என்னை கவனிப்பவர்கள்

திருக்குறள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திருக்குறள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 5 அக்டோபர், 2020

திருக்குறள் கற்பிக்க எக்சல் பயன்படுமா?

                 


மைக்ரோ சாஃப்ட் எக்சல்லின் பயன்கள் அளவிடற்கரியது. அலுவலகப் பயன்பாட்டில் எக்சல் கணக்கீடுகள் செய்வதற்கும் தரவுகள் சேமித்து வைப்பதற்கும் ஒரு  கருவியாக மட்டுமே பெரும்பாலோர்  இதனைப் பயன்படுத்தி வருகின்றனர்.பாடங்கள் கற்பித்தலுக்கோ மதிப்பிடுதலுக்கோ இதனை பயன் படுத்துவது மிக அரிது.
   கணிதம் கற்பித்தலில் இதனைப் பயன்படுத்துவதற்கு வாய்ப்பிருக்கிறது. ஆனால் மொழிக் கற்பித்தலுக்கும் இதனைப் பயன்படுத்த முடியும் எனபது சிலருக்கு வியப்பாக இருக்கலாம். . குறிப்பாக தமிழ் கற்பித்தலுக்கும் எக்சல் விரிதாளை பயன்படுத்தலாம் என்பதற்கான முயற்சியே இது. ஆசிரியர்கள் ஆர்வமுள்ள பெற்றோர் என  ஒரு சிலருக்காவது உதவும் என்று நினைக்கிறேன்.
      இன்று அரசு பள்ளிகளில் கூட கணினி பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதில் மாணவர்கள் பயிற்சி செய்தும் வருகின்றனர்.
      மதிப்பீடு செய்வதற்கும் தானே கற்றலுக்கும் கணினியை எந்தப் பாட ஆசிரியரும் பயன்படுத்த முடியும்.  எக்சல் மூலம் சிறிய ஆர்வமூட்டும்  தேர்வுகள்  நடத்தி  மாணவனின் கற்றலை மேம்படுத்தலாம்.

      உதாரணத்திற்கு 6 ம் வகுப்பு தமிழில் திருக்குறள் கற்பித்தலுக்கு சுவாரசியமான உறுதுணையாக எக்சல் எவ்வாறு விளங்கமுடியும் என்று பார்க்கலாம். அதனை இங்கே பாடப் புத்தகக்த்தில் உள்ளவாறு பயன்படுத்தி இருக்கிறேன்.

    6 ம் வகுப்பில்  10 திருக்குறள் உள்ளன. ஆசிரியர் அதனைக் கற்பித்து முடிந்ததும் வழக்கமான வாய்மொழித் தேர்வோ, அல்லது எழுத்துவழித் தேர்வோ வைப்பார்கள். அது மாணவர்களுக்கு சில சமயங்களில் சலிப்பூட்டும். அதனையே கணினியில் எக்சல்லைப் பயன்படுத்தினால் எவ்வளவு சுவாரசியமாக இருக்கும் என்பதைப் பார்ப்போம்.   

      ஒவ்வொரு திருக்குறளுக்கும் ஏழு சீர் என்பது எல்லோருக்கும் தெரியும். ஒவ்வொரு சீருக்கும்  ஒரு செல்  என்று வைத்துக் கொள்ளுங்கள். ஒரு செல்லை கிளிக் செய்தால் பக்கத்தில் ஒரு Down arrow தெரியும். அதனை க்ளிக் செய்ய Drop down menu தோன்றும். அந்த கீழ்நோக்குப்பட்டியில் இருந்து(Drop down menu)  சரியான சீரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அவ்வாறு 7 சீர்களையும் சரியாக தேர்ந்தெடுத்து விட்டால் அனைத்தும் பச்சை நிறத்திற்கு மாறி விடும்  பக்கத்தில் ஒரு டிக் மார்க் வந்து விடும். அதன் பக்கத்தில் குறளின் சரியான பொருள்  தோன்றும்/  திருக்குறளில் தவறு இருந்தால் பொருள் காட்டாது. மீண்டும் முயற்சி செய்ய வேண்டும்..
   ஒரு திருக்குறளுக்கு 2 மதிப்பெண்கள். சரியாக குறள்களை அமைத்துவிட்டால் அதற்குரிய மதிப்பெண்கள் கீழே தெரியும் படி அமைத்திருக்கிறேன். நீங்களும் முயற்சி செய்து பார்த்து இது எப்படி இருக்கிறது என்று கூறினால் மகிழ்ச்சி அடைவேன்.
      இதனை டவுன்லோட் செய்து உங்கள் குழந்தைகளுக்கும், ஆசிரியர்களாக இருந்தால் உங்கள் மாணவர்களுக்கும் பயன்படுத்திப் பாருங்கள். மேலும் வேறு குறள்களுக்கும் இதனைப் பயன்படுத்தலாம். ஷீட் 1 இல் இதற்கான உள்ளீடுகள் உள்ளன. நீங்கள் விரும்பினால் Unprotect செய்ய பாஸ்வேர்ட் தருகிறேன். தரவுகளை மாற்றிக் கொள்ள முடியும்

