என்னை கவனிப்பவர்கள்

கம்பர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கம்பர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 7 டிசம்பர், 2013

கம்பனை காக்க வைத்த கவிஞன்

 எட்டிப் பார்த்துப் படித்த குட்டிக் கதை-8
    தூத்துக்குடிக்கு அருகில் மீளவிட்டான் என்று வித்தியாசமான பெயரில் ஒரு ஊர் இருக்கிறதாம்.அதற்கு ஏன் அந்த பெயர் வந்தது என்பதில் ஒரு சுவாரசியம் உண்டு.
   கவிச்சக்கரவர்த்தி கம்பர் வேறு ஏதோ ஊருக்கு செல்லும்போது இந்த ஊரில் தங்கினாராம்.விடியற்காலையில் அருகே இருந்த தோப்பில் ஏற்றம் இறைத்து பயிர்களுக்குநீர் பாய்ச்சிக் கொண்டிருந்தான் ஒரு விவசாயி. தமிழகத்தில் ஏற்றம் இறைக்கும்போது பாட்டும் வழக்கம் உண்டல்லவா?
    அப்படி அந்த உழவன் பாட்டு பாடிக் கொண்டே ஏற்றம் இறைத்துக் கொண்டிருந்தான் அவன் பாடிய பாட்டு கவிச் சக்கரவர்த்தி காதில் வந்து விழுந்தது . தன்னை மிஞ்சிய கவிஞன் இல்லை என்று இறுமாந்திருந்த கம்பர், அப்படி என்னதான் பாடி விடப் போகிறான் இந்த படிப்பறிவில்லாத ஏழை விவசாயி என்று ஏளனத்துடன் பாட்டை கேட்க ஆரம்பித்தார்

"மூங்கில்  இலை மேலே" 
 என்று உச்ச ஸ்தாயியில் தொடங்கினான் ஒரு பாடலை. சாவதானமாக அந்த வரிகளை பாடினானான். விதம் விதமாக ஆலாபனைகள வேறு சேர்த்துக் கொண்டான் .
"அட! நன்றாகப் பாடுகிறானே" என்று வியப்படைந்தார் கம்பர்

"மூங்கில் இலை மேலே
தூங்கும் பனி நீரே"  
என்று  தொடர்ந்து பாட
"ஆஹா! காலையில் இலை மேலே படர்ந்திருக்கும் பணித்துளி கண்டு அழகாக வரிகளை அமைத்து விட்டானே!. நமக்குக் கூட காலைக் காட்சியை பார்க்கும்போது இப்படி தோன்றியதில்லையே அடுத்த வரி என்னவாக இருக்கும்" ஆவல் பற்றிக் கொண்டது கம்பரை.
 மீண்டும் மீண்டும் பலமுறை அதையே பாடி இடையில்  சால் கணக்கின் எண்ணிக்கையையும் அதே ராகத்தில் பாடினான்.
கம்பர், அடுத்த வரி என்ன பாடப் போகிறான் என்று உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தார்.
மீண்டும்  முதலில் இருந்து  "மூங்கில் இலை மேலே தூங்கும் பனி நீரே......."  என்று பாட
"திரும்பவும் முதலில் இருந்தா?சீக்கிரம் அடுத்த வரியை  பாடுப்பா" என்றார் மனதிற்குள்
"தூங்கு  பனிநீரை"  என்று மூன்றாவது அடியை எடுத்தான். 
உற்சாகமானார் கம்பர்  
அதற்குள் போதுமான நீர் பாய்ந்து விட்டது என்று உதவிக்கு வந்தவன் உரக்கக் கூற பாட்டை அப்படியே நிறுத்தி விட்டு ஏற்றத்திலிருந்து  இறங்கி வீட்டுக்குப் புறப்பட ஆரம்பித்து விட்டான் அந்த விவசாயி.. கம்பருக்கு ஏமாற்றமாகப் போய்விட்டது.
"அட! என்ன இவன் ஆவலை தூண்டிவிட்டு பாட்டை நிறுத்தி விட்டானே! நம்மை விட பெரிய கவியாய் இருப்பான் போலிருக்கிறதே !
அடுத்த வரி என்னாவாக இருக்கும்? பலவாறு சிந்தித்தும் பொருத்தமான  வரி கிடைக்கவில்லை.தான் அறிந்தவற்றை எல்லாம் நினைவு படுத்திப் பார்த்தார். இரவு முழுதும் தூங்காமல் யோசித்தும் ஒன்றும் புலப்படவில்லை. அதை தெரிந்து கொள்ளாமல் அவர் மனம் சமாதானம் அடைவதாக  இல்லை. ஒரு பாமரன் தன்னை புலம்பவைத்துவிட்டானே என்று நொந்து கொண்டார் கம்பர்.அந்தக் குடியானவனை தேடி சென்று கேட்கலாமா என்றும் நினைத்தார். அதற்கு அவரது தன்மானம் இடம் கொடுக்கவில்லை. தன் பயணத்தையும் ஒத்திவைத்துவிட்டு அடுத்த நாள் காலைவரை காத்திருந்து பாடலை அறிந்து கொள்ள  முடிவு செய்தார்.
இரவு  முழுவதும் அவருக்கு உறக்கம் வரவில்லை. எப்போது விடியும் என்று காத்திருந்தார். விடிந்ததும் அந்த இடத்திற்கு வந்தார். நேற்று ஏற்றம் இறைத்தவனே வந்திருந்தான். நிம்மதி அடைந்தார் கம்பர்.

