என்னை கவனிப்பவர்கள்

இணையம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இணையம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 30 அக்டோபர், 2015

புதுக்கோட்டையில் சந்தித்ததும் சிந்தித்ததும் தித்தித்தது

  

புதுக் கோட்டை வலைப் பதிவர் சந்திப்பு  பற்றி பெரும்பாலோர் எழுதி விட்டனர்.ஏனோ என்னால் உடனடியாக எழுத இயலவில்லை.மிக தாமதமாக எழுதியதற்கு  காரணம் சொல்வது நன்றாக இருக்காது. அதனால் மன்னிப்பு மட்டும்  கேட்டுக் கொண்டு சுருக்கமாக விழா பற்றி கூறிவிடுகிறேன்.
  வலைப் பதிவர் திருவிழாவிற்கு புதுக்கோட்டைசெல்லுமுன்   கைபேசியை சில மணி நேரம் அணைத்து விட்டேன். சனிக்கிழமைகளிலும் ஏதாவது ஒரு காரணத்திற்காக அழைப்பது வழக்கமாக இருந்ததன் விளைவே அது. கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக புதுக்கோட்டை வலைப்பதிவர் திருவிழா தமிழ்ப் பதிவுலகை பரபரப்பாக்கிக் கொண்டிருந்தது. நாளொரு போட்டியும் பொழுதொரு அறிவுப்புமாக களைகட்டிக் கொண்டிருந்ததை உலகமே பார்த்துக் கொண்டிருந்தது 

    ஒருங்கிணைப்பாளராக  பொறுபேற்றுக் கொண்ட கவிஞர் முத்து நிலவன் பம்பரமாய்  சுழன்றார். அவருக்கு உறுதுணையாக புதுக்கோட்டை பதிவர்களை சாட்டையின்றி சுழல வைத்தார். 
     இதுவரை நடந்த பதிவர் சந்திப்புகள் பதிவர்களுக்கு மகிழ்ச்சி தரக் கூடியதாய் அமைந்திருந்தது...பதிவர்கள் ஒருவரை ஒருவர்  சந்தித்து கருத்த்துகளை பரிமாறிக் கொள்வதே பிரதான நோக்கமாக இருந்தது. ஆனால் புதுக்கோட்டை பதிவர் சந்திப்பு வலையுலகில் தமிழை முதன்மை இடத்திற்கு கொண்டு வரப்படவேண்டும் என்ற நோக்கத்தையும் கூடுதலாக கொண்டு அமைந்திருந்தது குறிப்பிட தக்கது. அதற்கான முன்னேற்பாடுகள் திட்டமிடப்பட்டு செயல் வடிவம் பெற்றுக் கொண்டிருந்தது.செலவுகளைப் பற்றிக் கவலைப் படாமல் துணிந்து செயலில் இறங்கியது முத்துநிலவன் தலைமையிலான புதுக்கோட்டைப் படை. இவர்களோடு இணைந்து  பங்கேற்பாளர் படிவம் வடிவமைத்தது தொடங்கி விழா நேரடி ஒளிபரப்பு செய்வது வரை  திண்டுக்கல் தனபாலனின் பங்கு அசாதாரணமானது என்பது எல்லோரும் அறிந்ததே
       ஏற்கனவே  முந்தைய பதிவர் சந்திப்புகளுக்கு தனி வலைப்பூ தொடங்கி விழா தொடர்பான செய்திகள் வெளியிடப்பட்டுக் கொண்டிருந்தன என்றாலும் புதுக்கோட்டை விழா வலைப்பூ ஒரு தனி இடத்தை பெற்றது எனலாம். விழா பற்றிய  பதிவுகள், போட்டிகள் பற்றிய விவரங்கள் , குறிப்புகள் அறிவிப்புகள் என 45 பதிவுகள் வெளியிடப்பட்டுள்ளது/ 
     .
  கடந்த மூன்று வலைப் பதிவர் சந்திப்புகளிலும் தவறாமல் கலந்து கொண்ட நான் இதில் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் , தடை ஏதும் வந்துவிடக் கூடாதே என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.நல்ல வேலை அப்படி ஏதும் நடக்கவில்லை 
   சென்னையில் இருந்ததால் அழைப்பிதழை தமிழ் இணைய கல்விக் கழகத்தின் இயக்குநருக்கும் இணை இயக்குநருக்கும் சேர்த்துவிடும்படி முத்துநிலவன் அவர்கள் என்னிடம் கூறி இருந்தார். ( தமிழ் இணைய கல்விக் கழகத்துடன் நீச்சல் காரன் மூலம் ஏற்பட தொடர்பை நன்கு பயன்படுத்திக் கொண்டார். முத்துநிலவன். அதன் விளைவே போட்டி அறிவிப்புகள்) இயக்குநர் அவர்களிடம் விழா அழைப்பிதழை அளித்துவிட்டு  விட்டு வீடு திரும்பி இரவு சிலம்பு எக்ஸ்பிரசில் புறப்பட்டேன்..  
    நீச்சல்காரன்,புலவர் ராமானுஜம், சேட்டைக்காரன் அதே ரயிலில் வருவதாக அறிந்தோம். உடல் சிரமங்களைப் பாராமல் வந்த புலவர் அவர்களின் ஆர்வம் ஆச்சர்யப் பட வைத்தது. பதிவர்களை ஒருங்கிணைய வேண்டும் என்பதில் அதிக ஈடுபாடு உள்ளவர் அல்லவா?
    அதிகாலை ரயில் புதுக்கோட்டை அடைய  மலர்த்தரு கஸ்தூரி ரங்கனும்,அரும்புகள் மலரட்டும் பாண்டியன் உள்ளிட்ட விழாக் குழுவினர் இன்முகத்துடன் வரவேற்க தேநீர் அருந்திவிட்டு தங்கும் விடுதியை அடைந்தோம். அதே ஹோட்டலில்தான் , மூத்த பதிவர்கள் ரமணி, ,ராய செல்லப்பா , கவியாழி கண்ணதாசன்  ஆகியோரையும் சந்தித்தோம்... சிறிது நேரம் சேட்டைக்காரன் அவர்களுடன் பேசிக் கொண்டிருக்க நேரம்போனதே  தெரியவில்லை. சிறிது நேரத்தில் பாலகணேஷ் அவர்களும் வந்து சேர குளித்துவிட்டு ஆட்டோவில் விழா அரங்கிற்கு புறப்பட்டோம்.
    சீருடையுடன்   அணிந்த விழாக் குழுவினர் சுறுசுறுப்பாக வலம் வந்து வந்தோரை வரவேற்றுக் கொண்டிருந்தனர், பெயரைப் பதிவு செய்து  ஒரு அடையாள கைப்பை ஒன்றை அளித்தனர். அதில் பெரு முயற்சியுடன் தயாரிக்கப் பட்ட வலைப் பதிவர் கையேடு , பேனா, குறிப்பு நோட்டு, அடங்கிய  கைப்பை ஒன்றை வழங்கினார்  .
  கவிதை ஓவியக் காட்சியை புலவர் ராமானுஜம் அவர்கள் திறந்து வைத்தார். ஓவியங்களும் கவிதையும்  தங்களில் சிறந்தவர் யார் என்று பட்டிமன்றம்  நடத்திக் கொண்டிருந்தன. அதில் தளிர் சுரேஷ்,சேட்டைக்காரன்  அரசன், என நானறிந்த நண்பர்களின் கவிதைகளும் இடம் பெற்றிருந்தன.
      சிறிது நேரத்தில் தங்கம் மூர்த்தி அவர்கள் கம்பீரமான குரலில் அழகு தமிழில்  தொகுப்புரை வழங்க  விழா தொடங்கியது. முத்து நிலவன் இங்கும் அங்குமாக நிற்க நேரமின்றி பணியாற்றிக் கொண்டிருந்தார்.
புதுக்கோட்டை கணினி தமிழ் சங்கத்துக்கு வித்திட்ட முதன்மைக் கல்வி அலுவ்லர் அருள் முருகன், தமிழ் இணைய கல்விக் கழகத்தின் இணை இயக்குனர் தமிழ்ப்பரிதி , விக்கி பீடியா திட்ட இயக்குனர் ரவிசங்கர் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் சிறப்பான உரையாற்றினர்.  இடை இடையே பதிவர் அறிமுகமும் நடை பெற்றுக்  கொண்டிருந்தது. 
    விக்கி பீடியாவில் 200 கட்டுரைகள் எழுதி சாதனை புரிந்த முனைவர் ஜம்புலிங்கம், அன்பு நண்பர் ஜோதிஜி,கரந்தை ஜெயகுமார்,தமிழ் இளங்கோ ,ஜி.எம்.பி, பழனி கந்தசாமி, குடந்தையூர் சரவணன், துளசி தரன்,நிகழ்காலம் எழில்.அன்பே சிவம் சிவசக்தி, திருப்பதி மகேஷ்,கோவை,ஆவி, அரசன்,சீனு,தமிழ்வாசி பிரகாஷ், கவிஞர் மதுமதி, கடற்கரை விஜயன், பகவான்ஜிஅசத்தல் பதிவுகளால் கலக்கிக் கொண்டிருக்கும் கூட்டாஞ்சோறு எஸ்.பி.செந்தில் குமார்  உள்ளிட்ட பலரையும் சந்தித்து பேசியது  மகிழ்ச்சி அளித்தது 

