எட்டிப் பார்த்துப் படித்த குட்டிக் கதை-8
தூத்துக்குடிக்கு அருகில் மீளவிட்டான் என்று வித்தியாசமான பெயரில் ஒரு ஊர் இருக்கிறதாம்.அதற்கு ஏன் அந்த பெயர் வந்தது என்பதில் ஒரு சுவாரசியம் உண்டு.
கவிச்சக்கரவர்த்தி கம்பர் வேறு ஏதோ ஊருக்கு செல்லும்போது இந்த ஊரில் தங்கினாராம்.விடியற்காலையில் அருகே இருந்த தோப்பில் ஏற்றம் இறைத்து பயிர்களுக்குநீர் பாய்ச்சிக் கொண்டிருந்தான் ஒரு விவசாயி. தமிழகத்தில் ஏற்றம் இறைக்கும்போது பாட்டும் வழக்கம் உண்டல்லவா?
அப்படி அந்த உழவன் பாட்டு பாடிக் கொண்டே ஏற்றம் இறைத்துக் கொண்டிருந்தான் அவன் பாடிய பாட்டு கவிச் சக்கரவர்த்தி காதில் வந்து விழுந்தது . தன்னை மிஞ்சிய கவிஞன் இல்லை என்று இறுமாந்திருந்த கம்பர், அப்படி என்னதான் பாடி விடப் போகிறான் இந்த படிப்பறிவில்லாத ஏழை விவசாயி என்று ஏளனத்துடன் பாட்டை கேட்க ஆரம்பித்தார்
"மூங்கில் இலை மேலே"
என்று உச்ச ஸ்தாயியில் தொடங்கினான் ஒரு பாடலை. சாவதானமாக அந்த வரிகளை பாடினானான். விதம் விதமாக ஆலாபனைகள வேறு சேர்த்துக் கொண்டான் .
"அட! நன்றாகப் பாடுகிறானே" என்று வியப்படைந்தார் கம்பர்
"மூங்கில் இலை மேலே
தூங்கும் பனி நீரே"
என்று தொடர்ந்து பாட
"ஆஹா! காலையில் இலை மேலே படர்ந்திருக்கும் பணித்துளி கண்டு அழகாக வரிகளை அமைத்து விட்டானே!. நமக்குக் கூட காலைக் காட்சியை பார்க்கும்போது இப்படி தோன்றியதில்லையே அடுத்த வரி என்னவாக இருக்கும்" ஆவல் பற்றிக் கொண்டது கம்பரை.
மீண்டும் மீண்டும் பலமுறை அதையே பாடி இடையில் சால் கணக்கின் எண்ணிக்கையையும் அதே ராகத்தில் பாடினான்.
கம்பர், அடுத்த வரி என்ன பாடப் போகிறான் என்று உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தார்.
மீண்டும் முதலில் இருந்து "மூங்கில் இலை மேலே தூங்கும் பனி நீரே......." என்று பாட
"திரும்பவும் முதலில் இருந்தா?சீக்கிரம் அடுத்த வரியை பாடுப்பா" என்றார் மனதிற்குள்
"தூங்கு பனிநீரை" என்று மூன்றாவது அடியை எடுத்தான்.
உற்சாகமானார் கம்பர்
அதற்குள் போதுமான நீர் பாய்ந்து விட்டது என்று உதவிக்கு வந்தவன் உரக்கக் கூற பாட்டை அப்படியே நிறுத்தி விட்டு ஏற்றத்திலிருந்து இறங்கி வீட்டுக்குப் புறப்பட ஆரம்பித்து விட்டான் அந்த விவசாயி.. கம்பருக்கு ஏமாற்றமாகப் போய்விட்டது.
"அட! என்ன இவன் ஆவலை தூண்டிவிட்டு பாட்டை நிறுத்தி விட்டானே! நம்மை விட பெரிய கவியாய் இருப்பான் போலிருக்கிறதே !
