என்னை கவனிப்பவர்கள்

அதிசயம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அதிசயம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 1 ஜனவரி, 2015

இந்தியாவின் டாப் டென் கிராமங்கள்-Top Ten Villages

    அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள். கிராமங்கள்தான் இந்தியாவின் முதுகெலும்பு என்றார் காந்தியடிகள். ஆனால் கிராமங்களின் நிலை உண்மையில் மெச்சத் தகுந்த அளவில் இல்லை என்பது உண்மை. கிராமங்களின் அடிப்படையான விவசாயம் நசிந்து வருகிறது. எல்லோரும் நகரத்தை நோக்கி நகர கிராமங்கள் காலியாகிக் கொண்டிருக்கின்றன. கிராமப்புற மேம்பாட்டுத் திட்டங்கள் எதுவும் சரியான முறையில் சென்றடைவதில்லை என்ற குற்றசாட்டும்  உண்டு .
   நல்ல கிராமங்கள் எப்படி இருக்கவேண்டும் ? உதாரணம் சொல்லக் கூடிய அளவுக்கு இந்தியாவில் ஏதேனும் இருகின்றனவா? அப்படியும் ஒரு சில இருக்கத்தான் செய்கின்றன என்ற செய்தி கொஞ்சம் ஆறுதல் 
அவற்றில் முதல் பத்து  இவைதான் என்று செய்திகள் சொல்லுகின்றன

1. மௌலின்னாங் . மேகாலயா மாநிலத்தில் உள்ள சிறிய மலை கிராமம் .அப்படி எதனால் இது முதல் இடத்தைப் பிடித்தது . சுத்தம் சார் சுத்தம். சுற்றிப் பார்த்தால் எங்கும் சுத்தம். மண்ணைப் பற்றித் தொட்டுத் தரலாம் முத்தம்  என்று பாட்டுப் பாடலாம் . அந்த அளவுக்கு சுத்தத்திற்கு பேர்போனது . இந்தியாவில் மட்டுமல்ல ஆசியாவிலியே Cleanest Village என்ற விருதைப் பெற்றுள்ளது இந்தக் கிராமம். பிளாஸ்டிக் போன்ற யூஸ் அண்ட் த்ரோ குப்பைகள் சிகரட் அட்டைகள் இவற்றை எல்லாம்  பார்க்க முடியாதாம். பார்த்தவர்கள் சொல்கிறார்கள் . (நம்ம ஊர் இப்படி இருக்காதா என்று ஏங்கக் கூடாது.ஏன்னா அது நம்ம  கைலயும் இருக்கு . இவ்வளோ சுத்தம் நம்ம உடம்புக்கு ஆகாதே?) 

2.புன்சாரி: இந்த  ஊர் குஜராத் மாநிலத்தில்உள்ளது . இது  மெட்ரோ நகரங்களை வெட்கப் படவைக்கும் அளவுக்கு வசதிகள் உடைய கிராமம். எட்டே வருடத்தில் இந்த முன்னேற்றத்தை அடைந்துள்ளதாம். ஊர் முழுவதும் Wi-Fi வசதி செய்யப்பட்டுள்ள்ளது. இந்த கிராமத்தில் உள்ள தொடக்கப் பள்ளிகளில் CCTV நிறுவி இருக்கிறார்கள். . மாணவர்கள் படிப்பதை பெற்றோர் பார்க்க முடியும். ஏ.சி வசதியும் உண்டு.அதுமட்டுமல்லாமல் முக்கியமான 25 பொது இடங்களில் கண்காணிப்பு கேமரா வைத்திருக்கிறார்கள். பத்து ஆண்டுகளுக்கு முன்னால் குடிநீர் வசதி சாலைவசதி,மின்சார வசதி எதுவும்  இல்லாமல் இருந்ததாம். இன்று கிராமம் முழுதும் தூய்மையான குடிநீர் வழகும் அளவுக்கு R.O பிளான்ட் இருக்கிறது . இன்று கழிப்பறை வசதி , சாலை வசதி என்று அத்தனை அடிப்படை வசதிகளும் தாராளமாய் உள்ளதாம். ஊர் முழுவதும் துடைத்து வைத்தாற்போல் சுத்தமோ சுத்தம் 
    தகவல்களை சொல்வதற்காக ஆங்காங்கே ஒலிபெருக்கிகள் அமைக்கப் பட்டிருக்கிறதாம். நலத் திட்டங்கள் மற்றும் முக்கிய அறிவிப்புகள் உடனடியாக மக்களுக்கு இதன் மூலம்  தெரிவிக்கப் படுகிறது. போக்குவரத்து வசதிக்காக மினி பஸ் வசதியும் செய்யப்பட்டிருக்கிறதாம். இத்தனைக்கும் காரணம் படேல் ஹிமான்ஷு நரேந்திரநாத் என்கிற 31 வயது இளைஞர்.  பஞ்சாயத்து தலைவராக பொறுப்பேற்றபோது இவருக்கு வயது 23  இத்தனைக்கும் கூடுதல் அரசு நிதி ஏதுமில்லையாம். கிராம மக்களின் ஒத்துழைப்புடன்தான்  இது சாத்தியமாகி இருக்கிறது என்கிறார் ஹிமான்ஷு படேல் .( ஹூம் படிக்கிற நீங்க விடற பெருமூச்சு சத்தம் இங்க கேக்குதே)