   பாண்டியன்,மைதிலி,கஸ்தூரி ரங்கன்,கீதா, ஜெயலட்சுமி ஆகியோர் விழா  பணிகளுக்கிடையேயும் நம்மிடையே உரையாடிவிட்டு சென்றனர்.
அம்மாதான் பெஸ்ட் குக் என்று சொன்ன குட்டிப் பதிவரும் மைதிலி -கஸ்தூரி ரங்கன் செல்லப் பெண்ணுமான நிறைமதி  . தண்ணீர் வழங்குவது உள்ளிட்ட தன்னாலியன்ற பணிகளை செய்து கொண்டிருந்தார். இனிமையான குரலில் தமிழ்ப் பாடல்கள் பாடியவரும் கவிஞர் பேச்சாளருமான   மகாசுந்தரின் இனிய மகள் சுபாஷிணி அனைவரின் கவனத்தையும் கவர்ந்தார். 

கரந்தை ஜெயகுமார் அவர்களின் வித்தகர்கள் நூல் வெளியீடும் சிறப்பாக நடைபெற்றது. அதில் இடம் பெற்றுள்ள வித்தகர்கள் கர்னல் கணேசன், ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்களும் பங்கு பெற்று பேசியது சிறப்புக்குரியது . நம் பதிவுலக நண்பர் ரூபன் அவர்களின் கவிதை நூலான "ஜன்னலோரத்து நிலா" வெளியிடப் பட்டது. திண்டுக்கல் தனபாலன் நூலைப் பெற்றுக் கொள்ள ரமணி அவர்கள் நூல்பற்றி பேசினார். நூல் வெளியிட்ட இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் 

 மாலையில் எழுத்தாளர்  எஸ் ராமகிருஷ்ணன் அவர்கள் சிறப்பாக உரையாற்றினார். பதிவர்கள் என்ன  எழுத வேண்டும் என்பதற்கான ஆலோசனைகளையும்  ஆக்க பூர்வமான கருத்துகளையும் கூறினார். உரைக்குப் பின்னர் பதிவர்களின் கேள்விகளுக்கு   பதில் அளித்தார். காலையில் இருந்து மாலை வரை அரங்கம் முழுமையாக நிரம்பி இருந்தது குறிப்பிடத் தக்கது.
  மதிய உணவும் மலையில் வழங்கப்பட்ட குழிப் பணியாரத்தின்  சுவையும் அவை அன்புடன் பரிமாறப் பட்ட விதமும் இதை விட சிறப்பான உணவை உண்ணும் வரை நாவிலும்  நினைவிலும்  இருக்கும்.
இத்தனை நிகழ்ச்சிகளை நடத்த முடியுமா என்று தொடக்கத்தில் சந்தேகம் வந்தது என்னவோ உண்மை. அத்தனை நிகழ்ச்சிகளையும் குறிப்பிட்ட நேரத்திற்குள்   நடத்தி காட்டியது புதுக்கோட்டை விழாக் குழு.
     போட்டிகளில் கலந்து கொள்ள முடியவில்லை என்றாலும்  இணையக் கல்விக் கழகத்துடன் இனிது நடத்திய போட்டிகளில் ஒன்றில் என்னை நடுவாராக பணியாற்ற கிடைத்த வாய்ப்பு அக்குறையப் போக்கியது 

   கஸ்தூரி ரங்கன் ரயில் ஏறும் வரை கூடவே இருந்து நேரம் போவதே தெரியாமல் சுவையான தகவல்களையும், நிகழ்வுகளையும் பகிர்ந்து கொண்டு  வழி அனுப்பி வைத்த பாங்கை பாராட்டாமல் இருக்க முடியாது.
பல நாட்கள் திட்டமிட்டு பாடுபட்டு எப்போதும் குறிப்பிடத்தக்க அளவுக்கு விழாவை வெற்றிகரமாக நடத்திய முத்துநிலவன் தலைமையிலான விழாக் குழுவினருக்கு பதிவர்கள் சார்பாக பாராட்டுதல்களை தெரிவித்துக்கொள்கிறேன். போட்டிகளில் வென்றோருக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் 
  விழாவிற்கு நேரடியாகவும் மறைமுகமாகவும், பெயர் வெளியில் தெரியாமலும் பங்காற்றிய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. வலையுலகை சாராத பல்வேறு தரப்பினரையும் தமிழ்ப் பதிவுலகை உற்று நோக்க வைத்த பெருமை இந்த விழாவுக்கு கிடைத்துள்ளது என்பதை உறுதியாக சொல்லலாம்.  