அடுத்த வரி என்னாவாக இருக்கும்? பலவாறு சிந்தித்தும் பொருத்தமான வரி கிடைக்கவில்லை.தான் அறிந்தவற்றை எல்லாம் நினைவு படுத்திப் பார்த்தார். இரவு முழுதும் தூங்காமல் யோசித்தும் ஒன்றும் புலப்படவில்லை. அதை தெரிந்து கொள்ளாமல் அவர் மனம் சமாதானம் அடைவதாக இல்லை. ஒரு பாமரன் தன்னை புலம்பவைத்துவிட்டானே என்று நொந்து கொண்டார் கம்பர்.அந்தக் குடியானவனை தேடி சென்று கேட்கலாமா என்றும் நினைத்தார். அதற்கு அவரது தன்மானம் இடம் கொடுக்கவில்லை. தன் பயணத்தையும் ஒத்திவைத்துவிட்டு அடுத்த நாள் காலைவரை காத்திருந்து பாடலை அறிந்து கொள்ள முடிவு செய்தார்.
இரவு முழுவதும் அவருக்கு உறக்கம் வரவில்லை. எப்போது விடியும் என்று காத்திருந்தார். விடிந்ததும் அந்த இடத்திற்கு வந்தார். நேற்று ஏற்றம் இறைத்தவனே வந்திருந்தான். நிம்மதி அடைந்தார் கம்பர்.
"இன்னும் சிறிது நேரத்தில் பாடத் தொடங்கினால் அடுத்த வரிகள் என்ன என்று தெரிந்துவிடும்'
. திடீரென்று ஐயம் வந்து விட்டது கம்பருக்கு வேறு பாட்டு பாடி விட்டால் என்ன செய்வது
"ஸ்ரீராமா! அவன் அதே பாட்டையே பாட்டையே பாடவேண்டும்" ,வேண்டிக்கொண்டார் கம்பர்.
கம்பரின் எதிர்பார்ப்பு வீண் போகவில்லை. அதே பாட்டையே பாடத் தொடங்கினான்.
"மூங்கில் இலை மேலே
தூங்கும் பனி நீரே" என்று ஆரம்பிக்க
"அது தெரியுமப்பா. அடுத்த வரியும் தெரியும் "தூங்கு பனி நீரை" சீக்கிரம் பாடு" பொறுமை இழந்த கம்பர் தன்னை மறந்து சற்று உரக்கவே சொன்னார்
"தூங்கு பனி நீரை
வாங்கு கதிரோனே!"
என்று பாட கம்பர் துள்ளிக் குதித்தார் ,
"என்ன அழகு!மூங்கில் இலையை, பனித்துளி சூரியனோடு பொருத்திக் காட்டியதுதான் எவ்வளவு நயம்! எவ்வளவு சிந்தித்தும் நமக்கு இது தோன்றவில்லையே! " என்று எண்ணி வெட்கம் அடைந்தார் கம்பர் .
"என்ன அழகு!மூங்கில் இலையை, பனித்துளி சூரியனோடு பொருத்திக் காட்டியதுதான் எவ்வளவு நயம்! எவ்வளவு சிந்தித்தும் நமக்கு இது தோன்றவில்லையே! " என்று எண்ணி வெட்கம் அடைந்தார் கம்பர் .
அதற்கு மேல் தான் செல்ல நினைத்த இடத்திற்கு போக அவருக்கு மனம் வரவில்லை.பயணத்தை மேற்கொண்டு தொடராமல் தனது ஊருக்கு மீள திரும்பி விட்டாராம்.
அதனால்தான் அந்த இடத்திற்கு மீளவிட்டான் என்று பெயர் வந்ததாம்!
கம்பனையே காக்க வைத்து விட்டான் மீளவிட்டான் கிராம விவசாயி.
********************************************************************************************
பதிவரும் நண்பருமான ரூபன் தீபாவளியை முன்னிட்டு ஒரு கவிதைப் போட்டியை வெற்றிகரமாக நடத்தி முடித்தார் என்பதை அறிந்திருப்பீர்கள். அந்த உற்சாகம் தொடர பொங்கலுக்கு ஒரு கட்டுரைப் போட்டி ஒன்றை அறிவித்துள்ளார். இம்முறை அரும்புகள் மலரட்டும் வலைப்பூ எழுதும் பாண்டியனும் ரூபனுடன் இணைந்துள்ளார். போட்டி வெற்றிகரமாக நடக்க வாழ்த்துக்கள்
போட்டியில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்.
