என்னை கவனிப்பவர்கள்

திங்கள், 13 ஜூலை, 2020

காமராஜர் போட்ட சபதம்-பிச்சை எடுத்தாவது மதிய உணவு போடுவேன்-பகுதி 4

        

    நீங்கள் நினைத்தது சரிதான். நெதுசு தான் நியமிக்கப் பட்டார்.
ஆனால் டாக்டர் பாலுக்காக பரிந்துரைத்தவர்கள் சொன்ன காரணத்தை காமராசர் மறுத்தார்.
            ”நெ.து.சு  அஞ்சாமல் குலக்கல்விக்கு எதிராக ஆட்சேபணை சொன்னதும் குறிப்பு எழுதியதும் எனக்குத் தெரியும். ஆனால் அரசு வேறுவிதமாக முடிவெடுத்தாலும் அதை செய்ய வேண்டியது அலுவலரின் கடமை. அதைத்தான் அவர் செய்தார்”
     உகந்தவர் இவர் என்பது தனது கருத்தாக இருப்பினும் இவரை நியமியுங்கள் என்று சொல்ல வில்லை. ஊழியர் ஆணையத்தின் கருத்து கோரப்பட்டது. அவ்வாணையம்  நெதுசு வையே பரிந்துரைத்தது. அதன் படி நெதுசு பொதுக் கல்வி இயக்குநரானார்.பணியில் சேர்ந்ததும்  வாழ்த்துப் பெற காமராசரை சந்தித்தார் நெ.துசு.
   அவரிடம் காமராசர்,” மக்கள் முன்னேறனும் என்றால் படிப்பு தேவை. காலம் மாறிக் கொண்டிருக்கிறது 8ம் வகுப்பு வரை படித்தால் போதாது 10ம் வகுப்பு வரையாவது படிக்க வேண்டும். சாதி பார்க்காமல் வருவாய் பார்க்காமல் 10 வகுப்பு  வரை இலவசமாகப் படிக்க திட்டம் தீட்டுங்கள். அதற்கு எல்லா ஊருக்கும் தொடக்கப் பள்ளி இருக்கணும். 3 மைலுக்குள்ள நடுநிலைப் பள்ளி இருக்கணும்.. உயர் நிலைப்பள்ளி  5மைல் தூரத்துக்குள்ள இருக்கணும். இதை மனதில் கொண்டு பள்ளிகளைத் திறக்க  முயற்சி செய்யுங்கள்.பள்ளிக் கூடம் திறந்தால் மட்டும் போதாது. அதற்கேற்ற எண்ணிக்கையில் ஆசிரியர்களும் தேவை. ஆசிரியர்கள் நல்ல நிலையில் இருந்தால்தான் படிப்பும் நல்லா சொல்லிக் கொடுக்க முடியும்  இப்போ ஆசிரியர்களின் சம்பளம் குறைவு. இப்படி இருந்தா ஆசிரியர் வேலைக்கு யாரும் வரமாட்டார்கள். வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை என்பது சரியாகி விடும்.    பெரும்பாலானவங்களுக்கு பென்ஷனும் இல்ல.
         முதலில் எல்லா ஆசிரியர்களுக்கும் பென்ஷன் கிடைக்கறதுக்கு திட்டம் தீட்டி கொண்டு வாங்க . திட்டத்தை சரியான புள்ளி விவரங்களுடன் தீட்டுங்கள். இல்லையென்றால் தலைமைச் செயலகத்தில் உள்ளவர்கள் சிறு தவறு இருந்தாலும் பெரிதாக்கி விடுவார்கள்.” என்றார்.
   கல்வி நிலை முன்னேற்றத்திற்கான முதல் அடி எடுத்து வைக்கப்பட்டது. இதற்கு முன்பு ராஜாஜி காலத்திலும் பென்ஷன் திட்டம் முயற்சி செய்யப்பட்டது ஆனால் நிறைவேற்ற இயலவில்லை.
     அக்காலத்தில் பள்ளிகள் பல வகையினதாக இருந்தன. அவை மாநகராட்சி/  நகராட்சி நடத்தும் பள்ளிகள் ஊராட்சி நடத்தும் பள்ளிகள் மாவட்டக் குழுக்கள் நடத்தும் பள்ளிகள் (போர்டு ஹை ஸ்கூல் என்று நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம்), அரசு பள்ளிகள் என வெவ்வேறு நிர்வாகங்கள் மூலம் நடத்தப்பட்டன.
           இதில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு மட்டும் பென்ஷன் ஏற்கனவே அனுமதிக்கப் பட்டிருந்தது,
      காமராசர் சொல்லி விட்டார். பயன் பெறப்போகும் ஆசிரியர்களின் எண்ணிக்கை? எவ்வளவு நிர்ணயம் செய்யலாம்.? எவ்வளவு செலவாகும்? என்பதற்கான விவரங்கள் துல்லியமாக இருக்க வேண்டும். அதற்கான ஆதாரங்கள் தயாராக வைத்திருக்க வேண்டும்.     
