என்னை கவனிப்பவர்கள்

எதிர்காலம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எதிர்காலம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 9 ஜூன், 2013

வடிவேலு சொன்னது உண்மையாப் போச்சு

        காணாமல் போன கிணறுகள்
  வடிவேலு ஒரு படத்தில் தான் தோண்டிய கிணற்றைக் காணோம் என்றும் கண்டுபிடித்துத் தரும்படியும்  போலீசில் புகார் செய்து நம்மை யெல்லாம் சிரிக்க வைப்பார்.
      அந்தக் காமெடியின் நோக்கம் லஞ்சம் பற்றியதாக இருந்தாலும் இந்த நகைச்சுவைக் காட்சியை பார்க்கும்போதெல்லாம் எனக்கு கிணறுகள் பற்றி சிந்திக்க வேண்டிய ஒரு விஷயம் ஞாபகத்திற்கு வரும்.

      சென்னை போன்ற நகரங்களில் பெரும்பாலான கிணறுகள் காணாமல் போய்விட்டன. காரணம் மக்கள் நெருக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து விட்டதால் இட நெருக்கடியை சமாளிக்க இப்போதெல்லாம் இருக்கிற கிணற்றை எல்லாம் மூடிவிட்டு அந்த இடத்தை வீணடிக்காமல் கட்டடம் கட்டிவிடுகிறார்கள். கிணற்றுக்கு பதிலாக ஆழ் துளைக் குழாய்கள் அமைத்து விடுகிரார்கள்.


            சென்னையைச் சுற்றியுள்ள புறநகர் பகுதிகளிலும் இதே நிலைதான்.முன்பு இங்கெல்லாம் விவசாய நிலங்கள் இருந்தன. விவசாயத்திற்காக மிகப் பெரிய கிணறுகள் பயன்படுத்தப்பட்டன. தற்போது சென்னையைச் சுற்றி பல கிலோ மீட்டர் சுற்றளவில் விவசாயம் நடப்பதில்லை. விவசாய நிலங்களெல்லாம் ப்ளாட்டுகளாக மாறி விட்டபடியால் இந்தக் கிணறுகளும் தூர்க்கப் பட்டு வருகின்றன. அப்படி தூர்க்கப் படாத கிணறுகளை பொது  மக்கள் குப்பை கொட்டியே மூடிவிடுவார்கள். அப்படித்தான் எனக்குத் தெரிந்து எங்கள் பகுதியில் கடந்த சில வருடங்களுக்கு முன் இருந்த பல கிணறுகள்  குப்பைகளால் நிரப்பப் பட்டுவிட்டன. கிணறுகள் மட்டுமல்ல மனங்களும் குப்பைகளால்தானே நிரம்பி இருக்கிறது?
      
       அடுத்தடுத்த தலை முறையினருக்கு கிணறு என்றால் என்னவென்றே தெரியாத சூழ்நிலை உருவாகி வருகிறது. சென்னையிலேயே  பிறந்து வளரும் சில குழந்தைகளுக்கு கிணறு,ராட்டினம்  பற்றி தெரியாததைக் கண்டிருக்கிறேன்.