கட்டுரைப் போட்டி நடத்தும் ரூபன்& பாண்டியன் இவர்கள்தான்.
தீபாவளி தினத்தை முன்னிட்டு
மாபெரும் கவிதைப்போட்டி நடத்தி அதில் வெற்றியும் அடைந்துள்ளோம்… தணியாத
தாகத்துடன் மீண்டும் ஆரம்பமாகிறது… உழவர் திருநாளாம் தைப்பொங்கல் தினத்தை
முன்னிட்டு மாபெரும் கட்டுரைப்போட்டி நடத்த உள்ளோம் என்பதை அறியத்
தருகிறோம்… போட்டியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் தயார் நிலையில்
இருக்க வேண்டும் என்பதற்காக முன்பு பதிவாக பகிர்ந்துள்ளோம்…
குறிப்பு-போட்டிக்கான தலைப்பு மற்றும் போட்டிக்கான நிபந்தனைகள் அடங்கிய விபரங்கள் மிக விரைவில் பதிவாக…வலம் வரும்
1 ரூபனின் வலைத்தளத்திலும் (https://2008rupan.wordpress.com)
2திண்டுக்கல் தனபாலன் (அண்ணா)(http://dindiguldhanabalan.blogspot.com/)
ஆகிய இருதளங்களிலும் வெளிவரும் என்பதை தங்களுக்கு மகிழ்ச்சியுடன் அறியத் தருகிறோம்
மீண்டும் சொல்லுகிறோம்… போட்டியாளர்கள் தங்களை தயார் செய்து கொள்ளுங்கள்….
குறிப்பு : கட்டுரைக்கு
உரிய தலைப்புகளை நீங்களும் பின்னூட்டத்தில் தெரிவிக்கலாம்… எது சிறந்த
தலைப்பு என்பதை நடுவர்கள் இறுதியில் எடுத்துக் கொள்வார்கள்… நன்றி…
********************************************************************************************
இதைப் படிச்சிட்டீங்களா?
எ.பா.ப.கு. க. விவேகானந்தரின் கண் திறந்த தேவ தாசி-
எட்டிப் பார்த்து படித்த குட்டிக் கதை-படிச்சா ஷாக் ஆயிடுவீங்க! எட்டிப்பார்த்து படித்த குட்டிக் கதை-2 கூகுள்ல தேடிப் பாத்து சொல்றேன்! எட்டிப் பார்த்துப் படித்த குட்டிக் கதை-3 காபி மாதிரிதான் வாழ்க்கை
எட்டிப்பார்த்து படித்த குட்டிக் கதை-4யாரோ உங்களை பாக்கறாங்க!
எட்டிப்பார்த்து படித்த குட்டிக் கதை 6 இதுவல்லவா வெற்றி!
நீங்கள் ஏழையா?பணக்காரரா?
***************************************************************************************
அருமையான பகிர்வு.....
பதிலளிநீக்குபோட்டியில் பங்கு பெறும் அனைவருக்கும் வாழ்த்துகள்.
நான் இணைப்பதற்குள் தமிழ்மணத்திலும் இணைத்து வாக்களித்ததற்கு நன்றி நாகராஜ் சார்
நீக்கு#கம்பனையே தலை குனிய வைத்து விட்டான் மீளவிட்டான் கிராம விவசாயி.#
பதிலளிநீக்குஇதெல்லாம் நடந்ததற்கு கல்வெட்டு அந்த கிராமத்தில் இருக்கிறதா ?
த.ம 2
இது கதையாகவே இருக்கக் கூடும். வாய் வழியாக வந்ததுதான். தமிழ்தாத்தா உ.வே சாமிநாதய்யர் ஊர்களின் வரலாறு பற்றி எழுதியதில் இதுவும் ஒன்று கி.வ.ஜ அவர்கள் குறிப்பிடுகிறார். அதைத்தான் நான் சற்று மாற்றி பதிவிட்டிருக்கிறேன்.
