என்னை கவனிப்பவர்கள்

வலையோசை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வலையோசை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 13 செப்டம்பர், 2012

என் விகடனில் "நம் வலைப்பதிவர் சந்திப்பு "


   மிகப் பெரிய பதிவர் திருவிழாவை நடத்தி அதன் பெருமையை நம் வலைப் பதிவுகளில் பேசி வந்தோம். இன்னும் அந்த வரலாற்று பதிவர் சந்திப்பு நிகழ்வு மனதை விட்டு அகலாத நிலையில் இன்னுமொரு இன்ப அதிர்ச்சி.
   நமது 26.08.2012 அன்று நடைபெற்ற வலைப்பதிவர் திருவிழா ஆனந்த விகடனின் காதுகளை எட்டியுள்ளது. 
  ஆம்!  நமது தமிழ் பதிவர் சந்திப்பு பற்றிய செய்தி ஆனந்த விகடன் என் விகடனில் வெளியாகி உள்ளது. நிகழ்வு பற்றிய செய்திகள் விளக்கமாக படங்களுடன் இடம் பெற்றிருக்கிறது. ஆனால் இணையத்தில் மட்டுமே காண முடியும் என்று நினைக்கிறேன். அதனால் இன்னும் பதிவர்கள் பலருக்கு எட்டவில்லை என்று கருதுகிறேன். பதிவர்கள் குழுமம் ஈட்ட இருக்கும் வெற்றிகளுக்கு இது முதற் படி என்று கருதுகிறேன். இந்த பதிவர் சந்திப்பு சென்னையில் மிகப் பிரமாதமாக நடைபெறவேண்டும் என்ற விதையை விதைத்த புலவர் ராமானுசம்  அய்யா அவர்களுக்கும் உடனிருந்து உழைத்த அத்துணை நண்பர்களுக்கும் பங்கேற்ற மூத்த, இளைய பதிவர்களுக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி.

இன்னொரு மகிழ்ச்சியான செய்தியும் உண்டு. நமது அஞ்சாசிங்கம் செல்வின் இந்த வார வலையோசையில் இடம் பெற்றிருக்கிறார்.அவருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்  

இதோ என் விகடனில் வெளியான கட்டுரையின் "ஸ்னாப் ஷாட்கள்"


இதோ வெளியான பக்கத்திற்கான இணைப்பு
என் விகடனில் பதிவர்கள் சங்கமம்

கவனிக்க: நண்பர் ஒருவரின் பின்னூட்டம்

                
**********************************

பதிவர் சங்கமத்தில் வாசிக்கப் பட்ட என்னுடைய கவிதை 



திங்கள், 3 செப்டம்பர், 2012

விகடனில் எனது வலைப்பூ!

  
    
     இன்று காலை விகடன் வலை தளத்தை பார்த்துக்கொண்டிருந்தேன். கவர்ந்த தலைப்புகளை எல்லாம் படித்து விட்டு என் விகடனில் நுழைந்தபோது எதிர் பாராவிதமாக எனக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.ஆம் நீங்கள் நினைப்பது சரிதான். வலையோசையில் என் வலைப்பூ பற்றி எழுதி இருந்தார்கள். எனது மூன்று பதிவுகள் பற்றி குறிப்பிடப் பட்டிருந்தது, 
அந்த  மூன்று பதிவுகள் 
  1. காமராஜருக்கு பாட்டில் பதில் சொன்ன கண்ணதாசன் 
  2.  காதல் என்றால் என்ன? கல்யாணம் என்றால் என்ன?
  3.  என் மனைவிக்கு எதுவும் தெரியாது.

ஆனந்த விகடனில் படைப்புகள் இடம் பெற வேண்டுமென்பது பலரைப்  போல எனக்கும் கனவாக இருந்தது. அந்தக் கனவுபதிவுலகம் மூலமாக நிறைவேறும் என்று நான் நினைக்கவில்லை.என் விகடனில் பார்க்க

   ஆனால் ஒரு துரதிர்ஷ்டம் . வலையில் பார்த்துவிட்டு ஆனந்த விகடன் வாங்க கடைக்குச் சென்றேன். விகடன் வாங்கி விட்டு அதன் இணைப்பான என்விகடன் இருக்கிறதா என்று தேடினேன். கடைக்காரர் சொன்னார் இப்போது என் விகடன் இணைப்பாக தருவதில்லை இணையத்தில் மட்டும் வந்து கொண்டிருக்கிறதாம்.அதைக் கேட்டதும் எனக்கு சற்று ஏமாற்றமாக இருந்தது. புத்தக வடிவில் இருந்தால் இன்னும் நிறையப் பேர் என் வலைப்பக்கம் பற்றி அறிந்து கொள்ள வாய்ப்பாக இருந்திருக்கும். இருப்பினும் எப்படியோ இணைய விகடனிலாவது வெளியானதே என்று மகிச்சி அடைகிறேன்


மேலுள்ள  பதிவை வாசிக்க
காமராஜருக்கு பாட்டில் பதில் சொன்ன கண்ணதாசன் 
                ******************************
 இப்பதிவை வாசிக்க 
காதல் என்றால் என்ன? கல்யாணம் என்றால் என்ன? 
                                ***************

 இப்பதிவை வாசிக்க
என் மனைவிக்கு எதுவும் தெரியாது.
   என் படைப்புகள் இதற்கு முன்னர்  விகடனில் இடம் பெற்றதில்லை என்றாலும் ஆனந்த விகடன் நடத்திய ஒரு  போட்டியில் பரிசு பெற்றிருக்கிறேன். விகடனின் பவழ விழா கொண்டாட்டத்தின் போது வாசகர்களுக்கு பலேறு போட்டிகள் வைக்கப்பட்டது.  அதில் ஒன்று  ஒரு முழு படத்தின் ஒரு சில படத்துண்டுகளை கொஞ்சம் கொஞ்சமாக   ஒவ்வொரு வாரமும்   வெளியிடும். அவற்றை இணைத்து முழு படமாக ஆக்கவேண்டும். அதில் முக்கிய விஷயம் என்னவென்றால் கூடுதலாக சில படத்துண்டுகளும் இருக்கும் முழுப்படத்தை சரியான துண்டுகளை கொண்டு ஒட்டி இணைத்துவிட்டு
   தவறான மீதியுள்ள துண்டுகளையும் கண்டறிந்து தனியாக ஒட்டி அனுப்ப வேண்டும். படங்கள் எப்படி ஓட்டினாலும் சரியாக இருப்பது போலவே தோன்றும். இந்தப் போட்டியில் சரியாக ஒட்டி அனுப்பியவர்களில் நானும் ஒருவன். அந்தப் போட்டியின் பரிசுத் தொகை பகிர்ந்தளிக்கப்பட்டது. விகடனில் என் பெயரும் பரிசுத் தொகையும் வந்தபோது மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். அந்த மகிழ்ச்சி இப்போதும் ஏற்படுகிறது.

ஆனந்த விகடனுக்கு என் மனமார்ந்த நன்றி! நன்றி.!

    (சென்னை தொலைக்காட்சியில் ஒரு முறை கவிதைக்காக பரிசு பெற்றேன் அதன் பின் நடந்த  சுவாரசியமான அந்த நிகழ்வை இன்னொரு பதிவில் தெரிவிக்கிறேன்).
                   *****************************************************
இதைப் படித்தீர்களா!

மன்னன் என்ன சொன்னான்? 
பாலகுமாரன் கவிதை




மேகம் எனக்கொரு கவிதை தரும்..