும்பினேன். 

       இரவு தூக்கம் வராமல் நெடு நேரம் கழித்துத் தூங்கினேன். தூக்கத்தில் விமானக் கனவுகள் அணிவகுத்தது. கனவில்  நான் ஒற்றை ஆளாக விமானத்தை ஒட்டினேன். மவுண்ட்ரோடில் ஒட்டிக் கொண்டு போனேன். அப்படியே ட்ரைன்  ட்ராக்கில்  ப்ளைட் ஒட்டி சாதனை புரிந்தேன் . அப்படியே கொஞ்சம் முன்னேறி விமானத்தை தாறுமாறாக ஒட்டி குட்டிக் கரனம் அடிக்க வைத்தேன். ”   அப்புறம் விட்டு வாசலில் ஃப்ளைட்டை நிறுத்தியதும் விழிப்பு வந்து விட்டது.

  அடுத்த நாள் குறித்த நேரத்திற்கு முன்னதாகவே சென்றேன்.  கேட் இன்னும் திறக்கவில்லை எனக்கு முன்பாக ஏற்கனவே என்னுடன் தேர்வானவர்கள் வெளியே  வரிசையில்   நின்றிருந்தார்கள்.  

அங்கே பேசிக்கொண்டிருந்தார்கள் ”மெடிக்கல் டெஸ்ட்ல செலக்ட் ஆயிட்டா அப்புறம் வெளியே விடமாட்டாங்க. அப்பவே வேலைக்கு சேந்திடனும்”. என்றான் ஒருவன்.
   ”இது என்னடா வம்பா போச்சே நாம வந்தது வீட்டுக்குக் கூடத் தெரியாதே ஒரு வேளை செலக்ட் ஆயிட்டா எப்படி தகவல் சொல்றது”என்று பயம் வந்து விட்டது  

அவனே  ” கவலைப் படாதீங்க நீ ரொம்ப ஒல்லியா இருக்கியே! எவ்வளவு வெயிட்? . செலக்ட் ஆறது கஷ்டம்தான் “என்றான்?

    இன்னொருவன்” சில பேர் ஒல்லியாத்தான் இருப்பாங்க  ஆனா போன் வெயிட் இருக்கும் என்றான்.” எதுக்கும் கொஞ்சம் வாழப்பழம் சாப்பிடு வெயிட் கூட காமிக்கும் என்றான்
எனக்கும் அண்டர் வெயிட்டாக இருப்பேன் என்று சந்தேகம் வர  வாழைப்பழம் வாங்கி முக்கிமுக்கி தின்றாலும் மூன்று வாழைப்பழங்களுக்கு மேல் சாப்பிட முடியவில்லை, அப்போதுதான் பார்த்தேன். குண்டாக இருந்தவர்கள் கூட வாழைப்பழங்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.  

     ஒரு வழியாக  மெடிக்கல் டெஸ்ட் தொடங்கியது. என் முறை வந்ததும்  ஒருவன் முதலில்  உயரம் அளவெடுத்தான். பின்னர் எடை எடுத்தான் குறித்துக்கொண்டான்  செஸ்ட் எக்ஸ்பேன்ஷன் பார்த்தான்.   அப்புறம் வேறு ஏதோதோ சோதனை எல்லாம் செய்தார்கள்
பின்னர் சிரித்துக் கொண்டே ஹிந்தியில் ஏதோ சொன்னான்.
 ஏக் மால் தோ துக்கடா ஏக் காவ் மே ஏக்  கிசான் ரஹ்தா தா என்பதைத்தவிர ஹிந்தியில் வேறு எதுவும் தெரியாது என்ப்தால் அவர்  சொன்னது புரியவில்லை

 வெளியே வந்து   கூட்டணி கிடைக்காத கட்சி தனியா நின்னு எலக்‌ஷன் ரிசல்டுக்காக காத்திருப்பது போல அல்ப ஆசையுடன்  காத்திருந்தேன்.  

மதியம்  தேர்வு செய்யப் பட்டவர் பட்டியலை  ஒட்டினர்.  எதிர்பார்த்தது போல என் பெயர் இல்லை.    இப்போது புரிந்தது ஹிந்தியில் அவர் சொன்னது ”அடுத்த முறையாவது நல்லா சாப்பிட்டு உடம்ப தேத்திக்கிட்டு வா”  என்பதாகத்தான் இருக்கும் என்று

       நான் வெற்றிகரமான தோல்வியுடன் வெளியேறினேன்.  இப்போது சொல்லுங்கள் நான் ஏர்ஃபோர்ஸ் ரிடர்ன் தானே!

---------------------------------------------------------------------------------------



    விங் கம்மேண்டர் அபிநந்தன் கடந்த வார  பேசு பொருளாக இருந்தார். அவரது வீரத்தால் அனைவரது மனதிலும் இடம் பிடித்திருந்தார்.  பாக்கிஸ்தான் அவரை  விடுவித்தது  ஒரு இன்ப அதிர்ச்சிதான். நிர்ப்பந்தமோ அல்லது நல்லெண்ணமோ எந்தக் காரணமாக இருப்பினும் இம்ரானுக்கு நன்றி .
 -------------------------------

இது எனது  500 வது பதிவு.   இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே  500 வது பதிவை எழுதிவிட வேண்டும் என நினைத்தேன். ஆனால் இப்போதுதான் முடிந்தது.
இதுவரை ஆதரவு அளித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி 

திங்கள், 11 பிப்ரவரி, 2019

வடிவேலு செல்ஃபோனை தட்டி விட்ட து ஏன்?