      இந்நிலையில்  அக்காலத்தில் ஓய்வு பெறும் வயது வரம்பு 55 . அவர்கள் ஒய்விற்குப்பின் எவ்வளவு ஆண்டுகள் ஒய்வூதியம் வழங்க வேண்டி இருக்கும் என்றும் கணக்கீடு செய்யப்பட்டது. ஆயுள் காப்பீட்டு அலுவலகத்தில் இருந்த விவரப்படி சராசரி வயது 63 என்று கண்டறியப்பட்டது. ஒய்வூதியம் அரைப்பகுதி தந்தால் எவ்வளவு? கால்பகுதி தந்தால் எவ்வளவு செலவாகும் எனவும் கணக்கிடப்பட்டு ரகசியமாக அறிக்கை தயார் செய்யப்பட்ட்து.
          நிதிக் குழுவின் ஆய்வுக்கு  திட்ட  அறிக்கை சமர்ப்பிக்கப் பட்டது . கல்வி அமைச்சர் சி. சுப்ரமணியன், நிதிச்செயலர் வர்கீஸ் அவர்களையும் திட்டத்துக்கான செலவுகளை சரிபார்க்கச் சொன்னார் காமராசர். சிறப்பாக தயாரிக்கப் பட்டுள்ளது ஏற்றுக் கொள்ளத் தக்க வகையில்தான் உள்ளது என்று அவர்கள் கூறினர். திட்டத்தின் கூறுகள்  காமராசர் முன்னிலையில் அனைவருக்கும் விளக்கப்பட்டது
         அவ்வேளையில் திடீரென்று ஒரு குரல் குறுக்கிட்டது,  அலுவலர் ஒருவர் எழுந்தார். மற்றவர்கள் அவரை உட்காரும்படி கூறினர். காமராசர் ”அவர் தன் கருத்தை சொல்லட்டும்” என்று அனுமதித்தார்
“ஆசிரியர்கள் மட்டுமா கஷ்டப்படுகிறார்கள்? கடைநிலை ஊழியர் உள்ளிட்ட பலரும் நலிவடைந்த நிலையில்தான் உள்ளனர். அவர்கள் மட்டும் என்ன பாவம் செய்தார்கள் ”என்றுகேட்க
            இது என்ன அவர்களுக்கான பரிவா? அல்லது திட்டத்துக்கான முட்டுக்கட்டையா என அறியாமல் அனைவரும் திகைத்தனர்.
காமராசர் பொறுமையாக,”நீங்கள் சொல்வது சரிதான், மற்றவர்களும் கேட்கத்தான் செய்வர். நானும் அறிவேன். அவர்களுக்கும் படிப்படியாகக் கொடுப்போம்.” என்றார். திட்டமிட்ட  அலுவலர்கள்கூட கவனிக்கத் தவறியதை காமராசர் கவனித்திருக்கிறார் அதற்குரிய பதில் அவர் மனதில் ஏற்கனவே இருந்ததையும் அறிந்து வியந்தனர்.
   பல கட்ட ஆய்வுக்குப் பின் தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு மட்டும் முதல் கட்டமாக ஓய்வூதியம் வழங்க முடிவு செய்யப்பட்டது
        01.04.1955 அன்று ஒய்வுதியம் நடைமுறைக்கு வந்தது. தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் தாங்கள் கேட்காத நினைத்துக்கூட பார்க்காத வாழ்நாளில் மறக்க இயலாத அந்த அறிவுப்பு கண்டு இன்ப அதிர்ச்சி அடைந்தனர்.
             தன் மனதில் நினைப்பதை எடுத்தேன் கவிழ்த்தேன் என்று நடைமுறைப் படுத்தாமல் அதனை தான் அறியாதது போல் காட்டி மற்றவர்க்கும் விளங்கவைக்கும் மாண்பு வேறு யாருக்கும் இல்லை.
அடுத்தடுத்த  திட்டங்கள் காமராசர் மனதில் ஊறிக் கொண்டிருந்தது .
           சென்னை வண்ணாரப் பேட்டையில் தியாகராயர் கல்லூரி உள்ளது. அக் கல்லூரி முதல்வர் காமராசரிடம் எங்கள் கல்லூரிக்கு தாங்கள் வந்து ஒருவரின் திருவுருவப் படத்தை திறந்து வைக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தார். அதற்கென்ன கட்டாயம் வருகிறேன் நோட்டிஸ் அடித்து எடுத்து வாருங்கள் என்றார் காமராசர் .
நோட்டீசுடன் பள்ளி நிர்வாகிகள் வந்தனர். முன்னதாக அந்த அழைப்பிதழைக் கண்ட காமராசரின் செயலாளர் துணுக்குற்றார்.
        ”என்ன இது யாருடைய படத்தை யார் திறந்து வைப்பது? உங்களுக்கு இங்கிதமே இல்லையா? இதற்கு ஐயா ஒப்புக் கொண்டாரா?” என்று உரத்த குரலில் வினவினார். 
         அப்படி யாருடைய படத்தை திறக்க சொல்லிக் கேட்டனர்?

