என்னை கவனிப்பவர்கள்

விகடன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விகடன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 6 செப்டம்பர், 2015

விகடன்.காம் இல் எனது பதிவு + ஆசிரியர் கவிதை ஹிட் ஆச்சர்யம்


பொதுவாக மற்ற பதிவுகளுக்கு கிடைக்கும் ஹிட்ஸ்களின் எண்ணிக்கை யை  விட  எனது கவிதைகளுக்கான ஹிட்ஸ்கள் குறைவாகத் தான் இருக்கும் அதற்கு விதிவிலக்காக  ஒரே ஒரு கவிதை அமைந்திருக்கிறது . 
அதவும் 2013 செபடம்பர் 5 அன்று நான் "உண்மையான ஆசிரியர் இப்படித்தான்  இருப்பாரோ என்ற கவிதையை பதிவிட்டேன். கவிதைகளுக்கு ஆயிரம் ஹிட்ஸ் கிடைப்பதே அரிதாக இருக்கும் நிலையில் இந்தக் கவிதை  இன்று   வரை 7312 முறை பார்க்கப் பட்டுள்ளது ஆச்சர்யம் அளிக்கிறது. அதுவும் கடந்த  சில நாட்களாக ஆசிரியர் பற்றி தேடுவோர் கண்ணில் சிக்கி படிக்கப் படுவதாக tynt publishing tool இன் புள்ளி விவரம் தெரிவிக்கிறது  கடந்த வாரத்தில்  மட்டும்  கிட்டத்தட்ட 2000 ஹிட்ஸ் கிடைத்துள்ளதோடு கிட்டத் தட்ட 90 முறைக்கு  மேல்  இதன் டெக்ஸ்ட் காப்பி செய்யப் பட்டதாகவும்  தெரிவிக்கிறது. ஒரு  பழைய பதிவு இத்தனை முறை பார்க்கப்படுவது ஆச்சர்யம் அளிக்கிறது. புதிய பதிவுகளை பின்தள்ளி முன் நிற்பதற்குக் காரணம் ஆசிரியர்கள்தான் என்பதில் ஐயமில்லை.



     இக்கவிதையை  செல்போனில் நானே வாசித்து ஆடியோவாக பதிவு செய்து படக் காட்சி உருவாக்கி ஆடியோ இணைத்து யூ ட்யூபிலும் வெளியிட்டுள்ளேன்.  குறைவான தரமுடைய வீடியோ  என்ற போதிலும் அதனையும் 4,479 பேர் பார்த்துள்ளது  மகிழ்ச்சி அளிக்கிறது.





பலமணி நேரம் போதித்து தூக்கத்தை வரவழைப்பவர் அல்ல ஆசிரியர்
சில மணித்துளிகள் பேசினாலும் தாக்கத்தை ஏற்படுத்துபவர்தான் உண்மையான ஆசிரியர்

தனது அறிவால் கற்பிப்பவரை விட நடத்தையால் கற்பிப்பவரே சிறந்த ஆசிரியர்.
காலம் கடந்தும் மாணவர் மனதில் நிலைத்திருப்பவரே உன்னத  ஆசிரியர்.

       ஆசிரியப் பணியை உண்மையான ஈடுபாட்டோடு செய்துகொண்டிருக்கும் ஆசிரியர்களும் செய்த ஆசிரியர்களுக்கும் மனமார்ந்த ஆசிரியர் தின வாழ்த்துகள். ஏற்றிய ஏணியை எப்போதும் நினைத்துப்பார்ப்போருக்கும் வாழ்த்துகள் 

***********************************************************************


இரண்டு நாட்களுக்கு முன்னர் விகடன்.காம் இல்  வாசகர் பக்கத்தில் எனது (கு)லுங்கி அழுது கேட்கிறேன் என்னை ஏன் கைவிட்டீர்? என்ற பதிவு வெளியாகி இருக்கிறது .புகைப்படத்துடன் வெளியிட்ட விகடனுக்கு நன்றி
விகடனில் படிக்க
http://www.vikatan.com/news/article.php?aid=51914
(கு)லுங்கி அழுது கேட்கிறேன் "ஏன் என்னை கைவிட்டீர்?"

என்வலைப்பதிவில் படிக்க
(கு)லுங்கி அழுது கேட்கிறேன் "ஏன் என்னை கைவிட்டீர்?"
"என்னை ஏன் கைவிட்டீர் என்ற தலைப்புக்கு சற்று பயந்தேன் ,.யாரும் தவறாக எடுத்துக் கொண்டுவிடக் கூடாது என்ற அச்சம் இருந்தது.நல்ல வேளை யாரும் அதனை கண்டு கொள்ளவில்லை. நகைச்சுவையாக எடுத்துக் கொண்டமைக்கு நன்றி

***************************************************************

படித்து விட்டீர்களா

 மதுமொழிகள் 




வியாழன், 13 செப்டம்பர், 2012

என் விகடனில் "நம் வலைப்பதிவர் சந்திப்பு "


   மிகப் பெரிய பதிவர் திருவிழாவை நடத்தி அதன் பெருமையை நம் வலைப் பதிவுகளில் பேசி வந்தோம். இன்னும் அந்த வரலாற்று பதிவர் சந்திப்பு நிகழ்வு மனதை விட்டு அகலாத நிலையில் இன்னுமொரு இன்ப அதிர்ச்சி.
   நமது 26.08.2012 அன்று நடைபெற்ற வலைப்பதிவர் திருவிழா ஆனந்த விகடனின் காதுகளை எட்டியுள்ளது. 
  ஆம்!  நமது தமிழ் பதிவர் சந்திப்பு பற்றிய செய்தி ஆனந்த விகடன் என் விகடனில் வெளியாகி உள்ளது. நிகழ்வு பற்றிய செய்திகள் விளக்கமாக படங்களுடன் இடம் பெற்றிருக்கிறது. ஆனால் இணையத்தில் மட்டுமே காண முடியும் என்று நினைக்கிறேன். அதனால் இன்னும் பதிவர்கள் பலருக்கு எட்டவில்லை என்று கருதுகிறேன். பதிவர்கள் குழுமம் ஈட்ட இருக்கும் வெற்றிகளுக்கு இது முதற் படி என்று கருதுகிறேன். இந்த பதிவர் சந்திப்பு சென்னையில் மிகப் பிரமாதமாக நடைபெறவேண்டும் என்ற விதையை விதைத்த புலவர் ராமானுசம்  அய்யா அவர்களுக்கும் உடனிருந்து உழைத்த அத்துணை நண்பர்களுக்கும் பங்கேற்ற மூத்த, இளைய பதிவர்களுக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி.

இன்னொரு மகிழ்ச்சியான செய்தியும் உண்டு. நமது அஞ்சாசிங்கம் செல்வின் இந்த வார வலையோசையில் இடம் பெற்றிருக்கிறார்.அவருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்  

இதோ என் விகடனில் வெளியான கட்டுரையின் "ஸ்னாப் ஷாட்கள்"


இதோ வெளியான பக்கத்திற்கான இணைப்பு
என் விகடனில் பதிவர்கள் சங்கமம்

கவனிக்க: நண்பர் ஒருவரின் பின்னூட்டம்

                
**********************************

பதிவர் சங்கமத்தில் வாசிக்கப் பட்ட என்னுடைய கவிதை