நம் அனைவரின் மனம் கவர்ந்த நடிகர் வடிவேலு. வடிவேலுவை கற்பனைப் பாத்திரமாகக் கொண்டு நகைச்சுவைக் கதைகள் எழுதி வந்தேன்.
நடிகர் சிவகுமார் முதல்முறை செல்போனை தட்டி விட்டபோது வடிவேலு இப்படி செய்திருந்தால் எப்படி இருக்கும் என்று என்று கற்பனையை தட்டி விட்டு ட்ராப்டில்  வைத்திருந்தேன். அதை வெளியிடுவதற்குள் அந்த செய்தி அவுட் ஆப் டேட் ஆகி விட்டது. அதனால் அப்படியே விட்டு விட்டேன். மீண்டும் விரைவிலேயே அந்த வாய்ப்பு கிடைக்கும் என நினைக்கவில்லை. இது முழுக்க முழுக்க கற்பனையே.

------------------------------------------------------------------------------------



     நீண்ட நாட்களுக்குப் பிறகு வடிவேலுவை சந்திக்கின்றனர் அவரது நண்பர்கள்
“அண்ணே! உங்களைப் பாத்து எவ்வளவு நாளாச்சு. எப்படி  இருக்கீங்க நீங்க இல்லாம எங்களை யாரும் கண்டுக்க மாட்டேங்ககறாங்க:

”என்னமோ இருக்கேண்டா போறபோக்கை பாத்த நம்மள மறந்துடுவாங்க போல இருக்கே!”

”சினிமாவுல நீங்க வரலன்னாலும் மக்கள் உங்கள மறக்கலேன்னே!இன்னிக்கும் மக்கள நீங்கதான் சிரிக்க வச்சுகிட்டிருக்கீங்க , உங்க வசனத்த சொல்லித்தான் மாம்ஸ் போடறாங்களாம்.”

”அது மாம்ஸ் இல்லடா மீம்ஸ்டா!. கழுத விடு எப்படியோ நம்மை ஞாபகம் வச்சுக்கிட்டிருந்தா சரி”

”இப்படியே விடக்கூடாதுண்ணே. பெரிய ஆளுங்கள்ளாம் அடிக்கடி சொட்டர்ல  ஸ்வீட் போடாறங்க நீங்களும் அடிக்கடி போடனும்ணே

”என்னடா சொல்லறீங்க .சொட்டர்ல  ஸ்வீட் போடறாங்களா? ” 
 அவங்களுக்கெல்லாம் வருமானத்துக்கு வழி இல்லாம போயிடுச்சா இது என்னடா கஷ்ட காலம்”

”ஐயோ இப்படி ஒன்னுமே தெரியாம இருக்கீங்களேன்னே அதாண்ணே  இண்டர் நெட்ல போடறாங்களே  செல்போன்ல கூட பாக்கறாங்களே?”

 “அடேய் அது  சொட்டர் இல்லடா டுவிட்டர் அதுல கருத்து சொன்னா அதுக்கு பேரு டுவீட் .அதெல்லாம் உங்களுக்கு எங்க தெரிய போகுது”
”அட! இவ்வளவு தெரிஞ்சு வச்சுருக்கீங்களே. நீங்க சொல்லாத கருத்தா. சும்மா அப்பப்ப அடிச்சு விடுங்கண்ணே  . ஒல்டு பேமஸ் ஆயிடுவீங்க.

”முடியலடா....அது ஓல்டு பேமஸ் இல்லடா வோர்ல்ட் பேமஸ்
ஏற்கனவே வாயால கெட்டது போதும். அதுல எதயாவது சொல்லி பிரச்சனையில மாட்டிக்க சொல்றியே  நமக்கு எதுக்குடா வம்பு.”

”அட போங்கண்ணேஉங்கள வச்சு நாங்களும்  பேமஸ் ஆகலாம்னு பாத்தா......”
பேசிக்கொண்டிருக்கும்போதே யாரோ ஒருவர் வர

அண்ணே உங்களை தேடி யாரோ வந்துகிட்டிருக்காங்க.

”வடிவேலு சார்! எப்படி இருக்கீங்க? . நாங்க புதுசா பெரிய துணிக்கடை திறக்கப் போறோம். எங்க குடும்பமே உங்க ரசிகங்க. அதனால கடையை நீங்கதான் திறந்து வைக்கணும்.எங்களுக்கும் விளம்பரமா இருக்கும்.

‘அதெல்லாம் முடியாதுங்க இப்ப நான் வெளிய வர்றதில்ல. நாலு பேர் நாலு கேள்விய கேட்பான். நீங்க யாருன்னுகூட கேப்பான். கடைய திறக்கறது விழாவுக்கு போறதுன்னு ஒரு வேற ஒருத்தர் இருக்காரே அவர கூப்பிடலாமே”

“அவரதான் கூப்பிடலாம்னு நினச்சோம்.ஆனா அவரு   ரொம்ப கோவக்காரரா இருக்காராம் அதுவும் இல்லாம மணிக்கணக்கா பேசுவாராம். அதனால உங்கள கூப்பிடறோம். அதுவும் இல்லாம   நீங்க ரொம்ப நல்லவரு. எவ்வளவு பணம் கேட்டாலும் கொடுக்கறோம் நீங்க வந்தா நல்லா இருக்கும்”

வடிவேலு யோசிக்க

நண்பர்கள் ”ஒத்துக்கங்கண்ணே. பணம் தரேன்னு சொல்றாரே நமக்கும் செலவுக்கு ஆகும்.
”எனக்குன்னு சொல்லு. உங்கள ஏண்டா சேத்துக்கறீங்க”.
“எந்த பங்கஷனுக்கு போனாலும் நாலுபேரோட போனாத்தானே பந்தாவா இருக்கும். “

வந்தவரைப் பார்த்து ”சரி உங்களுக்காக ஒத்துக்கறேன்.  என்னைக்குனு சொல்லுங்க நாங்க எல்லாரும் வருவோம் . வண்டி அனுப்புங்க.”