  கொஞ்சம் முயற்சி செய்து பார்க்கிறீர்களா? இந்தக் கட்டத்திற்குள்ளே சரியான திருக்குறள் சீர்களை தேர்ந்தெடுங்கள்.  உங்கள் கருத்துகளைக் கூறுங்கள்
 (சரி தவறு     என்பதைக் குறிக்கும்  குறியீடுகள் ஆண்ட்ராய்ட் ஃபோனில் வேறுவிதமாகத் தெரியும் அதனால் பக்கத்தில் சரி,தவறு என எழுத்தில் தெரியுமாறு அமைத்திருக்கிறேன். விண்டோஸ் கணினியில் குறியீடுகள் சரியாகத் தெரியும்)

 

    மேலுள்ள எக்சல் ஃபைலின் இடது கீழ்ப்புறத்தில் டவுன்லோட் பட்டன் உள்ளது. அதனை கிளிக் செய்தால் இக்கோப்பு உங்கள் கணினியில் பதிவிறக்கம் ஆகிவிடும். பின்னர் இதனைத் திறந்து Save as Template  ஆக சேமித்தால் கேள்வித்தாள் போல் பயன்படுத்த முடியும். ஒவ்வொரு மாணவனும் இதனைப் பயன்படுத்தி தேர்வு எழுதி முடித்ததும் அதனை சேமித்தால் அப்படியே சேவ் ஆகாமல் இன்னொரு பெயரில்தான் சேமிக்க முடியும். இதனால் மீண்டும் இதே ஃபைலை இன்னொரு மாணவனுக்கும் கேள்வித்தாளாகப் பயன்படுத்தலாம்

இது ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் பயன் உள்ளதாக அமையும் என்று நம்புகிறேன்.

குறிப்பு: மேலே உள்ள ஃபிரேமுக்குள் அனைத்தும் காட்சி அளிக்க Ctrl பட்டனை அழுத்திக்கொண்டு மவுஸை ஃபிரேமுக்குள் வைத்து Scroll செய்தால் பார்வைக் கேற்றபடி உள்ளடக்கத்தை  அட்ஜ்ஸ்ட் செய்து கொள்ளலாம்.


 ------------------------------------------------------------------------------------------------------------

தொடர்புடைய பிற பதிவுகள்- விரும்பினால் இவற்றையும் படிக்கலாம்.

1.உங்களால் முடியுமா?ஓரு Excel சவால்
2.அதிகம் பயன்படுத்தப்படாத எக்சல் வசதிகள்.-Excel Past.Special.
3.எக்செல் சவால்-பல செல்களில் உள்ளவற்றை ஒரே செல்லில் இணைக்க முடியுமா   

4.EXCEL இல் எண்களில் உள்ள ரூபாயை எழுத்துக்களாக மாற்ற 

5.  எக்சல் தப்பா கணக்கு போடுமா?

 

 

புதன், 21 நவம்பர், 2012

கலைஞரைப் புகழ்ந்த சுஜாதா!

சுஜாதா இப்படி சொல்கிறார்
  "தமிழ்ப் புத்தாண்டை அடுத்து டாக்டர் கலைஞர் அவர்களின் திருக்குறள் உரை நூலின் வெளியீட்டு விழா மேடையில் பல அறிஞர்கள் பேசினார்கள்.ஜி.கே.மூப்பனாரும் கலந்து கொண்ட விழா. மறைமுகமான அரசியல் குறிப்புக்கள் பலவற்றால் பேச்சாளர்கள் பார்வையாளர்களைப் பரவசப்  படுத்தினார்கள் 

  கலைஞர் அடுத்த முதல்வராக வருவது ஏறக் குறைய நிச்சயமாகிவிட்ட நிலையில் இவ்வாறு திகட்டத் திகட்ட புகழ்வது எதிர் பார்க்கக் கூடியதே. இதில் யார் தகுதிக்காகாப் புகழ்கிறார்கள் யார் பதவிக்காக என்று பதம் பிரிக்கும் ஆற்றல் கலைஞருக்கு  குறள் படிப்பதால் நிச்சயம் இருக்கும். 