        கிராமங்களிலும் கிணறுகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகத்தான் உள்ளது.. விவசாயத்திற்கும் பல இடங்களில் ஆழ்துளைக் கிணறுகள் பயன்படுத்தும் நிலை ஏற்பட்டு வருகிறது. கிராமப்புறத்தில் உள்ளவர்கள் நிறையப் பேருக்கு நீச்சல் தெரிந்திருக்கும். சிறுவயதில் இருந்தே கிணற்றில் இறங்கி நீச்சல் கற்றுக் கொள்வார்கள். நீச்சல் பழக  தரைக் கிணறு மிகவும் வசதியானது. நீர் நிறைந்த  கிணறுகளில் குதித்து விளையாடுவது ஒரு அற்புதமான பொழுது போக்கு. 
     இப்போதும்  எங்கள் வீட்டில் கிணறு இருக்கிறது.அந்தக் கிணற்றுக்குள் பலமுறை இறங்கி இருக்கிறேன். ராட்டினத்தில் வேகமாக தண்ணீர் இறைப்பது ஒரு கலை .சில சமயங்களில் கயிறு அறுந்து பக்கெட் கிணற்றுக்குள் விழுந்து விடும்.  பாதாள கொலுசின் மூலம் துழாவி பாக்கெட்டை எடுப்பது ஒரு சுகமான அனுபவம். 
  இப்போது அந்தக் கிணற்றில் மோட்டார் போடப்பட்டுவிட்டது.பழைய ராட்டினங்கள் காயலான் கடைக்கு சென்று விட்டன. கிணறு மூடி போட்டுக் கொண்டது. வாய் திறக்க முடியாத கணவனைப் போல. எப்போதாவது அந்தக் கிணற்றின் மேல் உட்கார்ந்து  கொண்டு புத்தகம் படிப்பது உண்டு.
   அப்போதெல்லாம் தன்னை பார்க்க வருபவர்களை பார்த்து மகிழ்ச்சி அடையும் நோயாளியைப் போல கிணற்றின் நிலை இருப்பதாக எனக்கு தோன்றுவது உண்டு.
      இந்த அனுபவங்கள் எதிர்கால சந்ததியினருக்கு கிடைக்குமா? அதைப் பற்றி அவர்கள் கவலைப் படவும் போவதில்லை. மறைந்து கொண்டிருக்கும் கிணறுகளை மியூசியத்தில் கூட வைக்க முடியாது.போட்டோக்களில்தான் பார்க்க முடியும்.  
      "ஐயா! கிணறு காணாம போச்சுயா!" வடிவேலு சொல்வது உண்மைதானே" 

காணாமல் போன கிணறு
    விஞ்ஞான வளர்ச்சியால் மேலும் மேலும்  வசதிகளைப் பெற்றுக் கொண்டிருக்கிறோம். ஆனால் வாழ்க்கையைத்  தொலைத்துக் கொண்டிருக்கிறோமா?

****************************************************************************************************** 

திங்கள், 9 ஏப்ரல், 2012

என்மகன் என்னவாக ஆவான்?

    ஒரு இளைஞனின் தந்தை ஒருவர் வேலை ஏதுமின்றி வெட்டியாகத் திரிந்து கொண்டிருக்கும் மகனைப் பற்றி அதிக கவலை கொண்டார். இவன் இப்படி இருக்கிறானே.இவனது எதிர்காலம் எப்படி இருக்கும் என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருந்தார். தன் நெருங்கிய நண்பர் ஒருவரிடம் ஆலோசனை கேட்டார். நண்பரோ மிகுந்த நுண்ணறிவு உடையவர். நல்ல திறமையானவர். தனக்கு தக்க ஆலோசனை கூறுவார் என்று நம்பினார்.

    நண்பரும் கவலைப்படாதீர்கள் உன் மகனுக்கு அவன் அறியாமல் ஒரு சோதனை வைப்போம், அதில் எப்படி நடந்து கொள்கிறான் என்பதை பொறுத்து அவன் எதிர்காலத்தில் என்னவாக வருவான் என்பதை கணிக்கலாம் என்றார்.
         அப்படி என்ன சோதனை என்றார் இளைஞனின் தந்தை.