கடைக்காரர் ”ரொம்ப நன்றி சார் பக்காவா ஏற்பாடு பண்ணிடறேன். ஒரே ஒரு ரிக்வொஸ்ட். யாரும் ஃப்ங்ஷன்ல யாரும் செல்ஃபி எடுக்காம பாத்துக்கறோம் அப்படி எதிர்பாராவிதம யாராவது எடுத்தா கண்டுக்கக்கூடாது”
“சே!சே! செல்ஃபி1 குல்ஃபி1 எத வேணாலும் எடுத்துங்க. எனக்கு ஆட்சேபணை இல்ல’
அவர் கிளம்பி சென்றார்.

”நண்பர்களைப் பார்த்து கூட வந்து மானத்த வாங்கக் கூடாது. டீசண்டா நடந்துக்கணும்.  என்ன மாதிரி நல்லா ட்ரெஸ் பண்ணிக்கிட்டு வரணும் ஒகே”

   ஃபங்ஷன் அன்றூ கடை ஓனர் கார் அனுப்ப வடிவேலுவும் அவர் நண்பர்களும் கடை திறப்பு விழாவுக்கு புறப்பட்டனர். கடை வாசலில் கார் நின்றது. விளம்பரம் செய்திருந்ததால் கூட்டம் ஏராளமாக வந்திருந்தது.
    கார் நிற்கும் இடத்திலிருந்து கடை வாசல் வரை சிவப்புக் கம்பளம் சிவப்புக் கம்பளம் விரிக்கப் பட்டிருந்தது.
கடை முதலாளி கார் கதவை திறந்து வணக்கம் சொல்லி வரவேற்க. வடிவேலுவும் அவர் நண்பர்களும் இறங்கினர்.:
“எல்லாரும் வழி விடுங்க .வடிவேலு சார் வந்திருக்கார் ” என்று கூற
அனைவரும் வடிவேலுவைப் பார்த்ததும் சந்தோஷமாக குரல் கொடுக்க  கம்பீரமாக நடந்து சென்றார் வடிவேலு

திடீரென்று வடிவேலு  பின்னாலிருந்து அழகான ஒரு பெண் செல்போனுடன் ஒடி வந்து செல்ஃபி எடுக்க மூயற்சி செய்தார்.

”அண்ணே! அண்ணே! ஒரு பொண்ணு செல்பி எடுக்க வருதுண்ணே!.”

”வரட்டும்டா. எத்தனை நாள்தான் உங்களோடவேசெல்பி எடுத்துக்கறது”.

அந்தப் பெண் வடிவேலுக்கு அருகில் வந்து செல்போனை இப்படியும் அப்படியும் அட்ஜஸ் செய்து செல்பி எடுக்க தயாராக இருக்க .

“அண்ணே! சும்மா கம்பீரமா   பாருங்கண்ணே!” என்று ஒருவன் சொல்ல

செல்ஃபோனை உற்றுப் பார்த்த  வடிவேலுவுக்கு என்ன ஆச்சோ தெரியவில்லை தெரியவில்லை  திடீரென்று  பெண்ணின் கையில் இருந்த செல்போனை  தட்டி விட்டு வேகமாக திரும்பி கடகட வென ஒடி காரில் ஏறிக்கொண்டார்.

    ஐய்யய்யோ! வடிவேலு கோபித்துக் கொண்டாரே என்று அனைவரும் ஓடிவர,

”வடிவேலு சார்! மன்னிச்சுக்கோங்க .கோவப்படாம தயவு செஞ்சு கடைய திறக்க வாங்க.  இனிமே யாரும் யாரும் செல்பி எடுக்க மாட்டாங்க அந்தப் பெண்ணை  அனுப்பிட்டேன்.என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே வடிவேலு வெளியே வந்தார்.

   கடையை ரிப்பன் வெட்டி திறந்து விட்டு எல்லோரும் என்னை மன்னிச்சுடுங்க என்று சொல்லிவிட்டு நணபர்களையும் அழைத்துக் கொண்டு புறப்பட்டு விட்டார். 

அனவரும் வடிவேலு இப்படி நடந்து கொண்டது ஏன் என ஆச்சர்யம் அடைந்தனர். 
செல்ஃபி எடுத்தா தட்டி விடமாட்டேன்னுதான்னுதானே சொன்னார் இப்ப ஏன் இப்படி செஞ்சார்  என்று காரணம் தெரியாமல் விழித்தார் கடை ஓனர்.

அவர மாதிரியே இவரும் இப்படி பண்ணிட்டாரே என்று அதிர்ச்சி அடைந்தனர் வடிவேலுவின் நண்பர்கள்
வழியில்
“அண்ணே என்ன இருந்தாலும் நீங்க பண்னது தப்புண்ணே. . குல்ஃபி மாதிரி இருக்கற பொம்பள புள்ள செல்ஃபி எடுக்க வந்ததை தட்டி விட்டுட்டீங்களேண்ணே. ரொம்ப அசிங்கமா போச்சுண்ணே எங்களுக்கு. நாளக்கு டிவில பேப்பர்ல பேஸ் புக்குல கிழி கிழின்னு கிழிக்கப் போறாங்க”

“ அடேய் அதுக்கு காரணம் இருக்குடா”

“காரணம் என்னவா இருந்தாலும் தப்பு தப்புதாண்ணே!”

 ”செல்போனை தட்டிவிடலன்னா எனக்கு அசிங்கமாப் போயிருக்கும்டா.”
  நாளைக்கு பேஸ்புக்கு டுவிட்டர் வாட்சப்புன்னு நாறிப் போயிருக்கும்டா?

