என்னை கவனிப்பவர்கள்

கருத்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கருத்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 31 டிசம்பர், 2012

நீங்கள் இடும்/உங்களுக்கு கிடைக்கும் கருத்து எந்த வகை?

   
   வலைப்பூ வைத்திருப்பவர்கள் மற்றும் முகநூலில் எழுதுபவர்கள்  தங்கள் எண்ணங்களையும்  படைப்புகளையும் கவிதை கட்டுரை என்று பல்வேறு வடிவங்களில் பதிவுகளாக எழுதி வருகிறார்கள். அதை வாசிப்பவர்களும் பதிவு தொடர்பான தங்கள் கருத்தை வெளிப்படுத்துகிறார்கள். பதிவுகளுக்குக் கிடைக்கும் கருத்தை வைத்து எந்த அளவுக்கு வரவேற்பு கிடைத்துள்ளது என்பதை அறிய முடியும். என்றாலும் சில நல்ல பதிவுகளுக்கு கருத்துக்கள் குறைவாகவும் காணப்படுகின்றன. எப்படி இருப்பினும் கருத்துக்கள் அதிகம் கிடைக்கும்போது பதிவெழுதுபவருக்கு மகிழ்ச்சி ஏற்படுகிறது என்பது என்னவோ உண்மைதான். எல்லாக் கருத்துக்களும் பாராட்டுக் கருத்துக்களாகத் தான் இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. கருத்திடுபவர் எப்படி வேண்டுமானாலும் தன் கருத்தை சொல்வார், கிண்டலாகவோ, கோபமாகவோ கூட கருத்திடலாம்.
  எனது பதிவிற்கு இடப்பட்ட  கருத்துக்கள், நான் படித்த மற்ற பதிவர்களின் பதிவுகளுக்குக் கிடைத்த கருத்துக்கள்  இவற்றை வைத்து கருத்திடலை கீழ்க்கண்டவாறு வகைப் படுத்தி இருக்கிறேன்.

1.பொதுவான கருத்திடல்

  அருமை, நன்று, சூப்பர் என்பவை இந்த  வகைக் கருத்துக்களுக்கு உதாரணங்களாகும்.பெரும்பாலான பின்னூட்டக் கருத்துக்கள் இப்படித் தான் காணப்  படுகின்றன.

2.அநாகரீகக் கருத்திடல் : 

    தகாத வார்த்தைகைளைப் பயன்படுத்தி கருத்திடல்.இது முற்றிலும் தவிர்க்கப் பட வேண்டியது.

3.விவாதக் கருத்திடல்: 

  பதிவில் உள்ள விவாதத்திற்குரிய விஷயங்களை எடுத்துக் கொண்டு பதிவெழுதுபவரிடமோ அல்லது கருத்திட்ட பிறரிடமோ தொடர்ந்து பின்னூட்டத்தின் மூலமாகவே விவாதிப்பது. சில சமயங்களில் இவை பதிவை விட சுவாரசியாமாக இருப்பதுண்டு.
     என்னைப் பொருத்தவரை இதுபோன்ற கருத்திடலையும்  தவிர்ப்பது நல்லது.விவாதத்தின் மூலம் தன் கருத்தை பிறர் ஏற்றுக் கொள்ள வைக்க முடியாது என்பதே என் கருத்து. இது வீண் மனக்கசப்பைத் தான் ஏற்படுத்தும் என்பதை பல பதிவுகளின்  பின்னூட்டங்களில் இருந்து அறிந்து கொள்ள முடிகிறது.

 4.ஐயக் கருத்திடல்: 
  பதிவு சம்பந்தமான தனது சந்தேகங்களை கருத்தாகப் பதிவிடல்.பெரும்பாலும்,வரலாறு,அறிவியல் தொழில் நுட்ப பதிவுகளில் இவ் வகைக் கருத்திடலைக் காணலாம்

5.விமர்சனக் கருத்திடல்
  பதிவை அலசி ஆராய்ந்து விமர்சித்தல். கவிதை,கதை,திரை விமர்சனம் போன்றவற்றிற்கு இவ்வகைக் கருத்திடலை பார்க்கலாம்.