  “ஒரு பையில் நிறைய பணம், இன்னொரு பையில் பைபிள் குர்ரான்,கீதை போன்ற புத்தகங்கள், மூன்றாவது பையில் ஒரு துப்பாக்கி,கடைசி பையில் ஒரு பாட்டில் மது. இவற்றை ஒரு அறையில் வைப்போம் உன்பையனை அறைக்கு அனுப்பி அவன் இவற்றில் எதைத் தேர்ந்தெடுக்கிறான் என்பதைப் பார்ப்போம்
.
      "உன் மகன் பணம் இருக்கும் பையைத் தேர்ந்தெடுத்தால் அவன் நல்ல பிசினஸ் மேன் ஆக வர வாய்ப்பு இருக்கிறது,ஆன்மீக புத்தகங்களை எடுத்தால் அவன் ஆன்மீக வாதியாக வருவான். துப்பாக்கியை எடுத்தால் தீவிர வாதியாக மாற வாய்ப்பு இருக்கிறது. மது பாட்டிலை எடுத்தால் குடிகாரானாக மாறிவிடக்கூடிய அபாயம் இருக்கிறது.. இவற்றில்  எதை எடுக்கிறான் என்பதை நாம் மறைந்திருந்து கவனிக்கலாம்" என்றார்
  மேலும்  “நாம்தான் செய்தோம் என்று தெரியாமல் இந்த ஏற்பாட்டை செய்வோம்.  என்றும் கூறினார்

      ஓர் அறையில் இவற்றை வைத்துவிட்டு  அவர்கள்தான் வரவழைத்தார்கள்  என்று அறிய முடியாத வகையில் இளைஞனை வரவழைத்தனர்.  இளைஞன் யாரும் இல்லாத அந்த அறைக்குள் நுழைந்தான்.  நான்கு பைகளிலும் வைக்கப்பட்டிருக்கும் பொருள்களையும்  சுற்றுமுற்றும் பார்த்தான் யாரும் அவன் கண்ணில் படவில்லை. முதலில் பணத்த எடுத்து மகிழ்ச்சியுடன்  தன் பைக்குள் வைத்துக்கொண்டான். பின்னர் துப்பாக்கியை எடுத்து தனது சட்டைக்குள் மறைத்து வைத்துக் கொண்டான். அதன் பிறகு பாட்டிலில் இருந்த மதுவைக் கடகடவெனக் குடித்தான். வாயைத் துடைத்துக்கொண்டு புத்தகங்கள் இருந்த பையிலிருந்து பைபிள், குர்ஆன், கீதை மூன்று புத்தகங்களையும் கையில் எடுத்துக்கொண்டு கம்பீரமாக நடக்க ஆரம்பித்தான்.

  இதை மறைந்திருந்து பார்த்துக் கொண்டிருந்த இளைஞனின் தந்தையும் அவரது நண்பரும் குழம்பிப் போனார்கள்.

இளைஞனின் தந்தை நண்பரைப் பார்த்து, இப்படிச்  செய்து விட்டானே. நீங்கள் சொன்ன எந்த வகையிலும் அடங்கவில்லையே என்ன செய்வது? என்று கேட்டார்.

  நண்பர் ஒரு வினாடி சிந்தித்து பின்பு  சொன்னார்.

  “உன் மகன் எதிர்காலத்தில் என்னவாக ஆவான் என்பதைக் கணித்துவிட்டேன்.

அப்படியா! உடனே சொல்லுங்கள். ஆர்வத்துடன் கேட்டார் இளைஞனின் தந்தை.

நண்பர் சிரித்துக்கொண்டே சொன்னார் கவலைப் படாதே! உன் மகன் அரசியல் வாதியாக ஆகிவிடுவான்?
************************************************************

திங்கள், 28 நவம்பர், 2011

காணாமல் போகும் கிணறுகள்


       வடிவேலு ஒரு படத்தில் தான் தோண்டிய கிணற்றைக் காணோம் என்றும் கண்டுபிடித்துத் தரும்படியும்  போலீசில் புகார் செய்து நம்மை யெல்லாம் சிரிக்க வைப்பார்.
      அந்தக் காமெடியின் நோக்கம் லஞ்சம் பற்றியதாக இருந்தாலும் இந்த நகைச்சுவைக் காட்சியை பார்க்கும்போதெல்லாம் எனக்கு கிணறுகள் பற்றி சிந்திக்க வேண்டிய ஒரு விஷயம் ஞாபகத்திற்கு வரும்.