நீக்குகம்பன், காளமேகம், காளிதாசன் முதலான மிகப்புகழ்பெற்ற கவிஞர்களுக்கு இதுபோலும் கதைகள் ஏராளம் பகவான்ஜீ! அதனால் என்ன? இந்தக் கதைகளிலும் கம்பனின் -தானே எவ்வளவு பாடினாலும், பிறகவிதைகள் மேலும் தணியாத தாகம் கொண்டவன் எனும்- புகழ்பாடப்படுவதுடன், இதுபோலும் நல்ல கவிதைகளும் கிடைக்கின்றனவே! அதுதானே முக்கியம்? அருமையான பதிவுக்கு நன்றி நண்பர் முரளி அவர்களே!
பதிலளிநீக்குஆம். ஐயா நீங்கள் சொல்வது மிகச் சரி. இவை உண்மையா பொய்யா என்ற ஆராய்ச்சி எதற்கு. சுவாரசியமாக இருக்கிறதா?அவ்வளவுதான். இது கி.வ.ஜ அவர்களின் நூலில் படித்தது
நீக்குஅழகான பாடல் குறித்தும் ஊர் குறித்தும் அறியத் தந்தீர்கள் ஐயா.,..
பதிலளிநீக்குரூபன் & பாண்டியனுடன் தனபாலன் சார் இணையும் கட்டுரைப் போட்டி வெற்றி பெற வாழ்த்துக்கள்.
நன்றி குமார்
நீக்குசகோதரருக்கு வணக்கம்
பதிலளிநீக்குகம்பன் தலை குனிந்த கதை மிக நேர்த்தியாக கூறிய விதம் சிறப்பு. கிராமப்புறங்களில் இன்றும் ஏற்றம் இறைக்கும் பாடல்கள் ஆங்காங்கே ஒலித்தாலும் முன்பு இருந்த கற்பனை இல்லை காய்ந்த போன பயிர்களையே பார்த்து வாடிப்போன விவசாயியின் இன்றைய நிலை வேதனையளிக்கிறது. மீண்டும் திரும்புமா அந்த வசந்த காலங்கள் என என் சிந்தனையில் கேள்வி ஓடிக்கொண்டே இருக்கிறது! அழகான கதையைப் படிக்க தந்தமைக்கு நன்றி சகோதரர்...
=================
பொங்கல் தினத்தை முன்னிட்டு ரூபன் & பாண்டியன் இணைந்து நடத்தும் மாபெரும் கட்டுரைப் போட்டியைத் தங்கள் தளத்திலும் பதிந்து பதிவர்களுக்கு நினைவூட்டிய தங்கள் பெருந்தன்மைக்கும், நல்லவற்றை ஊக்கப்படுத்தும் தங்கள் குணத்திற்கும் எனது அன்பான வணக்கங்கள். போட்டியில் தாங்களும் கலந்து கொண்டு சிறப்பிக்க அன்போடு வேண்டுகிறேன். பகிர்ந்த தங்களுக்கு நன்றிகள்...
நன்றி பாண்டியன். கலந்து கொள்ள முயற்சிக்கிறேன்.
நீக்குஅருமையான பகிர்வு! மிகவும் ரசித்தேன்! வாழ்த்துக்கள் சகோ!
பதிலளிநீக்குமும்மூர்த்திகள் நடாத்தும் கட்டுரைப் போட்டி சிறப்புற அமைய நல் வாழ்த்துக்கள்!
நன்றி இளமதி
நீக்குஅருமையான பதிவு
பதிலளிநீக்குசொல்லிச் சென்றவிதம்
மிக மிக அருமை
கட்டுரைப் போட்டிக் குறித்த
அறிவிப்பு மகிழ்வளித்தது
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
நன்றி ரமணி சார்
நீக்குtha.ma 5
பதிலளிநீக்குவணக்கம்
பதிலளிநீக்குமுரளி(அண்ணா)
கம்பனை தலைகுனியவைத்த கவிஞன்.. என்ற தலைப்பில் எழுதிய பதிவு மிக அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் அண்ணா...
