என்னை கவனிப்பவர்கள்

love லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
love லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 14 பிப்ரவரி, 2012

பூக்களைத் தேடி....

காதலைத் தேடி அலையும் கல்லூரி மாணவனின் கவிதை? 

காதலெனும் மந்திரத்தை உதடுகளும் உச்சரிக்க 
காதல் செய் என்று உள்மனமோ நச்சரிக்க 
காதலுக்கு பகை உண்டென்று நண்பர்களும் எச்சரிக்க 
காதலெனும் தோட்டத்தில் நான் நுழைந்தேன் பூப்பறிக்க!

வண்ண வண்ண பூக்களெல்லாம் எதிர் வந்தோர் கையில் 
மொட்டுகூட இல்லை நான் எடுத்து வந்த பையில்
அழகான பூக்களெல்லாம் அடர்ந்த முள்வேலிக்குள் 
மீதமுள்ள பூவெல்லாம்  பறித்து விட்டார் காலைக்குள்!


பூ ஒன்றும் காணாமல் நான் வாடினேன் 
நம்பிக்கை இழக்காமல் நான் தேடினேன் 
எனக்காக ஒரு பூ எங்கேயோ பூத்திருக்கும் 
பறிக்கநான் வருவேனென்று எனக்காகக் காத்திருக்கும்!.

*************************************************************
இதையும் படிச்சி பாருங்க!

செவ்வாய், 13 டிசம்பர், 2011

காதல் என்றால் என்ன? கல்யாணம் என்றால் என்ன?


(எங்கேயோ எப்போதோ படித்தது)


    ஞானி ஒருவரைப் பார்த்த இளைஞன் ஒருவன் கேட்டான்
    “காதல் என்றால் என்ன? கல்யாணம் என்றால் என்ன?

     அந்த ஞானி அருகே உள்ள பூந்தோட்டத்தை காண்பித்து, அந்த பூந்தோட்டத்திற்கு சென்று அதில் உள்ள பூக்களிலேயே மிக அழகான    பூ ஒன்றைப் பறித்து வா என்றார். ஆனால் சில நிபந்தனைகள். ஒன்று ஒரு பூவை ஒருமுறை மட்டுமே பறிக்கவேண்டும். அதாவது ஒரு பூவை பறித்துவிட்டால் அதன் பிறகு வேறு பூவைப் பறிக்கக் கூடாது  சென்ற வழியே மீண்டும் திரும்ப வரக்கூடாது. அதாவது ஒரு பூவை கடந்து சென்று விட்டால் பின்னால்  வந்து அந்தப் பூவை பறிக்கக் கூடாதுஎன்றார்  

       இளைஞன் சென்று ஒரு பூவை பறித்துக்கொண்டு வந்தான்.
      
      ஞானி கேட்டார், இதுதான் நீ கண்டதில் மிக அழகான பூவா?
     
           “இல்லை. இதைவிட அழகான  பூக்கள் இருந்தன. பின்னால் அழகான  பூக்கள் கிடைக்குமோ கிடைக்காதோ என்ற சந்தேகத்தில் முதலில் உள்ள பூவை பறித்துவிட்டேன். அதன் பின்னர் இதைவிட அழகான பூக்களைப் பார்த்தேன். நீங்கள் விதித்த நிபந்தனைப்படி அதனை பறிக்க இயலவில்லை என்றான் இளைஞன்

       ஞானி சிரித்துக்கொண்டே சொன்னார் இதுதான் காதல்

           மேலும்  இப்பொழுது இன்னொருபுறம்  புறம் உள்ள பூந்தோட்டத்தை காண்பித்து  "அதிலிருந்து அழகான பூவை பறித்துவா, ஆனால் நிபந்தனைகளை மறந்துவிடாதேஎன்றார்.
      
      இம்முறையும் இளைஞன் அந்த    பூந்தோட்டத்திற்கு சென்று ஒரு பூவைப் பறித்து வந்து காண்பித்தான்.

         “இதுதான் இந்த தோட்டத்தில் நீ பார்த்த அழகான பூவா?மீண்டும்,அதே கேள்வியைக் கேட்டார் ஞானி.

           “இல்லை. இதைவிட அழகான பூக்கள் இருந்தன. ஆனால் கடந்த முறை ஏமாந்ததுபோல இந்த முறை ஏமாந்துவிடக்கூடாது என்பதற்காக முதலில் கண்ட அழான பூக்களைப் பறிக்காமல் கடந்து சென்றுவிட்டேன்.கடைசியில் இந்தப் பூதான் கிடைத்தது.ஏமாற்றத்துடன் சொன்னான் இளைஞன்.

   “இதுதான் கல்யாணம் என்றார் ஞானி புன்னகையுடன். 
*************************************************************
இதையும் படியுங்க!
தமிழா! எழுவாய்! 
மகா கவி பாரதி! நிலையாய் நிற்பவன்  

திங்கள், 21 நவம்பர், 2011

உன் சக்தி!


                      இனியவளே!
                 உன் பார்வைகள் 
                 என் மீது பட்டதால் 
                 என் 
                 இதயச் சகாராவில் 
                 இப்போது 
                 இன்ப மழை!

                 உன் உதடுகள் 
                 அசைந்தால் போதும் 
                 பசுபிக் கடல்கூட 
                 எனக்கு 
                 பக்கிங்காம் 
                 கால்வாய்தான்!

                 உன் நினைவுகள் 
                 சிறகுகளாக 
                 இருக்கும்வரை 
                 இமயச் சிகரங்களும் 
                         எனக்கு சின்னமலைதான்!
********************************************************************************************
 
இதையும் படியுங்க!
உண்மையூர் பொய்யூர் புதிருக்கு விடை

ஞாயிறு, 30 அக்டோபர், 2011

செல்ல நாயின் இறப்பு! ஒரு மாதம் பரபரப்பு!