”என்னண்ணே சொல்றீங்க”

“ஆமாண்டா . அந்தப் பொண்ணு செல்பி எடுக்க வந்ததா? நானும் போனா போவுது எடுக்கட்டும்னு விட்டுட்டேன். அந்த பொண்ணூ செல் போன இப்படி அப்படி அட்ஜஸ் செஞ்சி  எங்க ரெண்டுபேர் உருவமும் ஃபுல்லா தெரிஞ்சது அப்பதாண்டா கவனிச்சேன். நான் பேண்ட் ஜிப் போடாம இருந்தது தெரிஞசது. நல்ல கேமராபோன் போல இருக்கு மூஞ்சி சரியா தெரியலன்னாலும் ஜிப் போடாதது மட்டும்  பளிச்சுன்னு தெரியுது.  அப்படியே அந்தப் பொண்ணோட  செல்பி எடுத்தா நல்லாவா இருக்கும். நாளைக்கு அந்தப் பொண்ணு போட்டாவை நெட்ல ஏத்தி விட்டா ஏன் மானம் என்னடா ஆவறது

இப்ப சொல்லுங்கடா! நான் செல்போனை தட்டிவிட்டது  தப்பா?”


-------------------------------------------------------------------------------------------------------------


அடுத்த பதிவு 500 வது பதிவு


என் கற்பனையில் வடிவேலு நகைச்சுவைகள்




  • புதிர் கணக்கு! வடிவேலுக்கு உதவுங்கள்!
  • 2புதிர் கணக்கு! விடை-வடிவேலுக்கு உதவியது யார்?
  • வேலை தேடும் வடிவேலு - பகுதி 1
  • வேலை தேடும் வடிவேலு - பகுதி 2 -விடை
  • வடிவேலுக்கு வேலை கிடைத்ததா? பகுதி 3
  • ஹோட்டலில் வடிவேலு
  • வடிவேலு வாங்கிய கழுதை
  • புதிர்! உங்களுக்கு தெரிஞ்சா விடை சொல்லுங்க 
  • 9. உண்மையூர் பொய்யூர் புதிருக்கு விடை
  •     10. பீப் சாங் பற்றி வடிவேலு சொன்னது என்ன?





  • புதன், 21 மார்ச், 2018

    புதிர் விடை+சுவாரசிய நிகழ்வு

    ஜான் வான் நியூமேன்
    John von Neumann

    முந்தைய பதவில் புதிர் ஒன்றைக் கூறி இருந்தேன்.
    அந்தப் புதிரைக் காண க்ளிக் செய்க
    வந்துட்டேன்னு சொல்லு! ஒரு புதிரோட வந்துட்டேன்னு சொல்லு!

    அதன் சரியான விடையை முதலில் கணித்தவர் நண்பரும் பதிவருமான ஊமைக் கனவுகள்  வலைப்பூ எழுதும்  ஜோசப்  விஜூ அவர்கள் .தரமான இலக்கிய நுட்பம் வாய்ந்த பதிவுகளை எழுதும் மிக சிலரில் அவரும் ஒருவர். தமிழ் இலக்கிய இலக்கணங்களை கரைத்து குடித்தவராக இருக்கிறார். ஆங்கில ஆசிரியரான அவர் தமிழ்ப் புலமை வியப்பை ஏற்படுத்தக் கூடியது. கணிதத்திலும் ஆர்வம் உள்ளவராக இருக்கிறார் என்பது இந்தப் புதிரின் விடையைக் கணித்ததன் மூலம் தெரிய வருகிறது முதலில் விடையை மட்டும் சொன்னபோது உத்தேசமாக சொல்லி இருப்பார் என்றே நினைத்தேன். ஆனால் அடுத்த பின்னூட்டத்தில் விளக்கத்தையும் தந்து அசத்தி விட்டார். அவருக்கு மனமார்ந்த பாராட்டுகள். 
    திண்டுக்கல் தனபாலனும் ,பெயரிலி ஒருவரும் விடையை கணித்துள்ளனர். அவர்களுக்கும் பாராட்டுகள்

    விடை : 
    காதலனும் காதலியும் 20 கி.மீ சாலையில்  10  கி.மீ வேகத்தில் புறப்பட்டால் சரியாக ஒரு மணிநேரத்தில் 10 கி.மீ  இல் சந்திப்பார்ககள். புறா அதிக வேகம் என்பதால்  இவர்களை பலமுறை தொட்டுத் தொட்டு திரும்புகிறது., எப்படி இருப்பினும் ஒரு மணிநேரத்தில் சந்தித்து விடுவதால் புறாவும் ஒரு மணி நேரம் மட்டுமே பறக்கும். அதன் வேகமும்   மணிக்கு 15 கி.மீ .  எனவே  புறா பல முறை இப்படியும் அப்படியும்  பறந்தாலும்   மொத்த தூரம் 15 கிமீ .


    ஒருவர்  இந்த புதிரைத்தான் ஜான் வான் நியூமேன் (John von Neumann) என்ற கணித அறிஞரிடம் ஒரு பார்ட்டியில்  கேட்டார். அவரும் சிறிது சிந்தித்து   சரியான விடையைக் கூறி விட்டார் .  கேட்டவர் ஏமாற்றமடைந்தார்  "நீங்கள்  அறிஞர் இதற்கான சுருக்கு வழியை அறிந்து சரியான விடையைக் கூறி விட்டீர்கள். பாருங்கள் பலரும் இதனை அறியாது . புறா பறக்கும் தூரத்தை முடிவிலாத் தொடரி (Infinite Series ) முறையில் முயற்சி செய்தனர் என்றனர்

    வான் நியு மென்  ஆச்சர்யம் அடைந்து  என்னது! சுருக்கு வழி உள்ளதா? . நீங்கள் கூறிய Infinite Series   மூலம்தான் நான் விடையைக் கூறினேன் என்றார். அந்த சுருக்கு வழி என்ன என்று கேட்டாராம் ஜான் வான் நியூமேன் எப்படி?