கட்டுரைப் போட்டி அறிவிப்பு பதிவாகக வெளியிட்ட மைக்கு மிக்க நன்றி....உங்களின் சேவை என்னும் தொடர வேண்டும் எங்களுக்கு..... வாழ்த்துக்கள்..த.ம வாக்கு..-6வது..
--------------------------------------------------------------------------------------------------
எனது புதிய வலைப்பூ உங்களை அன்புடன் வரவேற்கிறது இதோமுகவரி-http://tamilkkavitaikalcom.blogspot.com
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி ரூபன் . வலைப்பக்கத்தை பார்த்து விட்டேன்.
நீக்குகம்பனையே தவிக்க விட்ட மீளவிட்டாம் கிராமம் அறியாத செய்தி ஐயா நன்றி
பதிலளிநீக்குகட்டுரைப் போட்டி வெற்றி பெற வாழ்த்துக்கள்
த.ம.7
நன்றி ஐயா
நீக்குவேறு ரூபத்தில் இதைப் படித்திருக்கிறேன். மற்றவர்கள் படைப்பைப் பாராட்டவும் மனம் வேண்டுமே...
பதிலளிநீக்குபழங்கதைகள் அல்லவா அவரவர் கற்பனையை கொஞ்சம் சேர்த்துவிடுவார்கள். நானும் அப்படித்தான் செய்திருக்கிறேன்.
நீக்குநல்ல பகிர்வு.
பதிலளிநீக்குகட்டுரைப் போட்டியை அறிவித்தமைக்கும் நன்றி மூங்கில் காற்று.
கவியரசர் கம்பரைப் பற்றிய செவிவழிச் செய்தி கதையை வலைப்பதிவில் தந்தமைக்கு நன்றி! ( ஏற்றப் பாட்டுக்காரன் முதலில் “ மூங்கில் இலைமேலே தூங்கும் ” என்ற வரியை மட்டும் ராகத்தோடு இழுத்துக் கொண்டே முடிக்காமல் போய்விடுவான். கமபருக்கு தெரிந்து கொள்ளும் ஆவல் அதிகமாகும்)
பதிலளிநீக்குஆம் ஐயா! அதை இன்னும் விரிவாகத்தான் எழுத நினைத்தேன். நீளம் அதிகமாகி விட்டதால் குறைத்துக் கொண்டேன். சமீபத்தில் கி.வ.ஜ அவர்களின் நூலில் படித்தேன்
நீக்குசுவாரஸ்யமாக ரசிக்கும்படி இருந்தது...
பதிலளிநீக்குபோட்டி பற்றிய அறிவிப்பிற்கு மிக்க மிக்க நன்றி...
அருமையான பகிர்வு! மிகவும் ரசித்தேன்!
பதிலளிநீக்குஇனிய வாழ்த்து!
கட்டுரைப் போட்டியை அறிவித்தமைக்கும் நன்றி
வேதா. இலங்காதிலகம்.
அழகான பதிவு... நான் இந்த கதையைக் கேட்டிள்ளேன். ஆனால் இவ்வளவு தெளிவாகக். கேட்டதில்லை... அழகு...
பதிலளிநீக்குதூங்கு பனி நீரை
பதிலளிநீக்குவாங்கு கதிரோனே!" //அருமை்
மீளவிட்டான் இப்போது தூத்துக்குடி நகரத்தினுள் வந்துவிட்டது. புறநகர் என்று வேண்டுமானால் கூறலாம். இந்த பெயருக்குப் பின்னால் இப்படி ஒரு கதை இருப்பது தெரியாது. பகிர்வுக்கு நன்ரி.
பதிலளிநீக்குஉ வே ச பிறந்த ஊருக்கும் இதே போல ஒரு காரணப் பெயர் உண்டு. தெரியுமா?