3.ஹிவாரே பஜார் . மகராஷ்டிரா மாநில கிராமம் . வறண்டு போய் கிடந்த கிராமத்தை பசுஞ் சோலையாக மாற்றி  இருக்கிறார்  பொப்பட்ராவ் பாகுஜி பவார் என்ற மனிதர். இந்த கிராமத்தின் பஞ்சாயத்து தலைவர். 70-80 அடியில் இருந்த நிலத்தடி நீர்மட்டத்தை 20- 25 அடியாக மாற்றி இருக்கிறார். இவரோட உழைப்பும் விடாமுயற்சியும் அளவிடற்கரியது 
ஒரு தன்னிறைவு அடைந்த கிராமமாக  உருவாக்கி இருக்கிறார். பிழைப்பிற்காக கிராமத்தை விட்டு வெளியே சென்றவர்கள் ஒவ்வொருவராக மீண்டும் கிராமத்திற்கே வந்து கொண்டிருக்கிறார்களாம்.இவரது சாதனைகளைப் பற்றியும் இந்த கிராமத்தைப் பற்றியும் ஏற்கனவே ஒரு பதிவில் எழுதி இருக்கிறேன். விரிவாக தெரிந்து கொள்ள  இந்த இணைப்பில் சென்று படித்துப் பாருங்கள்.( இப்படியும் ஒரு கிராமம்!இப்படியும் ஒரு தலைவர்!

         4.தர்னாய் :உங்களால் நம்ப முடியுமா பின் தங்கிய பீகாரில் இப்படி ஒரு கிராமம் இருக்கிறது என்று.  முழுக்க முழுக்க சூரிய ஒளி மின்சாரம்  மூலம் மின் தேவையை சுயமாக பூர்த்தி செய்து கொள்ளும் முதல் கிராமம் இதுதானாம். . 30 ஆண்டுகளுக்கு மேலாக இருளில் மூழ்கிக் கிடந்த கிராமம் இன்று ஒளிர்கிறது. மின் தேவைக்காக அரசை நம்பி இருக்கவில்லை. விவசாயமும் செழிக்கிறதாம்
5.சாப்பர்::இது அரியானா மாநிலத்தில் உள்ள அழகிய கிராமம்.  பெண்கள் பிறப்பு வீதம் மிகவும் குறைவாகக் கொண்ட மாநிலம் அரியானா. இந்த கிராமமும் அப்படித்தான் இருந்த்தது . பெண்கள் மீதான பிற்போக்கு எண்ணம்  கொண்ட மக்களின் மனப்பான்மையை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றினார் ஒரு பெண். ஆம். அவர் பெயர்  நீலம். அவர்தான் இந்தக் கிராமத்தின் தலைவர். இன்று பெண் குழந்தை பிறந்தால் இனிப்பு கொடுத்து கொண்டாடும் அளவுக்கு நிலை மாறியுள்ளதாம் 

6.கோக்ரிபெல்லூர்: கர்நாடக மாநில கிராமம் .இயற்கையை நேசிக்கும் கிராமம். பறவைகள் நிறைந்த கிராமம்.இங்கு அரிதான பல பறவைகள் காணப்படுகிறதாம் .எப்போதும் காதைக் குடையும்  பறவைகள் சத்தம் பயிர்களுக்கு தொல்லை  என்பதையெல்லாம் பொருட்படுத்தாமல் இந்த ஊர் மக்கள் அவைவரும் பறவைகளை நேசிக்கிறார்கள். வேட்டையாடுவதை அறவே வெறுப்பவர்கள்.. பறவைகளுக்கு காயம் பட்டாலோ நோய்வாய்ப் பாடாலோ சிகிச்சை அளிக்க சிறப்பு ஏற்பாடுகளும் உண்டு.

