என்னை கவனிப்பவர்கள்

புதன், 1 ஆகஸ்ட், 2012

ஆனந்த விகடன் மீது பாய்ந்த டி.ராஜேந்தர்

     
    டி.ராஜேந்தர் பற்றிய முந்தைய பதிவுக்கு வரவேற்பு அளித்ததற்கு மிக்க நன்றி. பல திறமைகளை கொண்டவராக இருக்கும் டி.ராஜேந்தர் தன்மீது சொல்லப்படும் விமர்சனங்களை தாங்க முடியாதவராக இருக்கிறார்.இவர் குறள்  டிவி என்று ஒரு இணைய  டிவியை நடத்தி வருகிறார் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். அதில் அவ்வப்போது பரபரப்பாக தற்பெருமைகளை பேசிக்கொண்டிருப்பது இவரது வழக்கம். இவர் குறள் டிவி ஆரம்பிக்கப் போவதாக ஓராண்டுக்கு முன்பாக சொல்லி இருந்தார் 

     அப்போது இது இவருக்கு தேவையா என்ற ரீதியில் விமர்சனம்  செய்ததாம் ஆனந்த விகடன். இவருடைய சானலைபார்க்காமல்  திருப்பிவிடுவார்கள் என்றும் தெரிவித்திருந்ததால் பொங்கி எழுந்து ஆனந்த விகடனை சாடுவதை சமீபத்தில் வீடியோவில் பார்த்தேன்.இது ஒரு பழைய வீடியோதான். நீங்களும் பார்த்திருக்கக் கூடும். பார்த்தவர்கள் இன்னொரு தடவை  பாருங்கள் பார்க்காதவர்கள் முதன் முறையாகப் பாருங்கள்.
அவர் சீரியசாகச்  சொல்வதை நீங்கள் காமெடியாக எடுத்துக் கொண்டால் நான் பொறுப்பல்ல.
 பகுதி 1


பகுதி 2



******************************************


39 கருத்துகள்:

  1. இவரின் பல கண்ணொளிகள், இப்படித்தான் நகைச்சுவையாக இருக்கும்...

    பல திறமைகள் உள்ள மனிதர். நீங்கள் சொல்வது போல் தற்பெருமைக்கு சொந்தக்காரர்...

    நன்றி...
    (த.ம. 1)

    பதிலளிநீக்கு
  2. உங்கள் புண்ணியத்தில் பலர் கொஞ்ச நேரம் இன்று சிரிப்பார்கள்

    பதிலளிநீக்கு
  3. ரொம்ப பழைய செய்தி தான் பரவில்லை நம்ம தலைவரு காமெடிகவே பாக்கலாம் வீடியோ

    பதிலளிநீக்கு
  4. த்ரமைகள் இருக்கும் இடத்தில அதீத நம்பிக்கைகள் இருந்தால் இப்படித் தான் என்பதற்கு இவரே சிறந்த உதாரணம்

    பதிலளிநீக்கு
  5. அது யாருங்க.... கேள்வி கேட்டு அவரை உசுப்பேற்றிய புண்ணியவான்...

    பதிலளிநீக்கு
  6. ஐயோ விழுந்து விழுந்து சிரித்தேன்

    பதிலளிநீக்கு
  7. திறமை இருக்கும் இடத்தில் தற்பெருமை இருக்கத்தான் செய்யும்.

    பதிலளிநீக்கு
  8. திறமை இருந்தும் அதீத தற்புகழ்ச்சியால் அழியும் இவரை என்ன செய்வது? சிறந்த பதிவு!

    இன்று என் தளத்தில் வெற்றி உன் பக்கம்! தன்னம்பிக்கை கவிதை! http:// thalirssb.blogspot.in

    பதிலளிநீக்கு
  9. தவளை தன் வாயால்....

    ஒரு சமயம் இப்படியெல்லாம் பேசி தன்னைப் பிரபலப்படுத்த முயற்சிக்கிறாரோ....

    இருக்கலாங்க முரளிதரன் ஐயா.

    பதிலளிநீக்கு
  10. இவருகிட்ட நிறைய திறமை இருக்கு கூடவே தற்பெருமையும்!