      சென்னை போன்ற நகரங்களில் பெரும்பாலான கிணறுகள் காணாமல் போய்விட்டன. காரணம் மக்கள் நெருக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து விட்டதால் இட நெருக்கடியை சமாளிக்க இப்போதெல்லாம் இருக்கிற கிணற்றை எல்லாம் மூடிவிட்டு அந்த இடத்தை வீணடிக்காமல் கட்டடம் கட்டிவிடுகிறார்கள். கிணற்றுக்கு பதிலாக ஆழ் துளைக் குழாய்கள் அமைத்து விடுகிரார்கள்.

      
      சென்னையைச் சுற்றியுள்ள புறநகர் பகுதிகளிலும் இதே நிலைதான்.முன்பு இங்கெல்லாம் விவசாய நிலங்கள் இருந்தன. விவசாயத்திற்காக மிகப் பெரிய கிணறுகள் பயன்படுத்தப்பட்டன. தற்போது சென்னையைச் சுற்றி பல கிலோ மீட்டர் சுற்றளவில் விவசாயம் நடப்பதில்லை. விவசாய நிலங்களெல்லாம் ப்ளாட்டுகளாக மாறி விட்டபடியால் இந்தக் கிணறுகளும் தூர்க்கப் பட்டு வருகின்றன. அப்படி தூர்க்கப் படாத கிணறுகளை பொது  மக்கள் குப்பை கொட்டியே மூடிவிடுவார்கள். அப்படித்தான் எனக்குத் தெரிந்து கடந்த சில வருடங்களுக்கு முன் இருந்த பல கிணறுகள்  குப்பைகளால் நிரப்பப் பட்டுவிட்டன.
      
       அடுத்தடுத்த தலை முறையினருக்கு கிணறு என்றால் என்னவென்றே தெரியாத சூழ்நிலை உருவாகி வருகிறது. சென்னையிலேயே  பிறந்து வளரும் சில குழந்தைகளுக்கு கிணறு,ராட்டினம்  பற்றி தெரியாததைக் கண்டிருக்கிறேன்.

      
       கிராமங்களிலும் கிணறுகளின் எதிர்காலம் கேள்விக்குறியே. விவசாயத்திற்கும் பல இடங்களில் ஆழ்துளைக் கிணறுகள் பயன்படுத்தும் நிலை ஏற்பட்டு வருகிறது. கிராமப்புறத்தில் உள்ளவர்கள் நிறையப் பேருக்கு நீச்சல் தெரிந்திருக்கும். சிறுவயதில் இருந்தே கிணற்றில் இறங்கி நீச்சல் கற்றுக் கொள்வார்கள். நீச்சல் பழக  தரைக் கிணறு மிகவும் வசதியானது. நீர் நிறைந்த  கிணறுகளில் குதித்து விளையாடுவது ஒரு அற்புதமான பொழுது போக்கு.
      இந்த அனுபவங்கள் எதிர்கால சந்ததியினருக்கு கிடைக்குமா? அதைப் பற்றி அவர்கள் கவலைப் படவும் போவதில்லை. மறைந்து கொண்டிருக்கும் கிணறுகளை மியூசியத்தில் கூட வைக்க முடியாது.போட்டோக்களில்தான் பார்க்க முடியும்.  
      "ஐயா! கிணறு காணாம போச்சுயா!" வடிவேலு சொல்வது உண்மைதானே"

                    (காணாமல் போன கிணற்றில் ஒன்று)
    விஞ்ஞான வளர்ச்சியால் மேலும் மேலும்  வசதிகளைப் பெற்றுக் கொண்டிருக்கிறோம். ஆனால் வாழ்க்கையைத்  தொலைத்துக் கொண்டிருக்கிறோமா?
************************************************************************************************************** 

இதையும் படியுங்க!