*******************************************************************************

வெள்ளி, 3 ஜூலை, 2015

வாங்கிய கடனை அடைக்காத வஞ்சகர்கள்


     தலைப்பை வேறுமாதிரியாக நினைத்து வந்தவர்கள் மன்னிக்கவும். தலைப்பு கவிதையில் இடம்பெறும் ஒரு வரியாகும் 

    ரூபன் மற்றும் யாழ்ப் பாவாணன் இணைந்து நடத்திய கவிதைப்போட்டியில் முதல் மூன்று பரிசு பெற்றவர் விவரம்  மேலே படத்தில் உள்ளது . அவர்களுக்கு வாழ்த்துகள். என்னுடைய கவிதை ஆறுதல் பரிசு பெற்றது.. என்னுடன் இணைந்து ஆறுதல் பரிசு பெற்ற பதிவர்கள் இனியா, மணவை ஜேம்ஸ் , ராஜா, ரவி ஆகியோருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள் .     போட்டியை  நடத்திய ரூபன்&யாழ்பாவாணன் இருவருக்கும் மனமார்ந்த நன்றிகள். ரூபன் யாழ்பாவாணன் இருவரும் பல்வேறு வலைதளங்களுக்கு சென்று கருத்திட்டு பதிவர்களை ஊக்குவித்து வருவது நாம் அறிந்ததே . அதுமட்டுமல்லாமல் அவ்வப்போது போட்டிகளை அறிவித்து பரிசுகள் வழங்கியும் பதிவர்களின் திறமைகளை பாராட்டி மகிழ்கிறார்கள் சிறப்பாக செயல்பட்ட நடுவர்களுக்கும் உளமார்ந்த நன்றி
                                       இணையத் தமிழ் இனி 

                            ஆங்கில மோகம் கொண்டேதான்
                                   அழகுத்  தமிழை அவமதித்தோம்
                            பாங்குடன் திகழ்ந்த நம் மொழியை
                                   'பண்ணி' மொழியாய் ஆக்கிவிட்டோம்
                            தாங்கிய தாயின் மொழியினையே
                                    தூங்கிக் கிடந்து  நாம்மறந்தால்
                            வாங்கிய கடனை அடைக்காத
                                    வஞ்சக ராவோம் அறிவீரா?

                             பள்ளிகள் துறந்தன நம்தமிழை
                                   பார்த்துக் கிடந்தோம் பாவியென
                             பிள்ளைகள் தமிழை அறியாமல்
                                    வளர்வதை நினைத்தோம் பெருமையென
                             கொள்ளை இன்பம் தமிழினிலே
                                    கொட்டிக் கிடப்பது தெரியாமல்
                             வெள்ளைக் காரன் மொழியினையே
                                     வேண்டி விரும்பிக் கற்கின்றோம்

                             அணையப் போகும் விளக்காக
                                      அருந்தமிழ் நிலையும் ஆகிடுமோ?
                             கணையை செலுத்தா  வில்லாக
                                       கன்னித் தமிழும் இருப்பதுவோ?
                            அணையைத் தாண்டா வெள்ளமென
                                       அடியில் கிடந்து பயன் என்ன?
                             இணையத் தமிழால் இனிமேலே
                                         இக்குறை போக்க இணைந்திடுவோம்

                             மென்பொருள் வன்பொருள் யாவிலுமே
                                        தமிழின் கால்கள் பதியட்டும்
                             நன்பொருள் இலக்கியம் கட்டுரைகள்
                                       இணையம் முழுதும் பரவட்டும்
                             கண்பொருள் பார்த்துக் கற்றவையும்
                                      கணினித் தமிழால் வளரட்டும்
                             இன்பொருள் என்று தமிழ்மொழியை
                                        இவ்வுலகம் அறிந்து கொள்ளட்டும்
******


* பண்ணிமொழி - tri பண்ணி, test பண்ணி , Read பண்ணி -prepare பண்ணி இப்படி நிறைய ஆங்கில வினைச்சொல் கூட பண்ணி சேர்த்து பேசும் வழக்கம் இருந்து வருகிறது. அதைத்தான் குறிப்பிட்டேன்

Read more: http://www.tnmurali.com/2015/07/tami-in-tamilnadu-our-duties.html#ixzz3g8Qt8GrA

***********************************************************************

படித்துவிட்டீர்களா?

திரி'க்குறள்,'சிரி'க்குறள்

குலுங்கி அழுது கேட்கிறேன்-"என்னை ஏன் கைவிட்டீர்?"..




புதன், 28 மே, 2014

உங்கள் வலைப்பூவை(BLOG) பேக் அப் எடுப்பது எப்படி?


கற்றுக் குட்டியின் கணினிக் குறிப்புகள்.13

    கஷ்டப்பட்டு நமக்கென ஒரு வலைப்பூ உருவாக்குகிறோம் மாய்ந்து மாய்ந்து பதிவுகள் எழுதுகிறோம். திடீரென்று ஒரு நாள் உங்கள் வலைப்பூ காணாமல் போய்விட்டால் என்ன செய்வது? அப்படி சிலருக்கு நடந்தும் இருக்கிறது. தெரிந்தோ தெரியாமலோ  ஹேக்கர்களிடம் சிக்கி வலைப் பூவை இழந்திருக்கிறார்கள் சிலர்.  சமீபத்தில்  அதிக அளவில் எழுதி வந்த நம்பள்கி அவர்களின் வலை தளத்தை காணவில்லை. இந்த வலை தளத்தை அவரே முடக்கி விட்டாரா அல்லது வேறு யாரேனும் கைவரிசை காட்டினார்களா தெரியவில்லை.இதுபோல் ஏமாறுபவர்களில் தொழில் நுட்பம் தெரிந்தவர்களும் இருக்கின்றனர் என்பது வேடிக்கை .

    பொன்மலர் என்ற தொழில் நுட்பப் பதிவரும் விளம்பர ஆசை காட்டப்பட்டு தன் மெயில் கடவுச்சொல்லை நம்பித் தர, தன் "பொன்மலர் பக்கங்கள்" என்ற வலைப்பூவை இழந்தார். பின்னர் சாமார்த்தியமாக அதை மீட்டெடுத்தது தனிக் கதை.