7.பால்லியா::உத்திரப் பிர்தேசத்தில் உள்ள சிறிய கிராமம். இக்கிராமத்தில்  தண்ணீர் வசதிக்காக அடிப்பம்புகளை அரசு அமைத்துக் கொடுத்துள்ளது..இதன் மூலம் கிடைக்கும் நீரில் ஆர்சனிக் நச்சுப் பொருள் கலந்திருந்ததால் தோல் வியாதிகள் உள்ளிட்ட பல பிரச்சனைகள் ஏற்பட்டன. அரசாங்கத்தை எதிர்பார்க்காமல் தாங்களே களத்தில் இறங்கினார்கள். இல்லை இல்லை கிணற்றில் இறங்கினார்கள்.ஆம் தங்கள் பழைய கிணறுகள், குளங்கள் குட்டைகளை  தூர் வாரி நீரை சேமிக்க பிரச்சனை குறைந்துவிட்டது 
8.போத்தனிக்காடு: இந்தக் கேரளா கிராமத்தின் சாதனை என்ன தெரியுமா? 100 சதவீத கல்வியறிவு பெற்ற முதல் கிராமம் ஆகும். இங்கு வாழும் மக்கள் அனைவரும்  அனைவரும் எழுத்தறிவு பெற்றவர்கள்
 9.பெக்கினக்கேரி: கர்நாடக மாநிலத்தில் உள்ள இந்த கிராமம் ஒரு வித்தியாசமானது . இந்த கிராம மக்கள் காலையில் மலம் கழிக்க கவுண்டமணி ஒரு படத்தில் சொம்பு தூக்கிக் கொண்டு போவது போல ஒரு பொது இடத்திற்கு மலம் கழிக்க செல்வது வழக்கமாம். எவ்வளோ சொல்லியும் இதனை மாற்ற முடியவில்லை. . ஒரு வினோதமான முயற்சியை மேற்கொண்டது பஞ்சாயத்து.. ஆமாம் . பஞ்சாயத்து உறுப்பினர்கள் காலையில் முன்னதாக சென்று  மலம் கழிக்க வரும் ஒவ்வொருவருக்கும் குட்மார்னிங் சொல்ல ஆரம்பித்தனர். இதனால் தர்ம சங்கடம் அடைந்து வீட்டுக்கு திரும்பினராம். இந்த செயல் பலன் அளிக்க கிராமம் இப்போது மாறிவிட்டதாம்..
10.சனி சிங்கனாப்பூர்.,. இப்படி ஒரு  கிராமத்தை எங்கும் பார்க்க முடியாது. அப்படி ஒரு அதிசய கிராமம். அப்படி என்ன அதிசயம்? மகராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த இந்த கிராமத்தில்  எந்த வீட்டுக்கும் கதவுகளோ ஜன்னல்களோ இல்லை என்பதே. வீட்டுக்கு மட்டுமல்ல கடைகளுக்கும் கதவுகள் இல்லை. ஆனால்  திருட்டு நடப்பதே இல்லையாம். அதைவிட அதிசயம் இங்கு கதவு லாக் செய்யாத யூ கோ வங்கி  ஒன்றும் உள்ளதாம்..

மக்களும் மக்கள் பிரதிநிதிகளும் நினைத்தால் நிச்சயம் நல்ல மாற்றங்கள் கொண்டு வரமுடியும் என்பதற்கு இவை சிறந்த உதாரணங்கள் அல்லவா? 2015 இல் இந்த எண்ணிக்கை உயரட்டும்

தமிழ்நாட்டில் இப்படி ஏதேனும் கிராமம் இருக்கிறதா? தெரிந்தால் சொல்லுங்கள் ஆறுதல் அடைவோம்.

நன்றி : இணைய தளங்கள் ,பத்திரிகைகள் .

********************************************************************************

ஞாயிறு, 22 செப்டம்பர், 2013

இன்றைய நாளின் வானியல் சிறப்பு

மார்ச் 21&செப்டம்பர் 22 அதிசய நாட்கள்!