ஜூனோ! இதுதான் எங்கள் செல்ல நாயின் பெயர். ஒரு வயதே நிறைந்த அது திடீரென ஒரு நாள் எதிர்பாராவிதமாக இறந்துபோய் எங்களை சோகத்தில் ஆழ்த்தியது. அதன் இறப்பு  ஒருமாதத்திற்கும் மேலாக ஒருவித பரபரப்பை ஏற்படுத்தியது. நாய் இறந்ததில் அப்படி என்ன பரபரப்பு இருக்கமுடியும் என்று நீங்கள் நினைக்கலாம். இதைப் படித்தால் உங்களுக்கே தெரியும். எங்கிருந்தோ வந்து எங்களிடம் ஒட்டிக்கொண்ட ஜூனோ  எங்கள் அனைவரையும் அதன்  குறும்புகளாலும்  அன்பாலும் கவர்ந்துவிட்டது. அதன் பிரிவால் எங்களுக்கு ஏற்பட்ட சோகத்தை எல்லாம் சேர்த்து இரங்கல் கவிதையாக ஏற்கனவே  (ஜூனோ! எங்கள் செல்லமே! )பதிவிட்டிருந்தேன். அதை படித்தால் அதன் மீது நாங்கள் வைத்திருந்த அன்பு உங்களுக்குப் புரியும்.
     ஒரு நாள் இரவு நல்ல மழை பெய்து கொண்டிருந்தது. எப்போதும் வெளியே போர்டிகோவில் படுத்துகொள்ளும் ஜூனோ அன்று வெளியே செல்ல மறுத்தது. உள்ளே தான் இருப்பேன் என்று அடம்பிடித்தது. இன்று ஒரு நாள் ஹாலில் படுத்துக் கொள்ளட்டும் என்று விட்டுவிட்டோம்.
     ஜூனோவுக்கு ஹாலில் T.V. டேபிளுக்கு கீழே அதற்கென உள்ள பெட்ஷீட் போட்டு படுக்கவைத்தோம். நான், என் மனைவி, மகன்  மூவரும் A/C அறையில் படுத்துக் கொண்டோம். அது எங்கள் அறைக்குள் வருவதற்காக நாங்கள் படுத்திருந்த அறையின் கதவைப் பிராண்டியது. கதவு திறக்கப் படாததால் அதன் இடத்திலேயே போய்  படுத்துக்கொண்டது.

     விடியற்காலை 3.30 மணிக்கு நான் பாத்ரூம் செல்வதற்காக எழுந்தேன். பாத்ரூம் போய்விட்டு வரும்போது கவனித்தேன். ஜூனோ அது படுத்திருந்த இடத்தில் காணவில்லை. இது போன்ற சமயங்களில் ஜூனோ இன்னொரு அறையில் கட்டில்மேல் உள்ள மெத்தையில் படுத்து உறங்குது வழக்கம். அந்த அறைக்குச் சென்று பார்த்தேன். நான் நினைத்ததுபோல் கட்டிலில் மெத்தைமீது அமைதியாக தூங்கிக் கொண்டிருந்தது. திரும்பிய நான் திடீரென்று சந்தேகம் கொண்டு மீண்டும் சென்று பார்த்தேன். அப்போதுதான் கவனித்தேன். ஜூனோ அசைவற்றுக் கிடப்பதுபோல் தோன்றியது.
ஜூனோ! ஜூனோ! என்று கூப்பிட்டேன். கண் திறக்கவில்லை. மெதுவாக   தட்டி எழுப்பியும் எழுந்திருக்கவில்லை. நான் அதிர்ச்சி அடைந்து எனது மனைவியை அழைத்தேன். மனைவியும் மகனும் ஓடி வந்தனர். அவர்களும் நான் சொல்வதை நம்பாமல் ஜூனோவை எழுப்பிப் பார்த்தனர். எந்தப் பயனும் இல்லை. தூங்குவது போலவே காட்சியளித்த ஜூனோவை அது படுத்திருந்த நிலையை மாற்றிப்போட்டுப் பார்த்தபோதுதான் அது நாக்கை வெளியே நீட்டிக்கொண்டு  இறந்து கிடந்ததை உணர்ந்தோம்  . மேலும் அதன் நாக்கு  மட்டும் நீல நிறத்தில் மாறியிருப்பதைக் கண்டு என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றோம்.
                                             

புதன், 5 அக்டோபர், 2011

காதலி!

                       காதலிக்கத் துடிக்கும்
                       இளைஞனே !
                       நான் சொல்வதை
                       உன் செவிகள் கேட்குமா?

                       முதலில்
                       முன்னேற்றத்தின்  முதல் படியான
                       முயற்சியைக் காதலி!

                       அறியாமையை போக்கும்
                       அறிவைக் காதலி!

                       சோம்பலைத் துரத்தி
                       உழைப்பைக் காதலி!

                       செயற்கை கவர்ச்சியில்
                       வீழ்ந்துவிடாமல்
                       இயற்கையைக் காதலி!

                       தாயினும் மேலான
                       தாய் மண்ணைக் காதலி!

                       உண்மையாக
                       உறவுகளைக் காதலி!

                       வெற்றி கிட்டும் வரை
                       தோல்வியையும் காதலி!

                       நிச்சயம்
                       உனக்கும்  கிடைப்பாள்
                       ஒரு காதலி!

                       பின்பு
                       வாழ்க்கை முழுதும்
                       அவளை  மட்டும் காதலி!