பதிலளிநீக்குகம்பன் காத்திருந்த இந்த கதையை ஏற்கனவே எங்கள் 10-ம் வகுப்பு தமிழ் அய்யா சொல்லி கேட்டிருந்தேன் ! மீளவிட்டான் கிராமம் பெயர்க்காரணம் புதிய செய்தி ! தகவலுக்கு நன்றி சார்
பதிலளிநீக்குநல்ல படைப்பு முரளி!
பதிலளிநீக்குகதிவரனைக் கண்ட பனி போல! இது கம்பனுக்கு தெரியவில்லை என்பதை நம்புவதற்கு கடினமாக இருக்கு! ஏன்? எனக்கே இது தெரியும் போது...! அதான்!
+1
இது பல சினிமா பாடல்களில் பள்ளி பாடத்தில் வந்து விட்டதால் எளிதில் சொலிவிட முடியும். அந்தக் காலக் கட்டத்தில் இதை யோசிப்பது கஷ்டமே
நீக்குஎன்னங்க முரளி இது!
நீக்குநாமே பேசுவது ராமாயணம் எழுதிய கம்பனைப் பற்றி தானே!
இப்படி கம்பனை முட்டாளாக்கி விட்டீர்.
அருமையான பகிர்வு சார்!
பதிலளிநீக்குமீளவிட்டான் ஊர் பெயர்க்காரணம் மிகவும் அருமை..
பதிலளிநீக்குசிறந்த பாடல்கள் மற்றும் அதன் கருத்துகள்
நம்மை கட்டிப்போட்டுவிடும் என்பதற்கு சிறந்த உதாரணம்.
பகிர்வுக்கு நன்ற நண்பரே.
==
கட்டுரைப் போட்டி நடத்தும் நண்பர்களுக்கு நன்றிகளும்,
பங்கு பெறுவோருக்கு வாழ்த்துக்களும்.
பதிலளிநீக்குவணக்கம்!
கம்பனை வெல்லுகின்ற கொம்பன் பிறந்ததில்லை!
வம்பினை வார்க்கும் பதிவேனோ? - நம்முடைய
பாரதியும் பாவேந்தும் போற்றும் பெருங்கவிஞன்
சீரொளிரும் என்றும் செழித்து!
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு
ஐயா மன்னிக்கவும். புகழ் பெற்றவர்களை மட்டும் தட்டும் வழக்கம் அந்தக் காலத்திலேயே இருந்திருக்கிறது. அவர்மீது பொறாமை கொண்ட யாரேனும் புனைந்த கற்பனையாகவே இருக்கக் கூடும்.
நீக்குகிவாஜ பேசுகிறார் என்ற நூலில் உவே சாமிநாதய்யர் ஊர்களின் வரலாறு பற்றி எழுதிய நூலில் இக்கதையை படித்ததாக கிவாஜ தெரிவித்துள்ளார்.
கம்பனைவிட சிறந்த கவி யாரும் இல்லை என்பதே எனது கருத்தும் .
கம்பன் புகழ்பரப்பும் புலவரான தங்கள் மனம் புண்பட்டிருந்தால் மன்னிக்கவும்.
அன்பர் பாரதிதாசன் மற்றும் நண்பர் முரளி!
நீக்குஉங்கள் இருவருக்கும் என் நன்றி! கம்பன் ஒரு பெரிய புலவன்; ஆனாலும், அவர் பல கருத்துகளில் எனக்கு உடன்பாடு இல்லை; பல காரணங்கள்; அது இங்கு தேவையில்லை.
ஆனால், அவன் தமிழ்க்கு ஈடு இல்லை---இதுவும் என் [தமிழ்] அறிவை வைத்து தான். திருவள்ளுவர் [மறுபடியும்] பிறந்து வந்தால் அவர் தமிழில் குற்றம் கானலாம்.
மற்றபடி...
