என்னை கவனிப்பவர்கள்

சனி, 7 ஜனவரி, 2012

ஏ.ஆர்.ரஹ்மான் - வாழ்த்துக் கவிதை!



இசையைத் தவிர வேறு எதிலும் ஏ.ஆர்.ரஹ்மான் கவனம் இல்லை  என்பது DAM 999  படம்  பற்றி அவர் கூறிய கருத்து நமக்குத் தெரிவிக்கிறது. அதை மறந்துவிட்டு  அந்த இசைக் கலைஞனை அவரது பிறந்த நாளில் (6.1.2012) வாழ்த்துவோம்.
        
        தமிழ் இசை மலையில் பிறந்து;
        இந்திய இசைச்  சமவெளியில் தவழ்ந்து;
        உலக இசைக்கடலில் நுழைந்த
        இசை நதியே !
                        
        தமிழ்த் திரை நிலத்தில் 
        விழுந்து முளைத்த           
        விதையே!
        இசையுலகில் செய்தாய் 
        புதிய விதியே!
                          
        சுற்றி வரும் பூமிக்கு     
        காதிருந்தால்
        சற்று நேரம்        
        நின்றுவிட்டுத்தான் செல்லும்!
        உன் இசை ஒலிக்கும்போது,
                          
        காற்று கூட              
        களிப்படையும்!             
        உன் இசையைக்             
        கடத்தும்போது, 

        வெற்றி தேவதைக்கும்         
        சந்தோஷம்;
        உன் கால்களை   
        பற்றிக்கொள்ளும்போது!
                          
        மயக்கும் இசை பிறக்கும் 
        உன் மனதில்;                                
        கலக்கும் இசை              
        கைகூடும்                
        உன் கைகளில்!
                         
        உன் கண்களில் கூட 
        தெரிவது   
        இசை வெளிச்சம்;
                           
        உன் இதயம்கூட 
        தாளத்தோடுதான் துடிக்கும்!
                         
        நாட்டுப்பற்றை
        நாற்பத்தேழோடு 
        மறந்து போன              
        மக்கள் மனதில் 
        வந்தே மாதரம் மூலம் 
        மீண்டும்              
        வந்தமரச் செய்தாய்!
                         
        இளைஞர்கள் மனதில் 
        இசையால் இடம் பிடித்தாய்!
                          
        இந்திய இசையை          
        இமயத்தில் 
        ஏற்றி விட்டாய்!
                           
        புதுப்புது              
        இசை வடிவங்களின் 
        பிரம்மாவே!                                 
        நீ              
        ஆஸ்கார் வாங்கியபோது          
        ஆ! என 
        ஆச்சரியப்பட்டது உலகம்!                                   
        ஜெய் ஹே! என்று முடியும்   
        தேசிய கீதம் கூட - இன்று        
        ஜெய் ஹோ!               
        என்று மாறிவிட்டது?  

        உலகமே 
        உனது இசையில் 
        மயங்கியது.
       
        நீயோ!
        இசையே 
        உலகமாக வாழ்கிறாய்!
         
         இன்னும் 
         பல்லாண்டுகள் வாழ்வாய்!
         இசைக் கயிற்றால் 
         இந்தியாவை இணைப்பாய்!
               
         உன்னை              
         தமிழகத்தில்               
         பிறக்கச் செய்ததால்          
         இறைவனை போற்றுகிறோம்!       
         'ல்லாப்புழும் றைனுக்கே!'

2 கருத்துகள்:

  1. காற்று கூட
    களிப்படையும்!
    உன் இசையைக்
    கடத்தும்போது,
    இசைக்கு மயங்காதோர் யாரேனும் உண்டோ பல்லாண்டுகள் வாழ்க வென வாழ்த்துகிறேன் பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  2. காற்று கூட
    களிப்படையும்!
    உன் இசையைக்
    கடத்தும்போது,

    உன் இதயம்கூட
    தாளத்தோடுதான் துடிக்கும்!

    நாட்டுப்பற்றை
    நாற்பத்தேழோடு
    மறந்து போன
    மக்கள் மனதில்
    வந்தே மாதரம் மூலம்
    மீண்டும்
    வந்தமரச் செய்தாய்!


    நீ
    ஆஸ்கார் வாங்கியபோது
    ஆ! என
    ஆச்சரியப்பட்டது உலகம்!
    ஜெய் ஹே! என்று முடியும்
    தேசிய கீதம் கூட - இன்று
    ஜெய் ஹோ!
    என்று மாறிவிட்டது?
    இந்த வரிகள் என்னை உங்களிடம் இருந்து கீழே தள்ளுகிறது... இந்த வரிகள் மூலம் நீங்கள் நான் அண்ணார்ந்து பார்க்கும் ஆகாய சூரியனாய் ஆகிவிடுகிறீர்கள்...

    பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895