   "தஞ்சை பெரிய கோவிலின் நிழல் பூமியில் விழும்" என்பதை இண்டு மூன்று நாட்களுக்கு முன் பதிவிட்டிருந்தார் நம்பள்கி. அந்தப் பதிவின் கருத்துரைகளில் நிழல் விழுவது பற்றி  பலரும் விவாதித்திருந்தனர்.  நிழல் விழாமல் எந்த கட்டடமும் கட்ட முடியாது ஒரு குறிப்பிட்ட நாளில் சூரியன் தலைக்கு மேல் வரும்போது (நேர் செங்குத்தாக) வரும்போது மட்டும் நிழலை காண முடியாது.ஏன் எனில் நிழல் அந்தப் பொருள் மீதே விழும். இது ஆண்டுக்கு இரண்டு முறை மட்டுமே நிகழும். அந்த அதிசயம் நிகழும் இரண்டு நாட்களில் இன்று இன்றைய நாளும்(செப் 22) ஒன்று.
    நமக்குள்ள பல பிரச்சனைகளில் சில விஷயங்களை கவனிக்கவும் நினைவில் வைத்துக் கொள்ளவும் நேரம் இருப்பதில்லை. பல சுவாரசியமான நிகழ்வுகள் விண்வெளியில்  நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. பூமியிலும் இவ்வாறு நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 21(சில சமயங்களில் மார்ச் 20) க்கும் செப்டம்பர் 22(சில சமயங்களில் செப் 23) க்கு தனி சிறப்பு உண்டு. இவ்விரு நாட்களிலும் இரவு நேரமும் பகல் நேரமும் சமமாக இருக்கும். மற்ற நாட்களில் பகல் இரவு நேரங்களில் வித்தியாசம் இருக்கும். அதற்கு என்ன காரணம் என்பதை பார்ப்போம்.

    பூமி தனி அச்சில் 23.5 டிகிரி சாய்வாக சுற்றுகிறது. பூமி தன்னைத் தானே சுற்றிக் கொண்டு சூரியனையும் சுற்றி வருகிறது என்பது நமக்குத் தெரியும்.தன்னைத் தானே சுற்றிக் கொள்வதால்தான் இரவுபகல் ஏற்படுகிறது.என்பதும் நாம் அறிந்ததே! சில காலங்களில் பகல் பொழுது அதிகமாகவும் இரவு பொழுது குறைவாகவும் இருக்கும். சில காலங்களில் இரவுப் பொழுது அதிகமாகவும் பகல் குறைவாகவும் இருக்கும். பூமியின் நீள் வட்டசுற்றுப்பாதை  ஒரு சாலை என்று கொண்டால்  அந்தப் பாதைக்கு நேர்  செங்குத்தாக பூமி தன்னைத்  தானே சுற்றிக் கொள்வதில்லை. சற்று சாய்வாக அதாவது 23.5 டிகிரி சாய்வாக தனது அச்சில் சுற்றுகிறது.
  இதுவே இரவு பகல் நேரங்களில் வித்தியாசம் ஏற்படுவதற்கு காரணம்.பூமியில் கோடைகாலம் குளிர்காலம் போன்ற பருவ காலங்கள் ஏற்படுவதற்கும் இந்த சாய்வே காரணமாக அமைகிறது. வேறு மாதிரி சொல்வதென்றால் பூமி செங்குத்தாக தன்னைத் தானே சுற்றிக் கொண்டால் பருவ காலங்கள் ஏற்படாது. அதாவது பூமியில் ஓரிடத்தில் எந்தவிதமான காலம் இருக்கிறதோ ஆண்டு முழுதும் மாற்றமின்றி அப்படியே இருக்கும்.
இன்னும் சற்று விரிவாகப் பார்ப்போம்.
பூமி அச்சின் இரு முனைகளையே வட துருவம் தென் துருவம் என்கிறோம்.  ஒரு குறிப்பிட்ட நாளில் மேல் முனை (வடதுருவம்) சூரியனை நோக்கி சாய்ந்து இருப்பதாக  வைத்துக்கொள்வோம்.
கீழுள்ள படத்தைப் பாருங்கள்

படம் 1

   ஆறு மாதங்களுக்குப் பின் பூமி பாதி  சுற்று சுற்றி எதிர்புறம் வந்திருக்கும் அப்போது அதன் மேல் முனை(துருவம்அல்லது சுழலும் அச்சின் மேல்முனை )  சூரியனை நோக்கி இருக்காது. இப்போது  கீழ் முனை தென் துருவம்  சூரியனை  நோக்கி இருக்கும். அதாவது பூமியின் அச்சு அதே நிலையில் இருக்கிறது.
இதோ  இந்தப் படத்தைப் பாருங்கள்
படம் 2