"இன்னும் சிறிது நேரத்தில் பாடத் தொடங்கினால் அடுத்த வரிகள் என்ன என்று தெரிந்துவிடும்'
 . திடீரென்று ஐயம் வந்து விட்டது கம்பருக்கு  வேறு பாட்டு பாடி விட்டால் என்ன செய்வது 
"ஸ்ரீராமா! அவன் அதே பாட்டையே பாட்டையே பாடவேண்டும்" ,வேண்டிக்கொண்டார் கம்பர்.
கம்பரின் எதிர்பார்ப்பு வீண் போகவில்லை. அதே பாட்டையே பாடத் தொடங்கினான். 
"மூங்கில் இலை மேலே
தூங்கும் பனி நீரே" என்று ஆரம்பிக்க 
"அது தெரியுமப்பா. அடுத்த வரியும் தெரியும் "தூங்கு பனி நீரை" சீக்கிரம் பாடு" பொறுமை இழந்த கம்பர் தன்னை மறந்து சற்று உரக்கவே சொன்னார் 
"தூங்கு பனி நீரை
வாங்கு கதிரோனே!" 
என்று பாட கம்பர் துள்ளிக் குதித்தார் ,

"என்ன அழகு!மூங்கில் இலையை, பனித்துளி சூரியனோடு   பொருத்திக் காட்டியதுதான்  எவ்வளவு நயம்! எவ்வளவு சிந்தித்தும் நமக்கு இது தோன்றவில்லையே! " என்று எண்ணி வெட்கம் அடைந்தார் கம்பர் .

அதற்கு மேல் தான் செல்ல நினைத்த இடத்திற்கு போக அவருக்கு மனம் வரவில்லை.பயணத்தை மேற்கொண்டு தொடராமல் தனது ஊருக்கு மீள திரும்பி விட்டாராம். 
அதனால்தான் அந்த இடத்திற்கு மீளவிட்டான் என்று பெயர் வந்ததாம்!
கம்பனையே காக்க  வைத்து விட்டான் மீளவிட்டான்  கிராம விவசாயி.
 
********************************************************************************************
 பதிவரும் நண்பருமான ரூபன் தீபாவளியை முன்னிட்டு ஒரு கவிதைப் போட்டியை வெற்றிகரமாக நடத்தி முடித்தார் என்பதை அறிந்திருப்பீர்கள். அந்த உற்சாகம் தொடர பொங்கலுக்கு ஒரு கட்டுரைப் போட்டி ஒன்றை அறிவித்துள்ளார். இம்முறை அரும்புகள் மலரட்டும் வலைப்பூ எழுதும் பாண்டியனும் ரூபனுடன் இணைந்துள்ளார். போட்டி வெற்றிகரமாக நடக்க வாழ்த்துக்கள் 
போட்டியில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்.
2013-11-26_181950

2013-12-02_013918

கட்டுரைப் போட்டி நடத்தும் ரூபன்& பாண்டியன் இவர்கள்தான்.

தீபாவளி தினத்தை முன்னிட்டு மாபெரும் கவிதைப்போட்டி நடத்தி அதில் வெற்றியும் அடைந்துள்ளோம்… தணியாத தாகத்துடன் மீண்டும் ஆரம்பமாகிறது… உழவர் திருநாளாம் தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு மாபெரும் கட்டுரைப்போட்டி நடத்த உள்ளோம் என்பதை அறியத் தருகிறோம்… போட்டியில் கலந்து கொள்ளும்  போட்டியாளர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்பதற்காக முன்பு பதிவாக பகிர்ந்துள்ளோம்…

குறிப்பு-போட்டிக்கான தலைப்பு மற்றும் போட்டிக்கான நிபந்தனைகள் அடங்கிய விபரங்கள் மிக விரைவில் பதிவாக…வலம் வரும்

 

1 ரூபனின் வலைத்தளத்திலும் (https://2008rupan.wordpress.com)

2திண்டுக்கல் தனபாலன் (அண்ணா)(http://dindiguldhanabalan.blogspot.com/)  

ஆகிய இருதளங்களிலும் வெளிவரும் என்பதை தங்களுக்கு மகிழ்ச்சியுடன் அறியத் தருகிறோம்

மீண்டும் சொல்லுகிறோம்… போட்டியாளர்கள் தங்களை தயார் செய்து கொள்ளுங்கள்….

குறிப்பு : கட்டுரைக்கு உரிய தலைப்புகளை நீங்களும் பின்னூட்டத்தில் தெரிவிக்கலாம்… எது சிறந்த தலைப்பு என்பதை நடுவர்கள் இறுதியில் எடுத்துக் கொள்வார்கள்… நன்றி…
********************************************************************************************

இதைப் படிச்சிட்டீங்களா?  
 எ.பா.ப.கு. க.  விவேகானந்தரின் கண் திறந்த தேவ தாசி-
எட்டிப் பார்த்து படித்த குட்டிக் கதை-படிச்சா ஷாக் ஆயிடுவீங்க! எட்டிப்பார்த்து படித்த குட்டிக் கதை-2 கூகுள்ல தேடிப் பாத்து சொல்றேன்! எட்டிப் பார்த்துப் படித்த குட்டிக் கதை-3 காபி மாதிரிதான் வாழ்க்கை
 எட்டிப்பார்த்து படித்த குட்டிக் கதை-4யாரோ உங்களை பாக்கறாங்க! 

 எட்டிப்பார்த்து படித்த குட்டிக் கதை 6 இதுவல்லவா வெற்றி!
நீங்கள் ஏழையா?பணக்காரரா?

***************************************************************************************