6.விளக்க கருத்திடல். : 
   பதிவுகளில் சொல்லப்பட்டுள்ள தனிப்பட்ட நபரைப் பற்றியோ அல்லது துறையைப் பற்றியோ தவறான தகவல்கள் இருந்தால் சார்ந்தவர் அதைப் பற்றிய விளக்கம் தருதல்.

7. தொடர்பிலாக் கருத்திடல்: 
    பதிவுக்கு சம்பந்தம் இல்லாமல் உங்கள் வலைப்பதிவு அழகாக உள்ளது,வந்தேன்,நலமா? ரொம்ப நாளாக காணவில்லையே என்பன போன்ற கருத்திடல் இந்த வகைக்குள் அடங்கும்.

8. விளம்பரக் கருத்திடல்: 
   திரட்டிகளில் இணையுங்கள்,என் வலைப் பக்கத்திற்கு வாருங்கள் என்பன போன்ற கருத்திடல்.

9.. முரண் கருத்திடல்: 
  ஒரு பதிவுக்கு ஆதரவாக கருத்திட்டு விட்டு அதற்கு எதிராகப் போடப்படும் பதிவிலும் அதற்கும் ஆதரவாக, அதாவது தான்  முன் இட்ட கருத்துக்கு முரணான கருத்திடல்.

10.கிண்டல்/நையாண்டிக் கருத்திடல்: யாரையும் புண் படுத்தாத வகையில் நகைச்சுவையுடன் கருத்திடல்  

11. வாழ்த்துக் கருத்து: 
   பிறந்த நாள் வாழ்த்து,100 வது பதிவு வாழ்த்து,புத்தாண்டு வாழ்த்து,நன்றி  போன்றவை.

12. குறியீட்டுக் கருத்து:  கருத்துகளை வார்த்தைகளால் தெரிவிக்காமல் Smileys மூலம் கருத்தளிப்பது.

  இதெல்லாம் போக இன்னொரு வகையும் உண்டு அதாவது கருத்திட வேண்டும் நினைத்தும் போடாமல் இருப்பது.

வேறு  சிலவும் விடுபட்டிருக்கலாம்

   மேற்கண்டவற்றில் இரண்டாவது வகையைத் தவிர மற்ற வகைகளை சூழ் நிலைக்கேற்ப பயன் படுத்திக் கொள்ளலாம்.

உங்கள் கருத்திடல் எந்த வகை?

***************************************************************************************

இதுல ஏதாவது ஒரு கருத்தை சொல்லிட்டுப்  போங்க!


ஞாயிறு, 19 பிப்ரவரி, 2012

வடிவேலு சொன்ன கருத்து


   வடிவேலுவைத் தேடி அவரது நண்பர்கள் வருகிறார்கள்.அவர்களைக் கண்டதும் வடிவேலு முகத்தை திருப்பிக் கொள்கிறார்.
       