    பதிலளிநீக்கு
  11. திரு VGK.(வை.கோபாலகிருஷ்ணன்) அவர்களிடமிருந்து தாங்கள்
    “SUNSHINE BLOGGER AWARD “ என்ற விருதினை பெற்றமைக்கு வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  12. நகைச்சுவைக்கான அவரது பங்களிப்பும்,உங்களதற்கும் நன்றி.:))

    பதிலளிநீக்கு
  13. ஆனந்த விகடனுக்கும் இவருக்கும் ஆரம்பத்திலிருந்தே வாய்க்கா தகராறுதான்.இவரின் பழைய வெள்ளி விழா கண்ட படங்களுக்கு எல்லாம் வெறும் சொற்ப மார்க்குகளே போட்டு இவரை வெறுப்பேற்றும்...அது இன்னும் தொடர்கிறது...இந்த காணொளி முன்பே பார்த்திருந்தாலும் மீண்டும் ஒருமுறை பார்க்க வைத்து சிரிக்க வைத்ததற்கு நன்றி...

    பதிலளிநீக்கு
  14. இவருகிட்ட நிறைய திறமை இருக்கு கூடவே தற்பெருமையும் அதிக உணர்ச்சி கொந்தளிப்பும்

    பதிலளிநீக்கு
  15. இவர் தனக்காக வாழ்வார். ஊருக்காக வாழமாட்டார்; எப்படி ஆ. வி. அவருடைய நல்ல படங்களுக்கு மட்டாமான மார்க் போடுவதற்கு உரிமை இருக்கோ அதே மாதிரி இவருக்கும் ஆ. வி. யை எகிற உரிமை இருக்கு. ஆ. வி. பிழைப்புக்காக எவன் காலையும் பிடிக்கும் பத்திரிக்கை. சினிமாவில் எப்படியோ? நிஜ வாழ்வில் ஒரு உண்மையானா உயர்ந்த மனிதன்; அவர் திருமணத்தில் இருந்து...இன்று வரை.

    பதிலளிநீக்கு
  16. ரெண்டுபேருமே ஒருவருக்கொருவர் குறைந்தவர்கள் அல்ல...!

    ஆனாலும் நம்மாளு பேசுறதை கேட்கும்போது சிரிக்காமல் இருக்க முடியவில்லை ஹி ஹி....

    பதிலளிநீக்கு
  17. yen sir indha koali veri ongalukku,
    ungalukku TR mela enna sir kaandu avaroda indha vetti polmbalai paakathavanga paakanumnnu kanganam kattikittu velai paththa madhiri theriyuthu.
    aanalum maanam ulla indha tamilanai ippudi pottu takkalaama? nanbargale oru vishayam solveengalaa? indha tr thanni podathppove indha polambal polmburapodhu thanni potta enna aagum ..?

    பதிலளிநீக்கு
  18. //திண்டுக்கல் தனபாலன் said...
    இவரின் பல கண்ணொளிகள், இப்படித்தான் நகைச்சுவையாக இருக்கும்...
    பல திறமைகள் உள்ள மனிதர். நீங்கள் சொல்வது போல் தற்பெருமைக்கு சொந்தக்காரர்..//
    முதல் கருத்து முதல் வாக்கு ரொம்ப நன்றி சார்!.

    பதிலளிநீக்கு
  19. //மோகன் குமார் said...
    உங்கள் புண்ணியத்தில் பலர் கொஞ்ச நேரம் இன்று சிரிப்பார்கள்//
    எல்லோரும் சிரிப்பாங்களேன்னு அவரு கவலைப் படறதே இல்ல.

    பதிலளிநீக்கு
  20. //asa asath said...
    ரொம்ப பழைய செய்தி தான் பரவில்லை நம்ம தலைவரு காமெடிகவே பாக்கலாம் வீடியோ//
    ஆமாம் ஆசாத்! நன்றி.

    பதிலளிநீக்கு
  21. //சீனு said...
    த்ரமைகள் இருக்கும் இடத்தில அதீத நம்பிக்கைகள் இருந்தால் இப்படித் தான் என்பதற்கு இவரே சிறந்த உதாரணம்//
    உண்மைதான் சார்!

    பதிலளிநீக்கு
  22. //HOTLINKSIN.COM திரட்டி said...
    அது யாருங்க.... கேள்வி கேட்டு அவரை உசுப்பேற்றிய புண்ணியவான்..//
    நன்றி ஹாட்லின்க்ஸ்.

    பதிலளிநீக்கு
  23. //அரசன் சே said...
    ஐயோ விழுந்து விழுந்து சிரித்தேன்//
    யாராலயும் சிரிக்காம இருக்க முடியாது.
    வருகைக்கு நன்றி அரசன்

    பதிலளிநீக்கு
  24. //Sasi Kala said...
    திறமை இருக்கும் இடத்தில் தற்பெருமை இருக்கத்தான் செய்யும்.//
    தற்பெருமை ரொம்ப கூடுதலா இருக்கிறதுதான் அவருடைய பலவீனம்
    நன்றி சசிகலா.