தொடரும்

காமராஜர் போட்ட சபதம்-பிச்சை எடுத்தாவது மதிய உணவு பகுதி  5

7 கருத்துகள்:

  1. எல்லா விஷயத்திலும் தொலைநோக்குப் பார்வை இருந்தது, சரியான திட்டமிடல் அவருக்கு இருந்தது.  தமிழகம் கண்ட தன்னலமற்ற தலைவர்.

    பதிலளிநீக்கு
  2. மூன்று பாகங்களை ஒன்றாக படித்தேன் - நல்ல விஷயங்களைச் சொல்லிச் செல்லும் தொடர். தொடரட்டும். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  3. அலுவலரின் கருத்தை கூட கேட்டு செயல்படுத்தியதும் சிறப்பு... திருவுருவப் பட திறப்பு பற்றிய தகவல், முன்பு ஒருவர் பகிர்ந்திருந்தார்...

    பதிலளிநீக்கு
  4. அவர் கொண்டுவந்த இலவசக் கல்வித்திட்டம் இல்லை என்றால் நிறையபேர் படித்து வந்திருக்க முடியாது

    பதிலளிநீக்கு
  5. காமராசர் இல்லாவிட்டால் இன்று நாம் ஏது.
    திருவுருவப் படத் திறப்பு விழா பற்றி முன்னமே படித்திருக்கிறேன், நெகிழ்ந்திருக்கிறேன்

    பதிலளிநீக்கு
  6. This bet features all thecasinosource.com the red numbers or all the black numbers on the layout. NetEnt’s emblem and graphic materials is the company’s intellectual property and in all probability not|will not be} copied, reproduced, distributed or displayed without written consent of NetEnt. Now, you’ll have to examine your inbox for a verification hyperlink from Ignition. If you don’t see an email from their site inside a couple minutes, examine your “spam” folder. That mentioned, the overwhelming majority of their games work flawlessly via their mobile website. Bitstarz doesn’t host a native mobile app, however their website is totally optimized for mobile units.

    பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895