    ஆசிரியர்கள் கணிதப் பாடம் கற்றுக் கொடுக்கும்போது சுவாரசியம் ஏற்படுத்த வேண்டும். கொஞ்சம் சிந்திக்க தூண்ட வேண்டும்.எண்களைக் கொண்டு அச்சுறுத்தாமல் அறிஞர்களின் வாழ்க்கை நிகழ்வுகளை (கற்பனை கலந்து கூட) சொல்லி ஆர்வம் ஏற்படுத்தினால் சிந்திக்கும் திறன் வளரும்.  ஐ.ஐ டி , நீட் தேர்வுகளை எதிர்கொள்ள முடியும்.
    --------------------------------------------------------------------------------------

    Value added Information-ஆர்வமுள்ளவர்களுக்கு மட்டும் -மற்றவர்கள் தப்பித்து சென்று விடலாம்
    அது என்ன infinite series? கணித முறைப்படி புறா எத்தனை முறை பறக்க வேண்டும் என்று கணக்கிடுவது  கடினமானது ஒன்று.கிட்டத் தட்ட

    முதல் தடவை  பறந்து சென்று  எதிர் பக்கம் சைக்கிளைத் தொடும் தூரத்தை d1 என்று வைத்துக் கொள்வோம்  .மொத்தம் 20 கிமீ
    புறாவின் வேகம் மணிக்கு 15 கிமீ
    சைக்கிள் வேகம் மணிக்கு  10 கிமீ

    வேகம் x காலம் =தூரம்
    15 x T1 = d1
    10 x  T1 =20 - d1
    ---------------------   ( இரண்டு சமன்பாடுகளையும் கூட்டுக)
    25 T1 =  20
       T1  = 20/25 =4/5

    d1 = 15 x 4/5 =12 k.m

    4/5 மணி நேரத்தில் சைக்கிள் செல்லும் தூரம் =10 x 4/5 = 8 km

    சைக்கிள்கள் ஒன்றை ஒன்று நோக்கி  8 கிமீ  பயணம் செய்தால் மொத்தம் 20 கிமீ இல் 16 கடக்கப் பட்டிருக்கும் மிச்சம் உள்ள தூரம் 4 கிமீ  மட்டுமே .
    2 வது சுற்றில்   புறா செல்லும் தூரம் d2 எனக் கொள்வோம்

    இப்போது சமன் பாடுகளை இப்படி அமைக்கலாம்


    15 x T2 = d2
    10 x  T2 =4- d2
    ----------------------
    25 T2 =  4
       T2  = 4/25 =4/25

    d2 = 15 x 4/25 =12/5 k.m

    இதே போல சமன்பாடுகளை பயன்படுத்தி
    d3= 12/25
    d4=12/125
    d5 =12/625
    d6 =12/3125
    ..............
    ...............
    ..............

    புறா பறக்கும் மொத்த தூரம் = d1+d2+d3+d4+d5+d6 ...........(முடிவிலாத் தொடர்)
    =12 + 12/5 + 12/25 + 12/125 + 12/625 + 12/3125
    =12 +2.4 +0.48+ 0.096 +0 .0192 + 0.00384+0.000768
    = 14.999808= தோராயாமாக 15
    இந்த முறையில்தான் ஜான் வான் நியூமேன் பதில் அளித்திருக்கிறார். ஆனால் இதனை மிக விரைவாக மனதுக்குள்ளேயே செய்து முடித்ததுதான் அவரின் சிறப்பு 

      புறாவின் வேகப் படி  உண்மையில் இரண்டு சைக்க்கிள்களும் சந்திக்கும் அதே நேரத்தில் புறா சந்திக்க முடியாது எங்காவது  ஓரிடத்தில் வேகம் கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ இருந்தால்தான் இது சாத்தியம். ஏனெனில் இரண்டு சைக்கிள்களும் ஒரே வேகத்தில் செல்வதால் கடைசி நிலையில் ஒரு வினாடியில் இரண்டும் சந்திக்க இருப்பதாக வைத்துக் கொண்டால் அதே நேரத்தில் சந்தித்துவிடும் ஆனால் புறாவின் வேகம் 1 வினாடிக்கு சைக்கிளின் வேகத்தை விட அதிகம் . எனவே சந்திக்கும்போது அது கடந்த தூரம் 15 கிமீ  விட கணக்கிட முடியாத அளவில் மிகக்குறைவாக இருக்கும்.

    -----------------

    நற்செய்தி : அடுத்த பதிவு  புதிர்ப் பதிவு அல்ல! 




      

    ஞாயிறு, 18 மார்ச், 2018

    வந்துட்டேன்னு சொல்லு! ஒரு புதிரோட வந்துட்டேன்னு சொல்லு!


     ஹலோ! என்னை ஞாபகம் இருக்கா  நீ------------------------------ ண்ட இடைவெளிக்குப்  பிறகு உங்களை சந்திக்க வந்துள்ளேன்.

    அட நம்ம அரசியல்வாதிகள்தான்  உங்கள குழப்பணுமா என்ன?  நானும்  ஒரு புதிர் போட்டு உங்களை குழப்பலாம்னு நினைக்கிறேன்.

            ஒரு 20 கி.மீ  சாலையில ஒரு முனையில் காதலனும்  இன்னொரு முனையில் காதலியும் ஒருவரை ஒருவர் சந்திக்க  சைக்கிள்ள ஒரே நேரத்தில கிளம்பறாங்க! ரெண்டு பெரும்  சரியா  10 கிமீ வேகத்திலதான்  சைக்கிள் ஒட்டாறாங்க.  காதலி வளக்கிற புறாவும் சைக்கிள் ஹான்டில் பார்ல கூடவே கிளம்ப ரெடியா இருக்கு. ரெடி ஸ்டார்ட்டுன்னு ரெண்டு பேரும் அவங்க அவங்க இருந்த இடத்தில இருந்து கிளம்ப புறாவால சும்மா ஒக்கார முடியல. அது 15  கி.மீ வேகத்தில பறக்க ஆரம்பிச்சு வேகமா போய் காதலன் சைக்கிள்ள ஒக்காந்துட்டு உடனே திரும்பி அதே வேகத்தில் காதலி சைக்கிள தொட்டுட்டு திரும்பவும் காதலனை நோக்கி அதே வேகத்தில பறக்குது,. இப்படியே ரெண்டு பேரும் மீட் பண்றவரை பறந்துகிட்டே இருக்கு புறா . ஒருவழியா மீட் பண்ணிடறாங்க .  புறா அப்பாடான்னு பெருமூச்சு விடுது. மீட் பண்ணதும்  அவங்க ரெண்டும் பேரும் பேசிக்கிட்டிருக்க  சும்மா இருக்க போரடிக்கவே  நாம எவ்வளோ தூரம் பறந்திருப்போம்னு புறா கணக்கு போட்டு பாக்குது.அதனால் கண்டு பிடிக்க  முடியல நீங்கள் சொல்லுங்களேன் புறா மொத்தமா எவ்வளவு தூரம் பறந்திருக்கும்?



