(" ஒ! இதுதான் அந்தக் கேள்வியா? இது தெரியாமையா முழுச்சிக்கிட்டுருந்தேன்?
தேங்க்ஸ் பிரதர்! எனக்கு எல்லா பதிலும் தெரியும். ஆனா
கேள்விதான் தெரியாது. கேள்விய பதிலாக் கேட்டீங்களா?, கொஞ்சம் கன்ஃபூயூஸ் ஆயிடுச்சு.")
தேங்க்ஸ் பிரதர்! எனக்கு எல்லா பதிலும் தெரியும். ஆனா
கேள்விதான் தெரியாது. கேள்விய பதிலாக் கேட்டீங்களா?, கொஞ்சம் கன்ஃபூயூஸ் ஆயிடுச்சு.")
உண்மையூர் பொய்யூர் புதிருக்கு விடை
முதல்ல புதிர ஞாபகப் படுத்திக்குவோம். வடிவேலு உண்மையூர் போகணும் உண்மையூர் போறதுக்கு ரோடு பிரியர இடத்துல இருக்கிற ரெண்டு பேர்ல ஒருத்தர் கிட்டமட்டும்..ஒரே ஒரு கேள்விய கேட்டு வழிய கண்டுபிடிக்கனும். அந்த ரெண்டு பேர்ல ஒருத்தர் உண்மையை மட்டும்தான் பேசுவார். இன்னொருவர் பொய் மட்டும்தான் பேசுவார்.
விடை:
கேட்க வேண்டிய அந்த கேள்வி: “உங்க ஊருக்கு எப்படிப் போகணும்?”
விளக்கம்:
1. உண்மை மட்டும் பேசறவர்கிட்ட இந்தக் கேள்விய கேட்டா அவருடைய ஊரான உண்மையூர் போறதுக்கான வழியத்தான் காட்டுவார். ஏன்னா அவர் உண்மையைத்தான் சொல்லியிருப்பார்.
2. ஒருவேளை அவர் பொய் பேசறவர்கிட்ட இந்தக் கேள்விய கேட்டிருந்தா அவரும் உண்மையூருக்கான வழியைத்தான் காட்டுவார். அவருடைய ஊர் பொய்யூர்.அவர் பொய் மட்டும்தான் சொல்வார். அதனால அவருதான ஊரான பொய்யூருக்கு நிச்சயமா வழி சொல்லமாட்டார். உண்மையூருக்குத்தான் வழி சொல்வாருன்னு உறுதியா சொல்லலாம்.
3. யாராயிருந்தாலும் இந்தக் கேள்விக்கு பதில் மூலம் உண்மையூருக்கான வழியை கண்டுபிடிக்க முடியும்.
பொன்சந்தர் என்பவர் இந்தப் புதிருக்கு விடையை தன்னுடைய comment ல சொல்லியிருந்தார். அதுவும் சரியான பதில்தான். அது கொஞ்சம் சுத்தி வளச்சி சொல்றமாதிரி இருக்கு.
இந்தப் புதிர கொஞ்சம் மாத்தினா அவர் சொல்ற பதில் சரியா இருக்காது. அதாவது வழி சொல்வதற்கு ரெண்டு பேருக்கு பதிலா ஒருத்தர் மட்டும் இருக்கார்னு வச்சுக்குவோம்.அந்த ஒருத்தர் உண்மை பேசுபவரா? பொய் பேசுபவரான்னு தெரியாது. இந்த சூழ்நிலையில பொன்சந்தர் சொன்னமாதிரி கேள்விய கேட்க வாய்ப்பில்லை. அதனால நான் சொன்ன விடைதான் பொருத்தமா இருக்கும்னு நினைக்கிறேன்.
ஆமாம் பொன்சந்தர்! உண்மையிலயே நீங்க ரொம்ப கில்லாடிதான். உங்க Blogg ல போஸ்டிங் எதுவும் போடாமலேயே ஏழு மெம்பர்ஸ்? எப்படி தலைவா?
==============================================================================================
செல்ல நாயின் இறப்பு!ஒரு மாதம் பரபரப்பு!பகுதி 4 --விரைவில்
பொருத்தமான விடைக்குப் பாராட்டுக்கள்..
பதிலளிநீக்குThanks boss
பதிலளிநீக்குவடிவேலு காமடி மிஸ்ஸிங்... ஆனால் புத்திசாலித்தனமான விடை. ரசிச்சேன்.
பதிலளிநீக்கு