பூமியின் சுற்றுப் பாதையை ஒரு கம்பியாகவும் பூமியை ஒரு மணியாகவும் வைத்துக் கொள்ளுங்கள் கம்பியில் கோர்த்தபடி மணி சுற்றுவது போல் பூமி சுற்றினால்  கீழுள்ள படத்தில் உள்ளது போல் 6 மாதங்களுக்குப் பிறகும் அதன் வடமுனை எப்போதும் பூமியை நோக்கியே சாய்ந்திருக்கும்.
படம் 3
ஆனால்  இயற்கையில் அவ்வாறு நிகழவில்லை. இப்படி பூமி சுற்றினால் கால மாற்றங்கள் நிகழாது. ஜுன் மாதத்தில் பூமியை நோக்கி சாய்ந்திருக்கும் வடதுருவம் 6 மாதங்களுக்குப் பின் சூரியனை சுற்றி எதிர் பக்கம் வரும்போது அதன் வடதுருவம் சூரியனை  விட்டு விலகி இருக்கும், அதாவது பூமியின் சுழலும் அச்சை ஒரு கோடாக பல்வேறு நிலைகளில் வரைந்தால் ஒவ்வொரு நிலையிலும் அந்தக் கோடு பல்வேறு தளங்களில் அமைந்த இணைகோடுகளாக  இருப்பதைக் காணலாம் 
   படம் 1 இல் காணப்படும் நிலை ஜூன் 21 அன்று ஏற்படுகிறது. தென் துருவம் சூரியனிடமிருந்து சற்று விலகி இருப்பதைக் காணாலாம் அன்று ஆண்டில் மிக நீண்ட பகலாக இருக்கும். இந்த நாளில் நில நடுக்கோட்டுக்கு மேலுள்ள வட அரைக் கோளத்தில் சூரிய ஒளி  அதிகமாகவும் தென் அரைக்கோளத்தில் குறைவாகவும் விழுகிறது. அன்றிலிருந்து பகல் நேரம் சிறிது சிறிதாக குறைந்து இரவு  நேரம் சிறிது சிறிதாக அதிகரிக்கும். செப் 23 அன்று இரவும் பகலும் சம நிலையை அடைகிறது. 
    இந்த நாட்களில் சூரியன் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி நகர்வதைப் போல் தோற்றமளிக்கும் இதை தட்சணாயணம் என்று கூறுவது வழக்கம். செப் 22 அன்று நில நடுக்கோட்டுக்கு செங்குத்தாக சூரிய ஒளி விழுவதால் வட  அரைக் கோளத்திலும் தென் அரைக் கோளத்திலும் சம அளவு ஒளி விழுகிறது.அதாவது வட துருவமும் தென் துருவமும் சம தொலைவில் உள்ளது. இதனால் இரவும் பகலும் சமமாக உள்ளது. இதே நிலைய மார்ச் 21 அன்றும் ஏற்படுவதால் அன்றும் இரவும் பகலும் சமமாக அமைகிறது.
   இதற்கிடையில் (படம் 2)டிசம்பர் 21(சில சமயங்களில் டிசம்பர் 22) அன்று ஜூன் 21 அன்று உள்ள நிலைக்கு நேர் எதிரான சூழ்நிலயில் பூமி அமைவதால் அன்று மிக நீண்ட இரவாகவும் குறைந்த பகலாகவும் காணப்படும்.அன்றிலிருந்து சூரியன் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி நகர்வது போல் தோற்ற மளிக்கும் இதை உத்தராயணம் என்று கூறுவார்கள்.
   சரி! இவையெல்லாம் விண் வெளியில்  நிகழ்கிறது.நாம் எப்படி இதை அறிவது. நாம் கண்ணால் என்ன மாற்றங்களை பார்க்க முடியும் 
1. இன்று சூரியன் உதிப்பது சரியான கிழக்கு திசையின் மையத்தில்  
2. இன்றிலிருந்து நிழல் வடக்குப்புறம் சாய்வாக விழத் தொடங்கும் 
3 இன்று பகல் பன்னிரண்டு மணிக்கு 90 டிகிரி செங்குத்தாக ஒரு வளைவில்லாத  குச்சியை வைத்தால்(பூமத்திய ரேகைப் பகுதியில்) அதன் நிழல் தரையில் விழாது. தலைக்கு மேல் நேராக சூரியன் இருக்கும்.
4 தமிழகத்தில் நெய்வேலியைத் தவிர இதர இடங்களில் சரியான கிழக்கு  மேற்காகவோ ,வடக்கு தெற்காகவோ  சாலைகள் இல்லை அதனால் திசைகளை அறிவது சில வேளைகளில் கடினமாக உள்ளது. இன்றைய சூரியனை வைத்து  திசைகளின் அமைப்பை  அறிந்து கொள்ளலாம்.
இதோ இந்தப் படங்கள் அதை விளக்கும் என்று நம்புகிறேன்.படத்தில் உள்ள குச்சியின் நிழலை கவனியுங்கள்.

ஜூன் 21 அன்று                               டிசம்பர் 21 அன்று
 
                       இன்று செப்டம்பர் 22 அன்று 

  இவை  யாவும் நில நடுக்கோட்டுப் பகுதியில் உள்ளவர்களுக்கு100 சதவீதம் பொருந்தும். மற்ற இடங்களில் நிழலில் மாறுபாடு காணப்படலாம். தமிழகத்தை பொறுத்தவரை நிலநடுக் கோட்டுக்கு வட பகுதியில் அமைந்துள்ளதால் நிழல் சற்று வடக்குப்புறம் சாய்வாக விழும். இரவு பகல் நேரங்கள் சமமாகவே இருக்கும். 