    நீண்ட நாட்களாக எனது வலைப்பதிவுகளை பேக் அப் எடுத்து வைத்துக்கொள்ளவேண்டும் என்று நினைத்ததுண்டு. தொடக்கத்தில் ஒவ்வொரு பதிவையும் word இல் சேமித்து வைத்திருந்தேன்.ஆனால் தொடர்ந்து அதைப் பின் பற்ற முடியவில்லை. 
    வேறு எளிய வழி ஏதேனும் உண்டா என்று தேடிய போது ப்ளாக்கரிலேயே அந்த வசதி இருப்பதை அறிந்து கொண்டேன். 
(நானெல்லாம் சரியான வெண்குழல் விளக்கு வகையை சேர்ந்தவன் என்பவன் என்பதால் எதையும் தாமதமாகத் தான் புரிந்து கொள்வேன்.ஹிஹி)
   எனது 330 க்கும் மேற்பட்டபதிவுகள் கொண்ட மூங்கில் காற்று வலைப் பூவை பேக் அப் எடுத்து வைத்துக் கொண்டேன். 

  நான் பேக் ப் எடுத்து வைத்துக் கொண்டது நல்லதாகப் போயிற்று என்றே நினைக்கிறேன். இப்படி நினைத்தற்குக் காரணம் எனது கூகுள் அக்கவுண்டை திறக்க யாரோ முயற்சி செய்திருக்கிறார்கள். அலுவலகத்திலோ அல்லது வேறு கணினிகளிலோ நாம் நமது ஜிமெயில் அக்கவுண்டுகளை பயன்படுத்துவது வழக்கம்தான்.  அப்போதெல்லாம் கூகிள் அவற்றை நமக்கு சுட்டிக் காட்டும் .  பயன்படுத்திய நேரம் இடம்  நமக்கு தெரியும் என்பதால் அவற்றை பொருட்படுத்துவதில்லை . சில தினங்களுக்கு முன்பு வீட்டில் மெயில் திறக்கும்போது ஒரு Unusual Activity என்று எச்சரிக்கை செய்தியை கூகிள் காட்டியது . முதலில் அலட்சியம் செய்து விட்டேன். பின்னர் ஏதோ  தோன்ற மீண்டும் விவரங்களைப் பார்த்தபோது சற்று அதிர்ச்சி ஏற்படத்தான் செய்தது. அமெரிக்காவில் ஒருவர் எனது மின்னஞ்சல் கணக்கை திறக்க முயற்சித்ததைக் காட்டியது 




இந்த ஆக்டிவிடி உங்களுடையதாக இல்லாத பட்சத்தில் உங்கள் கடவு சொல்லை மாற்றி விடுங்கள் என்று ஆலோசனை கூறியது கூகுள். அதனால் எனது கடவுச் சொல்லை  மாற்றி விட்டேன். நீங்களும் உங்கள் கடவு சொற்களை  மாற்றிவிடுவது நல்லது.

 இப்போது ப்ளாக் ஐ  பேக் எடுப்பது  எப்படி என்று பார்ப்போம். 
இதைப் பற்றி அறியாத புதிய பதிவர்களுக்கு மட்டுமே.

உங்கள் வலைப்பூவில் sign in செய்து உள்நுழைந்து Dash board இல் செட்டிங்க்ஸ் ஆப்ஷனை க்ளிக் செய்யவும்

படி 1

செட்டிங்க்ஸ்  மெனுவில் கடைசி ஆப்ஷனான  Others ஐ க்ளிக் செய்வும் .
பின்னர் Blog Tools பகுதியில் Import Blog-Export blog-delete blog என்ற மூன்று ஆப்ஷன்கள் உள்ளதைக் காணலாம் இதில் Export Blog ஐ தேர்ந்தெடுக்கவும்.
பக்கத்திலேயே Delete Blog ஆப்ஷன் உள்ளதால் கவனமாக இருக்கவேண்டும். தப்பித் தவறி அதனை க்ளிக் செய்துவிடக் கூடாது. 

படி 2











படி 3

கீழ்க்கண்டவாறு ஒரு பெட்டி தோன்றும் அதில் டவுன் லோட் ப்ளாக் ஐ க்ளிக் செய்தால் blog முழுவதும் சிறிது நேரத்தில் டவுன்லோட் ஆகிவிடும் 



அக் கோப்பு கீழ்க்கண்டவாறு தோற்றமளிக்கும்.  இதனை திறந்து பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. இதில் நமது பதிவுகள் அனைத்தும் பின்னூட்டங்களுடன் சேமித்து வைக்கப் பட்டிருக்கும்.

இதனை கணினியிலோ, பென் டிரைவிலோ சி டியிலோ சேமித்து வைத்துக் கொள்ளலாம். 

   அல்லது இன்னொரு ப்ளாக் தொடங்கி அதில் இவற்றை பதிவேற்றிக் கொள்ளலாம். புதிய ப்ளாக்கில் உள் நுழைந்து  படி 1 ஐத் தொடர்ந்து 2ம் படியில் உள்ளது Import Blog  ஐ கிளிக் செய்து  browse  ஆப்ஷன் மூலம் பேக் அப் ஃபைல் சேமிக்கப்பட்ட இடத்தில் இருந்து தேர்வு செய்து Open ஐ க்ளிக் செய்தால் பேக் அப் பைல் அப் லோட் ஆகிவடும்.


    கொடுக்கப்பட்ட எண்களை தட்டச்சு செய்து நாம் ரோபோட் அல்லஎன்பதை உறுதி செய்து Import blog ஐ க்ளிக் செய்தால் போதும் . பழைய ப்ளாக்கின் பதிவுகள் அனைத்தும் புதிய ப்ளாக்கிற்கும் வந்து விடும். இதற்கு சிறிதுநேரம் பிடிக்கும். பதிவுகளின் எண்ணிக்கையை பொறுத்து நேரம் கூடுதலாகவோ குறைவாகவோ ஆகலாம் .

மேலுள்ள படத்தில் Automatically publish all imported posts and pages என்பதற்கு முன் உள்ள செக் பாக்ஸில் டிக் செய்யப்பட்டிருந்தால் அனைத்து பதிவுகளும் பப்ளிஷ் ஆகிவிடும். இரண்டு ப்ளாக்கிலும் பதிவுகள் இருக்கும் நாம் இதை பேக்கப் ஆக மட்டுமே பயன்படுத்துவதால் இந்த செக் பாக்ஸில் உள்ள  டிக்கை நீக்கி விடுவது நல்லது. பதிவுகள் draft ஆக புதிய ப்ளாக்கின் டேஷ் போர்டில் இருக்கும். வேண்டுமானால் பப்ளிஷ் செய்து கொள்ளலாம்

படத்தில் மூங்கில் காற்றின் பதிவுகள் பார்வைகள் பலவிதம் ப்ளாக்கில் இறக்கம் செய்யப்பட்டிருப்பதை  பார்க்கலாம் . இவற்றை பப்ளிஷ் செய்யாமல் வைத்திருக்கிறேன்.