கிவாஜ பேசுகிறார் என்ற நூலில் உவே சாமிநாதய்யர் ஊர்களின் வரலாறு பற்றி எழுதிய நூலில் இக்கதையை படித்ததாக கிவாஜ தெரிவித்துள்ளார்-- என்பதெல்லாம் கேட்க சுவையாக இருக்கும்.\
கிவஜ மற்றும் உவே சாமிநாதய்யர் தமிழுக்கு நூறு மார்க்கு கொடுத்தால்..என் தமிழுக்கு ஒரு மார்க் கொடுத்தாலே அதிகம்.மிக மிக அதிகம்; என தமிழ் அவ்வளவு குப்பை!
அதே மாதிரி..கம்பன் தமிழுக்கு நூறு மார்க்கு கொடுத்தால்...கிவஜ மற்றும் உவே சாமிநாதய்யர் தமிழுக்கு ஒரு மார்க்கு கொடுப்பதே அதிகம்! அவர்கள் தமிழும் அவ்வளவு குப்பை!
மிக அருமை...
பதிலளிநீக்குஇந்தப்பாட்டு (ஒரிஜினல்) நாலுவரிகள் தானா, இன்னும் இருக்கிறதா என்று அறிய ஆவல்.
பதிலளிநீக்குநீங்கள் படித்த கிவாஜ புத்தகத்தைப் பற்றிய விவரம் கொடுங்கள், ப்ளீஸ்!
உங்கள் ஆர்வத்திற்கு நன்றி. நான்கு வரிக்கு மேல் தகவல் இல்லை. தேடிக் கொண்டிருக்கிறேன். கிடைத்தால் தெரிவிக்கிறேன்.கிவாஜ பேசுகிறார் என்ற நூலில் இதைப் படித்தேன். இவரது அனைத்து நூல்களும் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப் பட்டுள்ளது. கிவாஜ வின் பேச்சுக்களை தொகுத்து அல்லயன்ஸ் கம்பனி வெளியிட்ட நூல் இது . தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் இணைய தளத்தில் உள்ளது முகவரி
நீக்குwww.tamilvu.org/library/libindex.htm இதில் நுழைந்து கிவாஜ அவர்களை தேர்ந்டுத்தால் அவரது நூல்களில் பட்டியலில் இந்நூல் உள்ளது 67 வது பக்கத்தில் இக்கதை காணப்படுகிறது.
நானும் அறிந்த கதைதான்! தலைப்பு சற்று நெருடலாக உள்ளது!
பதிலளிநீக்குகருத்துக்கு நன்றிஐயா! வேறு தலைப்பை மாற்ற முயற்சிக்கிறேன்.
நீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குகவித்துவ வெளிப்பாடு
பதிலளிநீக்கு'மீளவிட்டான்' தோன்றிய கதை
கம்பனை விஞ்சிய விவசாயி
எல்லாமே சிறப்பு
தரமான படைப்பு
தொடருங்கள்
படிக்க நாம் வருவோம்
நல்ல கதை! ஆர்வமுடன் படித்தேன் :)
பதிலளிநீக்குநயமான பாடல்.. படித்திருக்கிறேன்... எல்லோரிடமும் ஏதோ ஒரு திறமை இருக்கும் யாரையும் நாம் குறைவா மதிப்பிடக்கூடாது என்பதற்கு இந்த கதை உதாரணம்...!
பதிலளிநீக்குசிறந்த பதிவு வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குஆஹா... அருமையான தகவல் ! கம்பனைக் காக்க வைத்த விவசாயி
பதிலளிநீக்குபோல் எமது நாட்டினிலும் எத்தனை எத்தனை விவசாயிகள் இலைமறை
காயாகக் கிடந்து காணாமல் போயிருப்பார்கள் .ஏற்றம் இறைக்கும் விவசாயி
நாற்றை மட்டுமா வளர வைத்தான் பல நாட்டுப் புறப் பாடல்களையும் தந்து தானே
எம்மை எல்லாம் மகிழ வைத்தான் .அருமை ! அருமையான தகவல் பகிர்வுக்குப்
பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் சகோதரா .
ஒவ்வொரு ஊருக்கும் ஒரு பெயர்க்காரணம் இருக்கும்...அவற்றை அறிந்துகொள்வதில் தனிசுகம்...கட்டுரைப்போட்டிக்குத் தயார்
பதிலளிநீக்கு