மேலே சொன்னது எல்லா இடங்களுக்கும் பொருந்துமாயின் இன்று  பகல்  12  மணி அளவில் ஒரு பொருளின் நிழல் பூமியில் விழாமல் இருக்கவேண்டும் ஆனால் இன்று எல்லா இடங்களிலும் அப்படி இருக்காது. உதரணமாக சென்னையில் எப்படி இருக்கிறது என்பதை அறிய கீழே உள்ள புகைப் படத்தை பாருங்கள் . என் வீட்டு வாசலில் ஒரு அரை அடி உயரமுள்ள முக்கால் அங்குல பிவிசி பைப்பை நிற்க வைத்து புகைப்படம் எடுத்திருக்கிறேன். எடுத்த நேரம் இன்று(sep 22) ஏறக்குறைய பன்னிரண்டு மணி 

மேலுள்ள படத்தில்  பன்னிரண்டு மணிக்கு நிழல் வடக்கு புறமாக விழுந்துள்ளதை காணலாம். இதே  நில்னடுக்கொட்டுப் பகுதியில் இதே முறையில் படம் எடுத்தால் நிழல் இருக்காது. 
  அப்படியானால் இதே நேரத்தில் சென்னையில் நிழல் தெரியா நிலை எப்போது வரும் என்று கேள்வி எழலாம்? 
    சென்னை 13 டிகிரி வட அட்சத்தில்(lattitude) அமைந்துள்ளது. ஜூன் மாதத்தில் தெற்கு பக்கமாக சாய்ந்து பயணம் செய்வது (போல)  தொடங்குகிறது.  0 டிகிரி நில நடுக்கோட்டுப்(Equator) பகுதிக்கு வர செப்டெம்பர் மாதம் வரை எடுத்துக் கொள்கிறது. ஆனால் சென்னையை அதற்கு முன்பாகவே கடந்து விடுகிறது. அதாவது ஆகஸ்ட் மாதத்தில்  20(தோராயமாக ) தேதிகளுக்கு கடக்கிறது.அந்த நேரத்தில் பகல் பன்னிரண்டு மணி அளவில் மேற்கண்ட போட்டோ எடுக்கப் பட்டால் நிழல் இல்லாமல் இருக்கும். அதாவது சூரியன் நேர் செங்குத்தாக இருக்கும். இதே நாளில் நிழல் மற்ற நேரத்தில் வலப்புறமோ இடப் புறமோ சாயாமல் தண்டவாளம் போல வரையப்பட்டுள்ள இணை கோட்டுக்குள்ளேயே காலையில் மேற்குப் புறமாகவும் மாலையில் கிழக்குப் புறமாகவும் விழும்.
மேற்புறத்தில் இருந்து எடுக்கப் பட்ட படம்
சுருக்கம்:  1.மார்ச் 21 &செப்டம்பர் 22 சம இரவு பகல் நாட்கள் 
           2. ஜூன் 21 நீண்ட பகல் குறுகிய இரவு 
           3. டிசம்பர் 21 நீண்ட இரவு குறுகிய பகல் 

  இன்றைய நாளோட முக்கியத்துவம்  இதுதாங்க
தலையை  சுத்துதா? சகிச்கிக்கோங்க பாஸ். திட்டறதுன்னா
கம்மென்ட்ல திட்டலாம்

*********************************************************************************
இந்தப்  பதிவு தொடர்பான வவ்வாலின் கேள்விகளுக்கு  இன்னும் சில விளக்கங்களை காண
http://tnmurali.blogspot.com/2013/09/explanation-shadows-axis-of-rotation-revolution.html வவ்வாலின் கருத்துகளுக்கு விளக்கங்கள்


ஞாயிறு, 23 செப்டம்பர், 2012

மார்ச் 21&செப்டம்பர் 22 அதிசய நாட்கள்!


. (இந்தப் பதிவை இடுவதில் சிறிது தயக்கம் இருந்தது. இதற்கு வரவேற்பு எப்படி இருக்கும் ஐயம் இருந்தாலும் இன்றைய தினத்தில் இந்தப் பதிவு பொருத்தமானதாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும் என்று நம்புகிறேன்.பள்ளி வயதில் இருக்கும் உங்கள் பிள்ளைகள், அல்லது தம்பி தங்கைகளுக்கு சொல்வதற்கு ஏற்றதாக இருக்கும் என்றும் நினைக்கிறேன்.)