    இவ்வாறு வலைப்பூவை பேக் அப் எடுக்கும்போது பதிவுகளும் கம்மேன்ட்களும் மட்டுமே புதிய பிளாக்கிற்கு ஏற்றம் செய்யவேண்டும். முந்தைய ப்ளாக்கின் டெம்ப்ளேட்டைப் போலவே இருக்க வேண்டும் என்றால் டெம்ப்ளேட்டை முன்னதாக பேக் அப்  எடுத்து வைத்துக் கொண்டு பயன் படுத்தலாம். அல்லது புதிய வேறுவித டெம்ப்ளேட்டை அதிலேயே தேர்வு செய்து கொள்ளலாம்.

 
டெம்ப்ளேட் பேக் அப் எடுக்க ப்லாக்கிற்குள் நுழைந்து Template ஆப்ஷனில் Backup/Restore ஐ க்ளிக் செய்து பயன்படுத்திக் கொண்டிருக்கும் டெம்ப்ளேட்டை சேமித்து வைத்துக் கொண்டு புதிய ப்ளாக்கிற்கும் பயன் படுத்திக் கொள்ளலாம்



புதியவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.

*****************************************************************************

இது போன்ற குறிப்புகளை புதுக் கோட்டை பட்டறையில் சொல்ல நினைத்தேன். நேரமின்மை காரணமாக முடியவில்லை 

***************
கற்றுக்குட்டியின் முந்தைய கணினிக் குறிப்புகள் . 
(ஒரு வேளை யாருக்கேனும் பயன்படலாம்) 



  • Excel தப்பா கணக்கு போடுமா? பகுதி 2
  • எக்சல் எக்ஸ்பர்ட்டா நீங்கள்?சொல்லுங்கள்!எக்சல் தப்பா கணக்கு போடுமா?
  • எக்செல் சவால்-பல செல்களில் உள்ளவற்றை ஒரே செல்லில் இணைக்க முடியுமா? .
  • தமிழ்மணம்,தமிழ் 10 இல் ஒட்டு போட்டவர்களை அறிவது எப்படி?
  • எச்சரிக்கை!கூகுள் உங்களை இப்படி கண்காணிக்கிறதாம்!
  • காசோலை விவரங்களை வீட்டு பிரிண்டரில் டைப் செய்ய 
  • EXCEL இல் எண்களில் உள்ள ரூபாயை எழுத்துக்களாக மாற்ற 
  • காபி,பேஸ்ட் பதிவர்களை என்ன செய்வது?
  • உங்கள் வலையின் பார்வையாளர் எண்ணிக்கையை அதிகமாக்க ...
  • கற்றுக் குட்டியின் கணினிக் குறிப்புகள்-Font Shortcut...
  • விண்டோஸ் 7 ன் பயனுள்ள டூல்
  • பிற பதிவர்களின் அலெக்சா ரேங்க் அறிவது எப்படி?
  • முன்னணிப் பதிவர்களின் அலெக்சா தரவரிசை பின்னிலை ஏன்...

  • *******************************************************************
  • ஞாயிறு, 25 மே, 2014

    புதுக்கோட்டையில்பதிவர் பயிற்சி-புது முயற்சி

       
        அரசியல்,எழுத்து என்று எந்த வகை பிரபலங்களாக இருந்தாலும் இணையத்தை தவிர்க்க இயலாத சூழ்நிலை இன்று உள்ளது. அதனால் அரசியல் வாதிகள்  எழுத்தாளர்கள் இணையத்தின் மூலமாகவும் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர். கெளரவத்திற்காகவேனும் இணையதளமோ முகநூல் பக்கங்களை வைத்துக் கொள்வது வழக்கமாகி விட்டது. பத்திரிகைகளும் வலைப்பூ  முகநூல்,டுவிட்டர் பக்கங்களை கவனித்துக் கொண்டிருக்கின்றன.
         
           லியோனி பட்டிமன்றக் குழுவின் ஆஸ்தான பேச்சாளர்களில் ஒருவர் கவிஞர் முத்துநிலவன் அவர்கள் . ஏராளமான  கதை கவிதை  கட்டுரை என்று முன்னணி பத்திரிகைகளில் எழுதி வருபவர். புதுக்கோட்டையில்வசித்து வரும் இவரை இணையம் தன் பக்கம் ஈர்த்துவிட்டது.  பட்டிமன்றங்களில் முழங்கிய இவர் இணைய வெளியிலும் " வளரும் கவிதை" எனற வலைப்பூவிலும் எழுதி வருகிறார். கடந்த பதிவர் சந்திப்பிற்கு சில நாட்களுக்கு முன்பாகத்தான் எனக்கு அறிமுகமானார்.

       இணையத்தில் தமிழ்ப் பயன்பாட்டை முடிந்த அளவுக்கு அதிகரிக்க வேண்டும் என்பதும்  எழுத்தாற்றல் மிக்க பலரையும் வலைப்பூக்களில் எழுத  ஊக்குவிக்க வேண்டும் என்பதும் இவரது விருப்பம்.இப்பகுதியில் திறமையான எழுத்தாளர்கள் பலர் இருகிறார்கள். அவர்களை வலையில் எழுதவைக்கவேண்டும் என்பதை  நோக்கமாகக் கொண்டு கடந்த அக்டோபர் மாதத்தில் புதுக்கோட்டை பகுதி ஆசிரியர்களை அழைத்து வலைப்பூ தொடங்கி எழுத ஊக்குவிக்கும் வகையில்  நன்கு அறிந்தவர்களைக் கொண்டு பட்டறை ஒன்றை நடத்தினார். அப்போது பதிவெழுத தொடங்கிய சிலர் தொடர்ந்து எழுதி வருவது பாராட்டத் தக்கது. அரும்புகள் மலரட்டும் பாண்டியன் இன்று தமிழ்மணத்தின் முதல் 20 தர வரிசைக்குள் இடம் பிடித்து விட்டார்

       முதல் பயிற்சிக்கு கிடைத்த வரவேற்பு காரணமாக  இரண்டாவது முறையாக பயிற்சியை நடத்த திட்டமிட்டு  வெற்றிகரமாக நடத்தியும் காட்டி விட்டார் கவிஞர் முத்து நிலவன்.  புதுக்கோட்டை பகுதியில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் எழுத்தாளர்கள் மற்றும் ஆர்வம் உள்ள அனைவரையும் இணையத்துக்குள் இழுத்து விட வேண்டும் என்ற அவரது தன்னலமற்ற செயல்பாடுகள் ஆச்சர்யத்தை அளித்தன. இணையத்துடன் கூடிய கணினி வசதியுடன் உள்ள இடத்தைப் பிடித்தது முதல் அத்தனை ஏற்பாடுகளும் அவரது தலைமையில் சிறப்பாக இருந்தன.  17.05.2014 மற்றும் 18.05.2014 ஆகிய இரு நாட்கள் நடைபெற்றது இப்பயிற்சிக்கு வந்து ஆலோசனைகளையும் கூறவேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.(மனசாட்சி:  உனக்கு  என்ன தெரியும். உங்களை கூப்பிட்டது ஆச்சர்யம்தான். ஒரு வேளை  எப்படி எழுதக் கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டாக இருக்குமோ?.)

