என்னை கவனிப்பவர்கள்

வெள்ளி, 23 டிசம்பர், 2011

புதிர் கணக்கு! விடை-வடிவேலுக்கு உதவியது யார்?

இத படிச்சிட்டீங்களா 
 புதிர் கணக்கு! வடிவேலுக்கு உதவுங்கள்!
செல்ல நாயின் இறப்பு! ஒரு மாதம் பரபரப்பு!நிறைவு பகுதி 
காதல் என்றால் என்ன? கல்யாணம் என்றால் என்ன? 
*************************************************************



      வடிவேலு ஒரு வாரமாக தன்னிடம் சொல்லப்பட்ட கணக்குப் புதிருக்கு விடை கண்டு பிடிக்க முடியாமல் தலையை பிய்த்துக்கொண்டு இருக்கிறார். அப்போது  பார்த்திபன் அங்கு வருகிறார்.
     
     "வடிவேலு சார்!  தல முடிய இப்படி போட்டு ஏன் பிச்சுக்கிட்டிருக்கீங்க."
        "அடடா இவன் ஏன் இங்க வந்தான். நம்மள சின்னா பின்னமா ஆக்கிட்டில்ல போவான்."
         "எங்க உங்களை ரொம்ப நாளா காணோம்?"
         'நீ வாயால பொழச்சிக் கிட்டிருக்க! நான் வாயாலே அழிஞ்சி கிட்டிருக்கேன்!.ஒரு அவசர வேல இருக்கு நான் வரேன்."
      "அப்படி என்னன்னே அவசரம். உங்களுக்கு நான் ஹெல்ப் பண்ணட்டுமா? எனக்கும் இப்ப வேற வேல இல்ல."
   
     "எனக்கு நீ எப்படியெல்லாம் உதவி பண்ணி இருக்கன்னு இந்த உலகத்துக்கே தெரியும் ஆள விடு! என் மூளைக்கு வேல குடுத்திருக்கேன் அதை நான் முடிக்கணும்."
       
      "இல்லாத ஒண்ணுக்கு  எப்படிடா  வேலை குடுப்ப?"
    
     "உன் வேலயா காட்ட ஆரம்பிச்சிட்டயா? மொதல்ல சார் னு சொன்ன. அப்புறம் அண்ணே அப்படின்னே. இப்ப டா ன்னு சொல்ற. நான் சொல்லாம விட மாட்ட. சொல்றே. இந்த முறையாவது உன்ன நம்பலாமா?"
     
    "நம்பிக்கதாண்டா வாழ்கையில ரொம்ப முக்கியம்."
      
   "சரி போவட்டும்.என்னுடைய ஃபிரண்ட்ஸ் என்கிட்டே ஒரு கணக்க கேட்டு அதுக்கு விடைய நான்தான்னு சொல்ல  முடியும்னு சொல்லிட்டாங்க. அதனால்தான் என் மூளைய கசக்கிக்கிட்டுருக்கேன்.
      
   அதாவது நூறு ரூபாய்க்கு ஆப்பிள் கொஞ்சம்,சாத்துக்கொடி கொஞ்சம்,திராட்சை கொஞ்சம்ன்னு ,மூணு விதமான பழம் வாங்கணும். ஒரு சாத்துக்கொடி 1 ரூபா, ஒரு ஆப்பிள் 5 ரூபா, 20 திராட்சை 1 ரூபா. பழங்களோட எண்ணிக்கையும் 100 ஆக இருக்கணும்.  பழங்களோட மொத்த மதிப்பும் 100 ரூபாயா இருக்கணும். அப்படின்னா எத்தனை சாத்துக்கொடி, எத்தனை ஆப்பிள், எத்தனை திராட்சை வாங்கணும்?
          
      "இந்தக் கேள்விக்கு  பதில் சொன்னா எனக்கு என்ன தருவ."
        
      "அவனுங்க என்ன குடுக்குறாங்களோ அதா உனக்கு அப்படியே தரேன்".
    
        "உனக்கு குடுக்கறத வாங்கறதுக்கு நான் ஒன்னும் கேன கிடையாது. பாக்கெட்ல எவ்வளோ வச்சிருக்க"
      
       "500 ரூபா இருக்கு"
    அதை பிடிங்கிக்கொண்டு வடிவேலுவுடைய காதில் கணக்குக்கு விடை சொல்லிவிட்டு சென்று விடுகிறார்.
    
    "இவனுக்கு மட்டும் எப்படி இதெல்லாம் தெரிஞ்சிருக்கு. ஐநூறு ரூபா போச்சே. சரி இதுக்கு பதிலா நம்ம பசங்ககிட்ட 1000 ரூபாயா ஆட்டைய போட்டுடலாம்."
  
   நண்பர்களுக்கு  ஃபோன் செய்து வரவழைக்கிறார்.
    "அடேய், நீங்க சொன்ன கணக்குக்கு விடை கண்டுபிடிச்சிட்டண்டா! கண்டுபிடிச்சிட்டேன்."
   
  "உண்மையாவே நீங்களாண்ணே கண்டுபிடிச்சீங்க! யாராவது சொல்லி கொடுத்தாங்களா?"
     "அண்ணன் மூளைய  என்னன்னுடா நினைச்சீங்க! இப்ப சொல்றேன் விடை சொல்றேன் கேட்டுக்கோங்க.

            19 ஆப்பிள்                     95 ரூபா
            80  திராட்சை                  4  ரூபா 
             1  சாத்துக்கொடி           1  ரூபா 
          -------------------------------       ---------------------
          100 பழங்கள்                  100  ரூபா 
         ---------------------------------       -----------------------
     என்ன சரியா? சரி சரி எடுங்க எனக்கு குடுக்க வேண்டியத உடனே குடுங்க"
     " இப்படி எங்கள ஏமாத்திடீங்களேண்ணே!  நாங்க கொஞ்சம் கூட எதிர்பார்க்கல."
      " என்னடா? ஏன்டா இப்படி பாக்கறீங்க?"
      " போங்கண்ணே! உங்களை நம்பிதானே நாங்க பந்தயம் கட்டினோம்."
     "என்னடா சொல்றீங்க?
      "ஆமாண்ணே! இந்தக் கணக்குக்கு விடை நீங்க சொல்ல மாட்டீங்கன்னு  நாங்க அவன்கிட்ட பந்தயம் கட்டினோம்."
       "யார்ரா அவன்? 
       " அவன்தாண்ணே! உங்க ஃபிரெண்டு குண்டக்க மண்டக்க பார்த்திபன்தான். எங்களுக்கு நஷ்டத்த உண்டாக்கிட்டீங்களே. உங்களை நம்பிதானே பந்தயம் கட்டினோம். நம்பிக்கை துரோகம் செஞ்சிட்டீங்களே. உங்களை சும்மா விடமாட்டோம்."
       
     "ஓஹோ! அவன் வேலையா இது.  இந்த தடவையும் மோசம் பண்ணிட்டானே.  அவ்வ்..........  வேணாண்டா அண்ணன் தாங்க மாட்டேண்டா. விட்டுருங்கடா......................"

(இந்தப் புதிருக்கான விடையை கணித முறையில் கண்டு பிடிக்கும் வழியை அறிந்துகொள்ள  நீங்கள் விருப்பம் தெரிவித்தால்  அதனையும் ஒரு பதிவாகப் போடுகிறேன்)


3 கருத்துகள்:

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895