பதிவுலகைப் பற்றி நிறைய கட்டுரைகள் வந்திருக்கின்றன. கவிதையாக எழுதினால் என்ன?அதுவும் குறள் வடிவத்தில் எழுதினால் என்ன? என்று தோன்றியதன் விளைவே இந்தப் பதிவு. எப்போதும் போல் சகித்துக் கொள்ளவும். ஹிஹிஹி
1. கூகுள் வழங்கும் வசதிகள்- செந்தமிழில்
வாகாய் பதிவுகள் செய்
2. கற்க கணினி கசடற- கற்றுப்
பதிக தமிழில் பதிவு
3. தொடங்கல் எளிதாம் வலைப்பூ- அரிதாம்
தொடர்ந்து பதிவு இடல்
4. முன்னோட்டம் பார்த்துப் பதிவிடு உன்பதிவை
பின்னூட்டம் பார்த்துத் திருத்து.
5. சிலைக்கழகு சேர்க்கும் சிறுநுட்பம் உந்தன்
வலைக்கழகு சேர்க்கும் வடிவம்
6. தரவரிசை ஏற்றுதற்கு தாழ்தல் வேண்டாம்
நிறம்வெளுத்துப் போகும் நிஜம்
7. பிறர்பதி வைகவர்தல் நன்றன்று சிந்திப்பாய்
உன்பதி வும்களவு போம்
8. வயலில் விதைப்பார் விதைகள் அதுபோல்
வலையில் விதைப்பாய் பதிவு
9. எல்லை இலையே எழுதவா! பதிவுலகம்
நல்ல பயிற்சிக் களம்
10. கதவு திறந்து அழைக்கும் இணையம்