இந்த வருட புத்தகக் கண்காட்சி இன்னைக்கு முடியப் போகுது . புத்தகக் கண்காட்சி பத்தி ஒரு பதிவு போட்டாச்சி. இன்னொன்னு என்ன போடலாம்னு யோசிச்சேன். விகடன்ல சீசன் ஜோக்ஸ் போடுவாங்க .ஆனா புக் ஃபேர் பத்தி போட்டாங்களான்னு தெரியல . அவங்க போடலன்னா என்ன? நமக்கு நகைச்சுவை உணர்வு இருக்கான்னு ரொம்ப நாளைக்கப்புறம் சோதிச்சி( நியாயமா பாத்த உங்கள சோதிச்சி பாத்தேன்னுதான் சொல்லணும்) பாத்தேன். சிரிக்க ட்ரை பண்ணுங்க .
பகவான்ஜி மன்னிப்பாராக
சிரிப்பு வந்தா சிரிங்க! . வரலைன்னாலும் சிரிங்க!
சிரிப்பு வந்தா சிரிங்க! . வரலைன்னாலும் சிரிங்க!
அவங்க எல்லாம் பழைய புக் பேப்பர் வாங்கறவங்களாம்
*******************************************************************************************************
![]() |
இவங்க யாருன்னு தெரியல இல்ல! .அப்படியே மெயின்டைன் பண்ணுங்க ஹிஹி |
வாசகர் சார்! நீங்களே சொல்லுங்க அந்த டாக்டர் செஞ்சது நியாயமான்னு?
அப்படி என்ன சார் செஞ்சாரு?
தூக்க மாத்திரைக்கு பதிலா நாங்க எழுதின புத்தகங்கள பிரி்ஸ்க்ரிப்ஷன்ல எழுதித்தராராம் .
*************************************************************************
ஒவ்வொரு கடை முன்னாடியும் ஏகப்பட்ட கூட்டம் இருக்கே ஆனா யாரும் புக் வாங்கற மாதிரியே தெரியலேயே!
அவங்க வாங்க வந்தவங்க இல்லையாம்.புக் எழுதின எழுத்தாளர்களாம்
*********************************************************************************
அவர் பலவருஷமா ஒரு சஸ்பென்ஸ் நாவல் எழுதிக்கிடிருக்காராமே. அப்படி என்ன சஸ்பென்ஸ் அதுல இருக்கும்?
அந்த நாவல் எழுதி முடிப்பாரா முடிக்க மாட்டாராங்கறதுதன் சஸ்பென்சாம்
************************************************************

சார்! தப்பா புரிஞ்சிக்கிட்டீங்க! ராயல் டீக்கடையில் இருந்து வாங்கற டீயைத்தான் நாங்கள் ராயல்டீன்னு சொல்லுவோம்
*********************************************************************************
இதையும் படியுங்க!