 “டேய்! அண்ணன் இன்னும் கோவத்தில இருக்கார். அன்னிக்கு நாம அடிச்சத மறக்கல போல இருக்கு.(Flash Back:வடிவேலுக்கு உதவியது யார்?) அண்ணன்கிட்ட மன்னிப்பு கேட்டுடலாம் வாங்க!
             “அண்ணே எங்கள மன்னிச்சுடுங்கண்ணே. ஏதோ கோவத்தில உங்கள அடிச்சிப்பிட்டோம். அத இன்னும் மனசுல வச்சுக்கிட்டு எங்கிட்ட பேசாம இருக்காதீங்கன்னே! எங்களுக்கு உங்களை விட்டா யாருன்னே இருக்காங்க!
          “சென்டிமெண்டா டச் பண்ணறாங்களே  சரி! சரி! மன்னிச்சிட்டேன். போய்ட்டு வாங்க!
   “என்னண்ணே எங்கள நம்ப மாட்டேங்கிறீங்க! நாங்க திருந்திட்டோம். இப்ப கூட நல்லது செய்யனும்னு கிளம்பி போய்ட்டிருக்கோம்.   
     அப்படி என்னடா பண்ணப்போறீங்க! நல்துன்னா உங்களுக்கு என்னன்னே தெரியாதே?
      போங்கண்ணே கிண்டல் பண்ணாதீங்க! நம்ம ஊர்ல இருக்கற குடிகாரப் பசங்களுக்கு புத்தி சொல்லி திருத்தலாம்னு பாக்கறோம்.
       நீங்களே குடிகாரப் பசங்களாச்சே! நீங்க சொல்லி எவனாவது திருந்துவாங்களாடா
      அதுக்குத்தான் உங்களையும் கூட்டிக்கிட்டு போகலாம்னு வந்திருக்கோம்.
      நான் எதுக்குடா?
       எங்கள விட நீங்கதான் நல்லா எடுத்து சொல்லி புரிய வைப்பீங்க! எவ்வளோ பேர்கிட்ட அடிவாங்கின அனுபவம் இருக்கு!
        நீங்க சொல்றது சரிதாண்டா! சினிமாவில்தான் அடிவாங்கியே காலத்தை கழிச்சிட்டேன். நேர்லயாவது நல்ல கருத்த சொல்லி பாப்போம்.
         வாங்கண்ணே ஏரியா பக்கம் போவோம்.
       அண்ணே! அதோ பாருங்கண்ணே! ஒரு குடிகாரன் கையில சாராய பாட்டிலோட வர்றான். அவன அப்படியே மடக்குங்க!
       அடேய்! என்னடா  பண்ணற
       தெரியல? குடிச்சிக்கிட்டுருக்கேன்?
    “ஏன்டா? நீ குடிச்சி குடிச்சி அழிஞ்சி போறயே! நியாயமா? உன் பொண்டாட்டி புள்ளைய நினச்சி பாத்தியா?

 “அவங்களை நினச்சித்தான் நான் குடிக்கிறேன்?

      இப்படி சொன்ன எல்லாம் நீ கேக்க மாட்ட. அந்த சாராய பாட்டில எங்கிட்டு குடு
       நான் குடுக்க மாட்டேன். நீ குடிச்சிடுவ.?
       அண்ணன் குடிக்க மாட்டார் குடுடா!,
          இந்தாங்கன்னே!

நண்பர்கள் பாட்டிலை வாங்கி வடிவேலுவிடம் கொடுத்தனர்.
        
   வடிவேலு அந்த பாட்டிலை வாங்கி, அண்ணன் இப்ப என்ன செய்யறன் பாரு. இதுக்குள்ள சாராயம் இருக்கா? அடேய்  குடிகாரா அதோ ஓடுது பாரு பூச்சி அந்த பூச்சிய எடுத்து இந்த பாட்டிலுக்குள்ள போடுபோட்டுட்டயா? இப்ப என்ன  நடக்குதுன்னு பாரு.
          
 “அடடே! பூச்சி கொஞ்ச நேரத்தில துடி துடிச்சி செத்துப் போச்சே? அண்ணே! நீங்க கடவுள்னே! உங்க கால்ல உழுந்து சொல்றேன். இப்படி எனக்கு இதுவரை  யாரும் எடுத்து சொன்னதில்லே! எவ்வளோ பெரிய விஷயத்தை இவ்வளோ எளிமையா சொல்லீட்டேங்க! உங்கள மறக்கவே மாட்டேன். நான் வரேன் .....”

 “ நில்லுடா... இவ்வளோ சீக்கிரம் நல்லவனா மாறிட்டான்.  பாருங்கடா பய என் பேச்சை கேட்டு திருந்திட்டான்?