   கலைஞர் தெய்வம் இறைவன் பற்றிய தன் சொந்தக் கருத்துக்களுக்கு சாமார்த்தியமாக உரை எழுதி இருக்கிறார்.கடவுள் வாழ்த்து வழிபாடு ஆகிறது. தெய்வம் நம்மைவிட அறிவில் மூத்த பெருந்தகையாளர் ஆகிறார்.
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் 
மெய்வருத்தக் கூலி தரும் 
 என்ற குறளுக்கு "கடவுளே! என்று கூவி அழைப்பதால் நடக்காத காரியம் ஒருவர் முயற்சியுடன் உழைக்கும்போது அந்த உழைப்புக்கேற்ற வெற்றியைத் தரும் " என்ற உரை வியப்பும் திகைப்பும் தருகிறது.

   திருக் குறளை ஒழுங்காகப் படித்து அதற்கு மிக நுட்பமான, சில சமயம் நம்மை பிரமிக்க வைக்கும் விளக்கங்கள் சொல்லக் கூடிய ஒருவர் இந்த மாநில முதல்வராக வருவது நம் அதிர்ஷ்டமே. நிச்சயம் குறளை கலைஞர் தனக்கும் வழிகாட்டியாக எடுத்துக் கொள்வார் என்று நம்புவோமாக!

குறளில்  எல்லாப் பிரச்சனைகளுக்கும் விடை இருக்கிறது.
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து 
அதனை அவன்கண் விடல்
என்ற குறளில் மேனஜ்மென்ட்டின் சாராம்சமே இருக்கிறது.பொருட்பால் முழுவதிலும் ஒருநல்லாட்சிக்கு உண்டான அத்தனை வழி முறைகளும் உள்ளன.
   வள்ளுவர்  தெய்வத்தை நம்பினாரா மறுபிறவியை நம்பினாரா, அவர் ஜைனரா,பெண்களை இழிவாகப் பேசினாரா போன்ற கல்லூரி வளாக ஆராய்ச்சிகளை விட்டு விட்டு நடைமுறை வாழ்வுக்கு அதில் கிடக்கும் அத்தனை ரத்தினங்களையும் பரீட்சை பண்ணிப் பார்க்க ஒரு வாய்ப்பு கலைஞருக்கு கிடைத்திருக்கிறது.
அதற்கான நீண்ட ஆயுள் பெறவும் திருக்குறளில் மருந்து உள்ளது.
அற்றது அறிந்து கடைப் பிடித்து மாறல்ல 
துய்க்க துவரப் பசித்து! "
என்று முடித்துள்ளார். 
   இந்தக் கட்டுரையில் கலைஞரின் புலமை மட்டுமல்ல சுஜாதாவின் குறட்புலமையும் பிரமிக்க வைக்கிறது. இக்கட்டுரையில் இறைமாட்சி என்ற அதிகாரத்தில் உள்ள பத்து குறள்களுக்கும்  சுஜாதா கூறியுள்ள உரை நம் கவனத்தை ஈர்க்கிறது.
பதிவின் நீளம்  கருதி அதை நான் சேர்க்கவில்லை.
அநேகமாக இந்தக் கட்டுரை எழுதப் பட்டது 1996 ஆக இருக்கலாம் என்று கருதுகிறேன்.

(சுஜாதாவின் 'நூற்றாண்டின் இறுதியில் சில சிந்தனைகள் என்ற புத்தகத்தில்' இருந்து)
*************************************************************************************
இதைப் படித்தீர்களா 

வியாழன், 17 மே, 2012

IPL - ஒரு கிரிக்கெட் ரசிகரின் திருக்குறள்

   ஐ.பி.எல் தேவையா வேண்டாமா என்று ஒரு பக்கம் விவாதங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. வேண்டாம் என்பவர்களுக்கு வலு சேர்க்கும் வகையில் சூதாட்டப் புகார்கள்.இவை  கிரிக்கெட் ரசிகர்களை வருத்தம் அடையைச் செய்கின்றன. இருந்தபோதும் இளைஞர்களின்  ஐ.பி.எல் ஆர்வம் இதனால் குறைந்து விடாது என்றே தோன்றுகிறது. உற்சாகம் கொப்பளிக்கும் ஐ.பி.எல் ஒரு திருவிழாவாகவே அமைந்துள்ளது. 
   பிரபல பதிவர் மோகன்குமார் சொல்வது போல ஐ.பி.எல் முழு பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்து (சண்டைக் காட்சிகள் கூட களத்தில் உண்டு)  காணப்படுகிறது. முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் கூட ஐ.பி.எல் காலங்களில் திரைப்படங்கள் வெளியிடத் தயங்குகிறார்கள். திரை அரங்குகள் காலியாக காணப்படுவதாக தெரிவிக்கின்றனர்.
   இதெல்லாம்  எதற்கு சொல்கிறேன் என்றால் ஐ.பி.எல் நடந்து கொண்டிருக்கும்போதே  அதைப் பற்றி எழுதிய பத்து திருக்குறளை பதிவிடப் போகிறேன் என்று எச்சரிப்பதற்காகத்தான் (திருவள்ளுவர் எழுதியதுதான் திருக்குறள். நீ எழுதினா தெருக்குரல் என்றுயாரோ சொல்வது போல் இருக்கிறது.)