    (கணக்கு புரியம்படி இல்லன்னா மட்டும் கேக்கணும்.மத்த குறுக்கு கேள்வில்லாம் கேக்கப் படாது )

    இந்த கணக்கதான் ஒரு கணித மேதை கிட்ட ஒருத்தர் சொன்னாராம் ?
    அந்தக் கணித மேதை  யாரு அவர் சரியா விடை  சொன்னாரான்னு அடுத்த பதிவில பாக்கலாம் 

    விடை அறிய கிளிக் செய்க 

    புதிருக்கான விடை

    ஞாயிறு, 24 டிசம்பர், 2017

    என்னை நம்பி நான் பொறந்தேன்! போங்கடா போங்க!

    (நகைச்சுவைக்காக மட்டும்- அரை மணி நேரத்தில் எழுதியது )
    என்னை  நம்பி நான் இருந்தேன்  போங்கடா போங்க !
    என் நேரம் வென்றது   நீங்க இப்போ  வாங்கடா வாங்க 
    என்னை  நம்பி நான் இருந்தேன்  போங்கடா போங்க !
    என் நேரம் வென்றது   நீங்க இப்போ  வாங்கடா வாங்க 


    ரெட்டை இல எனக்கில்ல ஆனாலும் நான் தோக்கல்ல 
    ரெட்டை இல எனக்கில்ல ஆனாலும் நான் தோக்கல்ல 
    பட்ட நாமம் உங்களுக்கு   பரிசுதான் எங்களுக்கு 

            என்னை  நம்பி நான் இருந்தேன்  போங்கடா போங்க !
            என் நேரம் வென்றது   நீங்க இப்போ  வாங்கடா வாங்க 


    அஞ்சு கொடுத்தா அரை  ஒட்டு  பத்து கொடுத்தா பல  ஒட்டு 
    அஞ்சு கொடுத்தா அரை  ஒட்டு  பத்து கொடுத்தா பல  ஒட்டு 

    மொத்தமா  கொடுத்தா ஓட்டம்மா  மக்கள் நினச்சா வேட்டம்மா
    பானையில சோறுவச்சா பூனைகளும் ஓடிவரும் 
    கேனையனா  நினச்சீங்க   தனியாளா ஜெயிச்சேண்டா 

              என்னை  நம்பி நான் இருந்தேன்  போங்கடா போங்க !
              என் நேரம் வென்றது   நீங்க இப்போ  வாங்கடா வாங்க 

    திட்டமிருக்கு தெளிவாக இறங்கிவிட்டேன் துணிவாக  
    திட்டமிருக்கு தெளிவாக இறங்கிவிட்டேன் துணிவாக 

    நினத்ததை முடித்தேன் சரியாக! நான் யார் நீ யார் தெரிஞ்சிக்கடா 
    சித்திரையில் வெதச்சது  மார்கழியில் அறுவடைதான் .
    சத்தியமா சொல்லறேன் நான் சத்தமின்றி ஓடிவாடா   

           என்னை  நம்பி நான் இருந்தேன்  போங்கடா போங்க !
           என் நேரம் வென்றது   நீங்க இப்போ  வாங்கடா வாங்க 
        -----------------------------------------


    முந்தைய பதிவு
    சோதனை மேல் சோதனை


    சனி, 25 நவம்பர், 2017

    சோதனை மேல் சோதனை

     

                         (சும்மா  ஒரு கற்பனை -சிரிப்பதற்கு மட்டுமே)
     
    சோதனை மேல் சோதனை
    போதுமடா சாமி
    சோதனை தான்  வாழ்க்கை என்றால் தாங்காது போ நீ!
                    (சோதனை மேல் சோதனை )

    நித்தம் ஒரு சேதி வந்து கதி கலங்குது-ஒரு
    சத்தம் இன்றி ரெய்டு வந்தால் மதி மயங்குது
    நித்தம் ஒரு சேதி வந்து கதி கலங்குது
    சத்தம் இன்றி ரெய்டு வந்தால் மதி மயங்குது
                                                      (சோதனை மேல் சோதனை )

    ஆதாரம் இருக்குதம்மா   ஆதரவில்லை-நான்
     அவதாரம் இல்லையம்மா தப்பித்து செல்ல
    பரிகாரம் தேடி இனி எவ்விடம் செல்ல-எனது
    அதிகாரம் செல்லலையே யாரிடம் சொல்ல
    ஒரு நாளும்  நானிது போல் அழுதவனல்ல-அந்த
     திருநாளும் வந்ததை நான்  என்னென்று சொல்ல

                                                                (சோதனை மேல் சோதனை ) 

    (மாமா!சொத்தை பறிகொடுத்தவன் எல்லாம் பறிச்சவனைப்  பாத்து பயப்படுவாங்க  . பறிச்சவனே பயந்து நின்னா
    கடன் வாங்கினவன்  எல்லாம் கந்து வட்டிக்  காரனைப் பாத்து கலங்குவாங்க  . கந்து வட்டிக் காரனே கலங்கி நின்னா யாரால் ஆறுதல் சொல்ல முடியும்?)