ஆமாண்ணே! நீங்க செஞ்சு காமிச்சதுக்கு என்ன அர்த்தம்? எங்களுக்கு ஒன்னுமே புரியலயே?

மடப் பசங்களா சாராயத்தில விழுந்த  பூச்சி துடி துடிச்சி செத்து போச்சு இல்ல? அந்த மாதிரி குடிச்சா  நீயும் செத்துப்போய்டுவன்னு அர்த்தம்? இப்பயாவது தெரிஞ்சுக்கோங்க! அய்யாவோட அறிவை?

பிரமாதம்ணே! உங்களை மாதிரி அறிவாளி உலகத்தில யாரும் இல்ல.

ரெண்டு நாள்  கழிச்சி வாங்க! நாம அந்த பய எப்படி இருக்கான்னு பாத்துட்டு வரலாம்.

 இரண்டு நாட்கள் கழித்து வடிவேலுவும் அவர் நண்பர்களும் அந்தக் குடிகாரனின் வீட்டுக்குச் செல்கிறார்கள்.

அண்ணே! முதன் முதலா ஒரு நல்ல காரியம் பண்ணியிருக்கீங்க! உங்களுக்கு பிரமாதமான வரவேற்பு கிடைக்கப் போகுது. எங்களை மறந்துடாதீங்கண்ணே.

சரி சரி வீட்ல யாரு இருக்கா பாரு?

அவனோட பொண்டாட்டி தொடப்ப கட்டயோட  வருது?

என்னம்மா? உன் புருஷன் எப்படி இருக்கான்?
ரெண்டு நாளைக்கு முன்னாடி கொஞ்சமா குடிச்சிட்டு வந்தாரு. இப்ப நிறைய குடிக்கிறாறு? ஆமாம், நீங்க யாரு?

உன் புருஷன் சொல்லலையா? ரெண்டு நாளைக்கு முன்னாடி சாராயத்துல ஒரு பூச்சிய போட்டு என்ன ஆச்சுங்கறத  காமிச்சி புத்தி சொன்னவன் நான்தான். சொல்லுங்கடா  தங்கச்சிகிட்ட.?

ஓ! அந்த ஆள் நீதானா? வாய்யா! உனக்காகத்தான் காத்துக்கிட்டுருக்கேன். ஏன்யா இப்போ அதிகமா  குடிக்கிறேன்னு என் புருஷன கேட்டா, என்  வயித்தில நிறைய பூச்சி இருக்கு அது சாகறதுக்காகத்தான் நான் குடிக்கிறேன்.  சாராயம் குடிச்சா  வயித்தில இருக்கும் பூச்சியெல்லாம் செத்து போகும்னு நீதான்  சொன்னயாமே? அதுவும் இல்லாமே ஒரு பூச்சியப் பிடிச்சு போட்டு  வேற காமிச்சயாமே? கொஞ்சமா குடிச்சிக்கிட்டு இருந்தவனை அதிகமா குடிக்க வச்சுட்டயே யா! உன்ன சும்மா விடறனா பாரு. இந்த தொடப்பகட்டைக்கு வேல குடுத்து ரொம்ப நாளாச்சு.... 

வேணாம்மா...... நான் சொன்னது வேற அவன் புரிஞ்சிக்கிட்டது வேற? டேய் சொல்லுங்கடா? ............... ஓடிட்டீங்களா?  என்ன அடி வாங்க வச்சுட்டு வழக்கம்போல ஓடிட்டானுங்க? நம்ம வெகுளித்தனத்தால இந்த முறையும் ஏமாந்துட்டமே!
*************************************************************
இதையும் படிச்சுப் பாருங்க!
பூக்களைத் தேடி! 
புதிர் கணக்கு! வடிவேலுக்கு உதவுங்கள்! 
புதிர்!உங்களுக்கு தெரிஞ்சா விடை சொல்லுங்க!