    நமக்குள்ள பல பிரச்சனைகளில் சில விஷயங்களை கவனிக்க நேரம் இருப்பதில்லை. பல சுவாரசியமான நிகழ்வுகள் விண்வெளியில்  நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. பூமியிலும் இவ்வாறு நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 21(சில சமயங்களில் மார்ச் 20) க்கும் செப்டம்பர் 22(சில சமயங்களில் செப் 23) க்கு தனி சிறப்பு உண்டு. இவ்விரு நாட்களிலும் இரவு நேரமும் பகல் நேரமும் சமமாக இருக்கும். மற்ற நாட்களில் பகல் இரவு நேரங்களில் வித்தியாசம் இருக்கும். அதற்கு என்ன காரணம் என்பதை பார்ப்போம்.

    பூமி தனி அச்சில் 23.5 டிகிரி சாய்வாக சுற்றுகிறது. பூமி தன்னைத் தானே சுற்றிக் கொண்டு சூரியனையும் சுற்றி வருகிறது என்பது நமக்குத் தெரியும்.தன்னைத் தானே சுற்றிக் கொள்வதால்தான் இரவுபகல் ஏற்படுகிறது.என்பதும் நாம் அறிந்ததே! சில காலங்களில் பகல் பொழுது அதிகமாகவும் இரவு பொழுது குறைவாகவும் இருக்கும். சில காலங்களில் இரவுப் பொழுது அதிகமாகவும் பகல் குறைவாகவும் இருக்கும். பூமியின் நீள் வட்டசுற்றுப்பாதை  ஒரு சாலை என்று கொண்டால்  அந்தப் பாதைக்கு நேர்  செங்குத்தாக பூமி தன்னைத்  தானே சுற்றிக் கொள்வதில்லை. சற்று சாய்வாக அதாவது 23.5 டிகிரி சாய்வாக தனது அச்சில் சுற்றுகிறது.

  இதுவே இரவு பகல் நேரங்களில் வித்தியாசம் ஏற்படுவதற்கு காரணம்.பூமியில் கோடைகாலம் குளிர்காலம் போன்ற பருவ காலங்கள் ஏற்படுவதற்கும் இந்த சாய்வே காரணமாக அமைகிறது. வேறு மாதிரி சொல்வதென்றால் பூமி செங்குத்தாக தன்னைத் தானே சுற்றிக் கொண்டால் பருவ காலங்கள் ஏற்படாது. அதாவது பூமியில் ஓரிடத்தில் எந்தவிதமான காலம் இருக்கிறதோ ஆண்டு முழுதும் மாற்றமின்றி அப்படியே இருக்கும்.
இன்னும் சற்று விரிவாகப் பார்ப்போம்.
பூமி அச்சின் இரு முனைகளையே வட துருவம் தென் துருவம் என்கிறோம்.  ஒரு குறிப்பிட்ட நாளில் மேல்முனை சூரியனை நோக்கி சாய்ந்து இருப்பதாக  வைத்துக்கொள்வோம்.
கீழுள்ள படத்தைப் பாருங்கள்

படம் 1

   ஆறு மாதங்களுக்குப் பின் பூமி பாதி  சுற்று சுற்றி எதிர்புறம் வந்திருக்கும் அப்போது அதன் மேல் முனை  பூமியை நோக்கி இருக்காது.இப்போது  கீழ் முனை பூமியை நோக்கி இருக்கும். அதாவது பூமியின் அச்சு அதே நிலையில் இருக்கிறது.
இதோ  இந்தப் படத்தைப் பாருங்கள்
படம் 2

பூமியின் சுற்றுப் பாதையை ஒரு கம்பியாகவும் பூமியை ஒரு மணியாகவும் வைத்துக் கொள்ளுங்கள் கம்பியில் கோர்த்தபடி மணி சுற்றுவது போல் பூமி சுற்றினால்  கீழுள்ள படத்தில் உள்ளது போல் 6 மாதங்களுக்குப் பிறகும் அதன் வடமுனை எப்போதும் பூமியை நோக்கியே சாய்ந்திருக்கும்.
படம் 3
ஆனால்  இயற்கையில் அவ்வாறு நிகழவில்லை.இப்படி பூமி சுற்றினால் கால மாற்றங்கள் நிகழாது.

