என்னை கவனிப்பவர்கள்

திங்கள், 21 நவம்பர், 2011

உன் சக்தி!


                      இனியவளே!
                 உன் பார்வைகள் 
                 என் மீது பட்டதால் 
                 என் 
                 இதயச் சகாராவில் 
                 இப்போது 
                 இன்ப மழை!

                 உன் உதடுகள் 
                 அசைந்தால் போதும் 
                 பசுபிக் கடல்கூட 
                 எனக்கு 
                 பக்கிங்காம் 
                 கால்வாய்தான்!

                 உன் நினைவுகள் 
                 சிறகுகளாக 
                 இருக்கும்வரை 
                 இமயச் சிகரங்களும் 
                         எனக்கு சின்னமலைதான்!
********************************************************************************************
 
இதையும் படியுங்க!
உண்மையூர் பொய்யூர் புதிருக்கு விடை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895