    சாப்பிடத்தான் நான் நினச்சேன் ரெண்டு இலையில-அட
    ஒத்த இலைக்குக் கூட இப்ப வழியும் தெரியல
    கூட வந்த கூட்டத்துக்கு குறைவே இல்லை-அதில்
    ஒருத்தனையும் இப்போ இங்கே காணவும் இல்ல
    கோடி கோடி பணம் இருந்தும் பயனும் இல்ல -ஒரு
    மோடி வித்தை செய்தால்தான் தீரும் தொல்லை

                                                             (சோதனை மேல் சோதனை )


    -----------------------------------------------------------------------------------------------------------


    சனி, 21 அக்டோபர், 2017

    சித்திரவதை

          
      நடிகை புஷ்பாஸ்ரீ  கையெழுத்தில்  "உங்கள் சித்திரவதை தாங்க  முடிய வில்லை என்னை  விட்டு விடுங்கள்"  என்ற துண்டு சீட்டை  நடிகை வீட்டு  வேலைக்காரி இன்ஸ்பெக்டர்  மோகனிடம் கொடுத்தாள்.
      நான்கு நாட்களாக புஷ்பாம்மாவைக் காணவில்லை என்றும் தெரிவித்தாள்.

    " வீட்டில யாரெல்லாம் இருக்காங்க" விசாரித்தார்  மோகன்
    "புஷ்பாம்மாவும் அவங்க புருஷன் ரவிவர்மன் மட்டும்தான்."
    "அவர் என்ன பண்றார்"

     "உருப்படியா ஒண்ணும் இல்லீங்க . கத்தையா கத்தையா பேப்பர் வச்சுக்கிட்டு படம்  வரஞ்சிகிட்டு இருப்பார்". .

    அவன்  கொடுமைக்காரனா?

    "அப்படி ஒன்னும் இல்ல.  ஐயா! அடிக்கடி ரெண்டும் பெரும் சண்டை போடற சத்தம் கேக்கும். அப்புறம்  ஒண்ணாயிடுவாங்க  .

    "இப்ப வீட்டில இருக்காரா?"

    "ரூமுக்குள்லையே  இருக்கார் எவ்வளவோ  கூப்பிட்டுப்  பார்த்தும் வெளியே வர மாட்டேங்கறார்".

    இன்ஸ்பெக்டர்  புஷ்பாஸ்ரீ வீட்டுக்கு   புறப்பட்டார்.

    " ரவி வர்மன் கதவை திறங்க . போலீஸ் வந்திருக்கோம்" என்றார் .

     ரவி வர்மன் கதவை திறந்தான் . அறை  முழுவதும் அலங்கோலமாக கிடந்தது  பேப்பர்கள் சிதறிக் கிடந்தன .

      "உங்க மனைவி புஷ்பாஸ்ரீயை காணோம்னு இவங்க சொல்றாங்க . எங்க போனாங்க  "

    "தெரியல சார். எங்கயாவது ஷூட்டிங் போயிருப்பாங்க ! நானும் அவங்க எங்க போனாங்கன்னு தெரியாம கவலை பட்டுகிடிருக்கேன்."
    உங்க கிட்ட சொல்லலையா ".

    "எப்பவும் சொல்லிட்டுதான் போவாங்க .ஆனா இப்ப சொல்லல . எம் மேல என்ன  கோவமோ தெரியல செல்போனையும் சுவிச் ஆஃப் பண்ணி வச்சுட்டாங்க. எப்படியும்  வந்துடுவாங்க சார்".

    "நீங்க அவங்களை சித்திர வதை பண்றதா எழுதி வச்சுருக்காங்களே ! உண்மைய சொல்லுங்க அவங்களை என்ன பண்ணீங்க"

      " ஐயோ!அவங்க சம்மதம் இல்லாம என் விரல் கூட அவங்க மேல படாது சார்"
           
        வீட்டை சுற்றி பார்த்தார் . இந்த மாதிரி ஆளுங்க கிறுக்குப் பயலுங்களா இருப்பாங்க. அப்பாவி மாதிரி இருந்தாலும் ஏதாவது ஒரு வேகத்தில கொலை பண்ணனாலும் பண்ணிடுவாங்க என்று நினைத்துக் கொண்டு  எதற்கும் இவனை ஸ்டேஷனில் விசாரிக்கலாம் என்று அழைத்து  வந்து விட்டார். லாக் அப்பில் ஒரு நாள் முழுக்க வைத்து விசாரித்தும் பயனில்லை.  உளறிக் கொண்டும் அழுது கொண்டும் இருந்தானே தவிர உருப்படியாக ஒன்றும் சொல்லவில்லை .  என்ன செய்வது என்று தெரியாமல் .இன்ஸ்பெக்டர் யோசித்துக் கொண்டிருக்க   வாசலில் கார்! புஷ்பாஸ்ரீ  உள்ளே ஓடி வந்தாள்

    இன்ஸ்பெக்டர் சார் அவரை விட்டுடுங்க அவர் அப்பாவி.
    "என்னம்மா   இப்படியா  அவர் சித்திரவதை தாங்க முடியலன்னு எழுதி வச்சுட்டு சொல்லாம கொள்ளாமயா போறது ? தேவையில்லாம எங்கள டென்ஷன் ஆக்கிட்டீங்களே.பிரஸ்சுக்கு நியூஸ் போச்சுன்னா என்னாகும்  ஏன் அப்படி எழுதி வச்சீங்க?
    .
    "சொல்லிட்டுதான் போனேன்  அவர் குடிச்சி இருந்ததால்  மறந்து இருப்பார்..  சார், அவருக்கு பிரபல ஒவியரா ஆகணும்னு ஆசை.   பேர் என்னமோ  ரவி வர்மா .ஆனா சுமாராத்தான் வரைவார்.    என்னை போஸ் கொடுக்கச் சொல்லி விதம்  விதமா வரைவார்.  ஷூட்டிங்  போகாத நேரத்தில இவரை காதலிச்ச பாவத்துக்காக  இவர் வரையறதுக்கு மணிக்கணக்கா சகிச்சிக்கிட்டு  போஸ்  கொடுப்பேன்"

    "அதுக்கு போய் சித்திரவதைன்னு எழுதி வச்சது ரொம்ப ஓவர் இல்லையா ?"