   படம் 1 இல் காணப்படும் நிலை ஜூன் 21 அன்று ஏற்படுகிறது. தென் துருவம் சூரியனிடமிருந்து சற்று விலகி இருப்பதைக் காணாலாம் அன்று ஆண்டில் மிக நீண்ட பகலாக இருக்கும். இந்த நாளில் நில நடுக்கோட்டுக்கு மேலுள்ள வட அரைக் கோளத்தில் சூரிய ஒளி  அதிகமாகவும் தென் அரைக்கோளத்தில் குறைவாகவும் விழுகிறது. அன்றிலிருந்து பகல் நேரம் சிறிது சிறிதாக குறைந்து இரவு  நேரம் சிறிது சிறிதாக அதிகரிக்கும். செப் 23 அன்று இரவும் பகலும் சம நிலையை அடைகிறது. 

    இந்த நாட்களில் சூரியன் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி நகர்வதைப் போல் தோற்றமளிக்கும் இதை தட்சணாயணம் என்று கூறுவது வழக்கம். செப் 23 அன்று நில நடுக்கோட்டுக்கு செங்குத்தாக சூரிய ஒழி விழுவதால் வட  அரைக் கோளத்திலும் தென் அரைக் கோளத்திலும் சம அளவு ஒளி விழுகிறது.அதாவது வட துருவமும் தென் துருவமும் சம தொலைவில் உள்ளது. இதனால் இரவும் பகலும் சமமாக உள்ளது. இதே நிலைய மார்ச் 21 அன்றும் ஏற்படுவதால் அன்றும் இரவும் பகலும் சமமாக அமைகிறது.

   இதற்கிடையில் (படம் 2)டிசம்பர் 21(சில சமயங்களில் டிசம்பர் 22) அன்று ஜூன் 21 அன்று உள்ள நிலைக்கு நேர் எதிரான சூழ்நிலயில் பூமி அமைவதால் அன்று மிக நீண்ட இரவாகவும் குறைந்த பகலாகவும் காணப்படும்.அன்றிலிருந்து சூரியன் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி நகர்வது போல் தோற்ற மளிக்கும் இதை உத்தராயணம் என்று கூறுவார்கள்.

   சரி! இவையெல்லாம் விண் வெளியில்  நிகழ்கிறது.நாம் எப்படி இதை அறிவது. நாம் கண்ணால் என்ன மாற்றங்களை பார்க்க முடியும் 

1. இன்று சூரியன் உதிப்பது சரியான கிழக்கு திசையின் மையத்தில்  
2. இன்றிலிருந்து நிழல் வடக்குப்புறம் சாய்வாக விழத் தொடங்கும் 
3 இன்று பகல் பன்னிரண்டு மணிக்கு 90 டிகிரி செங்குத்தாக ஒரு வளைவில்லாத  குச்சியை வைத்தால்(பூமத்திய ரேகைப் பகுதியில்) அதன் நிழல் தரையில் விழாது. தலைக்கு மேல் நேராக சூரியன் இருக்கும்.
4 தமிழகத்தில் நெய்வேலியைத் தவிர இதர இடங்களில் சரியான கிழக்கு  மேற்காகவோ ,வடக்கு தெற்காகவோ  சாலைகள் இல்லை அதனால் திசைகளை அறிவது சில வேளைகளில் கடினமாக உள்ளது. இன்றைய சூரியனை வைத்து  திசைகளின் அமைப்பை  அறிந்து கொள்ளலாம்.
இதோ இந்தப் படங்கள் அதை விளக்கும் என்று நம்புகிறேன்.படத்தில் உள்ள குச்சியின் நிழலை கவனியுங்கள்.

               ஜூன் 21 அன்று           டிசம்பர் 21 அன்று 

                       இன்று செப்டம்பர் 22 அன்று 

  இவை  யாவும் நில நடுக்கோட்டுப் பகுதியில் உள்ளவர்களுக்கு100 சதவீதம் பொருந்தும். மற்ற இடங்களில் நிழலில் மாறுபாடு காணப்படலாம். தமிழகத்தை பொறுத்தவரை நிலநடுக் கோட்டுக்கு வட பகுதியில் அமைந்துள்ளதால் நிழல் சற்று வடக்குப்புறம் சாய்வாக விழும்.ஆனாலும்  இரவு பகல் நேரங்கள் சமமாகவே இருக்கும்.

சுருக்கம்:  1.மார்ச் 21 &செப்டம்பர் 22 சம இரவு பகல் நாட்கள் 
           2. ஜூன் 21 நீண்ட பகல் குறுகிய இரவு 
           3. டிசம்பர் 21 நீண்ட இரவு குறுகிய பகல் 
பதிவு பயனுள்ளதாக இருந்ததா? 
தவறுகள் இருப்பின் சுட்டிக் காட்டவும்.உங்கள் கருத்துக்களை அறிய ஆவலாக  இருக்கிறேன்.
 ************************************************************************************************************
தொடர்புடைய பதிவு