1.          தேவையா  ஐ.பி.எல் என்பார் சிலபேர்கள் 
             சொல்வதை  மறந்து  விடு.

2.          இளமைக்கே ஐ.பி.எல் என்றிருக்க வேண்டாம்
            தலை'மை' அடித்தாவது செல் 

3.          ஆண்டியும்  வந்திடுவார்  காண்பதற்கு ஐ.பி.எல்
             தூண்டும் கிரிக்கெட் வெறி

4.          ஒன்றும் இரண்டும் ஓடாதே  எப்போதும் 
            சிக்சரும் ஃபோரும் அடி.

5.           தடுப்பாட்டம் வேண்டாம் தம்பிகளே-அப்போது 
             கடுப்பாகி வீசுவார் கல்

6.           கேட்ச்கள் விடுதல் அழகல்ல அதனாலே
             மேட்ச்வெற்றி கைவிட்டுப் போம்.

7.           ஒருரன் ஒரு பந்து விக்கெட்டால் ஆட்டம்
             விறுவிறுப்பு கூடுமே பார்.

8.           ஏளனமாய் நினைக்காதே எதிரணியை அவ்வணியின்
             ஏப்பையும் எட்டுவார் இலக்கு.

9.           ஆட்டம் போரடிக்கும் நேரமுண்டு அப்போது 
             அழகியர்  ஆட்டம் ரசி.

10.          சூதாடும் ஜாக்கியிடம் சிக்காதே உன்வாழ்வு 
             சூனியமாய் ஆகிவிடும் சிந்தி.


( இதுக்கெல்லாம் இலக்கணம் பாக்கப்படாது.)

*********************************************************************************************************
பிடிச்சிருந்தா  தட்டலாம் 
பிடிக்கலன்னா திட்டலாம்  
கோவம்னா    குட்டலாம்
இதைப் படிச்சாச்சா?

திங்கள், 26 மார்ச், 2012

விபரீத ஆசை!-பதிவுக்குறள் பத்து

     திருக்குறளை விரும்பாத தமிழர் இல்லை. குறள் சொல்லாத கருத்துக்களும் இல்லை.அதன் வடிவத்திலும் பொருளிலும் மயங்காத அறிஞர்கள் இல்லை. காந்தத் தன்மையுடைய குறட் பாக்களால் ஈர்க்கப்பட்டவர்களில் நானும் ஒருவன். திருக்குறளை நான் முழுமையாக அறிந்தவன் அல்ல. ஆயினும் குறள் வெண்பா வடிவம் என்னைக் கவர்ந்தது. எப்படியாவது குறள் வெண்பா எழுத வேண்டும் என்ற விபரீத ஆசை ஏற்பட்டது. அது சரியா என்று தெரியவில்லை. 
        கடந்த சில மாதங்களாக  வலைப்பதிவில்  ஆர்வம் கொண்டு பதிவுகள் செய்து வருவதால் பதிவுலகம் பற்றி பத்து குறள் வெண்பாக்கள் எழுதியிருக்கிறேன். வள்ளுவரும் புலவர்களும் அறிஞர்களும் வாசகர்களும் மன்னிப்பார்களாக
    
  1.     கூகுள் வழங்கும்  வசதிகள்- செந்தமிழில்
        வாகாய் பதிவுகள் செய் 

  2.     கற்க  கணினி கசடற- கற்றுப் 
        பதிக தமிழில் பதிவு  


  3.     தொடங்கல் எளிதாம் வலைப்பூ- அரிதாம்
        தொடர்ந்து பதிவு இடல்

  4.     முன்னோட்டம் பார்த்துப் பதிவிடு உன்பதிவை
        பின்னூட்டம் பார்த்துத் திருத்து.
         
  5.     சிலைக்கழகு சேர்க்கும் சிறுநுட்பம் உந்தன்
        வலைக்கழகு சேர்க்கும் வடிவம்

  6.     தரவரிசை ஏற்றுதற்கு தாழ்தல் வேண்டாம்
        நிறம்வெளுத்துப் போகும் நிஜம்

  7.     பிறர்பதி வைகவர்தல் நன்றன்று சிந்திப்பாய்
        உன்பதி வும்களவு போம்

   8.          வயலில் விதைப்பார் விதைகள்       அதுபோல் 
               வலையில் விதைப்பாய் பதிவு 

   9.          எல்லை இலையே எழுதவா!       பதிவுலகம் 
               நல்ல பயிற்சிக் களம்   

  10.    கதவு திறந்து அழைக்கும் இணையம் 
        பதிவு பயனுறச் செய். 

***********************************