     ஒரு பேப்பரை புஷ்பாஸ்ரீ எடுத்துக் காட்டி , "என்னப் பார்த்து வரஞ்ச ஓவியத்தை  பாருங்க." என்றாள்

    அதில்   20 வயது புஷ்பாஸ்ரீ 50 வயது தோற்றத்தில் இருந்தாள்.

    "என் படத்தை இப்படி கன்றாவியா வரஞ்சுட்டு  'சித்திரம் பேசுதடி'ன்னு தலைப்பு  வேற.  எனக்கு எப்படி இருக்கும்?    கோவத்தில  என்னை  "சித்திர"வதை  செய்யாதீங்கன்னு பொயட்டிக்கா எழுதி வச்சேன்.. இப்படி ஆகும்னு  எனக்கு தெரியாது " என்று வெட்கத்துடன்  சொல்ல

    தலையில் அடித்துக் கொண்டார் இன்ஸ்பெக்டர் மோகன்


    **************************************************************

    ஏதோ என்னாலான சித்திர வதை. 





    வியாழன், 9 மார்ச், 2017

    பிரேக்கிங் நியூஸ் குமுத்தில் என் கதை-



       கடந்த வாரம் குமுதத்தில்(08/03/2017) எனது ஒரு பக்கக் கதை ஒன்று பிரசுரமாகி இருந்தது. முகநூலில் அந்த தகவலை மட்டும் 
    பகிர்ந்திருந்தேன். கதையை வெளியிட வில்லை.ஒரு வாரம் ஆகி விட்ட படியால் அக் கதையை வலைப் பதிவில் பதிவிடுகிறேன். குறுகிய காலத்தில் பரிசீலித்து வெளியிட்ட குமுதம் ஆசிரியர் அவர்களுக்கு நன்றி..இதுவரை  மூன்று கதை குமுதத்தில் பிரசுரிக்கப் பட்டுள்ளது

    இக்கதைக்கு நான் வைத்த தலைப்பு பிரேக்கிங் நியூஸ். ஆனால் குமுதத்தில் யமுனா என்று  மாற்றம் செய்யப் பட்டுள்ளது. அந்த இதழ் பெண்கள் சிறப்பிதழ் என்பதால் பெண்களின் பெயர்கள் மூன்று ஒரு பக்கக் கதைகளுக்கும் வைக்கப் பட்டிருந்தன.

           பிரேக்கிங் நியூஸ்
                                              (ஒரு பக்கக் கதை )

                 எல்லா பரபரப்பும் அடங்கியும்   பிரேக்கிங்  நியூஸ்  ஃபோபியா ராஜியை விட்ட பாடில்லை...  பள்ளியில் இருந்து திரும்பிய மகள் யமுனாவைக் கூட கவனிக்காமல் மீண்டும் மீண்டும் செய்திச் சேனல்களை மாற்றி மாற்றி பார்த்துக் கொண்டிருந்தாள். சே!  உருப்படியாக ஒன்றும் இல்லை.
       “என்னம்மா இப்படி பண்றியேம்மாபசிக்குது ஏதாவது குடும்மாஎன்றாள் யமுனா .
       “ஒரு அஞ்சு நிமிஷம் இருடி. ஏதாவது பிரேக்கிங் நியூஸ் வருதான்னு பாத்துட்டுப் போறேன். அதுக்கு முன்னாடி சமயக்கட்டுல  ஜூஸ் பிழிஞ்சு வச்சுருக்கேன் எடுத்துக் குடிஎன்று தலையைத் திருப்பாமல் கூறினாள் ராஜி.
       “அம்மா! கொஞ்ச நாளா  உனக்கு என்னமோ ஆயிடிச்சிஎன்று சொல்லிக் கொண்டே ஜூசைக் எடுத்துக் கொண்டு வந்து  சோபாவில் ராஜியின்   பக்கத்தில் அமர்ந்து குடிக்கத் தொடங்கினாள் யமுனா
     அதற்குள் விளம்பர இடைவேளை வர இதோ பாருடி உனக்கு நான் மேகி செஞ்சு கொண்டு வரேன். அதுவரைக்கும்  ஜூஸ் குடிச்சிக்கிட்டே  டிவி  பாத்துக் கிட்டு இரு. ஏதாவது பிரேக்கிங் நியூஸ் வந்தா உடனே என்னை கூப்பிடு . சரியா
    என்று சொல்லி விட்டு வேகமாக சமையலறை  சென்றாள்.  
       ஒரு சில நிமிடங்களிலேயே யமுனாவின் குரல் ஒலித்தது அம்மா ஒரு பிரேக்கிங் நியூஸ். சீக்கிரம் வா!"
    என்ன? என்ன? கையில் கரண்டியுடன் டிவியைப் பார்த்துக் கொண்டே ஓடிவந்தாள் ராஜி..
    அம்மா! ஓடிவராதே! கீழே பாத்து வா!என்று கத்த  ராஜி கீழே பார்த்தாள்.ஜூஸ் டம்பளர் கீழே விழுந்து  சுக்கு நூறாக உடைந்திருந்தது .
    அடியே! உன்ன... என்று கரண்டியை தூக்கி வீச யமுனா நகர்ந்து கொள்ள கரண்டி டிவியை நோக்கி பறந்து கொண்ருந்தது யமுனா சிரித்துக் கொண்டே கலாய்த்தாள் 
    " அம்மா! இன்னொரு பிரேக்கிங் நியூஸ்"