        நானும் வருவதாக சொல்லி இருந்தேன் ஆனால் எதிர்பாராஅலுவல் காரணமாக முன்பதிவு செய்து வைத்திருந்தும் புறப்பட முடியவில்லை சனிக்கிழமை இரவு புறப்பட்டேன்.புதுக்கோட்டை ரயில் நிலையத்தில்  முத்துநிலவன் அவர்கள்  பாண்டியன் மற்றும் கஸ்தூரி ரங்கன் ஆகியோருடன் தயாராக இருந்து என்னை அழைத்து சென்றனர்.
    பின்னூட்டப் புயல், வலையுலக மந்திரவாதி திண்டுக்கல்  தனபாலன் வந்து கொண்டிருப்பதாக சொன்னார்கள். 
        இதற்குள் பெரிய மீசையுடன் கம்பீரமாக வந்து நின்றார் கரந்தை ஜெயகுமார். ஏற்கனவே வலைப்படத்தில் உள்ள தோற்றத்திலேயே இருந்ததால் அறிமுகம் தேவைப் படவில்லை. அற்புதமான எழுத்துகளுக்கு சொந்தக்காரரான அவர்  ராமானுசம் பற்றிய தொடர்பதிவால்  என்னை வெகுவாகக் கவர்ந்தவர். 

        முதல் நாள் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பயிற்சியை  தொடங்கி வைத்தார் என்பதை அறிய முடிந்தது. இப்பயற்சியில் கலந்து கொண்ட பலர் தொடக்க நிலையில் உள்ளவர்கள் . முதல் நாளில் மின்னஞ்சல் உருவாக்குவது முதல் வலைப்பூ தொடங்குவது  எப்படி எழுதுவது,தமிழில் தட்டச்சு செய்ய எந்தெந்த மென்பொருள்கள் பயன்படுத்தலாம்   என்பதோடு என்னவெல்லாம் எழுதலாம் எனது பற்றியும்   வல்லுனர்கள் பயிற்சி அளித்ததாக கூறினர் . பங்கு பெற்றவர்கள்  அங்கேயே வலைப்  பூவை தொடங்கி விட்டனர் .

         முதல் நாளில் சொன்னது போக நாம்  என்ன சொல்ல முடியும்ஐயம் மனதுக்குள் இருந்து . நமது அனுபவங்களை மட்டும் சொல்வோம் என்று முடிவு செய்து கொண்டேன்.
    கவிஞர் ஐயா வீட்டில் காலை உணவருந்தி விட்டு பயிற்சி நடக்கும் இடமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா  பாலிடெக்னிக் கல்லூரிக்கு சென்றோம் . தனபாலனும் வந்து விட்டார்.

        முதல் பகுதியாக முதன்மைக் கல்வி அலுவலர் "நட்ட கல்லும் பேசும்" என்ற தலைப்பில் புதுக் கோட்டையில் இருந்து தஞ்சைக்கு செல்லும் வழியாக பயன்படுத்தப்பட்ட   ராஜராஜன் பெருவழி பற்றி தான் செய்த ஆய்வை பவர் பாயிண்ட்டி ல்  அற்புதமாக விளக்கினார் . கல்வெட்டுக்கள் நினைவு சின்னங்கள் உட்பட பல்வேறு ஆதாரங்களை  அளித்ததோடு அந்த வழியை அடையாளம் கண்டு பயணம் செய்தும் பார்த்ததும்  அந்த அனுபவத்தை விவரித்ததும் குறிப்பிடத் தக்கது.  முதன்மைக் கல்வி அலுவலர் பணியில் ஒய்வு என்பதே மிகக் குறைவு. 24 மணி மேரமும் பணியைத் தவிர பிறவற்றை நினைத்துப் பார்ப்பது என்பது அரிதினும் அரிதான ஒன்று. இந்நிலையில் அவரது ஆர்வம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.
          பட்டறைக்கு தொடர்புடையதாக இல்லாவிட்டாலும் சுவாரசியமாக இருந்தது.

        அதற்குள் உணவு இடைவேளை வந்து விட்டது. பிற்பகலில் நீங்கள் பாதியும் தனபாலன் பாதியும் எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லப் பட்டாலும் எதிர்பாரா விதமாக விக்கி பீடியா பங்கேற்பாளர் பிரின்ஸ் என்.ஆர்.எஸ் பெரியார் விக்கிபீடியாவில் எழுதுவது எப்படி என்று கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்குமேல் விளக்கமளித்தார் . ஒரு தகவல் களஞ்சியமாக தமிழ் விக்கி பீடியாவை உருவாக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் எழுதலாம். எழுதியதை யார் வேண்டுமானாலும் திருத்தலாம் என்றும் கூறினார்.விக்கி பீடியாவை  பலரும் ஆதாரங்களாகக்  கொண்டு அதுதான்  சரி என்று கூறும் நிலையில் தவறான  கருத்துக்கள்  அல்லது தான் விரும்பும் கருத்துக்களை  பதிவு செய்ய முடியும் என்பதும் மாற்றுக் கருத்துடையவர் அதை திருத்த முடியும் என்பதும் விக்கி பீடியாவின் நம்பகத் தன்மை  சற்று ஐயத்துக்கு இடமாக்கியது  போல் தோன்றியது . மேலும் சில குறைபாடுகளும் உள்ளதையும் கூறினார்.தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வந்தால் அதன் நிர்வாகக் குழுவிலும் சேர்க்கப்படுவார்களாம்.

       தேநீர் இடைவேளைக்குப் பிறகு திண்டுக்கல் தனபாலன் வலைப் பூ பற்றிய பல தகவல்களை தனக்கே உரிய பாணியில் விவரித்தார். HTML மற்றும் ஜாவா நிரல்களை எங்கு எப்போது பயன்படுத்துவது அதனால் என்ன பயன் என்பதையும் விளக்கினார் . பதிவு எழுதுவதற்கு HTML MODE யே  தனபாலன் பயன்படுத்துகிறார். தான் எப்படி வேகமாகப் பின்னூட்டம்  இடுகிறார் என்பதன் ரகசியத்தை சொன்னார்.
    மென்பொருள் படித்தவர்கள்  போல   நிரல்கள் எழுதும் ஆற்றலை தனபாலன் பெற்றிருக்கிறார் என்பதை அறிய முடிந்தது. ஏற்கனவே அடிப்படைகளை அறிந்தவர்கள் இவரது ஆலோசனைகளைப் பின்பற்றினால் வலைபதிவை, வடிவமைப்பை மேலும் மெருகேற்றிக் கொள்ள முடியும்.