    பதிலளிநீக்கு
  25. //s suresh said...
    திறமை இருந்தும் அதீத தற்புகழ்ச்சியால் அழியும் இவரை என்ன செய்வது? சிறந்த பதிவு!
    இன்று என் தளத்தில் வெற்றி உன் பக்கம்! தன்னம்பிக்கை கவிதை! //
    நன்றி சுரேஷ் சார்! உங்க பதிவை படித்துவிட்டேன்.

    பதிலளிநீக்கு
  26. வருகைக்கும் விருது பெற்றமையை தெரிவித்தமைக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ சார்!

    பதிலளிநீக்கு
  27. //அறிவன்#11802717200764379909 said...
    நகைச்சுவைக்கான அவரது பங்களிப்பும்,உங்களதற்கும் நன்றி.:)//
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பாஸ்

    பதிலளிநீக்கு
  28. Manimaran said...

    ஆனந்த விகடனுக்கும் இவருக்கும் ஆரம்பத்திலிருந்தே வாய்க்கா தகராறுதான்.இவரின் பழைய வெள்ளி விழா கண்ட படங்களுக்கு எல்லாம் வெறும் சொற்ப மார்க்குகளே போட்டு இவரை வெறுப்பேற்றும்...அது இன்னும் தொடர்கிறது...இந்த காணொளி முன்பே பார்த்திருந்தாலும் மீண்டும் ஒருமுறை பார்க்க வைத்து சிரிக்க வைத்ததற்கு நன்றி...//
    நன்றி மணிமாறன்.

    பதிலளிநீக்கு
  29. //தனிமரம் said...
    இவருகிட்ட நிறைய திறமை இருக்கு கூடவே தற்பெருமையும் அதிக உணர்ச்சி கொந்தளிப்பும்//
    இதுதான் அவருடைய வீக்னஸ்

    பதிலளிநீக்கு
  30. //நம்பள்கி said...
    இவர் தனக்காக வாழ்வார். ஊருக்காக வாழமாட்டார்; எப்படி ஆ. வி. அவருடைய நல்ல படங்களுக்கு மட்டாமான மார்க் போடுவதற்கு உரிமை இருக்கோ அதே மாதிரி இவருக்கும் ஆ. வி. யை எகிற உரிமை இருக்கு. ஆ. வி. பிழைப்புக்காக எவன் காலையும் பிடிக்கும் பத்திரிக்கை. சினிமாவில் எப்படியோ? நிஜ வாழ்வில் ஒரு உண்மையானா உயர்ந்த மனிதன்; அவர் திருமணத்தில் இருந்து...இன்று வரை.//
    கருத்துக்கு நன்றி நம்பள்கி

    பதிலளிநீக்கு
  31. //MANO நாஞ்சில் மனோ said...
    ரெண்டுபேருமே ஒருவருக்கொருவர் குறைந்தவர்கள் அல்ல...!
    ஆனாலும் நம்மாளு பேசுறதை கேட்கும்போது சிரிக்காமல் இருக்க முடியவில்லை ஹி ஹி....//
    நன்றி மனோ சார்!

    பதிலளிநீக்கு
  32. //Anonymous said...
    yen sir indha koali veri ongalukku,//
    மக்கள் சந்தோஷப் படட்டுமே!

    பதிலளிநீக்கு
  33. இவரு தன் வாயல தானே தானே கெட்டுக்குறார்..

    மற்றையபடி அவரது திறமை வித்தியாசமானது தான்..

    பதிலளிநீக்கு
  34. நல்ல காணொளி...

    பகிர்வுக்கு நன்றி முரளி

    த.ம. 6

    பதிலளிநீக்கு
  35. அறிவு,திறமையுள்ள தமிழ் மானமுள்ள மனுஷன்தான்.ஆனாலும் ஏதோ ஒரு குறையால் சிரிப்பு மனுஷனா இருக்கிறார்.பாவம்தான் !

    பதிலளிநீக்கு
  36. மனதில் உள்ளதை வடிகட்டி பேசத்தெரியாதவர்..
    காணொளி அதை அப்படியே சொல்கிறது..
    இடம் பொருள் ஏவல் என்பதை அறிந்து பேசினால்
    எங்கோ இருந்திருக்க வேண்டியவர்...

    பதிலளிநீக்கு
  37. ராம்கி டிவி நேரலை.

    பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895