        நிறைவடையும் நிலையில் எனக்கு வாய்ப்பு கிடைத்தது . தொடக்க நிலையில் உள்ளவர்களுக்கு வலைப்பூ  தொடர்பான அடிப்படை  செயல்பாடுகளை எனக்கு தெரிந்தவரை எடுத்துக் கூறினேன். அனைவரும் அதிகமாக எதிர்பார்த்தது பதிவுகளை திரட்டிகளில் இணைப்பது பற்றி . ஆனால் நேரமின்மை காரணமாக  விரிவாக கூற முடியவில்லை.

       திண்டுக்கல் ஏற்கனவே தனபாலன் வலைப்பூ  எழுதும் பலருக்கு அவர்கள் பதிவுகளை திரட்டிகளில் இணைத்து உதவி  இருக்கிறார்.நானும் சிலருக்கு  வலைப்பூ வடிவமைக்கவும்  திரட்டிகளில்  இணைக்கவும் உதவி செய்திருக்கிறேன். இப்போதும் தேவைப்படின் உதவத் தயாராக இருக்கிறோம்.

       விடுமுறை தினமாக இருந்த போதிலும் சுமார் 40 பேருக்கு மேல் வந்திருந்து மாலை 5.30 மணி வரை இருந்தது அவர்கள் ஆர்வத்தை காட்டுகிறது. இதில் பெண்களும் கலந்து கொண்டு இணையத்தில் எழுத முன் வந்தது உண்மையில் பாராட்டுக் குரியது.

       நிகழ்வுகள் அனைத்தையும் அவ்வப்போது சுற்றி சுற்றி வந்து சுறுசுறுப்பாக புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார் மூத்த பதிவர் ஒருவர். அவர் வேறு யாரும் அல்ல. "எனது எண்ணங்கள்" தமிழ் இளங்கோ ஐயாதான் அவர். அவரது புகைப்பட  ஆர்வத்தை பதிவுகள் மூலம் அறிந்திருந்த போதிலும் நேரில் அதை உறுதி செய்தார் .
    சோழ நாட்டில் பௌத்தம் என்ற வலைப் பதிவில் எழுதி வரும் முனைவர் ஜம்புலிங்கம்  போன்ற அறிஞர் பெருமக்களை சந்திக்க வாய்ப்பாக அமைந்தது புதுக்கோட்டை பயிற்சி

    இடை வேளையின்போதும் ஆலோசனை வழங்கும் தனபாலன்
    புகைப்படம்: தமிழ் இளங்கோ  


       அத்தனை பேரையும் ஒருங்கிணைத்து தான் பெற்ற இன்பம் பெருக அனைவரும் பெருக இவ்வையகம் என்ற நோக்குடன் செயல்பட்டு பட்டறையை வெற்றிகரமாக நடத்திய பெருமை முத்துநிலவன்  அவர்களையே சாரும். அவருடன் உடன் இருந்து பணியாற்றிய வர்களுக்கும் , இடம் தந்து இணைய இணைப்புடன் கணினியும் தந்து மதிய  உணவும் தந்து  உதவிய ஸ்ரீ வெங்கடேஸ்வரா  பாலிடெக்னிக் கல்லூரி நிர்வாகத்திற்கும் மனமார்ந்த நன்றிகள் .



    ********************************************************************************


    கொசுறு: 

    எல்லா பதிவர் சந்திப்பிலும் நடக்கிற சிறப்பு நிகழ்ச்சி, கற்றது, புகைப்படங்கள். பதிவர் பட்டறைனு எல்லாரும் எழுதுறாங்க. இது தவிர "பிஹைண்ட் த சீன்" நடப்பதை யாருமே எழுதுவதில்லை! நீங்க எதுவுமே சொல்லாவிட்டாலும், சந்திப்பின்போது யார் யாரு தலையெல்லாம் யாரு யாரிடம் உருளும் என்பதை ஓரளவுக்கு யூகிக்க முடிகிறது.

    நன்றி:வருண்

    *********************************************************************************
     

    செவ்வாய், 30 ஜூலை, 2013

    எச்சரிக்கை!கூகுள் உங்களை இப்படி கண்காணிக்கிறதாம்!

          உலகத்தில் இலவசம் என்று எதுவும் இல்லை. பாதுகாப்பு, ரகசியம் என்றும் எதுவுமில்லை.
    ( இந்தப் பதிவே அதற்கு உதாரணம். நேற்று இரவு பதிவிட்டேன். தமிழ்மணத்தில் இணைக்கவில்லை. காலையில்தான் தமிழ் மணத்தில் இணைத்தேன். தமிழ் 10 இல் இணைக்க முற்பட்டேன். அங்கே இதே பதிவைக் கண்டேன். வேறு யாரோ இணைத்து விட்டார்கள் என்று நினைத்து அதற்கு ஓட்டும் போட்டேன். அப்புறம்தான் தெரிந்தது அது யாழ்மின்னல் என்ற வலைதளத்தில் என் அனுமதியின்றி வெளியிடப் பட்டிருக்கிறது. இரண்டு மூன்று நாட்கள் கழித்தாவது வெளியிட்டிருக்கலாம். http://www.yarlminnal.com/?p=48743 )
       சமீபத்தில் பத்திரிகைகளில்  படித்திருப்பீர்கள். எட்வர்ட் ஸ்நோடன் என்பவரைப் பற்றி.உலகில் உள்ள அனைத்து நாடுகளை உளவு பார்ப்பது மட்டுமல்லது தனி நபர் தகவல்களையும் திரட்டுகிறது அமெரிக்கா என்ற உண்மையை ஆதாரங்களுடன் அம்பலப் படுத்தியவர்தான் இந்த ஸ்நோடன். . இவர் மீது தேசத் துரோகக் குற்றம் சாட்டி தேடிவருகிறது அமெரிக்கா. இவருக்கு அடைக்கலம் தரவேண்டாம் என்று உலக நாடுகளை கேட்டுக் கொண்டுள்ளது அமேரிக்கா. கூகுள்,ஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற இணையதளங்கள் தாங்கள் சேகரித்த தகவல்களை அமெரிக்காவிற்கு அளித்து வருகிறதாம்.

         அரசாங்கங்கள்  குற்ற நடவடிக்கைகளை தடுப்பதற்காக என்று சொல்லி எங்களிடமிருந்து தகவல்கள் கோருகின்றன. ஆனால் அது முற்றிலும் உண்மையா என்பதை நாங்கள் கண்டறிய இயலாது என்று கூறுகிறது கூகுள்.

        பல்வேறு தேடு பொறிகள் இருந்தாலும் கூகுள்தான் முடிசூடா மன்னனாகத் திகழ்கிறது. அவ்வப்போது புதிய தேடுபொறிகள் முளைப்பதும் சிறது சிறிது காலத்திற்குள் காணாமல் போவதும் சகஜமே! அப்படி புதிதாக உருவான தேடு பொறி "டக் டக் கோ" (DuckDuckGo)
       இணையத்தில் யாருடைய தகவல்களை சேகரிக்கவோ, உளவு பார்க்கவோ மாட்டோம் என்ற முழக்கமிடுகிறது 'டக்டக் கோ'. இதனாலேயே இது சற்று பிரபலம் அடைந்துள்ளது. இதற்கும் மேலாக கூகிள். எவ்வாறு இணையப் பயனாளர்களின் விவரங்களை சேகரிக்கிறது, என்பதை தெளிவான பட விளக்கங்களோடு விவரிக்கிறது.. அதனால் எந்த விவரமும் சேகரிக்காத, விளம்பரங்கள் இல்லாத எங்கள்  DuckDuckGo) தேடு பொறியை பயன் படுத்துங்கள் என்று கூறுகிறது

    கூகுள் எப்படி தகவல் திரட்டுகிறது என்று பார்ப்போமா?
      உதாரணத்திற்கு Google இல் herpes என்று டைப் செய்து தேடுவதாகக்
    கொள்வோம்.
    தேடுதலின்போது ஒரு லிங்கை கிளிக் செய்ய

    உங்கள் தகவல்கள் அந்ததளத்திற்கு உங்கள் தேடுதல் வார்த்தையோடு உங்கள் கணினி மற்றும் பிரவுசர்  விவரங்களை கீழ்க் கண்டவாறு அனுப்பி வைக்கிறது.





    இவ்விவரங்கள் மூலம் உங்களை எளிதாக கண்டறிந்து விடுகிறது.

    இது  போன்ற சில  தளங்கள் விளம்பரங்களை உடையதாக இருக்கின்றன, இவை விளம்பரம் செய்வதோடு உங்களைப் பற்றிய புரொஃபைலையும் தயாரிக்கின்றன 






    இவ்வாறு சேகரிக்கப் படும் விவரங்கள் விற்கப்பட்டுவிடுகின்றன 

          சில சமயங்களில் தேடுவதற்காக பயன்படுத்தப்படும் வார்த்தைகளால் சிக்கல்கள் ஏற்படக்கூடும் ரகசிய குறியீடுகளாக சில வார்த்தைகளை சமூக விரோதிகள் பயன் படுத்த அதை வேறு காரணத்திற்காக நாம் தேட சேமிக்கப் பட்ட இந்த தகவலால் நாம் விசாரணைக்கு உட்படுத்தப் படலாம்.

           இது போன்று பல சிக்கல்கள் எழ வாய்ப்பு உண்டு, எனவே உங்கள் சொந்த தகவல்களை சேமிக்காத, யாருக்கும் விற்காத பாதுகாப்பான எங்கள் தேடுபொறியான DuckDuckGo வை பயன்படுத்துங்கள் என்று கூறுகிறது.

         கூகுள் மீது குற்றச்சாட்டுகளை வைக்கும் டக்டக் கோ எந்த அளவு நம்பகத் தன்மை வாய்ந்தது என்பது போகப் போகத் தான் தெரியும் .

         உலகத்தில்  எதுவும் இலவசமில்லை. சொல்லும் அளவுக்கு பாதுகாப்பும் இல்லை என்பதே உண்மை.குறிப்பாக பெண்கள் அதிக கவனத்துடன் இருக்கவேண்டியது அவசியம்.

    *******************************************************************************

    இந்த புதிய தேடுபொறியின்  தேடுதல் எப்படி இருக்கிறது என்பதை பயன்படுத்தி விட்டு சொல்கிறேன்.
     ******************************************************************************
    என் இரண்டு எச்சல் பற்றிய பதிவுகளை அனுமதி கேட்டு பின்னர் தன் தளத்தில் வெளியிட்ட  4Tamilmedia வுக்கு நன்றி. 

    ******************************************************************************************


    திங்கள், 26 மார்ச், 2012

    விபரீத ஆசை!-பதிவுக்குறள் பத்து

         திருக்குறளை விரும்பாத தமிழர் இல்லை. குறள் சொல்லாத கருத்துக்களும் இல்லை.அதன் வடிவத்திலும் பொருளிலும் மயங்காத அறிஞர்கள் இல்லை. காந்தத் தன்மையுடைய குறட் பாக்களால் ஈர்க்கப்பட்டவர்களில் நானும் ஒருவன். திருக்குறளை நான் முழுமையாக அறிந்தவன் அல்ல. ஆயினும் குறள் வெண்பா வடிவம் என்னைக் கவர்ந்தது. எப்படியாவது குறள் வெண்பா எழுத வேண்டும் என்ற விபரீத ஆசை ஏற்பட்டது. அது சரியா என்று தெரியவில்லை. 
            கடந்த சில மாதங்களாக  வலைப்பதிவில்  ஆர்வம் கொண்டு பதிவுகள் செய்து வருவதால் பதிவுலகம் பற்றி பத்து குறள் வெண்பாக்கள் எழுதியிருக்கிறேன். வள்ளுவரும் புலவர்களும் அறிஞர்களும் வாசகர்களும் மன்னிப்பார்களாக
        
      1.     கூகுள் வழங்கும்  வசதிகள்- செந்தமிழில்
            வாகாய் பதிவுகள் செய் 

      2.     கற்க  கணினி கசடற- கற்றுப் 
            பதிக தமிழில் பதிவு  


      3.     தொடங்கல் எளிதாம் வலைப்பூ- அரிதாம்
            தொடர்ந்து பதிவு இடல்

      4.     முன்னோட்டம் பார்த்துப் பதிவிடு உன்பதிவை
            பின்னூட்டம் பார்த்துத் திருத்து.
             
      5.     சிலைக்கழகு சேர்க்கும் சிறுநுட்பம் உந்தன்
            வலைக்கழகு சேர்க்கும் வடிவம்

      6.     தரவரிசை ஏற்றுதற்கு தாழ்தல் வேண்டாம்
            நிறம்வெளுத்துப் போகும் நிஜம்

      7.     பிறர்பதி வைகவர்தல் நன்றன்று சிந்திப்பாய்
            உன்பதி வும்களவு போம்

       8.          வயலில் விதைப்பார் விதைகள்       அதுபோல் 
                   வலையில் விதைப்பாய் பதிவு 

       9.          எல்லை இலையே எழுதவா!       பதிவுலகம் 
                   நல்ல பயிற்சிக் களம்   

      10.    கதவு திறந்து அழைக்கும் இணையம் 
            பதிவு பயனுறச் செய். 

    ***********************************